Followers

Tuesday, December 15, 2020

 

குணம் - க. காந்தி முருகேஷ்வரர்

 

ருவரின் குணத்தைக் கணிப்பதென்பது சாதாரணமானதல்ல. இன்று நல்லவராக இருப்பவர் நாளை கெட்டவராகவும், இன்று கெட்டவராக இருப்பவர் நாளை நல்லவராகவும் மாறலாம். ஒரு ராசிக்காரர் இப்படிதான் இருப்பார் என்று உறுதியாகச் சொல்ல முடியாதென்றா லும், சில குறிப்பிட்ட அடிப்படையான குணம் ராசி அடிப்படையில் இருக்கும்.

மேஷம்

மேஷம் முதல் ராசி என்பதால், எதிலும் முதன்மையாக இருக்கவேண்டுமென நினைப்பர். ராசி அதிபதி செவ்வாய் என்பதால் பிடிவாதம் இருக்கும். எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர். கிரகங்கள் நல்ல நிலையில் அமைந்தவர்கள் திறமையை வளர்த்துக்கொண்டு எதிலும் முதன்மையாய் நற்குணங்களுடன் திகழ்வர். பாவ கிரகங்களால் பாதிக்கப்பட்டவர்கள் நற்சிந்தனையின்றி, திறமையில்லாமலும், திறமையை வளர்க்க விரும்பாமலும் குறுக்குவழியில் முன்னேற விரும்புவர். தான் என்கிற அதிகாரத் தோரணை இருக்கும். தன்னைப் பிறர் மதிக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பர். வீம்பு, வீண் கௌரவம் பார்ப்பவர். கேது ஆதிக்கம் பெற்ற அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முதல் பாதியில் ஆணவமாக நடந்துகொண்டு பிற்பாதியில் ஞானிபோல் பேசுவர். சுக்கிர ஆதிக்கம் பெற்ற பரணியில் பிறந்தவர்கள் சுகவாசியாக வாழ எண்ணுவர். சூரிய ஆதிக்கம் பெற்ற கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் முன் கோபியாக இருப்பர். முதன்மையைத் தேடுவர்.

rasi



ரிஷபம்

ரிஷப ராசியானது சுக்கிரன் ஆதிக்கம் பெற்றிருப்பதால், ஆடம்பர, அலங்கார நாட்ட மிக்கவர். எல்லாம் தூய்மையாக இருக்க வேண்டுமென எதிர்பார்ப்பர். பொறாமை உள்ளம் கொண்டவர். தமக்கு எதிரி தாமாகவே இருப்பர். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதைத் தவிர்த்தால் அனைவராலும் விரும்பப்படுவார். சுபகிரக இணைவு, பார்வை பெற்றவர்கள் கலைஞானம் கொண்டு, நகைச்சுவையாகப் பேசி பிறரை வசீகரிப்பர். பெரிய பதவிகளில் இருப்பர். பாவகிரகப் பார்வை பிறரைக் குத்திக்காட்டிப் பேசும் பழக்கத்தைக் கொடுக்கும். வஞ்சகம், சூழ்ச்சியில் கைதேர்ந்தவர். நன்றிமறந்து துரோகம் செய்வர். சூரிய ஆதிக்கம் கொண்ட கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் தலைமை விரும்பி. சந்திர ஆதிக்கம் கொண்ட ரோகிணியில் பிறந்தவர்கள் நிலையற்ற எண்ணம், செயல் கொண்டவர். செவ்வாய் ஆதிக்க மிருகசீரிட நட்சத்திரக்காரர்கள் சுயநலமாய், தேவைக் கேற்ப பேசிப் பழகும் வல்லமை கொண்டிருப்பர்.

மிதுனம்

ராசி அதிபதி புதன் என்பதால், இரட்டை வேடம் போடுவதில் வல்லவர். யாரிடம் எப்படிப் பேசவேண்டு மென்பது தெரிந்து வேலை வாங்கும் சாதுர்யம் மிக்கவர். காரியம் ஆகவேண்டு மெனில் காலில் விழவும் தெரியும். முடிந்ததும் காலை வாரிவிடவும் தெரியும். நம்பிக்கை துரோகிகள் என்பதைக் கண்டறிய முடியாதபடி நடந்து கொள்வர். அறிவாளிகள். சுபகிரகம் வலுத்தால் உண்மை யாய் நன்றி யுடன் நடந்து கொள்வர். பாவகிரகம் தாக்கம் பெற்றவர் ஏமாளி யாய் இருந்து ஏமாற்றும் திறமை யைக் கற்றுக்கொள்வர். செவ்வாய் ஆதிக்க மிருகசீரிடக்காரர்கள் சுயநல பிடிவாதக்காரர்கள். ராகு ஆதிக்க திருவாதிரைக்காரர்கள் ஊமைக் குசும்பர். குரு ஆதிக்க புனர்பூசக்காரர்கள் அறிவுரைகளை அள்ளி வீசுவர். ஆனால் அதன்படி அவர்கள் நடக்கமாட்டார்கள். பாவ, சுபகிரக வலுவைப் பொருத்து நல்லவராகவோ கெட்டவராகவோ இருப்பர்.

கடகம்

தனக்கு எல்லாம் தெரியும் என்னும் மமதை கொண்டவர். ராசி அதிபதி சந்திரன் என்பதால், கற்பனையிலேயே வாழக்கூடியவர். பேசுவதற்கும் நடந்து கொள்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். தானே ராஜா, தானே மந்திரி என்றிருப்பர். தவறான முடிவுகளை எடுத்து பாதிக்கப் பட்டாலும் வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார். எதார்த்தத்தை தாமதமாகவே உணர்வர். உணர்ந்தாலும் வெளிக்காட்ட மறுக்கும் வீண்கௌரவக்காரர். குருவின் புனர்பூசக்காரர்கள் பிறர்மீது அக்கறையாய் அறிவுரைகளை அள்ளி வீசுவர். பூச நட்சத்திர அதிபதி சனி பார்வையால் மனநிலை பாதிப்புண்டு. பின்னர் நடப்பதை முன்பே சொல்லும் ஆற்றலிருக்கும். புதன் வலிமை கொண்ட ஆயில்ய நட்சத்திரக்காரர்கள் நடுநிலை யாகப் பேசுவதாய் எண்ணி சுயநலமாய் நடந்துகொள்வார்கள். சொல்பேச்சு கேட்பவர் களாய்க் காட்டிக்கொண்டு தான் நினைத்ததை சாதிக்க எண்ணுபவர். திமிராகப் பேசத் தெரியாத வராகக் காட்டிக்கொண்டு திமிராக நடப்பர். பாசத்தைப் பொழியும்போதே காரியத்திற்காகப் பேசுவர். பட்டும் திருந்தாதவர்களாகவே நடந்து கொள்வர். சுபகிரகப் பார்வை பலம்பெற்றவர்கள் சொக்கத் தங்கமாக இருப்பர்.

சிம்மம்

சூரிய ஆதிக்கத்தால் தனிச் சிறப்பான குணம் கொண்டவர்கள். இவர்களைப் புகழ்ந்துபேசினால் தான் காரியத்தை சாதிக்கமுடியும். எளிதில் ஏமாறக்கூடியவர். வெளிப்பார்வைக்கு கர்வமானவராகத் தெரிந்தாலும், நெருங்கியவர்களுக்காக வாழ்க்கையையே அர்ப்பணிக்கக்கூடியவர். எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர். குரு பார்வை பெற்றவர்கள் மக்கள் போற்றும் நல திட்டங்களை செயல்படுத்தக்கூடியவர். அரசாங்க அதிகாரப் பதவி பெறுவர். சுபர் பார்வை இல்லை யென்றால் எந்த நிலையிலிருந்தாலும் அங்கு அதிகாரம் செய்யக்கூடியவர். முன்கோபத்தால் கஷ்டங்களைப் பெற்று மூர்க்கத்தனமாகப் போராடக்கூடியவர். தனக்குக்கீழ் எல்லாரும் தன் சொல்படி செயல்பட வேண்டுமென விரும்புவர். கேதுவின் மக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பட்டுத் திருந்தக்கூடியவர். ஊருக்கு உபதேசம் செய்வர். சுக்கிரனின் பூர நட்சத்திரர் கலையுணர்வு கொண்டவர். அழகுடன் அதிகாரம் கொண்டவர். நடிக்கக்கூடியவர். பாவகிரக பலம்பெற்றால் நடிப்பது தெரிந்துவிடும். சூரியனின் உத்திர நட்சத்திரக்காரர்கள் அதிகாரமிருந்தால் எடுத்தெறிந்து பேசி விடுவார்கள். அனுசரித்துப் போக யோசிப்பர். பிடிவாதம், எதிர்வாதம் கொண்டவர்கள். மிகச்சிறந்த நிர்வாகிகள்.

கன்னி

புதன் பலத்தால் அனைத்து துறைகளிலும் அனுபவமிக்கவர். எல்லாம் தெரிந்தாலும் பிடித்தவர்களுக்கு உதவுவர். பிடிக்காதவரைப் பழிவாங்குவர். சிரித்துகொண்டே பேசி அழிப்பதில் வல்லவர். எல்லாரிடமும் நல்லபெயர் எடுக்க ஆசைப்பட்டு ஏமாந்து போவர். இரட்டை வேடம் போடுவதால், பாவகிரக வலிமை பெறும்போது அகப்பட்டுக் கொண்டு அனைத்தையும் இழப்பர். கெடுக்கும் எண்ணத்தைக் குறைத்தால் எல்லாரும் இவர்களுக்கு உதவுவர். பொறாமை குணம் கொண்டவர்கள். வெளியே பரந்த நோக்க மானவராகக் காட்டிக்கொண்டாலும் உள்ளே சுயநலவாதிகள்தான். சூரியனின் உத்திர நட்சத் திரக்காரர்கள் ஏமாந்தவரை ஏமாற்றுவதில் அதிகாரம் செலுத்துவர். நன்றி இல்லாத வர். சந்திரனின் அஸ்த நட்சத்திரக்காரர் குழப்பமான மனநிலை கொண்டவர். அடிமையாக வாழ்ந்தாலும் அதட்டக் கூடியவர். தன்னளவில் சந்தோஷம் கொள்பவர். பிறர் வாழ்வதைப் பொறுக்காத வர். செவ்வாயின் சித்திரைக்காரர்கள் பிடிவாதத்துடன் பழிவாங்கத் தயங்காதவர்கள். சுபகிரக, சுபதசை நடக்கப் பெற்றவர்கள் நன்றியோடு, பிறருக்கு உதவும் உத்தமர் களாக இருப்பர்.

துலாம்

சுக்கிர ஆதிக்கத்தால் நீதி, நியாயம் பேசக்கூடியவர்கள். பிறரின் மனநிலை அறிந்து உதவக்கூடியவர்கள். சுத்தமான எண்ணம், செயல் கொண்டவர்கள். கொஞ்சம் பொறாமையுள்ளம் கொண்டவர். நல்ல நிலையிலிருந்தால் நல்லவற்றையும், தாழ்ந்த நிலையில் இருப்பவர்கள் கெட்ட எண்ணங்களையும் அதிகம் கொண்ட வர்களாக இருப்பர். சுய உழைப்பில் உயர்ந்தவர் களாகக் காட்டிக்கொள்பவர்கள். உதவி செய்பவர்களிடம் மறைமுகமாக நன்றி தெரிவிப்பர். யாரையும் எடைபோடுவார்கள். குடும்பத்திற்குள்ளேயே கௌரவம் பார்ப்பவர். உடல்ரீதியாக வலுக் குறைந்தவர். செவ்வாயின் சித்திரை நட்சத்திரக்காரர்கள் பிடிவாதத்தால் கிடைக்க வேண்டியதையும் கெடுத்துக் கொள்வார்கள். அகங்காரம் கொண்டவர்களாக இருந்தாலும் அமைதி யானவராகக் காட்டிக்கொள்வர். அடிமை சிக்கினால் அரட்டிவிடுவர். ராகுவின் சுவாதி நட்சத்திரக்காரர்கள் சுதந்திரப் பிரியர்கள். புகழுக்கு அடிமையாய் இருந்து ஏமாந்து விட்டு, ஏமாற்றியவரிடம் புலம்பக்கூடியவர். நினைத்து நினைத்துப் பேசுவர். காரியக்காரர். ஏமாளி. குருவின் விசாக நட்சத்திரக்காரர் சோம்பல் நிறைந்தவர்கள். தானாக நடக்கவேண்டுமென எதிர்பார்ப்பவர். நற்குணம் இருந்தாலும் நடைமுறைப் படுத்த முடியாது. தனக்குப் பின்தான் எல்லாம் என்கிற எண்ணத்தில் கோள்மூட்டும் பழக்கம் கொண்டவர்கள். சுப பலமிக்க துலா ராசிக் காரர்கள் நேர்மை தவறாதவர்களாக, போற்றக்கூடிய குணம் படைத்தவர்களாக இருப்பர்.

விருச்சிகம்

செவ்வாய் அதிபதி என்பதால், எதையும் எளிதில் புரிந்துகொள்ளக் கூடியவர். சுறுசுறுப்பானவர். அதேநேரம், தான் என்கிற எண்ணம் அதிகம் கொண்டவர். சொன்னால் சொன்னபடி நடந்துகொள்ளக்கூடியவர். வெளிப்படையாகப் பேசுவதால் பலரையும் பகைத்துக்கொள்வர். கோபத்தில் பேசும் வார்த்தைகள் தேள் கொட்டுவதுபோல் இருக்கும். குருவின் விசாக நட்சத்திரக்காரர்கள் நிதானத்துடன் நடந்துகொள்வர். யோசித்து செயல்படுவர். நேரடியாக மோதாமல் மறைமுகமாகப் பழிதீர்ப்பர். சனியின் அனுஷ நட்சத்திரக்காரர்கள் கிரிமினலாக யோசித்து செயல்படுவர். தவறை தைரியமாகச் செய்வர். சுபகிரக சம்பந்தம் பெற்றவர்கள் ஆன்மிக நாட்டத்தால் உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்திக்கொள்வர். புதனின் கேட்டை நட்சத் திரக்காரர்களில் கோட்டை கட்டுபவர்களும் உண்டு; மனக்கோட்டை கட்டுபவர்களும் உண்டு. சொல்வதைச் செய்யவேண்டும் என்னும் எதிர்பார்ப்பு கொண்டவர்கள். பொறுமையாக இருப்பவர்கள் வரலாற்று சாதனை புரிவர். இளகிய மனம் கொண்டவர்கள்.

தனுசு

குரு ஆதிக்கமிக்க தனுசு ராசிக்காரர்கள் ஒன்றை குறிவைத்துவிட்டால் அதை அடையாமல் ஓயமாட்டார்கள். நியாய வழியில் செயல்படக்கூடியவர்கள். பிறருக்கு உபதேசம் செய்வதில் வல்லவர். ராகு- கேதுக்களால் பாதிக்கப்பட்டவர்கள். எதிரி யிடம் நேரடியாக மோதாமல் அடுத்த வரைத் தூண்டிவிட்டு காரியம் சாதிக்க விரும்பு வர். விட்டுக்கொடுப்பதில்கூட காரியம் இருந்தால்தான் செய்வர். துரோகிகள்மீது அன்பையும், அன்பானவர்கள்மீது அலட்சியத் தையும் காட்டுவர். கேதுவின் மூல நட்சத்திரக் காரர்கள் நெருங்கிய சொந்தங்களை இழந்தவர்கள். இளம்வயதிலேயே ஞானம் பெறுவர். கோபம் கொண்டவர். சுக்கிரனின் பூராடக்காரர்கள் தன் சுகத்தை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். நன்றி மறந்த வர்களாகவும், மறைமுக எதிரிகளாகவும் வாழக்கூடியவர்கள். சொகுசான வாழ்க்கை உண்டு. சூரியனின் உத்திராடத்தினர் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுபவர்கள். இருக்க இடம்கொடுத்தால் படுக்கப் பாய்கேட்பர். தன் காரியமே கண்ணாகக் கொண்டவர். எதிலும் தான் என்கிற அதிகாரமிக்கவர். சுபவலுப் பெற்றவர்கள் மக்கள் பணி, அன்னதானம், பிறருக்கு உதவுவதில் வல்லவர்.

மகரம்

சனியின் ஆதிக்கத்தால் எதையும் சந்திக்கும் ஆற்றல் மிக்கவர். பொறுப்புகளை அசாதரண மாகக் கையாளும் அதிர்ஷ்டசாலி. பிறரிடம் வேலைவாங்குவதில் வல்லவர். அழுதுகூட காரியம் சாதிப்பர். எவ்வளவு பெற்றாலும் பற்றாக்குறை மனநிலை கொண்டவர். பிள்ளைகள்மீது பற்றுக் கொண்டவர். பாசத் திற்குக் கட்டுப்பட்டவர். சுபவலு மக்கள் சேவையைத் தரும். சனிபலம் பெற்றவர்கள் நீண்ட ஆயுளும் எதிர்காலத்தை உணரும் ஆற்றலும் மிக்கவராக இருப்பர். சூரியனின் உத்திராடத்தினர் தலைமைப் பதவி தேடிவரும் தகுதிமிக்கவராகவும், மக்களுக்குப் பிடித்தவராகவும் இருப்பர். சுயநலம் கொண்டாலும் பொதுநலவாதியாகக் காட்டிக்கொள்வர். சொல்வதையெல்லாம் நம்பவைக்கும் ஆற்றல்மிக்கவர். சந்திரனின் திருவோணக்காரர்கள் நினைத்து நினைத்து செயல்படுவதால் முன்னேற்றத் தடையுண்டு. உறுதியான முடிவெடுத்தால் உயரலாம். குழப்பத்தை விடுவது நலம். கற்பனைகள் தான் எதிரி. அமைதியாக இருந்தாலும் பாதிக்கப்படும்போது கொடூரமாகப் பழி தீர்ப்பர். செவ்வாயின் அவிட்ட நட்சத்திரக் காரர்கள் உணர்ச்சிமிக்கவர். எப்போது எப்படி நடந்தால் சமாளிக்கலாம் என்பதை உணர்ந்தவர். சுறுசுறுப்பாகவும் சோம்பேறி யாகவும் இருக்கத் தெரிந்தவர். சனி வலுப்பெற் றால் இரக்கமில்லால் நடந்துகொள்வர். ஏமாளி. பெற்ற பிள்ளைகளிடம் கவனமாக இருக்கவேண்டும்.

கும்பம்

சனியின் வலுக்கொண்டவர்கள்; ஆனால் எதார்த்தவாதிகள். உடனிருப்பவர்களால் ஏமாறக்கூடியவர். ஆரம்பகாலத்தில் பாசத்திற்குக் கட்டுப்பட்டும், ஏமாந்தபின் காரியவாதி எனவும் நெருங்கியவர்களால் சொல்லப்பட்டாலும் ஏமாளிகளே. வயதிற் கேற்ற விவரம் இல்லாதவர்கள். அன்பிற்காக எதையும் இழப்பார்கள். நல்லவருக்கு நல்லவர்களாகவும், கெட்டவர்களைவிட்டு விலகியும் இருப்பர். கடைசி நேரத்திலாவது காப்பாற்றப்படுவர். செவ்வாயின் அவிட்ட நட்சத்திரர் எதிர்த்துப் பேசத் துணியாதவர். ஏதோவொரு கூச்சம் இருந்துகொண்டே இருக்கும். பிறர் சொல்கேட்டு ஆரம்பத்தில் கெட்ட பழக்கவழக்கத்திற்குப் போனாலும் திருந்திவிடுவர். கிரிமினலாக சித்தரிக்கப் படுவர். தவறைப் பொறுத்துக் கொள்ள மாட்டார். ராகுவின் சதய நட்சத்திரக் காரர்கள் மந்தமானவர்கள். எதுவும் தாமத மாகவே புரியும். குருட்டு அதிர்ஷ்டத்தாலும் பூர்வபுண்ணியத்தாலும் காப்பாற்றப் படுவர். சனியின் பூரண அருள்பெற்றவர். துணைவருக்கேற்றவர். அன்புள்ளம் கொண்ட ஏமாளிகள். குருவின் பூரட்டாதிக்காரர்கள் பிறருக்கு உபதேசம் சொல்லுமளவு பாதிக்கப் பட்டவர்கள். நியாயவாதிகள். கஞ்சனாகத் தெரிந்தாலும் வள்ளல் மனம் கொண்டவர்கள். பிறரைக் கெடுக்க எண்ணாதவர்கள். சுயநலம் குறைந்தவர். பாவகிரக பாதிப்பற்றவர்கள் மிகப் பெரிய நேர்மையான சாதனையாளர்கள்.

மீனம்

கடைசி ராசியாக குருவின் ஆதிக்கத்தால், அடுத்தவரைத் திருத்தி நல்வழிப் படுத்துவதிலேயே கவனம் செலுத்தித் தன் வேலைகளைத் தள்ளி வைக்கும் சுயநலமற்றவர். எவ்வளவு செய்தாலும் நல்ல பெயர் கிடைக்காது. யாருக்காகவும் தன் குணத்தை மாற்றிக்கொள்ளாத ஏமாளிகள். தனக்காக வாழத்தொடங்கினால் பெரும் பணம், புகழ் பெறுவர். ஏதாவது தடை இருந்துகொண்டே இருக்கும். கெட்டவர்கள் எனத் தெரிந்தே உறவாடுவதைத் தவிர்த்தாலே முன்னேறிவிடுவர். குருவின் பூரட்டாதிக்காரர்களுக்கு எதிரி யால் லாபம் உண்டாகும். அவர்கள் கொடுக் கும் தொல்லையாலேயே முன்னேறிப் புகழ்பெறும் அதிர்ஷ்டம் மிக்கவர். தாமத மானாலும் நிலையான வெற்றி பெறுவர். போராட்டத்தைக் கண்டு அஞ்சாமல் பொறுமையாக சாதிப்பர். அன்பைத் தூக்கிப் பிடிக்காமல் இருந்தால்தான் உருப்படுவர். சனியின் உத்திரட்டாதிக்காரர்கள் குறுக்குவழி யில் வெற்றி கண்டால் நிலைக்காது. போராட்ட குணம் கொண்டவர். கஷ்டங்களை வெளிக் காட்டிக் கொள்ளாதவர். கடுமையாக உழைக் கக்கூடியவர். பாவகிரக பலம் சந்தோஷத்தைக் கெடுக்கும். வெற்றியைத் தாமதப்படுத்தும். புதனின் ரேவதி நட்சத்திரக்காரர்கள் எவ்வளவு போராடினாலும் தனக்கான அங்கீகாரம் கிடைக்காமல் வருத்தப்படுவர். சுபபலம் பெற்றால் சுயபுத்தியால் பிறரை ஆட்டிப் படைப்பர். பலம் குறைந்தால் அடிமையாக வாழநேரும். பொதுவாக மீன ராசிக்காரர்கள் நல்லதற்காகப் பொறுமை காக்கவேண்டும். மேற்கண்ட ராசி அல்லது லக்னத்தில் எது வலுப்பெற்றுள்ளதோ அதன் பலன்களே ஜாதகரின் குணமாக இருக்கும். எந்த ராசி, லக்னமாக இருந்தாலும் லக்ன, ராசி அதிபதிகள் கேந்திர, திரிகோணங்களில் இருந்தால் கெட்ட குணங்கள் குறைந்தவராக இருப்பர். நடப்பு கோட்சாரம் கெடுத்தாலும், தீய தசையே நடந்தாலும், நேர்மையான வகையில் சிந்திக்கக்கூடியவராகவும், கஷ்டத்தை எதிர்கொண்டும், கஷ்டத்தை ஏற்றுக்கொண்டும், மனம் அலைபாயாமல் நினைத்ததை சாதிக்கும் ஆற்றல் பெற்றவராக விளங்குவார்கள். பரிகாரம் செய்து தீயவற்றைப் பெற நினைப்பதைவிட, நல்ல குணங்களுக்கு மாறினாலே வெற்றிமேல் வெற்றி வாழ்வில் வந்துசேரும்.

செல்: 96003 53748

courtesy;balajothidam/nakkiran

============================================================

 

Wednesday, December 9, 2020

 

"நீ குருவை தேடி அலையாதே.  குரு உன்னைத் தேடி வருவார்.



உங்களைத் தேடி அவன் வருவான். எப்போது?


உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.
 
இந்தப் பாடலை அருஞ்சொற் பொருளை பார்த்து விடுவோம்.
 
பொருள் / கருத்து.
 
உருவாய் = உருவத்துடன்
 
அருவாய் = உருவம் இல்லாமல்
 
உளதாய் = இருக்கக் கூடியதாய்
 
இலதாய் = இல்லாததாய்
 
மருவாய்  = மலரின் வாசமாக
 
மலராய் = மலராக
 
மணியாய் = மணியாக
 
ஒளியாய்க் = மணியில் இருந்து வரும் ஒளியாக
 
கருவாய்  = கருவாக
 
உயிராய்க்  =உயிராக
 
கதியாய் =  வழியாக  
 
விதியாய்க் = விதியாக
 
குருவாய் = குரு வடிவில்
 
வருவாய் = வருவாய்
 
அருள்வாய் = அருள் செய்வாய்
 
குகனே. = முருகா
 
கடினமான சொல் ஒன்றும் இல்லை.
 
இதில் என்ன புதிதாக கண்டுவிட்டேன் என்று கேட்கிறீர்களா?
 
"குருவாய் வருவாய்"
 
நாம் இறைவனை, உண்மையை தேடி அலைகிறோம். நிறைய புத்தகங்கள் வாசிக்கிறோம். பலர் சொல்வதைக் கேட்கிறோம். நமக்கு இவர் தான் குரு, ஆச்சாரியார்  என்று ஒருவரை ஏற்றுக் கொண்டு அவர் சொல்கிற படி கேட்கிறோம். துறவிகள், சாமியார்கள், உபன்யாசம் செய்பவர்கள் என்று எவ்வளவோ பேர்.  இப்போதெல்லாம், youtube வந்து விட்டது. வீட்டில் இருந்த படியே  அவர்கள் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொள்ள முடியும்.
 
இருந்தும் ஒன்றும் ஆன மாதிரி தெரியவில்லை. அது ஒரு பாட்டுக்கு போகிறது. வாழ்க்கை இன்னொரு பக்கம் நம்மை இழுத்துக் கொண்டு போகிறது.
 
#அருணகிரிநாதர் சொல்கிறார்.
 
"நீ குருவை தேடி அலையாதே.  குரு உன்னைத் தேடி வருவார். நீ எப்போது பக்குவப் படுகிறாயோ அப்போது  குரு உன்னைத் தேடி வருவார்" என்று.
 
ஆங்கிலத்தில் சொல்லுவார்கள், "The teacher will appear when the student is ready" என்று.
 
நீங்கள் தேடி கண்டுபிடிக்கும் யாரும் உங்கள் குரு அல்ல. உங்களுக்கு எப்படித் தெரியும், அவர் தான் குரு என்று?
 
"வருவாய்" அவனே வருவான்.
 
வருவான் என்று எப்படி சொல்ல முடியும்? என்ன உத்தரவாதம் இருக்கிறது?
 
'கதியாய் விதியாய்"
 
"உன் விதிப்படி அவன் வருவான். உனக்கு எப்போது விதித்து இருக்கிறதோ, அப்போது வருவான். வந்து உன்னை நல்ல கதிக்கு கொண்டு செல்வான். "
 
சரி, எப்படி வருவான்?  எந்த வடிவில் வருவான் ?
 
எனக்கு எத்தனையோ குரு மார்கள். பாடம் சொல்லித் தந்தவர்கள் சிலர். வாழக்கையை சொல்லித் தந்தவர்கள் சிலர்.  வழி கட்டியவர்கள் சிலர். அவன் எப்படி  வேண்டுமானாலும் வருவான்.
 
புரியலையே !
 
"உருவாய்"
 
அவன் மானிட உருவில் வருவான்.
 
"அருவாய்"
 
உருவம் இல்லாமல் வருவான். அது எப்படி உருவம் இல்லாமல் வருவான்? அப்படி வந்தால்  நாம் எப்படி அவனை அறிய முடியும்?
 
ஒரு உயர்ந்த புத்தகத்தை வாசிக்கிறீர்கள், நல்ல சொற்பொழிவை கேட்கிறீர்கள், நாள் எழுத்தை வாசிக்கிறீர்கள்...உங்களுக்குள் ஏதோ ஒன்று நிகழ்கிறது. 'சே, இது தெரியாமல் இத்தனை நாள் வாழ்ந்து விட்டேனே..இனியாவது  கொஞ்சம் மாற வேண்டும் " என்று நினைக்கிறீர்கள் அல்லவா....அந்த எழுத்துதான் உங்கள் குரு. அதற்கு மானுட வடிவம் இல்லை. ஒளி வடிவம், ஒலி வடிவில் வந்து அருள் தருவான்.
 
ஏதோ ஒரு வழியில். அருவமாக வந்து அருள் தருவான்.
 
மருவாய், மலராய்
 
மலர் தெரியும், அதன் வாசம் தெரியுமா? சில சமயம் வாசம் மட்டும் வரும், எங்கிருந்தோ.  அது போல, ஆள் தெரியாது, எங்கிருந்து, எப்படி வருகிறது என்று தெரியாது.  அவன் அருள் வந்து சேரும்.
 
மணியாய் ஒளியாய்
 
மணி தெரியும். அதன் உள்ளே ஆடும் அதன் நா தெரியும். அது ஆடுவது தெரியும். ஒலி தெரியுமா?  காதில் வந்து விழும்.  ஒரு வார்த்தை. ஒரு சொல். ஒரு வாக்கியம் ,
 
"காதற்ற ஊசியும் வாராது காண் நும் கடை வழிக்கே"
 
என்று ஒரு வாக்கியம், பட்டினத்தாரை மாற்றிப் போட்டது.
 
அந்த வாக்கியம் தான் அவருக்கு குரு.
 
அந்த வாக்கியம் நமக்கு கிடைத்து இருந்தால், "சரி, வராட்டி போகட்டும், அதனால் என்ன" என்று ஓலையை தூக்கி குப்பையில் போட்டு விட்டு வேலையை பார்க்க போய் விடுவோம்.   பட்டினத்தாரின் மனம் பக்குவப் பட்டிருந்தது. ஒரு வாக்கியம், அருள் செய்தது.
 
"அருள்வாய் குகனே"
 
அது அருள்தான்.  காசு கொடுத்து வாங்க முடியாது. வண்டி வண்டியாக புத்தகங்களை படித்து  அறிய முடியாது. அந்த அருள், grace, வர வேண்டும்.
 
அவனே அருள்வான்.
 
ஞான சம்பந்தருக்கு மூன்று வயதில் வந்தான்.
 
திருநாவுக்கரசருக்கு 80 வயதில் வந்து அருள் தந்தான்.
 
என்ன சொல்லுவது?
 
யார் குரு என்று எப்படி அறிவது?
 
ஆதி சங்கரருக்கு புலையனாக வந்தான்.
 
சங்கரர் அறிந்தார் இல்லை.
 
அவர் பாடு அப்படி என்றால், நாம் எம்மாத்திரம்?
 
மாணிக்க வாசகருக்கு அருள் புரிய குருந்த மரத்தடியில்  ஈசர் காத்து கிடந்தார்...
 
அவன் உருவாய், அருவாய், உளதாய், இலதாய் , மருவாய், மலராய், மணியாய், ஒளியாய் எப்படி வேண்டுமானாலும் வருவான்.
 
அவன் வந்தால்தான் உண்டு. நாம் போய் கண்டு பிடிக்க முடியாது.
 
மனம் பக்குவப் பட வேண்டும்.
 
நீங்கள் தேடிப் பிடித்த எந்த குருவும் உங்கள் உண்மையான குரு அல்ல என்று தெரிகிறது அல்லவா? அவர் வேண்டுமானால் வழி காட்டலாம், அவர் ஒரு படியாக இருந்து உதவி செய்யலாம்....உண்மையான குரு, அவர் உங்களைத் தேடி வருவார். 




--------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
courtesy; வாத்தியார் ayya tq
========================================

துறவறம்......................

தமது எட்டாம் அகவையில் துறவறம் மேற்கொண்ட சங்கரர் கோவிந்த பகவத்பாதர் என்பவரிடம் அத்வைதம் முதலிய விஷயங்களைக் கற்றுத் தேர்ந்தார்.

மனீஷா பஞ்சகம்..................

தமது அத்வைதக் கொள்கைகளை பறைசாற்றி வரும்போது ஒரு நாள் சங்கரர் ஆற்றில் நீராடி விட்டு வருகிற போது ஐந்து நாய்களுடன் சண்டாளர் ஒருவர் அவர் முன்னே வருகின்றார்.

அதைக் கண்டு பதைத்த சங்கரரின் சீடர்களும் சங்கரருக்கு வழி விட்டு ஒதுங்குமாறு அவரைக் கேட்கின்றனர். அப்போது அச்சண்டாளர் சங்கரரிடம் "என் உடல் நகர வேண்டுமா அல்லது ஆத்மா நகர வேண்டுமா" எனக் கேட்க, சங்கரர் அவன் காலில் விழுந்து பணிகிறார் என சங்கர விஜயம் கூறுகின்றது.

உண்மையுணர்ந்தவராய், அத்வைதத்தின் பரிபூர்ண உண்மையை தமக்கே உணர்த்தி அருளியதாக கூறி அச்சண்டாளரை தமது குருவாக ஏற்று சங்கரர் மனீஷா பஞ்சகம் பாடினார். இதுவே சங்கரருக்கு ஆத்ம ஞானம் பரிபூர்ணமாக கிடைத்த நிகழ்வு ஆகும்.

இவ்வுண்மையை சங்கரருக்கு உணர்த்த சண்டாள உருவில் சிவனே வந்ததாக சங்கர விஜயம் முதலிய நூல்கள் கூறுகின்றன.அவர் கருத்துப்படி, குமுகத்திற்கு (சமூகத்திற்கு) ஒவ்வாத ஆதாரமற்ற, தேவையற்ற சமயப் பழக்க வழக்கங்களாக கருதியவைகளைச் சாடவும் செய்தார்.



==============================
ஆதி சங்கரர்...........

மே 8 சங்கர ஜெயந்தி

சங்கரர் - பெயர்க்காரணம்
ஞானபூமியான கேரளாவிலுள்ள காலடியில் தெய்வத்தம்பதியரான சிவகுரு, ஆர்யாம்பாள் சிவபெருமானிடம் குழந்தை வரம் கேட்டனர். சிவபெருமான் ஒருநாள் அவர்களுடைய கனவில் தோன்றி, ""பேர் சொல்ல பிள்ளை வேண்டுமா? அல்லது முட்டாளாக பலபிள்ளை வேண்டுமா?'' என்றார். ""இறைவா! உம் சித்தம் எம் பாக்கியம்'' என்று பதிலளித்தனர். ஒரு தெய்வீகக்குழந்தையை வைகாசி வளர்பிறை பஞ்சமியன்று ஆர்யாம்பாள் பெற்றெடுத்தார். சிவனின் திருநாமங்களில் "மங்கலத்தை அருள்பவன்' என்னும் பொருளில் "சங்கரன்' என்று பெயரிட்டு மகிழ்ந்தனர். ஐந்துவயதில் உபநயனம் செய்வித்தனர். ஏழுவயதிற்குள் சங்கரர் வேதம், வேதாந்தம், புராணங்கள், காவியங்களைக் கற்றுத் தேர்ந்தார்.

அம்மா கொடுத்த அனுமதி
காலடியில் இருந்த ஆற்றில் சங்கரரின் தாய் ஆர்யாம்பாளும், சங்கரரும் நீராடிக் கொண்டிருந்தனர். திடீரென, ""அம்மா! முதலை என் காலை கவ்வி விட்டதே!'' என்று கத்தினார் சங்கரர். அம்மா பதறிப் போய் நின்றார். ""தாயே! நீ என்னை சந்நியாசம் ஏற்க அனுமதித்தால், இந்த முதலை என்னை விட்டு விடும், இல்லாவிட்டால் அதற்கு இரையாகி விடுவேன்,'' என சங்கரர் கதறினார். பிள்ளை உயிர் பிழைத்தால் போதும் என்ற எண்ணத்தில் அம்மாவும் சந்நியாசத்திற்கு அனுமதித்தார். அந்த முதலை அழகான கந்தர்வனாக (தேவர் நிலைக்கு அடுத்த நிலையிலுள்ளவன்) மாறியது. அவன் சங்கரரை வணங்கினான். அன்று முதல் வீட்டைத் துறந்து ஞானியாகக் கிளம்பினார்.

ஜாதியில்லை பேதமில்லை
ஒருமுறை சங்கரரை புலையன் ஒருவன் பின்தொடர்ந்து வந்தான். அவன் பின்னால் நான்கு நாய்கள் வந்து கொண்டிருந்தன. அவனது கையில் கள் குடம் இருந்தது. கருப்பான அவன், குளித்து பலநாள் ஆனதால் நெடியடித்தது.
மாமிசத்தைச் சுவைத்தபடி சங்கரரை நெருங்கினான். இதைக் கண்ட சங்கரர், ""டேய், விலகிப்போடா!'' என்று எச்சரித்தார். அவன் உடனே,""நீயும் கடவுள். நானும் கடவுள். எனக்குள்ளும் உனக்குள்ளும் ஒரே ஒளியே இருக்கிறது. நான் ஏன் உன்னைக் கண்டு விலகவேண்டும்?'' என்று எதிர்கேள்வி கேட்டான். அப்போது சங்கரரின் உள்ளத்தில் ஞானஒளி தோன்றியது. "மநிஷா பஞ்சகம்' என்னும் பாடலைப் பாடினார். அப்போது அங்கிருந்த புலையன், காசிவிஸ்வநாதராக மாறி காட்சியளித்தார். இந்நிகழ்ச்சியின் மூலம், ஜாதியும் பேதமும் கூடாது என்ற உண்மையையும், உருவத்தைக் கண்டு யாரையும் இகழக்கூடாது என்ற உண்மையையும் சங்கரர் மூலமாக இறைவன் உலகுக்கு உணர்த்தினார்.

தங்கமழை பொழிய வேண்டுமா?
ஆதிசங்கரர் குருகுலத்தில் படித்த போது, மாணவர்கள் அன்றாடம் பிச்சை எடுத்து வந்து அதை இறைவனுக்கு நைவேத்யம் செய்து உண்பது வழக்கம். ஒருமுறை, சங்கரர் ஏகாதசி விரதம் முடித்து விட்டு, மறுநாள் துவாதசி நாளில் பிச்சைக்குப் புறப்பட்டார். அயாசகன் என்னும் ஏழை அந்தணர் வீட்டில் நின்று "பவதி பிக்ஷõம் தேஹி' (எனக்கு பிச்சையிடுங்கள்) என்று அழைத்தார். பிச்சை எடுக்கும்போது, மூன்று முறை கூப்பிட சாஸ்திரம் அனுமதிக்கிறது. அதனால் மீண்டும் இருமுறை சப்தமிட்டார். வாசலை எட்டிப்பார்த்தாள் அந்தணரின் மனைவி. பால் வடியும் முகத்துடன் பச்சிளம் பாலகனான சங்கரர் பிச்சை பாத்திரத்துடன் நின்றதைக் கண்டாள். ஏழையான அவள், தன் கணவர் ஏகாதசி விரதமிருந்து விட்டு துவாதசியன்று விரதம் முடிப்பதற்காக சாப்பிட வைத்திருந்த நெல்லிக்கனியை பிச்சைப்பாத்திரத்தில் இட்டாள். கணவனுக்கு கூட வைக்காமல், நல்ல மனதுடன் தர்மம் செய்த அவளது ஏழ்மை கண்டு கண்டு குழந்தை சங்கரரின் மனம் உருகியது. திருமகளை வேண்டி "கனகதாராஸ்தவம்' பாடினார். அவர்களின் முன்வினைப் பாவம் தீர்ந்து முற்றம் எங்கும் தங்க நெல்லிக்கனிகள் சிதறி விழுந்தன. தனக்கென இல்லாமல் பிறர்க்கென வாழும் அனைவர் இல்லத்திலும் லட்சுமி கடாட்சத்தால் தங்கமழை பொழியும்.


========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

அம்பலத்தரசே! அருமருந்தே! - திருவருட்பா (வள்ளலார்)


சிவசிவ கஜமுக கணநா தா
சிவகண வந்தித குணநீ தா

சிவசிவ சிவசிவ தத்துவ போதா
சிவகுரு பரசிவ சண்முக நாதா

அம்பலத் தரசே அருமருந் தே
ஆனந்தத் தேனே அருள்விருந் தே

பொதுநடத் தரசே புண்ணிய னே
புலவரெ லாம்புகழ் கண்ணிய னே

மலைதரு மகளே மடமயி லே
மதிமுக அமுதே இளங்குயி லே

ஆனந்தக் கொடியே இளம்பிடி யே
அற்புதத் தேனே மலைமா னே

சிவசிவ சிவசிவ சின்மய தேஜா
சிவசுந் தரகுஞ் சிதநட ராஜா

படன விவேக பரம்பர வேதா
நடன சபேச சிதம்பர நாதா

அரிபிர மாதியர் தேடிய நாதா
அரகர சிவசிவ ஆடிய பாதா

அந்தண அங்கண அம்பர போகா
அம்பல நம்பர அம்பிகை பாகா

அம்பர விம்ப சிதம்பர நாதா
அஞ்சித ரஞ்சித குஞ்சித பாதா

தந்திர மந்திர யந்திரபாதா
சங்கர சங்கர சங்கர நாதா

கனக சிதம்பர கங்கர புரஹர
அனக பரம்பர சங்கர ஹரஹர

சகல கலாண்ட சராசர காரண
சகுண சிவாண்ட பராபர பூரண

இக்கரை கடந்திடில் அக்கரை யே
இருப்பது சிதம்பர சர்க்கரை யே

என்னுயிர் உடம்பொடு சித்தம தே
இனிப்பது நடராஜ புத்தமு தே
==============================

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...