Followers

Tuesday, April 14, 2020



Image may contain: 3 people

Destroying ignorance is jnanam..................

'ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம.ஃ (முழுமுதற்பொருள் ஸத்தியமானது; ஞானமயமானது; என்றும் நிலைத்திருப்பது.) மாயையும் அவித்யையும் மற்றவை அனைத்தும் பிரமைகள். எப்பொழுது பிரமைகள் விலக்கப்படுகின்றனவோ, அப்பொழுதுதான் ஞானத்தைப்பற்றிய குழப்பங்கள் அகலும். ஞானம் சுயஞ்ஜோதி. அதற்கு உபதேசம் ஏதும் தேவையில்லை. அஞ்ஞானம் விலக்கப்பட்டுவிட்டால், ஞானத்தின் ஜோதி தானாகவே வெளிப்படுகிறது.

God is most merciful. I am merely His servant. Remember Him always.
சாமா கேட்டார், ''பாபா, இதென்ன விளையாட்டு? நீங்களே மனத்தில் கலவரத்தை உண்டுபண்ணுகிறீர். உம்முடைய இடத்தில் உட்கார்ந்தவாறே ஒரு சுழற்காற்றைக் கிளப்பிவிடுகிறீர். பிறகு நீங்களே அதை நிச்சலமாக்குகிறீர்.ஃஃ

பாபா பதிலுரைத்தார், ''இதோ பார், இதெல்லாம் மறைந்து வேலைசெய்யும் கர்மவினைகளின் வானளாவிய ஓட்டம். நான் செய்பவனுமல்லேன், செய்ய வைப்பவனுமல்லேன் என்பதை உறுதியாக அறிந்துகொள். ஆனாலும், செய்யக்கூடிய சக்தி என் வாயிற்படியில் படுத்துக்கிடக்கிறது.. ''விதியின் வலிமையால் என்னென்ன நிகழ்ச்சிகள் நேர்கின்றனவோ அவற்றிற்கு நான் சாட்சி மாத்திரமே. செயல்புரிபவனும் செயல்புரியவைப்பவனும் இறைவன் ஒருவனே; அவனொருவனே கிருபை செய்யக்கூடியவன்.--
''நான் தேவனுமல்லேன்; ஈசுவரனுமல்லேன். நான் 'அனல் ஹக்ஃகுமல்லேன் (கடவுளுமல்லேன்); பரமேசுவரனுமல்லேன். நான் 'யாதே ஹக்ஃ (இறைவனை எப்பொழுதும் மனத்தில் இருத்தியவன்). நான் அல்லாவின் மிகப் பணிவான அடிமை.-- அத்34.

''எவன் அஹங்காரத்தை அழித்துவிட்டு நன்றி நிறைந்த மனத்துடன் அவர்மீது தன் பாரத்தைப் போடுகிறானோ, அவனுடைய படகு கரை சேர்ந்துவிடும்.ஃஃ

,"Deva, what is this play of Yours? You first raise a storm and make us restless and then calm it down and ease us". Baba replied "You see mysterious is the path of action. Though I do nothing, they hold Me responsible for the actions which take place on account of Adrista (destiny).
I am only their witness. The Lord is the sole Doer and Inspirer. He is also most merciful. Neither I am God nor Lord. I am His obedient servant and remember Him often. He, who casts aside his egoism, thanks Him and he, who trusts Him entirely, will have his shackles removed and will obtain liberation".

He who takes refuge in Dwarkamai will soon get health and happiness, and his sufferings will come to an end.

ஷீரடி ஸ்தலத்தை எவன் மிதிக்கிறானோ, அவனுடைய துன்பம் ஒரு முடிவை அடைந்து சௌகர்யத்தை அடைகிறான். துவாரகாமாயீயை அடைந்த மாத்திரத்தில் பெரும் துன்பத்திற்கு உள்ளானவர்களும் மிகுதியான சந்தோஷத்தை அடைவார்கள். இவ்வுலகை விட்ட பிறகும் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்.

ஹேமாத்பந்த் பதிவு செய்தபடி ஷமாவிடம் (மாதவராவ் தேஷ்பாண்டே ) பாபா கூறிய வார்த்தைகள்

ஸ்ரீ சாயிபாபாவின் பதினொரு உபதேச மொழிகள்

1. ஷீரடி ஸ்தலத்தை எவன் மிதிக்கிறானோ, அவனுடைய துன்பம் ஒரு முடிவை அடைந்து சௌகர்யத்தை அடைகிறான்.
2. துவாரகாமாயீயை அடைந்த மாத்திரத்தில் பெரும் துன்பத்திற்கு உள்ளானவர்களும் மிகுதியான சந்தோஷத்தை அடைவார்கள்.
3. இவ்வுலகை விட்ட பிறகும் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்.
4. என்னுடைய மசூதி என் பக்தர்களுக்கு அநேக ஆசிர்வாதங்களையும், புத்திமதிகளையும் கொடுக்கும்.
5. என்னுடைய பூத உடல் என் மசூதியிலிருந்து பேசும்.
6. என்னுடைய மசூதியிலிருந்து கொண்டே நான் மிகவும் சுறுசுறுப்பாகவும் தீவிரமாகவும் இருப்பேன்.
7. என்னிடம் வருபவர்களுக்கும் என்னை தஞ்சம் அடைபவர்களுக்கும், என் உபதேசத்திற்காக என்னிடம் தீவிர நம்பிக்கை உள்ளவர்களுக்கும் நான் எப்பொழுதும் உயிருடன் இருக்கிறேன்.
8. நீ என்னை அடைந்தால் நான் உன்னை கடாஷிக்கிறேன்.
9. நீ என் பேரில் உன் பளுவை சுமத்தினால் நான் நிச்சயமாக அதை தாங்குவேன்.
10. நீ என் உபதேசத்திற்காகவும் உதவிக்காகவும் என்னை அடைந்தால், அவைகளை உடனே நான் உனக்கு கொடுப்பேன்.
11. என்னுடைய பக்தர்களுடைய வீட்டில் ஒரு போதும் தேவை என்பதே இருக்காது. —

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...