Followers

Thursday, April 30, 2020

புதிய வைரஸ் உருவாகும்

' கணித்து சொன்ன பஞ்சாங்கம்.

 
 'புதிய வைரஸ், உருவாகும், கணித்து, சொன்ன ,பஞ்சாங்கம்

'உலகில், புதிய வைரஸ் நோய் உருவாகும்' என, ஆற்காடு பஞ்சாங்கம் முன்பே கணித்து
கூறியுள்ளது, ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

உலகம் முழுவதும் பரவி வரும், 'கொரோனா' வைரஸ், மக்களை பீதியடைய செய்து வருகிறது. உலக நாடுகள் அனைத்தும், தடுப்பு நடவடிக்கைகளிலும், பாதுகாப்பு ஏற்பாடுகளிலும் தீவிரம் காட்டி வருகின்றன.இதுபோன்ற, புதிய வைரஸ் நோய் உருவாகும் என, ஆற்காடு பஞ்சாங்கம் முன்பே கணித்து சொல்லியுள்ளது.

விகாரி ஆண்டுக்கான பஞ்சாங்கத்தில், 'குரு பகவான் உடன்- சனி கூட்டணி ஏற்பட்டு,
பிரம்மஹத்தி தோஷம் பெற்று இருப்பதால், உலகத்தில், புதிய கிருமி நோய் உருவாகும். எந்த கெட்ட பழக்கம் இல்லாதவர்களுக்கும், சிறுநீரக நோய், 'கேன்சர்' கடுமையாக பாதிக்கும்.
அதனால், மக்கள் கடும் அவஸ்தைப்படுவர்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த, 2019 ஏப்., மாதம் வெளியான இந்த ஆற்காடு பஞ்சாங்கத்தில், உலகில் ஏற்பட்டவுள்ள
பல்வேறு மாற்றம் குறித்து முன்னரே, துல்லியமாக கணித்து கூறப்பட்டுள்ள தகவல், சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
- நமது நிருபர் --

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...