Followers

Thursday, April 30, 2020

எல்லாமனிதரையும் இருகேள்விகேளுங்கள்!
"விடியும் பொழுது மலச்சிக்கலில்லாமல் விடிகிறதா?
உறங்கும் போது மனச்சிக்கலில்லாமல் உறங்க முடிகிறதா?"
-கவிஞர் வைரமுத்து
ஆர்.வி.பதி எழுதிய, 'தமிழறிஞர்கள்' நூலிலிருந்து: இளம் வயதிலேயே கனக சுப்புரத்தினத்திற்கு கவிதை மீது மிகுந்த ஆர்வம். பாரதியார் எழுதிய சில பாடல்கள், 'சுதேச கீதங்கள்' எனும் தலைப்பில், சிறு பிரசுரமாக வெளியாகி, பலருக்கு இலவசமாக வினியோகிக்கப்பட்டது. பாரதியின் சீடர் குவளை கிருஷ்ணமாச்சாரி, அப்பாடல்களை சுப்புரத்தினத்திற்கு கொடுத்தார். அதைப் படித்ததும், பாடல்களில் மயங்கிப் போனார் சுப்புரத்தினம்.
என்றும் அன்புவணக்கம் சகோ தோழமை களே......................
ஆரோக்கியத்தின் அடையாளம்!................
மாற்றத்திற்கு உட்பட வேண்டியவன் மனிதன். சில மாற்றங்கள் நம்மை ஆரோக்கியமாக்கும்; சில அர்த்தமுள்ளதாக்கும்; சில, நம்மை அழிக்கவும் கூடும். மூன்றாவது வகையான மாற்றங்களால் தான், இன்றைய சமுதாயம் பல பிரச்னைகளை சந்தித்து வருகிறது.
பிறப்பு முதல் இறப்பு வரை, நம் பழக்க வழக்கங்கள் நவீனமாகி போனதால், உடல் உழைப்பு குறைந்து, இயல்பாக கிடைக்கும் நல்ல விஷயங்களையும், நாகரிகத்தின் பெயரில் இழந்து வருகிறோம். அதற்கு மிக பெரிய உதாரணம், வெஸ்டர்ன் டாய்லட் எனப்படும், மேற்கத்திய முறை கழிப்பறைகள்!
இதைக் கேட்டு பலரும் முகம் சுளிக்கலாம். ஆனால், கழிப்பறையை பயன்படுத்துவதில் ஒரு மனிதனின் ஆரோக்கியம் அடங்கியிருக்கிறது என்பது தான் உண்மை.
ஆதிகாலத்தில், மனிதன் தன் உடல் கழிவுகளை வெளியேற்ற பயன்படுத்தியது தான், குத்த வைக்கும் முறை! காலைக் கடன் கழிக்கும் இந்த ஆசனத்திற்கு, 'மலாசனம்' எனப் பெயர்.
இந்த ஆசனத்தால் குண்டலினி சக்தி மேல் எழும்பி, மலச்சிக்கல் பிரச்னைகள் தீருவதுடன், கால் மற்றும் முதுகு உறுதியடைகிறது.
கடந்த 19ம் நூற்றாண்டில், நாற்காலியில் உட்காரும் அமைப்பை கொண்ட கழிப்பறைகள், மேற்கத்திய நாடுகளில் பரவின. ஆரம்பத்தில், உடல் நலக் குறைபாடு உள்ளவர்களுக்காக, இத்தகைய கழிப்பறை உருவாக்கப்பட்டது. பின், சவுகரியம் கருதி, அனைவரும் பயன்படுத்த துவங்கினர்.
கடந்த 150 ஆண்டுகளுக்கு முன், மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே கிடைத்த இந்த வசதி, தற்போது, சாமானிய மக்களுக்கும் கிடைக்கும் விதமாக அனைத்து இல்லங்களிலும், குடியேறி விட்டது.
இந்திய முறை கழிப்பறையில், குத்த வைத்து அமரும் முறையில், இயற்கையான அழுத்தத்தால் கழிவுகள் எளிதாக வெளியேற்றப்படுகிறது. ஆனால், வெஸ்டர்ன் டாய்லெட்டில் இயற்கை அழுத்தம் ஏற்படாததால், கழிவுகளும் முழுமையாக வெளியேறுவதில்லை.
வெளியேறாத கழிவுகள், மலக்குடலில் தேங்கி, நோய் தொற்றை ஏற்படுத்துவதுடன், இந்த கிருமிகள், அதை சுற்றியிருக்கும் திசுக்களிலும் பரவுவதால், புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு அதிகம். டாக்டர் புக்ரிட் மற்றும் டாக்டர் ஹென்றி போன்ற மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், தங்கள் ஆய்வின் முடிவில், 'இந்திய கழிப்பறையே சிறந்தது...' என்று கூறியுள்ளனர்.
மேலும், கருவுற்ற பெண்கள், இந்திய கழிப்பறையை பயன்படுத்தினால், கருப்பையின் அழுத்தம் குறைந்து, சுகப்பிரசவமாகும் என, ஆய்வுகள் கூறுகின்றன.
ஆரோக்கிய வாழ்க்கை முறையை உலகிற்கு பயிற்றுவித்த இந்தியர்கள், இன்று மேற்கத்திய நாகரிகத்துக்கு அடிமையாகி விட்டனர்.
ஒரு காலத்தில், நம் நாட்டில் கரி மற்றும் உப்பில் பல் துலக்கியவர்களை பார்த்து, அநாகரிகம் என்றவர்கள், 'இன்று உங்கள் பேஸ்ட்டில் உப்பு இருக்கிறதா, கரி இருக்கிறதா...' என்கின்றனர். நாம் கடவுள் முன் போட்ட தோப்புக்கரணம் தான், இன்று மூளையின் செயல்பாடுகளை அதிகரிக்கும், 'சூப்பர் பிரைன்' யோகாசனம்!
பெரும்பாலான நேரத்தை நாற்காலியில் செலவிடும் நாம், இயற்கையாக கிடைக்கும் உடற்பயிற்சிகளை, இழந்து விட கூடாது. நாம் செய்யும் அனைத்து செயல்களிலும், ஆரோக்கியத் தத்துவத்தையும், உடற் பயிற்சிகளையும் கற்றுக் கொடுப்பது தான் நம் பாரம்பரியம்.
மனிதனுக்கு மனச்சிக்கலும், மலச்சிக்கலும் இருக்கவே கூடாது; இருந்தால், அவன் வாழ்வே போராட்டம் தான்.
யோசிப்போம்!
ஷோபனா திருநாவுக்கரசு
அன்பு நன்றி சகோ.
======================================
ஆர்.வி.பதி எழுதிய, 'தமிழறிஞர்கள்' நூலிலிருந்து: இளம் வயதிலேயே கனக சுப்புரத்தினத்திற்கு கவிதை மீது மிகுந்த ஆர்வம். பாரதியார் எழுதிய சில பாடல்கள், 'சுதேச கீதங்கள்' எனும் தலைப்பில், சிறு பிரசுரமாக வெளியாகி, பலருக்கு இலவசமாக வினியோகிக்கப்பட்டது. பாரதியின் சீடர் குவளை கிருஷ்ணமாச்சாரி, அப்பாடல்களை சுப்புரத்தினத்திற்கு கொடுத்தார். அதைப் படித்ததும், பாடல்களில் மயங்கிப் போனார் சுப்புரத்தினம்.
ஒருமுறை, பாண்டிச்சேரி வீதியில் முதன்முதலாக, பாரதியை பார்த்தார் சுப்புரத்தினம்; ஆனால், அவர் தான் பாரதி என்பது அவருக்கு தெரியாது. அவரைப் பார்த்ததும், புகழ்பெற்ற ஓவியர் ரவிவர்மா வரைந்த, 'பரமசிவம்' எனும் ஓவியமே அவரது நினைவுக்கு வந்தது. அதனால், அன்று முதல் அவரது மனதில், பாரதியின் முகம், 'ரவிவர்மா பரமசிவம்' என்ற பெயரால் பதிந்து விட்டது.
பின், வேணு நாயக்கர் என்பவரின் திருமண விழாவில் நடந்த பாட்டுக் கச்சேரியில், பாரதியாரின், 'வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ...' எனும் பாடலை கணீர் குரலில் பாடினார் சுப்புரத்தினம். அந்நிகழ்ச்சிக்கு பாரதியும் வந்திருந்தார்.
பாடி முடித்ததும், சுப்புரத்தினத்திற்கு, பாரதியை காட்டி, 'இவரை யார் என்று தெரியுமா?' என்று கேட்டார் வேணு நாயக்கர்.
'தெரியாது...' என்றார் சுப்புரத்தினம். அப்போது பாரதி குறுக்கிட்டு, 'தமிழ் வாசித்திருக்கிறீர்களா?' என்று கேட்டார். 'கொஞ்சம் படித்திருக்கிறேன்...' என்றார் சுப்பு ரத்தினம். 'அதனால தான், பாடலை உணர்ந்து பாடுறீங்க...' என்று அவரை பாராட்டினார் பாரதி.
'சுப்பு... இப்ப நீ பாடினாயே... இந்த பாட்டையெல்லாம் எழுதின பாரதி இவர் தான்...' என்று கூறி, பாரதியை அறிமுகப்படுத்தினார் வேணுநாயக்கர்.
அதிர்ச்சியும், மகிழ்ச்சியும் ஒருசேர அடைந்த சுப்புரத்தினத்திடம் சிறிது நேரம் பேசிய பாரதி, வேணு நாயக்கரிடம், சுப்புரத்தினத்தை தம் வீட்டிற்கு ஒருமுறை அழைத்து வருமாறு அழைப்பு விடுத்தார்.
இருவரும், ஒருநாள் பாரதி இல்லம் சென்றனர். அன்று முதல் சுப்புரத்தினம், பாரதியின் சீடராகவும் ஆனார். பாரதி சொல்வதை எழுதுவதும், அவர் எழுதியதை பிரதி எடுப்பதும் அவரது பணியாயிற்று.
பாரதி மீது கொண்டிருந்த அன்பு மிகுதியால், தன் பெயரை, 'பாரதிதாசன்' என்று மாற்றிக்கொண்டார்.
மறைந்த நடிகர் டி.எஸ். பாலையா, 'குண்டூசி' சினிமா இதழில் (1954) எழுதியது: என் முழுத் திறமையையும், உற்சாகத்தையும் திரட்டி, என்றென்றும் மறவாத ஒரு கதாபாத்திரத்தில் நடித்து, நானும் மகிழ்ந்து, மக்களையும் மகிழ்விக்க வேண்டும் என்பதே, என் நீண்ட நாளைய கனவு; லட்சியம். அதற்கேற்ற வாய்ப்புக்காக காத்திருந்தேன்.
கவுண்ட் ஆப் மாண்டி கிறிஸ்டோ என்ற ஆங்கில படத்தில் வரும், மாண்டி கிறிஸ்டோ போன்ற கதாபாத்திரத்தை, தமிழில் சிருஷ்டிக்க வேண்டும்; முடியும் என்றே நினைக்கிறேன். இதுவரை, நான் நடித்த எந்தப் படமும் எனக்கு முழு திருப்தியைத் தராத போதிலும், என் லட்சியத்தை ஒருவாறு எட்டிப்பிடித்த படங்களுள், வேலைக்காரி படத்துக்குத் தான் முதலிடம்! அப்படத்தில், பழி தீர்க்கும் படலக் காட்சி, சினிமா ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம்.
பணத் திமிரால், மனிதத் தன்மையை இழந்த வேதாசல முதலியாரின் கொட்டத்தை அடக்க, நான், ஆனந்தனுக்கு (கே.ஆர்.ராமசாமி) சூழ்ச்சி சொல்லிக் கொடுக்கும் காட்சி வருகிறதல்லவா? நான் படங்களில் தோன்றிய எல்லா காட்சிகளையும் விட, அக்காட்சி தான், ஏ ஒன்!
நடுத்தெரு நாராயணன்
அன்பு நன்றி சகோ.....
============================================
ஒம் குரு வாழ்க, குரு நன்றாய் வாழ்க, குருவே துணை...
Gurur Brahma, Gurur Vishnu, Gurur Devoh Maheshwara
Guru Sakshat Parabrahmah Tasmai Shree Guru Veh Namah !
I am Love, I shower Love. I share Love. I am pleased with Love. - Baba
When your heart is filled with good thoughts and feelings, all that comes out of the senses - your speech, your vision, your action - will naturally be pure. - Baba
உனது ஹ்ருதயம் நல்ல சிந்தனைகளாலும் நல்ல உணர்வுகளாலும் நிரப்பப்பட்டுள்ள போது, உனது பேச்சு, பார்வை, செயல்கள் யாவும் இயல்பாகவே சுத்தமாக இருக்கும். – பாபா
Embodiments of divine Love!............ Have A Great And Wonderful Day Ahead.
God Bless You All............ love-all-serve-all-help-ever-hurt-never............. Sairam
அன்புறவுகள்... எல்லோர்க்கும்... அனைவருக்கும் சகோ என்றென்றும் அன்பு நன்றியுடன்.! இனிய காலை மதிய மாலை இரவு வணக்கம்! ..உரித்தாகுக தோழமை / சகோ(களே)................!!!
ஆன்றோர்க்கும், சான்றோர்க்கும், என்னைப்போன்றோர்க்கும் இறையருளோடு கூடிய இனிய நற்காலை வணக்கம் அன்பு சகோ, இனிய நாளாக மலரட்டும்...சகோ தோழமை களே............... " விடியும் என்று விண்ணை நம்பும் நீ ....! முடியும் என்று உன்னை நம்பு...!!"
ஓம் சாயி நமோ நம! ஸ்ரீ சாயி நமோ நம!
ஜெய ஜெய சாயி நமோ நம! சத்குரு சாயி நமோ நம!
அன்புடன் சகோதரன்
விக்னசாயி............
=================================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...