நாம் செய்த தவறுகளை எண்ணி, மணிக்கணக்கில் வருந்துகிறோம்; நாள் கணக்கில், மாதக் கணக்கில், ஆண்டுகணக்கில் வருந்துபவர்களும் உண்டு. ஆனால், நாம் செய்த கெட்டிக்காரத்தனமான செயல்களுக்காக, அறிவார்ந்த முடிவுகளுக்காக, எவ்வளவு பேர், சுயமாக மனதிற்குள் பாராட்டிக் கொள்கிறோம்?
எல்லோர்க்கும் என்றும் அன்பு வணக்கங்கள் சகோ தோழமை களே........................
நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாமா?.
'உன் அருமை தெரியாத சபையில், தாராளமாக உன் பெருமைகளை எடுத்துக் கூறு; இதில் தவறில்லை...' என்று, நம் பண்டைய இலக்கண, இலக்கியங்கள் நமக்கு ஏற்கனவே, உரிமம் தந்து விட்டன.
இந்த அளவிற்குப் போகாவிட்டாலும், நம் முதுகை நாம் தட்டிக் கொள்ளலாம் தான்!
இந்த அளவிற்குப் போகாவிட்டாலும், நம் முதுகை நாம் தட்டிக் கொள்ளலாம் தான்!
என்னுடன், பாட்மிண்டன் விளையாடும் சக ஆட்டக்காரர் ஒரு நல்ல பாயின்ட்டை எடுத்து விட்டால், 'கிரேட் ரா...' என்று தன் பெயரையும் சேர்த்து, பெரிதாகக் கத்துவார்.
குளுக்கோஸ் ஊசி ஏற்ற ஆள் கிடைக்கா விட்டால், குளுக்கோஸ் டி, 'பாக்கெட்' ஒன்றை வாங்கி வாயில் போட்டுக் கொள்வது எப்படி தவறில்லையோ, அப்படித் தான் இதுவும்!
நாம் செய்த தவறுகளை எண்ணி, மணிக்கணக்கில் வருந்துகிறோம்; நாள் கணக்கில், மாதக் கணக்கில், ஆண்டுகணக்கில் வருந்துபவர்களும் உண்டு. ஆனால், நாம் செய்த கெட்டிக்காரத்தனமான செயல்களுக்காக, அறிவார்ந்த முடிவுகளுக்காக, எவ்வளவு பேர், சுயமாக மனதிற்குள் பாராட்டிக் கொள்கிறோம்?
ஆங்கிலத்தில், 'செல்ப் எஸ்டீம்' என்று ஒரு சொல் உண்டு. இதன் பொருள், சுய கவுரவம், சுய மதிப்பீடு. இவற்றை நாம் தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
இப்படிச் செய்யா விட்டால், நம் இதயத்தை, நம் தவறுகளால், கவலைக் குச்சிகளால் குத்திப் பார்க்கத் தெரிந்த நமக்கு, அந்த இதயத்தை வேறு ஒரு வகையில் ஒத்தடம் கொடுக்கத் தவறிட்டோம் என்று பொருள்!
நம்மை நாமே பீற்றிக் கொள்வது, நம் நெஞ்சைத் தாண்டி, வெளிப்படையாகவும், பிறர் கேட்கும்படியும் நடக்கும் போது தான், கடுமையான விமர்சனங்கள் எழுகின்றன.
மேடையில் பேசி விட்டு, கீழே இறங்குகிறவர், கீழே தன்னைச் சந்தித்தவர்களிடம், 'எப்படி இருந்தது என் பேச்சு...' என்று கேள்வி கேட்டால் கூட, அது தவறாகி விடுகிறது.
மேடையில் பேசி விட்டு, கீழே இறங்குகிறவர், கீழே தன்னைச் சந்தித்தவர்களிடம், 'எப்படி இருந்தது என் பேச்சு...' என்று கேள்வி கேட்டால் கூட, அது தவறாகி விடுகிறது.
இக்கேள்வியின் உட்பொருள் என்ன தெரியுமா... 'ஊம்... என்னைப் பாராட்டுங்கள்; நாலு நல்வார்த்தை கூறுங்கள்...' என்பது தான்! ஆக, வெறும் கேள்வியிலேயே, 'நான் பாராட்டும்படி பேசி விட்டேன்...' என்கிற உட்பொருள் உண்டாகி விட்டது என்றால், 'சூப்பராப் பேசிட்டேன் இல்லே...' என்று சுயமாகப் பாராட்டிக் கொண்டு விட்டால், அப்புறம் கேட்கவா வேண்டும்!
'நல்லாத்தான் பேசினீங்க... ஆனா, பாருங்க...' என்று எதிராளி ஒரு குட்டு வைக்க ஆரம்பித்து விடுவான். ஆனால், உண்மையான பாராட்டு எது தெரியுமா? தேர்வு எழுதி விட்டு வெளிவரும் மாணவனுக்கே தெரியும். 'நான் மிக நன்றாக, ஓரளவு நன்றாக எழுதி விட்டேன்...' என்று! இதைப் போன்றது தான், மேடையில் பேசியவரின் நிலையும். நன்றாகப் பேசியிருந்தால், இவருக்கு எந்தக் கொம்பனும் மதிப்பெண் போட வேண்டியதில்லை.
இந்நிலையில், எவரது இடித்துரைப்பும் இவரை ஒன்றும் செய்யாது. இதேபோல், பிறரது பாராட்டும், மரத்துப் போனது போல்தான் தெரியுமே தவிர, அது, இவரை ஒன்றும் செய்யாது.
'சூப்பராப் பேசினீங்க சார்...' என்று எவரேனும் வலிய முன் வந்து கூறினால், அது இவரது எண்ணத்திற்கு வலுவூட்டி, உரமூட்டும் செய்தியே தவிர, புதிய ஒன்றே அல்ல. பேச்சு சரியில்லாத போதும், நம்மைப் பிறர் பாராட்டினால் அது கிண்டல் ரகம்; ஊக்கப்படுத்தும் முயற்சி; முகமன் கூறல் ஆகிய, ஏதேனும் ஒன்றினுள் அடக்கி விடலாம்!
எனவே, நம் செயல்பாடுகளின், படைப்புகளின், நம் வெளிப்பாடுகளின் முதல் விமர்சகராக நாம் ஆகி விடுவது எல்லா வகையிலும் நல்லது!
அதேநேரத்தில், நம் இதயம் தேடும் சுய பாராட்டுகளை, அடியோடு புறக்கணித்து, தங்களைத் தாங்களே குறை கூறிக் கொண்டே இருப்பவர்கள், தங்கள் இதயத்திற்கு, நல்ல நண்பனாக விளங்க முடியாது.
நம் சிறந்த முடிவுகளுக்காக, நல்ல செயல்களுக்காக உலகம் நம்மை பாராட்ட முன்வருமுன், முதல் முதுகுத் தட்டை, நாம், நமக்கு வழங்கிக் கொள்ளும் புதுப்பழக்கம், இன்று முதலேனும் அரங்கேறட்டும். நம் சுயமதிப்பீடுகளை உயர்த்திக் கொள்ள இப்பழக்கம் வெகுவாக உதவும்.
லேனா தமிழ்வாணன்
அன்பு நன்றி சகோ.
அன்பு நன்றி சகோ.
=====================================
ஹெச்.ஹரிஹரன், கோட்டூர்: தன் தகுதி அறியாதவர் கதி என்னவாகும்?
'துள்ளிய மாடு பொதி சுமக்கும்' என்பது முதுமொழி. தன்னைத் தானே அறியாதவர், ஜால்ராக்களின் புகழ் மொழியால் இழி நிலைக்கு தள்ளப்படுவர். பின், உள்ளதும் போச்சு நொள்ளக் கண்ணா கதை தான்!
என்.உத்தமசோழன், விழுப்புரம்: எனக்கு ஏராளமான நண்பர்கள். இதனால், ஆபத்து என்கின்றனரே... உண்மையா?
உடன் உள்ள நண்பர்களின் குணத்தைப் பொறுத்து தான் ஆபத்தா, இல்லையா என்பதை கணிக்க முடியும். ஐந்து விரலும் ஒன்றாக இல்லாதது போல, நண்பர்களில் பல குணம் கொண்டவர்களும் இருக்க வாய்ப்புண்டு. அல்லாத குணம் கொண்டவர்களிடமிருந்து விலகி இருப்பது நல்லது!
க.தமிழ்செல்வன், சென்னை: தற்போது, ஆண்களை விட, பெண்கள் சோம்பேறிகளாக உள்ளனர். கவனித்தீர்களா?
தவறு! பெண்கள் தான் சுறுசுறுப்பாக உள்ளனர். டூ - வீலர்களில் பாருங்கள்... எந்த டென்ஷனும் இல்லாமல் ஹாயாக பின் சீட்டில், ஆண்கள் அமர்ந்து வர, பெண்கள் தானே டென்ஷனுடன் வண்டி ஓட்டுகின்றனர்... இதே கதை தானே காரிலும்! மீண்டும் பெண்களிடம் மாடு போல வேலை வாங்க ஆரம்பித்து விட்டனரோ ஆண்கள் என எண்ணத் தோன்றுகிறது!
டி.ஜெயந்தன், கடலூர்: குற்றங்களையும், வன்முறை களையும் தடுக்கும் திறமை, நம் காவல் துறையினரிடம் குறைந்து விட்டதா?
குறையவில்லை; ஆனால், விட்டமின், 'ப' அது தாங்க காந்தி பட நோட்டு... திறமைகளை அடக்கி வாசிக்க வச்சுட்டது!
பொ.தங்கபாண்டியன், திருவல்லிக்கேணி: இன்றைய உலகில் நிம்மதியாக வாழ்பவர் யார்?
பணக்காரர்களோ, பதவியில் இருப் பவர்களோ, அதிகாரம் உள்ளவர்களோ, புகழின் உச்சாணிக் கொம்பில் வீற்று இருக்கும் நடிகர்களோ, தொழிலதிபர்களோ அல்ல என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்!
பி.மனோரஞ்சிதம், மதுரை: நம் கலாசாரத்தில் வெகுவாக ஆணுக்கும், பெண்ணுக்கு மிடையே மேம்போக்கான நிலை இருக்கிறது. ஆனால், இந்த அம்சம் அடிப்டையில், 'நட்பென' அங்கீகரிக்கப்பட்ட பெரும்பாலான ஆண் - பெண் மனங்கள் காதல் என்ற நிலையிலிருந்து மீள்வதில்லை. இந்த தவறு யார் மீது?
காஞ்ச மாடு கம்பங் கொல்லையிலே மேய்ஞ்சது மாதிரி என்று சொல்வர் கேட்டிருக்கிறீர்களா? அதே நிலையில் நம் சமுதாய அமைப்பு உள்ளது. ஆண்களை கண்டால் ஒளியும் நிலை இப்போது இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக நம் சமுதாயம் மாறி வருகிறது. காலப்போக்கில் இந்த சமுதாய மறுமலர்ச்சி கலாசாரத்தை மாற்றும். அப்போது, நட்பை, காதலென நினைக்கும் எண்ணங்கள் மறைந்து விடும்!
வி.ஜெ.கார்த்திக், அருப்புக்கோட்டை: ஒரு மனிதனுக்கு எத்தனை மணி நேரம் தூக்கம் தேவை?
புளிச்ச ஏப்பம் விடுபவன் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தூங்கலாம். பசி ஏப்பக்காரன் தூங்கும் ஒவ்வொரு மணி நேரமும், அவன் முன்னேற்றத்தை அந்த அளவுக்கு பின்னுக்குத் தள்ளி விடும்!
அன்பு நன்றி சகோ அந்துமணி........
=====================================
ஒம் குரு வாழ்க, குரு நன்றாய் வாழ்க, குருவே துணை...
Gurur Brahma, Gurur Vishnu, Gurur Devoh Maheshwara
Guru Sakshat Parabrahmah Tasmai Shree Guru Veh Namah !
Gurur Brahma, Gurur Vishnu, Gurur Devoh Maheshwara
Guru Sakshat Parabrahmah Tasmai Shree Guru Veh Namah !
I am Love, I shower Love. I share Love. I am pleased with Love. - Baba
When your heart is filled with good thoughts and feelings, all that comes out of the senses - your speech, your vision, your action - will naturally be pure. - Baba
உனது ஹ்ருதயம் நல்ல சிந்தனைகளாலும் நல்ல உணர்வுகளாலும் நிரப்பப்பட்டுள்ள போது, உனது பேச்சு, பார்வை, செயல்கள் யாவும் இயல்பாகவே சுத்தமாக இருக்கும். – பாபா
Embodiments of divine Love!............ Have A Great And Wonderful Day Ahead.
God Bless You All............ love-all-serve-all-help-ever-hurt-never............. Sairam
God Bless You All............ love-all-serve-all-help-ever-hurt-never............. Sairam
அன்புறவுகள்... எல்லோர்க்கும்... அனைவருக்கும் சகோ என்றென்றும் அன்பு நன்றியுடன்.! இனிய காலை மதிய மாலை இரவு வணக்கம்! ..உரித்தாகுக தோழமை / சகோ(களே)................!!!
ஆன்றோர்க்கும், சான்றோர்க்கும், என்னைப்போன்றோர்க்கும் இறையருளோடு கூடிய இனிய நற்காலை வணக்கம் அன்பு சகோ, இனிய நாளாக மலரட்டும்...சகோ தோழமை களே............... " விடியும் என்று விண்ணை நம்பும் நீ ....! முடியும் என்று உன்னை நம்பு...!!"
ஓம் சாயி நமோ நம! ஸ்ரீ சாயி நமோ நம!
ஜெய ஜெய சாயி நமோ நம! சத்குரு சாயி நமோ நம!
ஜெய ஜெய சாயி நமோ நம! சத்குரு சாயி நமோ நம!
அன்புடன் சகோதரன்
விக்னசாயி............
விக்னசாயி............
=============================================
உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.
உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.
---------------------------------------------------------------
No comments:
Post a Comment