கண்ணீர் விட்டு அழுதும் பணம் கொடுக்காது விரட்டியடித்த வங்கி அதிகாரி! யாழில் தாயொருவருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை...........
வட்டுக்கோட்டைப் பகுதியில் வசிக்கும் தாயொருவர் வங்கியில் பணம் பெற்றுக் கொள்வதற்கு சென்ற போது வங்கியின் முகாமையாளர் பணம் கொடுக்காது திருப்பியனுப்பியதாக கண்ணீரோடு தெரிவித்துள்ளார்.
தனக்கு அனுப்பப்பட்ட பணத்தினைப் பெற்றுக்கொள்வதற்காக தான் சென்றதாகவும் எனினும், அவர் கொடுக்க மறுத்தார் என்றும், கண்ணீர் விட்டு அழுது கெஞ்சிக் கேட்டும் கொடுக்க மறுத்ததாகவும் அவர் காணொளி வாயிலாக குறிப்பிட்டுள்ளார்.
தற்போது ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையில் அன்றாடத் தேவைகளுக்கு அலைய வேண்டியிருப்பதாகவும், பொருட்களை வாங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலையிலும் வங்கியின் முகாமையாளர் நடந்து கொண்ட விதத்தினை காணொளி வாயிலாக அவர் கண்ணீரோடு குறிப்பிட்டுள்ளார்.
courtesy;IBCTAMIL.
====================================================
No comments:
Post a Comment