Followers

Thursday, February 27, 2020


Image may contain: 1 person



Do not entertain the sense of doer-ship in doing good.


''உமது புத்தியில் அகங்காரம் ('நான்ஃ என்னும் செருக்கு) அமர்ந்திருக்கிறது. அதனால்தான், நீர் உம்மை அபராதியாகக் (குற்றவாளியாகக்) கருதுகிறீர். 'செயல் புரிபவன் நானில்லைஃ என்னும் மனப்போக்கை ஏற்றுக்கொள்ளுங்கள். உம்முடைய உபாதிகள் அனைத்தும் தவிடுபொடியாகிவிடும். -- ''புண்ணியங்கள் அனைத்தும் தமதாக இருக்கவேண்டும் என்றும், பாவங்கள் எதுவும் தமதாக இருக்கக்கூடாது என்றும் மக்கள் ஏன் நினைக்கின்றனர்? அவை இரண்டின் பிரதாபமும் (வீரமும்) சரிசமானமே. ஆகவே, 'நான் செய்கிறேன்ஃ என்னும் எண்ணத்தை விடுக.--


Baba also added- "Now you need not worry yourself any more about the matter. It was on account of my wish that the coconut was entrusted to you, and ultimately broken on the way; why should you take the responsibility of the actions on you? Do not entertain the sense of doership in doing good, as well as for bad deeds; be entirely prideless and egoless in all things and thus your spiritual progress will be rapid." What a beautiful spiritual instruction Baba gave!


131 ஸாயீ நாமம் காதில் விழுந்த உடனே, சுவாமி இரண்டு கைகளையும் கூப்பி வணக்கம் தெரிவித்துக்கொண்டே சொன்னார், ''அவர் நம் சகோதரர்; பற்றற்றவர்; அவரிடம் நமக்கு எல்லையற்ற பிரேமை உண்டு.ஃஃ


132 அங்கிருந்த ஒரு தேங்காயை எடுத்துப் புண்டலீகராவிடம் ஒப்படைத்தவாறு அவர் சொன்னார், ''நீங்கள் சிர்டீக்குச் செல்லும்போது நம் சகோதரரின் பாதகமலங்களில் வந்தனம் செய்தபின், இதைக் காணிக்கையாகச் செலுத்துங்கள்.--


133 ''என்னுடைய நமஸ்காரத்தை முழுமையாகத் தெரிவித்து, அவரை இந்த தீனன் என்றும் மறவாதவாறு கிருபைபுரியவேண்டும் என்றும், அவரிடம் எனக்குள்ள பிரேமை நிரந்தரமாக வளரவேண்டுமென்றும், வேண்டியதாகச் சொல்லுங்கள்.--


134 ''நீங்கள் சிர்டீ கிராமத்திற்கு மறுபடியும் செல்லும்போது ஞாபகமாக இதை என் சகோதரருக்கு பயபக்தியுடன் காணிக்கையாகச் செலுத்துங்கள்.--


135 ''சுவாமிகளாகிய நாங்கள் யாருக்கும் வந்தனம் செலுத்தக்கூடாது என்பது சாஸ்திர நிபந்தனை. ஆயினும், இந்த நியமத்தைச் சிலசமயங்களில் மீறுதல் மங்களம் விளைவிக்கும்.--


136 ''ஆகவே, ஸாயீ தரிசனம் செய்யும்போது இதை மறந்துவிடாதீர். நன்கு நினைவில் வைத்துக்கொண்டு ஸாயீ பாதங்களில் தேங்காயை அர்ப்பணம் செய்யுங்கள்.ஃஃ


137 சுவாமி கூறியதைக் கேட்ட புண்டலீக ராவ் அவருடைய பாதங்களில் பணிந்து சொன்னார், ''சுவாமியின் ஆணை எப்படியோ அப்படியே அது நிறைவேற்றப்படும்.--


138 ''இந்த ஆணையை நான் சிரமேற்கொண்டேன். நீங்கள் என்னை பாக்கியவானாக ஆக்கியதாகக் கருதுகிறேன்.ஃஃ இவ்வாறாக, சுவாமியை அனன்னியமாக சரணடைந்தபின் புண்டலீக ராவ் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டார்.


139 சுவாமி பாபாவை சகோதரர் என்று சொன்னது அர்த்தமற்ற செயலா என்ன? ''ஜீவிதமாக இருக்கும்வரை தினமும் அக்கினிஹோத்திரம் (நாள்தோறும் செய்யும் தீவேள்வி) செய்வாயாகஃஃ என்பது சுருதியின் ஆணை. பாபா அதைப் பின்பற்றினார்.


140 மக்கள் எதை 'துனிஃ (ஈஏமசஐ) என்று சொன்னார்களோ, அது பாபாவின் சன்னிதியில் எப்பொழுதும் இருந்தது. 24 மணி நேரமும் அது ஜுவாலையுடன் எரிந்துகொண் டிருந்தது. அது பாபாவின் விரதம்.


141 மனத்தைத் தூய்மைப்படுத்தும் அக்னிஹோத்திரம் போன்ற சடங்குகள், முழுமுதற்பொருளை அடையும் சாதனங்கள் என்பது பிரமாணம். பாபா மக்களை நல்வழிப்படுத்துவதற்காக அதை ஏற்றுக்கொண்டார்.


142 ஸ்ரீ வாஸுதேவானந்த ஸரஸ்வதி, 'யதிஃ பிரிவைச் சார்ந்த துறவி. அக்னிஹோத்திரம் போன்ற விரதங்களையும் கடைப்பிடித்து வந்தார். ஆகவே, அவர் பாபாவை சகோதரர் என்று சொன்னது அர்த்தமற்றதாகுமா?


143 பின்னர், ஒரு மாதம் கழிவதற்கு முன்பாகவே, புண்டலீக ராவுக்கு நான்கு நண்பர்களுடன் சேர்ந்து சென்று, ஸாயீதரிசனம் செய்யும் யோகம் வாய்த்தது.


144 அவர்கள் தங்களுக்கு வேண்டிய சாமான்களையும் பழங்களையும், மறந்துபோகாமல் தேங்காயையும் எடுத்துச் சென்றனர். மனத்தில் ஆனந்தமும் சாந்தமும் நிரம்பிய நிலையில் ஐவரும் ஸாயீதரிசனத்திற்குப் புறப்பட்டனர்.


145 பிறகு மன்மாடில் இறங்கினர். கோபர்காங்வ் வண்டி வருவதற்குச் சிறிது அவகாசம் (கால இடைவெளி) இருந்தது. ஆகவே, தாகத்தைத் தணித்துக்கொள்ள ரயில் நிலையத்திற்கு அருகி­ருந்த ஓடைக்குச் சென்றனர்.


146 வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் உடல் நலக்கேடு விளையும் என்று கருதி, ஐவரில் ஒருவர், தாம் கொண்டுவந்திருந்த 'சிவ்டாஃ (ஙஐலபமதஉ) பொட்டலத்தை வெளியே எடுத்தார்.


147 ஒரு சிட்டிக்கை சிவ்டாவை வாயில் போட்டுப் பார்த்ததில் காரம் அதிகமாக இருந்தது தெரிந்தது. கொஞ்சம் தேங்காய் சேர்க்காமல் சிவ்டாவைத் தின்னமுடியாத நிலைமை. சிவ்டாவைக் கொண்டுவர எடுத்த முயற்சி வீண், என்று அவர்களுக்குத் தோன்றியது.


148 ஆகவே, ஒருவர் மற்றவர்களிடம் சொன்னார், ''எனக்கு ஒரு யுக்தி (வழிவகை) தோன்றுகிறது. ஒரு தேங்காயை உடைத்து சிவ்டாவில் கலந்துவிடலாம். சிவ்டாவின் அற்புதமான ருசியை அப்பொழுது பாருங்கள்õஃஃ


149 தேங்காய் என்று சொன்னவுடனே தேங்காய் தயாராக இருந்ததுõ அதை உடைப்பதில் என்ன தாமதம்? தேங்காயைக் கலந்தவுடன் சிவ்டா ருசிகரமாகியது. சிவ்டாவைத் தின்றபின் தண்ணீர் குடித்தனர்.


150 தேங்காய் என்று சொன்னவுடன் தேங்காய் வந்தது. அது யாருடையது என்ற கேள்வியே எழவில்லை. பசியின் கடுமை வேறெதையும்பற்றிச் சிந்திக்கவிடாமல் தடுத்துவிட்டதுõ


151 பின்னர், ரயில் நிலையத்திற்குத் திரும்பிவந்து கோபர்காங்வ் ரயி­ல் ஏறிய பிறகு, பயணத்தின்போது புண்டலீக ராவுக்குத் திடீரென்று தேங்காய்பற்றிய நினைவு வந்தது.


152 சிர்டீயை நெருங்கியபோது புண்டலீக ராவின் மனம் குழம்பித் தத்தளித்தது. வாஸுதேவானந்தா அளித்த தேங்காய், தவறுதலாகச் சிவ்டாவுடன் கலக்கப்பட்டுவிட்டது.


153 தேங்காய் உடைக்கப்பட்டு உண்ணப்பட்டுவிட்டது, என்பதை உணர்ந்த புண்டலீக ராவைப் பயம் பிடித்துக்கொண்டது. உடல் நடுங்க ஆரம்பித்தது. ஒரு ஞானிக்கு அபசாரம் (மரியாதைக் குற்றம்) நடந்துவிட்டது.


154 அவர் பெரிதும் வருத்தமுற்றார், ''அடாடா நான் எத்தகைய பாவம் செய்துவிட்டேன்õ சுவாமியின் சாபத்திற்கு நான் ஆளாவேன். நான் அவரிடம் பிரலாபித்ததெல்லாம் (பிதற்றியதெல்லாம்) வீணாகப் போயிற்று.ஃஃ


155 தேங்காய்க்கு நேர்ந்த கதியையும் தாம் செய்த ஏமாற்றுதலையும் நினைத்துப் புண்டலீக ராவின் மனம் வியப்பால் உறைந்து போயிற்று.


156 ''இப்பொழுது நான் பாபாவிடம் எதைக் கொடுப்பேன்? எந்த ரீதியில் அவருக்கு விவரம் சொல்லுவேன்? ஆஹா, தேங்காயைக் கோட்டைவிட்டுவிட்ட நான் எப்படி அவரிடம் என் முகத்தைக் காட்டுவேன்?ஃஃ


157 'ஸாயீ பாதங்களில் ஸமர்ப்பணம் செய்வதற்கு வைத்திருந்த தேங்காய் தின்று தொலைக்கப்பட்டதேஃ என்னும் சிந்தனை அவரை வாட்டியது. அது ஒரு ஞானிக்குச் செய்யப்பட்ட அபசாரம் என்று தம்முள் நினைத்தார்.


158 ''இப்பொழுது, பாபா 'தேங்காய் எங்கேஃ என்று கேட்கும்போது எல்லாரும் அவமானத்தால் முகங்கவிழப் போகிறோம். ஏனெனில், 'மன்மாடில் அது சிற்றுண்டியாகிவிட்டதுஃ என்னும் குற்றவுணர்ச்சி எல்லாருடைய மனத்திலும் தோன்றும்.--


159 ''இன்று அந்தத் தேங்காய் என்னிடம் இல்லை. உண்மையைச் சொல்லுவதற்கு வெட்கமாக இருக்கிறது. பொய் சொல்லவும் முடியாது. ஏனெனில், ஸாயீ மஹராஜ் ஸர்வஸாக்ஷி (எல்லா நிகழ்வுகளையும் சாட்சியாகப் பார்த்துக்கொண் டிருப்பவர்).ஃஃ


160 இருந்தபோதிலும், ஸாயீயை தரிசனம் செய்தபோது குழுவினர் அனைவரும் சந்தோஷப்பட்டனர். விழிகள் ஆனந்தக்கண்ணீர் வடித்தன. அவர்களுடைய முகங்கள் மலர்ந்திருந்தன.


161 இக் காலத்தில் நாம் இரவுபகலாகத் தந்தி மூலமாகச் செய்திகளை அனுப்புகிறோம். இந்த விஞ்ஞான சாதனைபற்றிப் பெருமைகொள்கிறோம்; பகட்டுகிறோம்.


162 இதன் பொருட்டுப் பெருஞ்செலவு செய்து பல தந்தி நிலையங்களை நிர்மாணம் செய்திருக்கிறோம். ஞானியருக்கு இச் சாதனங்கள் தேவையில்லை. தங்களுடைய மனத்தின் சக்தியாலேயே செய்திகளை அனுப்புகின்றனர்.


163 சுவாமிகள் புண்டலீக ராவிடம் தேங்காயைக் கொடுத்தபோதே ஸாயீநாதருக்குச் செய்தி அனுப்பிவிட்டார்.


164 புண்டலீக ராவுக்கு தரிசனம் அளித்துக்கொண்டே ஸாயீ பாபா அவராகவே கேட்டார், ''என் சகோதரரிடமிருந்து நீர் எடுத்துக்கொண்டுவந்த என்னுடைய வஸ்துவைக் (பொருளைக்) கொடும்.ஃஃ


165 பெருந்துன்பமடைந்த புண்டலீக ராயர், ஸாயீயின் பாதங்களை கெட்டியாகப் பிடித்துக்கொண்டே சொன்னார், ''தேவரீரிடம் மன்னிப்புக் கேட்பதைத்தவிர எனக்கு வேறு வழியே இல்லை. என்னால் வேறென்ன சொல்ல முடியும்?--


166 ''எனக்குத் தேங்காய்பற்றிய ஞாபகம் இருந்தது. ஆனால், நாங்கள் பசியோடு ஓடைக்குச் சென்றபோது எல்லாருமே அதைப்பற்றி முழுமையாக மறந்துவிட்டோம்.--


167 ''சிவ்டாவைத் தின்றபோது அந்தத் தேங்காயைத்தான் உடைத்துக் கலந்தோம். ஆயினும், நான் இன்னொரு தேங்காய் கொண்டுவருகிறேன். நிச்சலமான மனத்துடன் தேவரீர் அதை ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன்.ஃஃ


168 இவ்வாறு சொல்­க்கொண்டே புண்டலீக ராவ் வேறொரு தேங்காயைக் கொண்டுவருவதற்காக எழுந்தார். ஸாயீ மஹராஜ் அவருடைய கையைப் பிடித்துத் தடுத்து நிறுத்தியதை எல்லாரும் கண்டனர்.


169 ''என்னிடம் வைக்கப்பட்ட நம்பிக்கையை நான் அறியாது கொன்றுவிட்டேன். கிருபாளுவான (அருளுடையவரான) தேவரீர் என்னைச் சிறகுகளால் மூடிக் காப்பீராக. கிருபை செய்து என்னை மன்னித்துவிடுங்கள். நான் உங்களுக்குக் கடுமையான அபராதம் (குற்றம்) செய்துவிட்டேன்.--


170 ''சுவாமிக்கு இணையான ஒரு நல்ல சாது உள்ளாரோ? அவருடைய ஆணையையே நான் மீறிவிட்டேன். தங்களிடம் அர்ப்பணம் செய்யப்படவேண்டிய தேங்காயை நான் உடைத்துத் தின்றுவிட்டேன்.--


171 ''இது ஞானியர் விதித்த ஆணையை மீறுவதன்றோ? ஐயகோõ நான் பெருங் குற்றவாளிõ இந்தப் பாவத்திற்கு சாந்தி ஏதும் உண்டோ? எப்படி, எப்படி நான் இவ்வளவு வெட்கங்கெட்டவனானேன்?ஃஃ


172 என்ன நடந்தது என்பதைக் கேட்ட ஸாயீநாதர் புன்னகை புரிந்துகொண்டே சொன்னார், ''வைத்துக் காப்பாற்ற முடியாதவர் ஏன் தேங்காயைக் கையில் வாங்கிக்கொள்ள வேண்டும்?--


173 ''என்னுடைய வஸ்துவை என்னிடம் நீர் நிச்சயமாகக் கொண்டுசேர்ப்பீர் என்று நினைத்து என் சகோதரர் உமது வார்த்தைகளில் முழுமையாக விசுவாசம்
வைத்தார்.--


174 ''அது இவ்வாறாகவா பரிணமிக்க (உருமாற) வேண்டும்? இவ்வளவுதான் உம்முடைய நாணயமா? என் சகோதரருடைய விருப்பம் நிறைவேறவில்லை. இதுதான் நீர் செயல்படும் முறையோ?ஃஃ


175 ஸாயீ மேலும் சொன்னார், ''நீர் எத்தனை தேங்காய்களைக் கொண்டுவந்தாலும், அந்தத் தேங்காயின் யோக்கியதைக்கு (சிறப்புக்கு) மற்றவை இணையாகா. எது நடக்கவிருந்ததோ அது நடந்துவிட்டது. அதைப்பற்றி வருத்தப்படுவதில் அர்த்தமென்ன இருக்கிறது?--


176 ''சுவாமி உம்மிடம் தேங்காயைக் கொடுத்தது என்னுடைய சங்கல்பத்தால். தேங்காய் உடைக்கப்பட்டதும் என்னுடைய சங்கல்பத்தாலேயேõ உம்மை ஏன் அதற்குப் பொறுப்பாளர் ஆக்கிக்கொள்கிறீர்?--


177 ''உமது புத்தியில் அகங்காரம் ('நான்ஃ என்னும் செருக்கு) அமர்ந்திருக்கிறது. அதனால்தான், நீர் உம்மை அபராதியாகக் (குற்றவாளியாகக்) கருதுகிறீர். 'செயல் புரிபவன் நானில்லைஃ என்னும் மனப்போக்கை ஏற்றுக்கொள்ளுங்கள். உம்முடைய உபாதிகள் அனைத்தும் தவிடுபொடியாகிவிடும். --


178 ''புண்ணியங்கள் அனைத்தும் தமதாக இருக்கவேண்டும் என்றும், பாவங்கள் எதுவும் தமதாக இருக்கக்கூடாது என்றும் மக்கள் ஏன் நினைக்கின்றனர்? அவை இரண்டின் பிரதாபமும் (வீரமும்) சரிசமானமே. ஆகவே, 'நான் செய்கிறேன்ஃ என்னும் எண்ணத்தை விடுக.--


179 ''நீர் என்னைப் பேட்டி காணவேண்டும் என்று என்னுடைய மனத்தில் எண்ணம் விழுந்ததால்தான், அந்தத் தேங்காய் உம்முடைய கைகளில் வந்து விழுந்தது. இச் சொல் முக்காலமும் ஸத்தியம்.--


180 ''நீங்களும் எனது குழந்தைகளே. உங்களுடைய வாய்களில் இடப்பட்ட தேங்காயை உங்களுக்குத் தெரியாமலேயே எனக்கு அர்ப்பணம் செய்துவிட்டீர்கள்õ அது என்னிடம் வந்துசேர்ந்துவிட்டது என்பதைத் திட்டவட்டமாக அறிந்துகொள்ளுங்கள்.ஃஃ


181 இவ்வாறு பாபாவால் சமாதானப்படுத்தப்பட்ட பின்பே புண்டலீக ராவின் மனம் சாந்தமடைந்தது. சோகம் கொஞ்சங்கொஞ்சமாக விலகியது.


182 தேங்காய் நஷ்டம் என்னவோ ஒரு சாக்குப்போக்குதான். பாபாவின் உபதேசத்தால், அவருடைய நடுங்கிக்கொண் டிருந்த மனம் மலர்ச்சி அடைந்தது. 'நான்ஃ என்னும் செருக்கால் சூழப்பட்டருந்த ஐவரும் அச் செருக்கை விடுத்து, தோஷம் (குற்றம்) நீங்கியவர்கள் ஆயினர்.


183 'நான்ஃ என்னும் செருக்கை மனம் விடுத்தால், அதற்கு ஆன்மீகவாழ்வில் முன்னேற அதிகாரம் கிடைக்கிறது. பிறவிக்கடலையும் இயல்பாகக் கடந்துவிடலாம். இதுவே இக் கதையின் சாரம்.
=================================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...