நானும் வாழ்ந்தேன் என்று வாழ்கிற வாழ்க்கையை, முழுமையான வாழ்க்கையாக ஏற்க முடியாது.
உயர்ந்த லட்சியங்களோடு, உன்னத வாழ்க்கை வாழ முற்படுகிற போது, புகழோடு பொருளும், பணமும், அங்கீகாரமும், மரியாதையும் மற்றும் மதிப்பும் ஆட்டுக்குட்டிகளாய், நம் பின்னே ஓடி வர ஆரம்பிக்கின்றன.
எல்லோர்க்கும் இனிய நாளாகட்டும் சகோ தோழமை களே........................
புள்ளியில் மனம் குவித்தால் பெரும்புள்ளி ஆகலாம்!
நீங்கள் குறிப்பிட்ட ஒரு நிகழ்வில் இருந்தால், நீங்கள் இருப்பது, மற்றவர்களால் உணரப்பட வேண்டும். நீங்கள் அந்த இடத்தில் இல்லாவிட்டால், 'ஏன் நீங்கள் வரவில்லை...' என்று மற்றவர்களால் கேட்கப்பட வேண்டும் என்பான் ஒரு மேலைநாட்டு அறிஞன்.
ஒரு நிகழ்விற்கே இப்படிப்பட்ட எதிர்பார்ப்பு இருக்குமேயானால், நாம் வாழும் நெடிய வாழ்க்கை எனும் நிகழ்வு, இன்னும் எவ்வளவு அர்த்தமுள்ளதாக ஆக்கப்பட வேண்டும்!
'வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்...' என்று ஒரு திரைப்பட பாடல் உண்டு.
இப்படி இல்லாமல், நானும் வாழ்ந்தேன் என்று வாழ்கிற வாழ்க்கையை, முழுமையான வாழ்க்கையாக ஏற்க முடியாது.
உயர்ந்த லட்சியங்களோடு, உன்னத வாழ்க்கை வாழ முற்படுகிற போது, புகழோடு பொருளும், பணமும், அங்கீகாரமும், மரியாதையும் மற்றும் மதிப்பும் ஆட்டுக்குட்டிகளாய், நம் பின்னே ஓடி வர ஆரம்பிக்கின்றன.
'வாழ்வின் பெரும் பகுதி முடிந்து விட்டது; இனி சாதிக்கிறதாவது, வெற்றியாவது, வெங்காயமாவது...' என்று நாடி நரம்புகள் தளர்ந்து பேசுகிறவர்கள் கூட, மீதமிருக்கிற காலத்தை, திட்டமிட வேண்டிய நேரம் இது!
'பொல்லாத பொம்பளை; சரியான ர(ாவ)வுடி! மனுஷியா அவ!' என்கிற பெயர்களையும், 'சரியான சுயநலப் பேய்... தன்னப் போணி (தன்னை மட்டுமே பேணுகிற தன்மை) மோசமான புல்டாக்! ஒண்ணுமில்லாததற்கெல்லாம் மேல விழுந்து புடுங்குவான்; எச்சிக் கையால கூட, காக்கா ஓட்ட மனசு வராது...' என்பன போன்ற அவப்பெயர்களை எடுத்திருந்தால், இவற்றைத் துடைக்கும் செயல்பாடுகளிலாவது, சொச்ச மிச்ச காலங்களைப் பயன்படுத்தலாம்.
பெரியவர்களை சரிவரப் பராமரிக்காத இளைய சமுதாயத்தை குறை கூறுகிறோமே... எத்தனை வீடுகளில், 'இந்தக் கிழம் போய் சேர்ந்தால் தேவலை...' என்று எண்ணுகிறபடி நடந்து கொள்கின்றனர் பெரியவர்கள்!
சரி, நாற்காலியை, 90 டிகிரி திருப்பிப் போட்டு, வாழ வேண்டிய இளைய தலைமுறையை இனி உற்று நோக்குவோம்.
மண்ணிற்கு பாரமாய், வீட்டிற்கு தண்டச்சோறாய் வாழ்வது ஒரு வாழ்க்கையா?
'இந்தச் சின்ன வயசுல என்னமாய் பொறுப்பும், அக்கறையும் காட்டுறா (ன்) பாருங்க... ரொம்பக் கருக்கடையான புள்ளை...' என்கிற நற்பெயரை இலக்காகக் கொண்டால் போதும்; மீதி அத்தனை நற்குணங்களையும், இந்த ஒரு லட்சியம் இந்த இளசைக் கரை சேர்ப்பதோடு, கறைகளில்லாத நற்பெயரையும் ஈட்டித் தரும்.
நான் உணர்ந்த வரை, ஏன் இளைய சமுதாயம் வழி தவறிப் போகிறது என்றால், வாழ்க்கையில் இலக்குகள் என்று எதையும் ஏற்படுத்திக் கொள்ளாதது தான்! கண்ணைக் கட்டி, இருட்டறையில் பொருள் தேடும் பாணியில், வாழ்வின் கணங்களை விரயமாக்கி விட்டால், வளர்ச்சி என்பது ஏது?
மருத்துவர்கள் சிலர், கத்தியால் அறுவை சிகிச்சை செய்த காலங்களில் கூட, தெரியாத்தனமாக இலக்கு உறுப்புகளை தாண்டி, காயம் செய்தனர்; தேவைக்கு மேலே அறுத்து தள்ளினர். இன்று அப்படியா... லேசர் கதிர் கொண்டு, மகா நுண்ணிய இலக்கில் ஒன்றை அணுகினால், ஒரு மில்லி மீட்டர் கூடத் தவறாதபடி சிகிச்சை நிகழ்த்துகின்றனர்.
எல்லாரும் வளர வேண்டும், சாதிக்க வேண்டும் என்று பொத்தாம் பொதுவாக எண்ணுகின்றனர்; இது, கிரிக்கெட் மைதானத்தின் மீது வெளிச்சம் பாய்ச்சுவது போன்றது.
பார்வையின் பரப்புகள் அதிகப்படும் போது, அதில் கவனம் குவியாது; இதில் பயனில்லை. நமக்கு தேவை ஒரு குறிப்பிட்ட புள்ளி. அந்தப் புள்ளி, லேசர் புள்ளி போல் ஒன்று குவிந்தால், நம் எண்ணங்களும் கூர்மையாகும்; பிற கவனங்கள் விலகும். கவனங்கள் சிதறுவதில் பயனில்லை.
தூண்டிலைப் போட்டு, ஏரியைச் சுற்றியுள்ள இயற்கை காட்சிகளை கண்டுகளிப்பதில் பொருள் உண்டா? பரந்த பார்வை பார்த்துக் கொண்டிருந்தால், தூண்டிலின் இரை, விழுங்கப் பெற்று விடும்.
தக்கையின் முனையில், கண்களின் இலக்கு குவிய வேண்டும். இதைச் செய்தால் தான் 'அடி சக்கை...' என்று நம்மை பிறரும், நம்மை, நாமும் பாராட்டும் - பாராட்டிக் கொள்ளும் காரியங்கள் கைவசமாகும்.
புள்ளியில் மனம் குவிப்போம். இதை நிகழ்த்தினால், மற்றவை நம்மிடம் தாமாக வந்து குவியும்!
லேனா தமிழ்வாணன்
அன்பு நன்றி ஐயா..
=======================================
ஒம் குரு வாழ்க, குரு நன்றாய் வாழ்க, குருவே துணை...
Gurur Brahma, Gurur Vishnu, Gurur Devoh Maheshwara
Guru Sakshat Parabrahmah Tasmai Shree Guru Veh Namah !
I am Love, I shower Love. I share Love. I am pleased with Love. - Baba
When your heart is filled with good thoughts and feelings, all that comes out of the senses - your speech, your vision, your action - will naturally be pure. - Baba
உனது ஹ்ருதயம் நல்ல சிந்தனைகளாலும் நல்ல உணர்வுகளாலும் நிரப்பப்பட்டுள்ள போது, உனது பேச்சு, பார்வை, செயல்கள் யாவும் இயல்பாகவே சுத்தமாக இருக்கும். – பாபா
Embodiments of divine Love!............ Have A Great And Wonderful Day Ahead.
God Bless You All............ love-all-serve-all-help-ever-hurt-never............. Sairam
அன்புறவுகள்... எல்லோர்க்கும்... அனைவருக்கும் சகோ என்றென்றும் அன்பு நன்றியுடன்.! இனிய காலை மதிய மாலை இரவு வணக்கம்! ..உரித்தாகுக தோழமை / சகோ(களே)................!!!
ஆன்றோர்க்கும் சான்றோர்க்கும் என்னைப்போன்றோர்க்கும் இனிய ஆண்டாக நாளாக மலரட்டும்...சகோ தோழமை களே...............
நட்புகளுக்கும் அவர்கள் குடும்பத்தினர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள் !!!
நினைத்தவை எல்லாம் நிறைவேறி , சுபீட்சம் உண்டாகட்டும் !!!
ஓம் சாயி நமோ நம! ஸ்ரீ சாயி நமோ நம!
ஜெய ஜெய சாயி நமோ நம! சத்குரு சாயி நமோ நம!
அன்புடன் சகோதரன்
விக்னசாயி............
=====================================
பச்சைமா மலைபோல் மேனி
பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே
ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய்
இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகர் உளானே
=======================================
No comments:
Post a Comment