Followers

Friday, January 17, 2020



பொங்கல் பெங்கும் வெளிநாட்டு பெண்கள்!.
January 16, 2016

தமிழ் கலாச்சார ஆடையில் பொங்கல் பண்டிகையினை வெகு விமர்சையாக கொண்டாடிய வெளிநாட்டு பெண்கள்.

யாழ் கிரீன் கிராஷ் ஹோட்டலில் தங்கியிருந்த பல வெளிநாடவர்கள், தமிழர்களின் கலாசார உடை அணிந்து, ஹோட்டல் முன்பாக “பொங்கல்” கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதனை அனைவரும் ஒன்றாக இருந்து உண்டு மகிழ்ந்ததுடன், காலை நல்லூர் ஆலயத்துக்கும் விஜயம் செய்தனர். இன்று நம்மில் எத்தனை பேர் சேலைக்கு முழுக்கு போட்டு நவீன ஆடை அணிந்து, குனிந்தால் நிமிர முடியாது, நிமிர்ந்தால் குனிய முடியாது இப்படி அவஸ்தைப் படும் நிலையில்..!

வெளிநாட்டு பெண்கள் எம்மில் எத்தனை பேருக்கு எடுத்துக் காட்டு.

தமிழர் கலாச்சாரத்தை அழிக்கும் நிலையில் வெளிநாட்டு பெண்கள் தமிழர் கலாச்சாரத்தை வழர்க்க முற்படுவது தமிழ் வளர்த்த ஆங்கில அறிஞர்களை நினைக்க என்னுகிறது.

விரைவில் தமிழர் கலாச்சாரம் தமிழர்கள் அழித்து விடுவார்களா எனும் அச்சம் வெள்ளையரிடம் உள்ளதாம் காரணம் அதிகமாக விரும்பும் அழகான உணவு, சமயவழிபாடு, பண்பாடுகள், என்பனவையே வெள்ளையர்களை அதிகமாக கவர்ந்ததாம்…. அவை இல்லாமல் அழிந்து விடுமோ எனும் அச்சம் தான் காரணமாம்…



படித்தேன், பகிர்ந்தேன் உங்களுடன்..........

=========================================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...