Followers

Thursday, January 16, 2020

பேய் போல் திரிந்து,
பிணம்போல் கிடந்து,
இட்ட பிச்சையெல்லாம் நாய்போல் அருந்தி,   நரிபோல் உழன்று,
நன்மங்கையரைத் தாய்போல் கருதித்,
தமர்போல் அனைவர்க்கும் தாழ்மை சொல்லி சேய் போல் இருப்பர் கண்டீர்!
உண்மை ஞானம் தெளிந்தவரே!

-
பட்டினத்தார்




பொருள்:

பேய்போல் திரிந்து : பிறர் கர்மத்தை போக்கும் பொருட்டு இரவு பகலாக திரிந்து,  

பிணம்போல் கிடந்து : உறங்கினாலும் யோக நிலையில் இருந்தாலும் பிணம் போல் அசைவற்று,


இட்ட பிச்சையெல்லாம் நாய்போல் அருந்தி : யாராவது இடும் பிச்சையை நாய் போல் உண்டு,   


நன்மங்கையரைத் தாய்போல் கருதி : நல்ல மங்கையரை தனது தாய் போல் நினைத்து,


தமர்போல் அனைவர்க்கும் தாழ்மைசொல்லி : அடிமைபோல் அனைவருக்கும் தாழ்வாய் இருந்து,  

சேய்போல் இருப்பர்கண்டீர் : குழந்தைபோல் இருப்பவர்களை கண்டீர்கள் என்றால்,    

உண்மை ஞானம் தெளிந்தவரே : அவர்தான் உண்மையாக ஞானம் அடைந்து தெளிந்தவர் சித்தன் என்கிறார்.

பட்டினத்தார்
===============================================



No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...