Followers

Wednesday, August 10, 2022

 அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி

அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய்

இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி ...... வருவோனே

இருநில மீதி லெளியனும் வாழ எனதுமு னோடி ...... வரவேணும்

மகபதி யாகி மருவும் வலாரி மகிழ்களி கூரும் ...... வடிவோனே

வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம ...... முடையோனே

செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு ...... மயிலோனே

திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு ...... பெருமாளே.

courtesy; - https://kaumaram.com/thiru/nnt1307_u.html
===========================
ஆடும் பரி, வேல், அணிசேவல் எனப்
பாடும் பணியே பணியா அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனி யானைச் சகோதரனே.
===========================
செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன், பிறவான், இறவான்
.. சும்மா இரு, சொல் அற .. என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே.

(ஈகையும் தியானமும் நம்மைக் காக்கும்)

கெடுவாய் மனனே, கதி கேள், கரவாது
இடுவாய், வடிவேல் இறைதாள் நினைவாய்
சுடுவாய் நெடு வேதனை தூள்படவே
விடுவாய் விடுவாய் வினை யாவையுமே.

https://kaumaram.com/mp3_audio/revk_anu012.mp3
===========================

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க

 காவாக்கால்  தன்னையே கொல்லுஞ் சினம்.

ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தைக் கைவிட வேண்டும் இல்லையேல் சினம், அவனை அழித்துவிடும்

If you want to guard yourself, guard against anger; If unguarded, anger will kill you.

இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.

எல்லையற்ற சினம் கொள்வார் இறந்தவர்க்கு ஒப்பாவார். சினத்தை அறவே துறந்தவர் துறவிக்கு ஒப்பாவார்.

English Couplet 310:

Men of surpassing wrath are like the men who've passed away;
Who wrath renounce, equals of all-renouncing sages they.

Couplet Explanation:

Those, who give way to excessive anger, are no better than dead men; but those, who are freed from it, are equal to those who are freed (from death).

===========================




தீராப் பிணிதீர சீவாத் ...... துமஞான
ஊராட் சியதான ஓர்வாக் ...... கருள்வாயே
பாரோர்க் கிறைசேயே பாலாக் ...... கிரிராசே
பேராற் பெரியோனே பேரூர்ப் ...... பெருமாளே.
==============================

பன்னிரு கரத்தாய் போற்றி பசும்பொன்மா  மயிலாய் போற்றி 

முன்னிய கருணை யாறு முகப்பரம் பொருளே போற்றி 

கன்னியர் இருவர் நீங்காக் கருணை வாரிதியே போற்றி

 என்னிரு கண்ணே கண்ணுள் இருக்கும் மா  மணியே போற்றி!

 ==============================

Saravanaa Sivakumaraa..............

Shanmuganaatha Jay Jay Shamuganatha (2X)
Subramaniya Kartikeyaa Vadivelaa
Shanmuganatha jay jay shanmuganatha
Om saranam saranam shanmuganahtha


https://www.himalayanacademy.com/view/saravana-sivakumara_kl
பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானைப், பிரிவிலா
அடியார்க்கு என்றும்  வாராத செல்வம் வருவிப்பானை,
மந்திரமும் தந்திரமும்மருந்தும் ஆகி  தீரா நோய் தீர்த்து அருள
வல்லான் தன்னைத்திரிபுரங்கள் தீ எழத் திண் சிலை கைக்கொண்ட
போரானை, புள்ளிருக்குவேளூரானைப் போற்றாதே
ஆற்ற நாள் போக்கினேனே


தீராப் பிணிதீர ... முடிவே இல்லாத பிறவி நோய் முடிவு பெறவும்,
சீவ ஆத்தும ஞான ... ஜீவனாகிய ஆத்மாவைப் பற்றிய இந்தச்
சிற்றுயிர் ஞான நிலை பெறுவதற்கும்,
ஊராட்சியதான ஓர்வாக்கு அருள்வாயே ...உலகெல்லாம் ஆட்சி
செய்யக் கூடிய ஒப்பற்ற உபதேச மொழியொன்றை  நீ எனக்கு ஓதி அருள்வாயாக.
பாரோர்க் கிறைசேயே ..  உலகத்துக்கெல்லாம் தலைவராகிய
சிவபிரானின் குமாரனே, பாலாக் கிரிராசே ... இளையோனே, குன்றுகளுக்கெல்லாம்
அரசனான குமரனே, பேராற் பெரியோனே ... புகழால் மிகவும் பெரியவனே, பேரூர்ப் பெருமாளே. ...
பேரூர்த் தலத்தில்* எழுந்தருளியுள்ள  பெருமாளே.

https://www.kaumaram.com/thiru/nnt0949_u.html

வேத நாயகன்  வேதியர் நாயகன்

மாதின் நாயகன்  மாதவர் நாயகன்

ஆதி நாயகன்  ஆதிரை நாயகன்

பூத நாயகன்  புண்ணிய மூர்த்தியே.

 https://www.youtube.com/watch?v=YcG28K6hxTE&ab_channel=BalasundharamSubramaniam


* பேரூர் கோயமுத்தூர் ரயில் நிலையத்திலிருந்து 3 மைலில் உள்ளது.
==============================

Saturday, July 23, 2022

==============================

வேண்டத் தக்கது அறிவோய் நீ! வேண்ட, முழுதும் தருவோய் நீ!

வேண்டும் அயன், மாற்கு, அரியோய் நீ! வேண்டி, என்னைப் பணி கொண்டாய்;

வேண்டி, நீ யாது அருள் செய்தாய், யானும், அதுவே வேண்டின் அல்லால்,

வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில், அதுவும், உன் தன் விருப்பு அன்றே?

 ===============================================================================

அன்றே, என் தன் ஆவியும், உடலும், உடைமை எல்லாமும்,

குன்றே அனையாய்! என்னை ஆட்கொண்ட போதே கொண்டிலையோ?

இன்று, ஓர் இடையூறு எனக்கு உண்டோ? எண் தோள், முக் கண், எம்மானே!

நன்றே செய்வாய்; பிழை செய்வாய்; நானோ இதற்கு நாயகமே?

=============================================================================

=============================================================================https://www.youtube.com/watch?v=PHv6Lz8s684&t=880s&ab_channel=FairyBlossoms

எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே !
நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தம் அன்பே
மஞ்சனநீர் பூசைகொள்ள வாராய் பராபரமே !

============================================================================

ஒரு ஜாதகத்தைக் கையில் எடுத்தவுடன், அது நல்ல ஜாதகமா, ஜாதகன் அதிர்ஷ்டமானவன் தானா

என்று சொல்ல முடியமா? முடியும்

முதலில் லக்கினத்தைப் பாருங்கள்.

லக்கினம் பாபகர்த்தாரி யோகத்துடன் இருக்கக்கூடாது் அதாவது இரண்டு பக்கமும் தீய கிரங்கள் அமர்ந்திருக்கக் கூடாது.
லக்கினாதிபதி நீசமாகியிருக்கக்கூடாது.
அத்துடன் லக்கினாதிபதி 3_6, 8, 12ம. இடம் ஒன்றில்  டென்ட் அடித்து உட்கார்ந்திருக்கக் கூடாது
மேலும் சுப்கிரகங்களான குரு, சுக்கிரன், சந்திரன் ஆகிய 3 கிரகங்களும் நீசம் அடைந்திருக்கக்கூடாது் மறையக்கூடாது் 
தீய கிரகங்களுடன்  சேர்ந்து இருக்கக்கூடாது. அவைகளின் பார்வையிலும் படாமல் இருக்க வேண்டும்

விளக்கம் போதுமா?
அன்புடன்
courtesy;வாத்தியார் tq
---------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! 

Sunday, July 10, 2022

 திருவாசகம்-திருப்படையாட்சி

கண்க ளிரண்டும் அவன்கழல் கண்டு களிப்பன ஆகாதே
    காரிகை யார்கள்தம் வாழ்வில்என் வாழ்வு கடைப்படும் ஆகாதே
மண்களில் வந்து பிறந்திடு மாறு மறந்திடும் ஆகாதே
    மாலறி யாமலர்ப் பாதம் இரண்டும் வணங்குதும் ஆகாதே
பண்களி கூர்தரு பாடலொ டாடல் பயின்றிடு மாகாதே
    பாண்டிநன் னாடுடை யான்படை யாட்சிகள் பாடுது மாகாதே
விண்களி கூர்வதோர் வேதகம் வந்து வெளிப்படு மாகாதே
    மீன்வலை வீசிய கானவன் வந்து வெளிப்படு மாயிடிலே
.
 மீனைப் பிடிக்கும் பொருட்டு வலை வீசிய வேடனாகிய இறைவன், எழுந்தருளித் தோன்றுவனாயின், இரண்டு கண்களும், அவன் திருவடியைக் கண்டு களிப்பன ஆகாது போகுமோ? எனது வாழ்க்கை மகளிரொடு கூடிவாழ்வதில் முடிவு பெற்றுவிடுதல் ஆகாது போகுமோ? மண்ணுலகத்தில் வந்து பிறந்திடும் விதத்தை மறத்தல் ஆகாது போகுமோ? திருமால் அறியாத தாமரை மலர் போன்ற திருவடிகள் இரண்டையும் வழிபடுவதும் ஆகாது போகுமோ? இசையினால் மிக்க மகிழ்ச்சியைத் தருகின்ற பாட்டுடன், ஆட்டம் பழகுதல் ஆகாது போகுமோ? நல்ல பாண்டி நாட்டையுடைய இறைவன் தனது படையாகிய அடியார்களை ஆளும் தன்மைகளைப் பாடுதல் ஆகாது போகுமோ? விண்ணவரும் மகிழ்ச்சி மிகத் தக்க ஒரு மாற்றம் தோன்றுதல் ஆகாது போகுமோ?

நல்லூரான் திருவடியை    நான்நினைத்த மாத்திரத்தில்

எல்லாம் மறப்பேனெடி - கிளியே!   இரவுபகல் காணேனெடி.  

ஆன்மா அழியாதென்று    அன்றெனக்குச் சொன்னமொழி

நான்மறந்து போவேனோடி - கிளியே!   நல்லூரான் தஞ்சமெடி.

தேவர் சிறைமீட்ட  செல்வன் திருவடிகள்

காவல் எனக்காமெடி - கிளியே!   கவலையெல்லாம் போகுமெடி.

எத்தொழிலைச் செய்தாலென்    ஏதவத்தைப் பட்டலென்

கர்த்தன் திருவடிகள் - கிளியே!   காவல் அறிந்திடெடி.

பஞ்சம்படை வந்தாலும்   பாரெல்லாம் வெந்தாலும்

அஞ்சுவமோ நாங்களெடி - கிளியே!  ஆறுமுகன் தஞ்சமெடி.

சுவாமி யோகநாதன்   சொன்னதிருப் பாட்டைந்தும்

பூமியிற் சொன்னாடி - கிளியே!   பொல்லாங்கு தீருமெடி.

நல்லூரான் திருவடியை நான்நினைத்த மாத்திரத்தில்  

எல்லாம் மறப்பேனெடி - கிளியே!   இரவுபகல் காணேனெடி.  

 ஜய ஜய சங்கர, ஹர ஹர சங்கர.     ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க .

 புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா

அஜாட்யம் வாக்படுத்வா ஹனூமத் ஸ்மரணாத் பவேத்!

 https://www.youtube.com/watch?v=4PZzUru94JY&ab_channel=H-Spiritual

Wednesday, March 30, 2022

இந்த கருட மந்திரம் 108 முறை தொடர்ந்து

சொன்னால் இது நடக்கும்

===========================================



==========================================

கொரோனா பிரச்சனைக்கு முக்கிய காரணமே ராகு, கேது தான் பக்ஷி ராஜனான கருடாழ்வாரின் வழிபாடு மட்டுமே நம்மை இந்த பேராபத்தில் இருந்து காக்கும்.முதலில் ஒரு அடிப்படை உண்மையை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.


கழுகு வேறு, கருடன் வேறு.விலங்கியலின் படி புலியும், பூனையும் கூட ஒரே குடும்பம் தான். கருடன், கழுகு இரண்டுமே தோற்றத்தில் ஒரே மாதிரி இருந்தாலும் கழுகு என்பது மாமிச பக்ஷிணி ஆனால் கருடன் என்பது வேத பக்ஷிணி.நம் நாட்டில் கழுகின் எண்ணிக்கையே ரொம்ப கம்மி கழுகை விட கருடனின் எண்ணிக்கை இன்னும் ரொம்ப கம்மி. ஆனாலும் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் என்றாலும், சிவன் கோவில் கும்பாபிஷேகம் என்றாலும் கருடாழ்வார் கோபுரத்தை வந்து வட்டமடிப்பதை நாம் பார்க்கிறோம்.



மேலும் திருப்பதி பிரமோற்சவம், திருவண்ணாமலை கார்த்திகை தீபம், திருச்செந்தூர் சூர சம்ஹாரம், சபரிமலை மகர ஜோதி போன்ற முக்கிய ஆலய நிகழ்வுகளில் பக்ஷி ராஜன் கரெக்ட்டா வந்து ஆஜர் ஆகிடுவார்.

கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவில் கருடாழ்வார் இன்றுவரை பல அற்புதங்களை செய்து கொண்டிருக்கிறார்.சர்ப்ப தோஷம் முதல் சர்வ தோஷங்களும் தீர கருட பிரயோக மந்திரம் ஒன்றே தீர்வு.

இந்த கருட பிரயோக மந்திரம் இதுவரை பல அற்புதங்களை செய்துள்ளது.


தமிழ்நாட்டில் ஒரு கிராம தேவதைக்கு சில மாந்த்ரீகர்கள் போட்ட மந்திர கட்டை இந்த கருட மந்திரம் அவிழ்த்தது. பலரின் தீய கர்ம வினைகளை இந்த கருட மந்திரம் போக்கி உள்ளது.3 ஆண்டுகளுக்கும் மேலாக கோமாவில் ஒரு சிறுவன் இருந்தான். அவனின் பெற்றோர் இந்த கருட மந்திரத்தை அவன் அருகே அமர்ந்து தொடர்ந்து உச்சிரித்து கொண்டிருந்தார்கள் அதன் பலனாக வெறும் 2 வாரங்களில் அந்த சிறுவன் கோமாவில் இருந்து மீண்டான். இதுபோல் பல உதாரணங்களை சொல்லலாம்.இருந்தாலும் இந்த கருட பிரயோக மந்திரம் பல லக்ஷம், பலகோடி மக்களிடம் பரவ வேண்டும் பல லக்ஷம் மக்கள் இந்த மந்திரத்தை சொன்னால் தான் கொரோனாவின் தாக்கம் குறையும்.


இந்த கருட பிரயோக மந்திரத்தை ஒருநாளைக்கு 108 முறை எனும் விதத்தில் தொடர்ந்து 11 நாட்கள் சொன்னாலே இந்த மந்திரம் நம்மை ஒரு கவசமாக காக்கும். இந்த கருட மந்திரத்தை 108 முறை தொடர்ந்து சொன்னால் உங்கள் நெற்றியில் லேசாக வியர்க்கும். AC போட்டு சொன்னாலும் வியர்க்கும். அதே சமயம் நீங்கள் நல்ல வெய்யிலில் இந்த மந்திரத்தை 108 முறை சொன்னாலும் வியர்ப்பது மட்டுமல்லாமல் உங்கள் நெற்றியின் இடது பக்கம் ஒருவித லேசான குளிர்ச்சியை நீங்கள் உணர்வீர்கள்.

கருடாழ்வார் மந்திரம்: 

அம்ருத கலச ஹஸ்தம், காந்தி ஸம்பூர்ண தேஹம்! 

ஸகல விபுதவந்த்யம் வேத சாஸ்த்ரைரசிந்த்யம்! 

விவித ஸுலப பக்ஷை: தூய மானாண்ட கோநம்! 

ஸகல விஷவிநாஸனம் சிந்தயேத் பக்ஷிராஜம்: க்ஷிப ஓம் ஸ்வாஹா!

=====================

தத்புருஷாய வித்மஹே

ஸீபர்ண பக்ஷாய தீமஹீ

தன்னோ கருட ப்ரசோதயாத்.

========================

ஓம் ஸ்ரீ காருண்யாய, கருடாய,  வேத ரூபாய,வினத 

புத்ராய,  விஷ்ணு பக்தி பிரியாய, அம்ருத கலச ஹஸ்தாய,

பஹு பராக்ரமாய, பக்ஷி ராஜாய, சர்வ வக்கிர நாசநாய, 

சர்வ தோஷ, சர்ப்ப தோஷ,  விஷ சர்ப்ப விநாசநாய ஸ்வாஹா.

================================

karpūra gauraṁ karuṇāvatāraṁ samsāra sāram bhujagendra hāram | sadā vasantaṁ hṛdayāra vinde bhavaṁ bhavānī sahitaṁ namāmi ||

https://www.youtube.com/watch?v=-Y65_WaQEm0&ab_channel=BHAKTIBHAJAN

=================================

சங்கரனே நின்பாதம் போற்றி போற்றி
    சதாசிவனே நின்பாதம் போற்றி போற்றி
பொங்கரவா நின்பாதம் போற்றி போற்றி
    புண்ணியனே நின்பாதம் போற்றி போற்றி
அங்கமலத் தயனோடு மாலுங் காணா
    அனலுருவா நின்பாதம் போற்றி போற்றி
செங்கமலத் திருப்பாதம் போற்றி போற்றி
    திருமூலட் டானனே போற்றி போற்றி
.

==================================

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்

கூன்கையர் அல்லா தவர்க்கு.

கயவர் தம் கன்னத்தை இடித்து உடைக்கும் படி வளைந்த கை உடையவரல்லாத மற்றவர்க்கு உண்ட எச்சில் கையையும் உதற மாட்டார். - மு. வரதராசன்

 

தாடையை உடைக்கும் முறுக்கிய கை இல்லாதவர்க்குக் கயவர், தாம் உண்டு கழுவிய ஈரக் கையைக்கூட உதறமாட்டார். - பேராசிரியர் சாலமன் பாப்பையா

 

கையை மடக்கிக் கன்னத்தில் ஒரு குத்துவிடுகின்ற முரடர்களுக்குக் கொடுப்பார்களேயல்லாமல், ஈகைக் குணமில்லாத கயவர்கள் ஏழை எளியோருக்காகத் தமது எச்சில் கைகைக்கூட உதற மாட்டார்கள் - கலைஞர் மு. கருணாநிதி

Kural in English: The mean will not (even) shake off (what sticks to) their hands (soon after a meal) to any but those who would break their jaws with their clenched fists

English Meaning:          From off their moistened hands no clinging grain they shake,Unless to those with clenched fist their jaws who break

=============================

எனும் இந்த மந்திரம் கொஞ்சம் பெரிசு இதை 108 முறை தொடர்ந்து சொல்ல 40 முதல் 45 நிமிடங்கள் வரை ஆகும். அதனால் காலையில் 36, மாலையில் 36, இரவு 36, என மூன்று வேளை இந்த மந்திரத்தை சொல்லலாம் இல்லை என்றால் குறைந்த பக்ஷம் காலை 11, மாலை 11, இரவு 11 என ஒரு நாளைக்கு 33 முறை இந்த மந்திரத்தை சொல்லலாம். இதை சொல்ல, சொல்ல கற்பனையே பண்ணி பார்க்க முடியாத ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷனை நீங்கள் உணர்வீர்கள் .


எம்பெருமான் திருவடிகளே சரணம், கருடாழ்வார் திருவடிகளே சரணம்.


Dailyhunt

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Tamil Express 


=============================

கொடூர விஷத்தையும் முறியடிக்கும், கொடிய நோயையும் விரட்டி அடிக்க கூடிய சக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை தினமும் உச்சரித்தால் உங்களுக்கு ஆயுசு கெட்டி தான்!

garudan-mantra

எல்லோருக்குமே இறைவன் திருவடியை சரணடைய வேண்டும் என்பது தான் விருப்பம். அத்தகைய திருவடியை சரண் அடைந்து இருக்கும் கருடாழ்வார் பெரிய திருவடி என்ற பெயரால் போற்றப்பட்டு வருகின்றார். எப்பொழுதுமே இந்து சமயத்தைப் பொறுத்தவரை நாகமும், கருடனும் தனித்துவமான மற்றும் மகத்துவமான இடங்களைப் பிடித்திருக்கின்றன. இதில் மகாவிஷ்ணுவின் வாகனமாக இருக்கும் கருடன் அதீத சக்தி பெற்று இருக்கிறார். இவரிடம் அமிர்த கலசம் இருந்தும் அதனை அவர் சுயநலமாக பயன்படுத்தியதில்லை என்கிறது புராணம்.

மனித உயிர்களை காக்க நாகத்தின் கொடிய விஷயங்களை அடக்கி ஆள்பவராக இருக்கின்றார். அதனால் கொடூர விஷத்தையும் முறியடிக்கும் சக்தி கருடாழ்வாருக்கு உண்டு. விஷத்தினால் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு அவரின் சார்பாக இந்த மந்திரத்தை 1008 முறை உச்சரித்தால் நல்ல பலன் கிடைக்கும். கொடிய விஷயத்தையே முறியடிக்கும் இவருக்கு கொடிய நோயையும் விரட்டியடிக்க கூடிய ஆற்றல் உண்டு. எத்தகைய நோயையும் ஒன்றுமில்லாமல் செய்யக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரம் தான் கருடாழ்வார் மந்திரம். இம்மந்திரத்தை தினந்தோறும் உச்சரிப்பவர்களுக்கு எத்தகைய நோயும் அணுகுவதில்லை. அது என்ன மந்திரம்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

கருடாழ்வார் மந்திரம்:
அம்ருத கலச ஹஸ்தம், காந்தி ஸம்பூர்ண தேஹம்!
ஸகல விபுதவந்த்யம் வேத சாஸ்த்ரைரசிந்த்யம்!
விவித ஸுலப பக்ஷை: தூய மானாண்ட கோநம்!
ஸகல விஷவிநாஸனம் சிந்தயேத் பக்ஷிராஜம்: க்ஷிப ஓம் ஸ்வாஹா!

garuda-bagavan1

கருடாழ்வார் மந்திரத்தின் பொருள்:
அமிர்த கலசத்தை கையில் ஏந்தி இருப்பவரே!
எல்லா தேவ தேவியர்களால் துதிக்கப்படுபரே!
தம் பெருமையை எவராலும் விவரிக்க முடியாதவரே!

பரந்து விரிந்த இவரின் இறக்கை வாயு, அண்டமெல்லாம் நடுநடுங்க செய்யும்!
இவரை துதிப்பவர்களுக்கு நாகத்தின் விஷம் அகலும்,
விஷத்தால் ஏற்பட்ட நோய்களும் நீங்கும்!
பட்சிகளுக்கு ராஜனாக விளங்கும் பட்சிராஜன் கருடாழ்வாரை என் சிந்தையில் நிறுத்தி வணங்குகிறேன் என்பது பொருளாகும்.


நோய்கள் நீங்கவும், விஷ முறிவு ஏற்படவும், மாங்கல்ய பலம் நீடிக்கவும் கருடாழ்வாரை சனிக் கிழமைகளில் அல்லது பஞ்சமி திதியில் வழிபடலாம். அவருக்கு புளியோதரை நைவேத்தியம் வைத்து, துளசி தீர்த்தம் அருகில் வைத்து, பசு நெய் விளக்கேற்றி, தூப தீப ஆராதனைகள் காண்பிக்க வேண்டும். பின்னர் வீட்டிற்கு வெளியில் சென்று வானை நோக்கி கருடன் பறப்பதாக நினைத்து மூன்று முறை கைக்கூப்பி நமஸ்கரிக்க வேண்டும். இவரை வணங்குபவர்களுக்கு தடைபட்ட சுபகாரியங்கள் தடையில்லாமல் நிறைவேறும், கடன் என்னும் தரித்திர நிலையிலிருந்து மீட்டு எடுக்க கூடியவர் இவர், வாகன ரீதியான விபத்துகளில் இருந்து பாதுகாக்க கூடியவர், யம பயத்தைப் போக்குபவர், பாவங்களை நீக்கி புண்ணியங்களை சேர்க்கக் கூடியவர், எத்தகைய கவலையும் தீர கருடனை வணங்கினால் சுபிட்சம் பெறுவார்கள். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த கருடன் வழிபாடு ஒவ்வொருவரும் செய்து நற்பலன் பெறலாமே!

=====================

ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள் , சடாட்சரி மந்திரம் , நவாட்சரி மந்திரம் . இதில் சௌம் என்பதை "சௌஹூம்" என்று சொல்லுவது சிறந்தது.

ஓம் ஐம் க்லீம் சௌம்

 

ஓம் ஐம் க்லீம் சௌம்

 சௌம் க்லீம் ஐம்

 

ஓம் ஐம் க்லீம் சௌம்

 சௌம் க்லீம் ஐம்|

|ஐம் க்லீம் சௌம்

=========================


வானைக்காவில் வெண்மதி  மல்குபுல்கு வார்சடைத்

தேனைக்காவில் இன்மொழித்  தேவிபாக மாயினான்

ஆனைக்காவில் அண்ணலை  அபயமாக வாழ்பவர்

ஏனைக்காவல் வேண்டுவார்க்  கேதும்ஏதம் இல்லையே.   1

 

ஊழியூழி வையகத்  துயிர்கள்தோற்று வானொடும்

ஆழியானுங் காண்கிலா  ஆனைக்காவில் அண்ணலைக்

காழிஞான சம்பந்தன்  கருதிச்சொன்ன பத்திவை

வாழியாகக் கற்பவர்  வல்வினைகள் மாயுமே.

 

சுவாமி : நீர்த்தீரள்நாதர்; அம்பாள் : அகிலாண்டநாயகி.

Read more at: https://shaivam.org/thirumurai/third-thirumrai/thirugnanasambandar-thevaram-thiruvaanaika-vaanaikavil/#gsc.tab=0

============================


  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...