Followers
Thursday, May 27, 2021
யாழ்ப்பாணம், வியக்க வைக்கும் பல மாற்றங்களுடன் புதிய யாழ் நகரம் | New Jaffna | Hi Tami...
Wednesday, May 26, 2021
Tuesday, May 25, 2021
எதிர் வினைகளை செயல் இழக்கச் செய்யும் ஸ்ரீ சத்ரு சம்ஹார த்ரிசதீ II SRI ...
எதிர் வினைகளை செயல்
இழக்கச் செய்யும்
ஸ்ரீ சத்ரு சம்ஹார த்ரிசதீ II
SRI SATRU SAMHARA TRISATHE II
Sunday, May 23, 2021
Raga Sivaranjani: Arohanam, Avarohanam and Alapana | Raga Surabhi
Raga Sivaranjani: Arohanam, Avarohanam and Alapana | Raga Surabhi....
Friday, May 21, 2021
=============================================
துன்பம் போக்கும் ஆஞ்சநேயர்
108 போற்றி
துன்பங்களில் இருந்து விடுபட நினைப்பவர்கள் அனுமனுக்கு உகந்த இந்த 108 போற்றியை தினமும் அல்லது அனுமனுக்கு உகந்த நாட்களில் சொல்லி வரலாம்.
2. ஓம் அஞ்சனை மைந்தனே போற்றி
3. ஓம் அறக்காவலனே போற்றி
5. ஓம் அறிஞனே போற்றி
6. ஓம் அடக்கவடிவே போற்றி
7. ஓம் அதிகாலை பிறந்தவனே போற்றி
8. ஓம் அசோகவனம் எரித்தவனே போற்றி
9. ஓம் அர்ஜுனக்கொடியில் நின்றவனே போற்றி
10. ஓம் அமாவாசையில் பிறந்தாய் போற்றி
11. ஓம் ஆனந்த வடிவே போற்றி
12. ஓம் ஆரோக்கியம் தருபவனே போற்றி
13. ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி
14. ஓம் இகபர சுகமளிப்பவனே போற்றி
15. ஓம் இசை ஞானியே போற்றி
16. ஓம் இறை வடிவே போற்றி
17. ஓம் ஒப்பிலானே போற்றி
18. ஓம் ஓங்கி வளர்ந்தோனே போற்றி
19. ஓம் கதாயுதனே போற்றி
20. ஓம் கலக்கம் தீர்ப்பவனே போற்றி
21. ஓம் களங்கமிலாதவனே போற்றி
22. ஓம் கர்மயோகியே போற்றி
23. ஓம் கட்டறுப்பவனே போற்றி
24. ஓம் கம்பத்தருள்பவனே போற்றி
25. ஓம் கடல் தாவியவனே போற்றி
26. ஓம் கரை சேர்ப்பவனே போற்றி
27. ஓம் கீதாபாஷ்யனே போற்றி
28. ஓம் கீர்த்தியளிப்பவனே போற்றி
29. ஓம் கூப்பிய கரனே போற்றி
30. ஓம் குறுகி நீண்டவனே போற்றி
31. ஓம் குழப்பம் தீர்ப்பாய் போற்றி
32. ஓம் கவுண்டின்ய கோத்திரனே போற்றி
33. ஓம் சிரஞ்சீவி ஆனவனே போற்றி
34. ஓம் சலியாத மனம் படைத்தாய் போற்றி
35. ஓம் சஞ்சலம் தீர்ப்பாய் போற்றி
36. ஓம் சிரஞ்சீவி கொணர்ந்தவனே போற்றி
37. ஓம் சிந்தூரம் ஏற்பவனே போற்றி
38. ஓம் சீதாராம சேவகனே போற்றி
39. ஓம் சூராதி சூரனே போற்றி
40. ஓம் சுக்ரீவக் காவலனே போற்றி
41. ஓம் சொல்லின் செல்வனே போற்றி
42. ஓம் சூரியனின் சீடனே போற்றி
43. ஓம் சோர்வில்லாதவனே போற்றி
44. ஓம் சோக நாசகனே போற்றி
45. ஓம் தவயோகியே போற்றி
46. ஓம் தத்துவஞானியே போற்றி
47. ஓம் தயிரன்னப் பிரியனே போற்றி
48. ஓம் துளசியில் மகிழ்வோனே போற்றி
49. ஓம் தீதழிப்பவனே போற்றி
50. ஓம் தீயும் சுடானே போற்றி
51. ஓம் நரஹரியானவனே போற்றி
52. ஓம் நாரத கர்வ பங்கனே போற்றி
53. ஓம் நொடியில் அருள்பவனே போற்றி
54. ஓம் நொடித்தோர் வாழ்வே போற்றி
55. ஓம் பண்டிதனே போற்றி
56. ஓம் பஞ்சமுகனே போற்றி
57. ஓம் பக்தி வடிவனே போற்றி
58. ஓம் பக்த ரட்சகனே போற்றி
59. ஓம் பரதனைக் காத்தவனே போற்றி
60. ஓம் பக்த ராமதாசரானவனே போற்றி
61. ஓம் பருதியைப் பிடித்தவனே போற்றி
62. ஓம் பயம் அறியாதவனே போற்றி
63. ஓம் பகையை அழிப்பவனே போற்றி
64. ஓம் பவழமல்லிப் பிரியனே போற்றி
65. ஓம் பிரம்மச்சாரியே போற்றி
66. ஓம் பீம சோதரனே போற்றி
67. ஓம் புலனை வென்றவனே போற்றி
68. ஓம் புகழ் சேர்ப்பவனே போற்றி
69. ஓம் புண்ணியனே போற்றி
70. ஓம் பொட்டிட மகிழ்பவனே போற்றி
71. ஓம் மதி மந்திரியே போற்றி
72. ஓம் மனோவேகனே போற்றி
73. ஓம் மாவீரனே போற்றி
74. ஓம் மாருதியே போற்றி
75. ஓம் மார்கழியில் பிறந்தவனே போற்றி
76. ஓம் மணம் கூட்டுவிப்பவனே போற்றி
77. ஓம் மூலநட்சத்திரனே போற்றி
78. ஓம் மூப்பில்லாதவனே போற்றி
79. ஓம் ராமதாசனே போற்றி
80. ஓம் ராமநாமப் பிரியனே போற்றி
81. ஓம் ராமதூதனே போற்றி
82. ஓம் ராம சோதரனே போற்றி
83. ஓம் ராமபக்தரைக் காப்பவனே போற்றி
84. ஓம் ராமனுயிர் காத்தவனே போற்றி
85. ஓம் ராமனை அணைந்தவனே போற்றி
86. ஓம் ராமஜெயம் அறிவித்தவனே போற்றி
87. ஓம் ராமாயண நாயகனே போற்றி
88. ஓம் ராமாயணப் பிரியனே போற்றி
89. ஓம் ராகவன் கண்மணியே போற்றி
90. ஓம் ருத்ர வடிவனே போற்றி
91. ஓம் லட்சியப் புருஷனே போற்றி
92. ஓம் லட்சுமணனைக் காத்தவனே போற்றி
93. ஓம் லங்கா தகனனே போற்றி
94. ஓம் லங்காவை வென்றவனே போற்றி
95. ஓம் வஜ்ர தேகனே போற்றி
96. ஓம் வாயுகுமாரனே போற்றி
97. ஓம் வடைமாலைப் பிரியனே போற்றி
98. ஓம் வணங்குவோரின் வாழ்வே போற்றி
99. ஓம் விஷ்ணுஸ்வரூபனே போற்றி
100. ஓம் விளையாடும் வானரனே போற்றி
101. ஓம் விஸ்வரூபனே போற்றி
102. ஓம் வியாசராஜருக்கு அருளியவனே போற்றி
103. ஓம் வித்தையருள்பவனே போற்றி
104. ஓம் வைராக்கிய மூர்த்தியே போற்றி
105. ஓம் வைகுண்டம் விரும்பாதவனே போற்றி
106. ஓம் வெண்ணெய் உகந்தவனே போற்றி
107. ஓம் வெற்றிலைமாலை ஏற்பவனே போற்றி
108. ஓம் வெற்றியளிப்பவனே போற்றி
ஓம் நமோ ஹரி ராம தூதா!
ஆஞ்சநேயா! அதிபலபராக்ரம சூரா!
அண்ட ரண்ட பகிரண்ட சண்ட
ப்ரசண்ட உத்தண்ட கோலாகலா! அகோர
சத்ரு சம்ஹாரா! வரமருள் க்ருபாதயாளா!
வாயு குமாரா ஸீதா ப்ராணரக்ஷகா!
(ஓம் மாருதி ராயா! ஓம்!)...........
Hanuman
vasi karana mantram....................
Om namo
hari Ramadhootha Anjaneya athi Bala parakrama soora
andaranda
bahiranda chandaprasanda uthanda kola kala agora
chatrusamhara varamarul kripadayala om om namasivaya
yogasanapriya
vayukumara seethalakshmi sudha suda
chayaparakrama viswaroopa
omkara
Amkara hreemkara sanjeevaraya sarvamokshaharana
sahasranama
alankritha booshana brahma varaprakasa nikula
brindakala
rudra bhakthiviswasa sudda suseekara sukritha gunaseela
amrutakalaignana
paramathma papa vimochana bum bum bum
ra ra ra
ri ri ri om namasivaya hanumantha mama vasi vasi swaha
om
boorbuvassuvaha thatsavithurvarenyam bargo devasya demahi
diyoyona
prachodayad
om thath
purushaya vidmahe vayuputraya
deemahi
thanno maruti prachodayad
=====================================
எந்த கிழமையில் எந்த தெய்வத்தை வழிபடுவதால் ஐஸ்வர்யம் பெருகும்...?
Which-day-which-god-to-worship
ஒவ்வொரு தெய்வங்களுக்கும், அவரை வழிபட ஒரு குறிப்பிட்ட நாள் சிறந்த நாளாக பார்க்கப்படுகின்றது. அந்த வகையில் எந்த கிழமைகளில் எந்த தெய்வத்தை வணங்கினால் அனைத்து வகை செல்வங்களும் பெருகும் என்பதைப் பார்போம்.
திங்கட் கிழமை சிவனுக்கு மிகவும் உகந்த தினம். ஈசனை நினைத்து விரதமிருந்து வழிபடுவதும், பால், அரிசி மற்றும் சர்க்கரையை நைவேத்தியமாக படைக்கலாம்.
செவ்வாய் கிழமை: :
முருகப்பெருமான், துர்க்கை, அனுமன் ஆகியோருக்கு உகந்த நாள் செவ்வய் கிழமை. இந்த நாளில் விரதமிருந்து ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கு போட்டு வந்தால் வாழ்க்கை ஒளியும், வளமும் பெருகும்.
புதன் கிழமை:
கணபதியை வணங்க மிக சிறந்த நாள் புதன் கிழமை. எந்த ஒரு சுப காரியத்தையும் தொடங்குவதற்கு முன் முதல் கடவுள் விநாயகரை வணங்கி தொடங்கினால் வெற்றியாகும்.
வியாழன் கிழமை:
பொதுவாக விஷ்ணு பகவானுக்கு உகந்த நாள் வியாழன். அதே சமயம் அவரின் துணைவியான லக்ஷ்மி தேவியை வணங்கவும் உகந்த நாள். தட்சிணாமூர்த்தி (குரு) வழிபாடு செய்ய ஏற்ற நாள்.
வெள்ளிக் கிழமை:
வெள்ளிக் கிழமையில் விரதமிருந்து துர்க்கை அம்மனையும், அவரது அவதாரங்களையும் வழிபட ஏற்ற நாள். பெண் தெய்வங்களுக்கு ஏற்ற நாள்.
சனிக் கிழமை:
சனிக்கிழமைகளில் விரதமிருந்து திருமால், ஆஞ்சநேயர், காளி தேவியை வழிபட உகந்த நாளாக பார்க்கப்படுகின்றது. அதோடு, நீதி அரசர் சனி பகவானுக்கு ஏற்ற நாள்.
ஞாயிறு கிழமை:
நவகிரகத்தின் மையமாக, முதன்மை கடவுளாக இருப்பவர் சூரிய பகவான். ஞாயிறு கிழமையில் விரதம் இருட்ந்து வணங்கி வர சூரிய தோஷமும், வாழ்க்கையில் இன்னல் நீங்கி மகிழ்ச்சி கிடைக்கும்.
Wednesday, May 19, 2021
நாகார்ஜூனா, ரம்யா கிருஷ்ணன், பானுப்ரியா, கஸ்துரி | அன்னமாச்சார்யா | சூப்...
நாகார்ஜூனா, ரம்யா கிருஷ்ணன், பானுப்ரியா, கஸ்துரி | அன்னமாச்சார்யா | சூப்பர் ஹிட் பக்தி திரைப்படம்
Tuesday, May 18, 2021
திருமணத் தடையையும் நீக்கும் அரிய மந்திரத் திருப்புகழ்...........விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
Posted by Murugan Devotees
நம் வீட்டில் திருமணம் ஏதாவது பிரச்சினை காரணமாக தடைபட்டுகொண்டே செல்கிறதே இதற்கு தீர்வு ஏதும் உண்டா என்று கேட்கும்நமக்கு கலியுக்கடவுளான முருகனின் திருப்புகழில் ஒரு பகுதியைநமக்கு எடுத்துத் தருகிறார் நம் கிருபானந்த வாரியார் சுவாமிகள்.வெறும் வார்த்தையாக இல்லாமல் உறுதியாகவும் நிச்சயமாகவும்கூறுகிறார்.
1 மண்டலம் அதாவது 48 நாட்களுக்குள் திருமணம் நடக்கும் இதற்கு அருணகிரி நாதர் முருகனைப் பற்றிப் பாடி அருளியமந்திர திருப்புகழை திருமணம் ஆகாதவர்கள் தினமும் காலை அல்லதுமாலை வேளையில் ஒரு நாளைக்கு 6 முறை வீதம் , 48 நாட்கள்தொடர்ந்து பாராயணம் செய்தால் கண்டிப்பாக எந்த விதமான திருமணதோசங்கள் இருந்தாலும் அத்தனையையும் நீக்கி 48 நாள் முடிவதற்குள்நல்ல பதில் கிடைக்கும்.
திருமணம் ஆனவர்கள் இந்தத்திருப்புகழை படித்தால் குடும்பத்தில்விட்டு சென்ற உறவுகள் சேரும் என்பதும் நிதர்சனமான உண்மை.
ஓம் வெற்றி விநாயகா போற்றி
viRalmAran aindhu malarvALi sindha
migavAnil indhu ...... veyilkAyaதனதான தந்த தனதான தந்த
தனதான தந்த
...... தனதான
.........
பாடல் .........
விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
மிகவானி லிந்து
...... வெயில்காய
மிதவாடை வந்து தழல்போல வொன்ற
வினைமாதர்
தந்தம் ...... வசைகூற
குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
கொடிதான துன்ப
...... மயல்தீர
குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து
குறைதீர வந்து
...... குறுகாயோ
மறிமானு கந்த இறையோன்ம கிழ்ந்து
வழிபாடு தந்த
...... மதியாளா
மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச
வடிவேலெ றிந்த
...... அதிதீரா
அறிவால றிந்து னிருதாளி றைஞ்சு
மடியாரி
டைஞ்சல் ...... களைவோனே
அழகான செம்பொன் மயில்மேல மர்ந்து
அலைவாயு கந்த
...... பெருமாளே.
.........
சொல் விளக்கம் .........
விறல்மாரன் ... வீரனாம் மன்மதன்
ஐந்து மலர்வாளி சிந்த ... ஐந்து மலர்ப் பாணங்களையும்
செலுத்த,*
வானி லிந்து மிக வெயில் காய ... ஆகாயத்தில் நிலவு அதிகமாக
வெயில் போலக் காய,
மிதவாடை வந்து ... நிதானமான தென்றல் காற்று வந்து
தழல்போல வொன்ற ... தீப்போல வீசிப் பொருந்த,
வினைமாதர் தந்தம் வசைகூற ... வீண்வம்பு பேசும் பெண்கள்
தத்தம்
வசை மொழிகளைக் கூற,
குறவாணர் குன்றி லுறை ... குறவர்கள் வாழும் குன்றில்
இருக்கும்
பேதை கொண்ட ... (வள்ளி போன்ற) பேதைப்பெண்ணாகிய
நான் அடைந்த
கொடிதான துன்ப மயல்தீர ... கொடிய துன்ப விரக மயக்கம் தீர,
குளிர்மாலை யின்க ண் ... குளிர்ந்த மாலைப் பொழுதினிலே
அணிமாலை தந்து ... நீ அணிந்த கடப்ப மாலையைத் தந்து
குறைதீர வந்து குறுகாயோ ... என் குறையைத் தீர்க்க வந்து
அணுகமாட்டாயா?
மறிமா னுகந்த இறையோன் ... இள மானை உகந்து ஏந்தும்
இறைவன் சிவபிரான்
மகிழ்ந்து வழிபாடு தந்த மதியாளா ... (உன் உபதேசம் பெற்று)
மகிழ்ந்து உனக்கு வழிபாடு செய்யப் பெற்ற அறிஞனே,
மலைமாவு சிந்த ... கிரெளஞ்சமலையும், மாமரமும்
(சூரனும்)
வீழ்ந்து படவும்,
அலைவேலை யஞ்ச ... அலைகடல் கொந்தளித்து அஞ்சவும்,
வடிவே லெறிந்த அதிதீரா ... கூரிய வேலை வீசிய அதி தீரனே,
அறிவால் அறிந்து ... அறிவு கொண்டு உன்னை அறிந்து,
உன்னிருதாள் இறைஞ்சும் ... உனது இரு தாள்களையும் வணங்கும்
அடியார் இடைஞ்சல் களைவோனே ... அடியார்களின் துயரைக் களைபவனே,
அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து ... அழகிய செம்பொன்
மயில்மீது அமர்ந்து
அலைவா யுகந்த பெருமாளே. ... திருச்செந்தூரில் மகிழ்ந்தமரும்
பெருமாளே.
==============================
=============================
neelang koL mEgaththin mayilmeedhE: Mounting the peacock of the hue of blue cloud,
=====================
தானந்த தானத்தம் ...... தனதான
.........
பாடல் .........
நீலங்கொள் மேகத்தின் ...... மயில்மீதே
நீவந்த
வாழ்வைக்கண் ...... டதனாலே
மால்கொண்ட
பேதைக்குன் ...... மணநாறும்
மார்தங்கு
தாரைத்தந் ...... தருள்வாயே
வேல்கொண்டு வேலைப்பண் ...... டெறிவோனே
வீரங்கொள்
சூரர்க்குங் ...... குலகாலா
நாலந்த வேதத்தின்
...... பொருளோனே
நானென்று
மார்தட்டும் ...... பெருமாளே.
.........
சொல் விளக்கம் .........
நீலங்கொள் மேகத்தின் மயில்மீதே ... நீல நிறத்தைக் கொண்ட
மேகத்தைப் போன்ற மயில் மேலே
நீவந்த வாழ்வைக்கண்டதனாலே ... நீ எழுந்தருளிவந்த
புறப்பாட்டுத் தரிசனத்தைக் கண்ட காரணத்தால்
மால்கொண்ட பேதைக்கு உன் மணநாறும் ... உன்மீது ஆசை
கொண்ட இந்தப் பெண்ணுக்கு, உனது நறுமணம்
மிக்க
மார்தங்கு தாரைத் தந்தருள்வாயே ... மார்பில் தங்கி
விளங்கும்
மாலையைத் தந்து அருள்புரிவாயாக.
வேல்கொண்டு வேலைப்பண்டெறிவோனே ... உன்
வேலாயுதத்தைக் கொண்டு கடலினை முன்பு வற்றும்படி
செலுத்தியவனே,
வீரங்கொள் சூரர்க்குங் குலகாலா ... வீரம் மிக்க சூரர்களின்
குலத்துக்கே யமனாக விளங்கியவனே,
நாலந்த வேதத்தின் பொருளோனே ... ரிக், யஜூர், சாம,
அதர்வண என்ற நான்கு அழகிய வேதங்களின் பொருளாக
விளங்கியவனே,
நானென்று மார்தட்டும் பெருமாளே. ... எல்லா உயிர்களுக்கு
உள்ளும் இருப்பவன் நான்தான் என்று பெருமை பாராட்டி மார்பினைத் தட்டிக் கொள்ளும் பெருமாளே.
==================================
http://www.kaumaram.com/thiru/nnt1296_u.html
===============================
முருகன் அருள் முன்நிற்க.......
பால் காவடி கொண்டு
பழனி மலை வரும் நேரமே...
அரோகரா அரோகரா
ஆரவாரமே......
ஆவலுடன்
ஆவினங்குடி
வரும் நேரமே...
அங்கு அரோகரா அரோகரா
ஆரவாரமே......
கந்தசாமி
கதிர்காம்ம்
வரும் நேரமே....
அங்கு அரோகரா அரோகரா
ஆரவாரமே......
தணிகாசலம்
திருத்தணிகை
வரும் நேரமே.....
அங்கு அரோகரா அரோகரா
ஆரவாரமே......
ஸ்வாமிநாதன்
சுவாமிமலை
வரும் நேரமே....
அங்கு அரோகரா அரோகரா
ஆரவாரமே......
செந்தில்நாதன்
திருச்செந்தூர்
வரும் நேரமே....
அங்கு அரோகரா அரோகரா
ஆரவாரமே......
======================
courtesy; Santhanam T Ramanathan
=====================================
நினைத்தது அத்தனையும் கைகூடும் வேல்மாறல் மகிமை |
நினைத்தது அத்தனையும் கைகூடும் வேல்மாறல் மகிமை | | வாசுகி மனோகரன் | VEL MAARAL MAGIMAI | MURUGAN |
==============================
அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...