Followers

Friday, May 21, 2021

 

எந்த கிழமையில் எந்த தெய்வத்தை வழிபடுவதால் ஐஸ்வர்யம் பெருகும்...?

Which-day-which-god-to-worship

ஒவ்வொரு தெய்வங்களுக்கும், அவரை வழிபட ஒரு குறிப்பிட்ட நாள் சிறந்த நாளாக பார்க்கப்படுகின்றது. அந்த வகையில் எந்த கிழமைகளில் எந்த தெய்வத்தை வணங்கினால் அனைத்து வகை செல்வங்களும் பெருகும் என்பதைப் பார்போம்.

Ganesh
திங்கட் கிழமை:
திங்கட் கிழமை சிவனுக்கு மிகவும் உகந்த தினம். ஈசனை நினைத்து விரதமிருந்து வழிபடுவதும், பால், அரிசி மற்றும் சர்க்கரையை நைவேத்தியமாக படைக்கலாம்.

செவ்வாய் கிழமை: :
முருகப்பெருமான், துர்க்கை, அனுமன் ஆகியோருக்கு உகந்த நாள் செவ்வய் கிழமை. இந்த நாளில் விரதமிருந்து ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கு போட்டு வந்தால் வாழ்க்கை ஒளியும், வளமும் பெருகும்.

புதன் கிழமை:
கணபதியை வணங்க மிக சிறந்த நாள் புதன் கிழமை. எந்த ஒரு சுப காரியத்தையும் தொடங்குவதற்கு முன் முதல் கடவுள் விநாயகரை வணங்கி தொடங்கினால் வெற்றியாகும்.

வியாழன் கிழமை:
பொதுவாக விஷ்ணு பகவானுக்கு உகந்த நாள் வியாழன். அதே சமயம் அவரின் துணைவியான லக்‌ஷ்மி தேவியை வணங்கவும் உகந்த நாள். தட்சிணாமூர்த்தி (குரு) வழிபாடு செய்ய ஏற்ற நாள்.

வெள்ளிக் கிழமை:
வெள்ளிக் கிழமையில் விரதமிருந்து துர்க்கை அம்மனையும், அவரது அவதாரங்களையும் வழிபட ஏற்ற நாள். பெண் தெய்வங்களுக்கு ஏற்ற நாள்.

சனிக் கிழமை:
சனிக்கிழமைகளில் விரதமிருந்து திருமால், ஆஞ்சநேயர், காளி தேவியை வழிபட உகந்த நாளாக பார்க்கப்படுகின்றது. அதோடு, நீதி அரசர் சனி பகவானுக்கு ஏற்ற நாள்.


ஞாயிறு கிழமை:
நவகிரகத்தின் மையமாக, முதன்மை கடவுளாக இருப்பவர் சூரிய பகவான். ஞாயிறு கிழமையில் விரதம் இருட்ந்து வணங்கி வர சூரிய தோஷமும், வாழ்க்கையில் இன்னல் நீங்கி மகிழ்ச்சி கிடைக்கும்.

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...