Followers

Saturday, July 25, 2020


திருமணம் தாமதம் ஆகும் என்பதை எவ்வாறு ஜாதகத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம் ?

எந்த வகையான ஜாதகத்தினருக்கு திருமணம் தாமதமாகும் என்பதை ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் விளக்கி உள்ளார். ஜாதகம் எப்படி அமைந்திருக்கும் என்பதை குறிப்பிட்டுள்ளார்.

செவ்வாய் லக்கினத்தில் இருந்து என்ன வருகின்ற 2, 4, 6, 8, 12 ஆகிய ஸ்தானங்களில் இருந்தால் செவ்வாய் தோஷம் ஏற்படுகிறது. இதற்கு பல்வேறு வகையான விதிவிலக்குகள் உள்ளன. அவைகளை வெறுத்து எழுதினால் பக்கம் பக்கமாக இதையே எழுதிக் கொண்டு செல்ல வேண்டியிருக்கும். எனவே இந்த செவ்வாய் தோஷம் என்பது மிக முக்கியமான திருமண தாமதத்திற்கான காரணம் ஆகும்.


ராகு அல்லது கேது லக்னம் 2 7 8 ஆகிய இடங்களில் தனிமையில் அமர்ந்து இருந்தால் அவர்களுடைய திசை நடக்கும் போது திருமணம் காலதாமதம் ஆவதற்கு வாய்ப்பு உண்டு.

லக்கினத்திலோ ஏழாம் இடத்திலோ சனி அமர்ந்து இருக்கும். பட்சத்தில் இவர்களுக்குத் தாமதமான திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது.

ஜாதகம் இல்லாதவர்கள் தொழில் தொடங்கும் முன் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

சனி மற்றும் செவ்வாய் இணைந்து லக்கினத்திலோ 7-ஆம் இடத்திலோ அல்லது எட்டாம் இடத்திலும் அமர்ந்து இருக்குமாயின் இவர்களுக்குத் திருமணம் தாமதமாகும்.

சனி செவ்வாய் பார்வை இரண்டாம் இடத்திலோ ஏழாம் இடத்திலோ அல்லது எட்டாம் இடத்திலோ இணையும் பட்சத்தில் இவர்களுக்குத் திருமணம் தாமதமாக வாய்ப்பு உண்டு.

ஏழாம் இடத்து அதிபதியோ அல்லது இரண்டாம் இடத்து அதிபதியும், சனி ராகு கேதுவுடன் சேர்ந்து இருப்பது திருமண தாமதத்தை உருவாக்கும்.


இரண்டாமிடத்து அதிபதி ஏழாம் இடத்து அதிபதி ஆகிய இருவரில் ஒருவர் 6 8 12ல் மறைந்து அல்லது நீசம் பெற்று இருந்தாள் திருமணம் தாமதம் ஆக வாய்ப்பு உள்ளது.


ஏழாம் இடத்திலும் இரண்டாம் இடத்திலும், நீசம் பெற்ற கிரகங்கள் இருந்தால் திருமணம் தாமதம் ஆக வாய்ப்பு உள்ளது.

இரண்டாம் இடத்து அதிபதியும் ஏழாம் இடத்து அதிபதியும், ஐந்தாம் இடத்தில் அமர்ந்திருந்தால் திருமணம் தாமதம் ஆக வாய்ப்பு உள்ளது.

6 8 12 ஆம் இடத்து அதிபதிகள் ஏழாமிடத்தில் அல்லது இரண்டாம் இடத்தில் இருந்தாள் தாமதமாக வாய்ப்பு உள்ளது.

லக்கினத்திற்குப் பாதகாதிபதியான கிரகங்கள் ஏழாம் இடத்திலும், இரண்டாம் இடத்திலும், அமர்ந்திருந்தாலும் திருமணம் தாமதமாக வாய்ப்பு உள்ளது.


இம்மாதிரியான கிரகச் சேர்க்கைகள் உள்ள ஜாதகங்களில் ஆண் ஜாதகமாக இருந்தால் திருமணம் என்பது குறைந்தது 30 அல்லது 32 வயதிற்கு மேல்தான் நடக்கிறது. பெண்கள் சாதகமாக இருக்கும் பட்சத்தில் குறைந்தபட்சம் 26 29 இந்த வயதுகளில் தான் திருமணம் நடைபெறுகிறது. திருமண தடை பரிகாரங்கள் செய்தாலும் தாமதத்தை தவிர்க்க முடிவதில்லை.

திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது. மாப்பிள்ளை வீட்டார் அல்லது பெண் வீட்டார் தேடிக் கண்டுபிடித்து உருவாக்கி வைக்கும் உறவு நிலை அல்ல திருமணம் என்பது. ஏற்கனவே இறைவன் வகுத்து வைத்த ஒரு வரனை கண்டுபிடிப்பதற்குத்தான் , நாமாக ஒரு வரனை உருவாக்கிக் கட்டி வைப்பதாக இருந்தால் என்ன ஆகியிருக்கும் 80 வயதானாலும் வாழ்க்கை துணையைத் தேடிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.
கூடல் நகரத்து ஆடவல்லான் உங்களுக்கு எல்லா வளமும் அருள்வாராக !

திருச்சிற்றம்பலம் !!

============================================
வெளிநாட்டு வரன் யாருக்கு அமையும்? - உங்கள் ஜாதகத்தில் இப்படி இருக்கா?
Aravindhan K | Samayam Tamil
யாருக்கெல்லாம் வெளிநாட்டு வரன் அமையும், யாருக்கு வெளிநாடு, வெளியூரில் வசிக்கும் நபரை திருமணம் செய்து கொள்ளும் யோகம் உள்ளது என்பதை விரிவாக பார்ப்போம்...
​வெளிநாட்டு வரன் யாருக்கு அமையும்?

தற்போதுள்ள நிலையில் ஆண்களுக்கு பெண் கிடைப்பதே பெரிய சிக்கலான நிலையில் உள்ளது. அதோடு உள்ளூரில், உள்நாட்டில் சரியான வேலை அமையாதவர்களும், வெளிநாட்டில் நல்ல வேலை அமைந்தவர்கள் வெளிநாட்டில் சென்று நன்றாக சம்பாதிக்கும் பாக்கியம் பெற்றவர்களாக இருக்கின்றனர்.

ஆனால் அவர்களில் பலருக்கு வெளிநாட்டு வரன் வேண்டாம் என பெண் வீட்டார் தட்டிக்கழிக்கும் நிலை உள்ளது. அதோடு வெளியூர் கூட ஓகே வெளிநாடு வேண்டாம் என்ற எண்ணம் பலருக்கு உள்ளதால் வெளிநாட்டில் வேலை பார்க்கும் ஆண்களுக்கு வரன் அமைய குதிரை கொம்பா உள்ளது.

ஒவ்வொருவரும் அவரவர் விருப்பப்படி வரன் தேடுவது வழக்கம். அதில் வெளிநாட்டு வரன் யாருக்கு அமையும் என்பதை இங்கு விரிவாக பார்ப்போம்...


​மோசமானவர்களா?

வெளிநாட்டில் வேலை பார்த்தால் அவர்கள் கெட்டுப்போனவர்கள், மோசமானவர்களாக, தீய பழக்கத்திற்கு ஆளானவர்களாக இருப்பார்கள் என பலரும் சந்தேகப்படுவதுண்டு. இதனால் நல்ல வெளிநாட்டு வரன் வந்தாலும் அதை தட்டிக்கழிப்பார்கள்.

ஒரு ஆண் அல்லது பெண்ணுக்கு வெளிநாட்டு வரன் கிடைக்க ஜாதகத்தில் எப்படிப்பட்ட அமைப்பு இருக்கும் பார்ப்போம்.

​கிரக அமைப்பு:

ஜல ராசிகளான விருச்சிகம், மீனம், கடம் மற்றும் சர ராசியான மகர லக்கினத்டில் பிறந்த பெண்களூக்கு செவ்வய்9,12ம் பாவமாக வந்தால் அவர்களுக்கு வெளிநாட்டு வாழ்க்கை அமையலாம்.

அதுமட்டுமல்லாமல் ஒரு ஜாதகருக்கு நல்ல ஒழுக்கமான வரன் அமைய வேண்டும் என்ற விதி இருந்தால் அது அமையும்.

​யாருக்கு வெளிநாட்டு வரன் யோகம்?
ஜல ராசியாகவோ அல்லது சர லக்கினமாகவோ அமைந்தவருக்கு வெளிநாட்டில் ப்ணி புரிதல் அல்லது வெளிநாட்டு மாப்பிள்ளை கிடைக்க வாய்ப்புள்ளது.

அல்லது திருமணத்திற்கு பிறகு வெளிநாடு செல்லும் வாய்ப்பும் அடிக்கடி வெளிநாடு சென்று வரும் வாய்ப்பும் இருக்கும்.

​செவ்வாய் கிரகம்
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் கிரகத்தை தான் அவரின் கணவரைக் குறிக்கக் கூடியது. அதனால் செவ்வாய் ஜல அல்லது சர ராசியில் இருப்பதோடு அவரின் லக்கினம் 9,12ம் இடத்தில் இருப்பது வெளிநாட்டு வாழ் நபரை மணக்க வாய்ப்புண்டு.
====================================================

====================================================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...