ஒரு நாள் இரவு... தொலை
தேசத்தில் ஒரு ராணுவப் பாசறையில் தங்கியிருந்த மன்னனின் காதில் ஒரு பூச்சி
நுழைந்து விட்டது .
திடுக்கிட்டு எழுந்தான் .
காதில் நுழைந்த பூச்சியும்
கொரோனாவும்!!!!
ஒரு பெரிய நாட்டின் மன்னன்
தனது நாட்டின் எல்லைகளை விஸ்தரிக்கத் தொடர்ந்து போர் புரிந்து கொண்டிருந்தான் .
ஒரு நாள் இரவு... தொலை
தேசத்தில் ஒரு ராணுவப் பாசறையில் தங்கியிருந்த மன்னனின் காதில் ஒரு பூச்சி
நுழைந்து விட்டது .
திடுக்கிட்டு எழுந்தான் .
காதில் இருந்த பூச்சியை
எடுக்க மன்னனைச் சேர்ந்தவர்கள் படாத பாடுபட்டார்கள்
அவர்கள் முயற்சி எதுவும்
பலிக்கவில்லை
சில வீரர்களை
அழைத்துக்கொண்டு தலைநகரத்திற்குத் திரும்பினான் மன்னன் .
ராஜவைத்தியரிடம்
பிரச்னையைச் சொன்னான் .
அவரும் எவ்வளவோ பாடுபட்டார்
.
தொலைதூரத்தில் இருந்து
மூலிகைகள் வரவழைக்கப் பட்டன
மூலிகையைப் பிழிந்து சாறு
எடுத்து மன்னனின் காதிற்குள் விட்டார்கள்.
எதற்கும் பலன் இல்லை .
மன்னனின் காதில் உள்ள
பூச்சி பிரச்னையைத் தீர்த்து வைப்பவர்களுக்கு பிரமாண்டமான பரிசுகள் வழங்கப்படும்
என அறிவிக்கப்பட்டது.
எங்கிருந்தெல்லாமோ
வைத்தியர்கள் வந்தார்கள் ,யாராலும் அந்தப் பூச்சியை
வெளியே எடுக்க முடியவில்லை .
மன்னனின் காதிற்குள் அந்தப்
பூச்சி அங்கும் இங்கும் பறந்துகொண்டிருந்ததால்,அவனால் நிம்மதியாக தூங்க முடியவில்லை
உணவு சாப்பிடுவது குறைந்து மன்னன் தன் பொலிவு இழந்தான் .
ராஜ கம்பீரமாக உலா வந்து
கொண்டிருந்தவன், இப்போது பஞ்சத்தில்
அடிபட்டவனைப்போல் காணப்பட்டான்
எந்த நேரமும் படுக்கையிலேயே
இருந்தான் .
தன்னுடைய முடிவு
நெருங்கிவிட்டது என்பதாக உணர்ந்தான் .
பதினான்கே வயதான அவனுடைய
மூத்த மகனுக்கு அவசர கதியில் வாள்பயிற்சி,
குதிரையேற்றம்
எல்லாம் கற்பிக்கப்பட்டது .
இந்த நேரத்தில்
இமயமலையிலிருந்து ஒரு துறவி சீடர்கள் புடை சூழ நாட்டிற்கு வந்திருப்பதாக செய்திகள்
வந்தன .
பட்டத்து ராணி அந்தத்
துறவியைப் பார்க்க சென்று அவருடைய காலில் விழுந்து கதறினாள்.
தன் கணவனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று மன்றாடினாள்
அரண்மனைக்கு வந்து சேர்ந்த
துறவி மன்னனின் காதை நன்றாகப் பரிசோதித்தார் .
பின் சிறிதுநேரம்
தியானத்தில் ஆழ்ந்தார்.
அன்று மாலை அரசனையும்
அரசியையும் தனியாகச் சந்தித்துப் பேசினார்
"இது மிகவும் அபூர்வ வகை பூச்சி
அரசே!
நம் பக்கத்து மூலிகைகளுக்கு
இது கட்டுப்படாது .
இங்கிருந்து நூறு யோஜனை
தூரத்தில் உள்ள ஒரு காட்டில் விளையும் அபூர்வமான ஒரு மூலிகைக்குத்தான் இந்தப்
பூச்சி கட்டுப்படும் .
இன்றே என் சீடர்களை அனுப்பி
அந்த மூலிகையை கொண்டு வர செய்கிறேன்,அதன்பின் உங்கள் பிரச்னை
முற்றிலுமாகத் தீர்ந்துவிடும்." என்றார்.
அந்த மூலிகையை எப்படி இனம்
கண்டுகொள்ள வேண்டும் என்று விளக்கிச் சொல்லி,தன் சீடர்களில்
சிறந்தவர்கள் இருவரை அனுப்பி வைத்தார் துறவி
அவர்களுக்குக்
குதிரையேற்றம் தெரியுமாதலால் அவர்கள் பயணத்திற்குச் சிறந்த அரபிக் குதிரைகளைக்
கொடுத்து அனுப்பினான் மன்னன் .
கூடவே, அவர்கள் பாதுகாப்பிற்காகச் சில வாளேந்திய வீரர்களையும்
அனுப்பி வைத்தான் .
மூன்றே வாரங்களில் சீடர்கள்
மூலிகையுடன் வந்தார்கள்.
அது 'ராஜ மூலிகை' என்பதால் அதை வைத்து ஒரு
நாள் முழுவதும் பூஜை செய்யவேண்டும் என்று துறவி சொல்லி விட்டார் .
மறுநாள் காலை விடிவதற்கு
முன்னால் ,பிரம்ம முகூர்த்த நேரத்தில்
மன்னனின் காதில் அந்த மூலிகைச் சாறு அரைத்து ஊற்றப்பட்டது
அடுத்த சில நொடிகளில் செத்த
பூச்சி வெளியில் வந்து விழுந்தது .
மன்னனிடம் அந்தப்
பூச்சியைக் காட்டினார் துறவி .
துறவியின் கால்களில்
விழுந்து வணங்கினான் மன்னன்.
சில நாட்கள் அரண்மனையில்
தங்கியிருந்தார் துறவி
மன்னன்இப்போது நிம்மதியாகத்
தூங்கினான் .
நன்றாக உண்டான்,பழைய பொலிவு திரும்பி விட்டது
துறவி விடை பெற்றுக்கொண்டார்
.
அவருக்கும் அவரது
சீடர்களுக்கும் உரிய மரியாதை செய்து அனுப்பி வைத்தான் மன்னன்
அவர்கள் நாட்டு எல்லையைத்
தாண்டியதும் ,துறவியின் சீடர்களில்
ஒருவன் கேட்டான்
""குருதேவா...!!! அந்த
அற்புதமான மூலிகை பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்...!!!''
மற்றொரு சீடனின் கேள்வி
வேறு விதமாக இருந்தது .
"மூலிகையைவிட அந்தப் பூச்சி இன்னும்
அற்புதமாகத் தோன்றுகிறது .
ஒரு மனிதனின் காதிற்குள்
புகுந்து அத்தனை நாள் உயிருடன் இருந்து அவனைப் பாடாய்ப் படுத்தி வைத்தது என்றால் ,அது மிகவும் விசேஷமான பூச்சியாக இருக்க வேண்டும்..
அதைப் பற்றிச்
சொல்லுங்களேன் என்றான்
'துறவி புன்னகை பூத்தார் !
"பூச்சி அத்தனை நாள் எங்கே இருந்தது
என்று நினைக்கிறீர்கள்?
மன்னனின் செவிக்குள் .
அதுதான் இல்லை
மன்னனின் காதிற்குள் பூச்சி
போனது உண்மையாக இருந்திருக்கலாம் .
போன சிறிது நேரத்திலேயே அது
செத்திருக்கும் ,இல்லை வெளியே வந்திருக்கும்
அந்தச் சிறிது நேரத்தில்
அது மன்னனின் செவிகளுக்குள் ஒரு குறுகுறுப்பு உணர்வை ஏற்படுத்திவிட்டது .
அது மன்னனின் மனதில் அது குறுகுறுப்பு உணர்வை ஆழமாகப் பதிந்துவிட்டது
எனவே அந்தப் பூச்சிகாதுக்குள்
உயிருடன் இருப்பதாகவே மன்னன் நினைத்துக் கொண்டிருந்தான்
"குருதேவா அதை விளக்கிச் சொல்லி
மன்னனை குணப்படுத்தியிருக்கலாமே...???''
மனோவியாதியை அப்படி
எளிதாகக்குணப்படுத்திவிட முடியாது அப்பனே....!!!
பிரச்னை தீவிரமானது என்று
மன்னன் நினைத்துக் கொண்டிருந்தான் .
அதனால் தான் நானும்
சிகிச்சை தீவிரமானது என்று பாசாங்கு செய்தேன் .
தொலைதூரத்தில் இருந்து
மூலிகை வர வேண்டும் என்று பொய் சொன்னேன் .
அந்த மூலிகை நம் ஊரில்
சாதாரணமாக விளையும் திருநீற்று பச்சிலைதான் .
ஆனால் அதை யாரும்
கவனிக்காமல் பார்த்துக் கொண்டேன்
பின் ஒருநாள் பூஜை செய்து
காலை இருட்டு நேரத்தில் மூலிகைச் சாற்றை மன்னனின் காதில் விட்டு ஏற்கனவே பிடித்து
வைத்திருந்த ஒரு செத்த பூச்சியைக்காட்டினேன் .
மன்னன் நம்பி விட்டான்
அவன் நோயும் தீர்ந்தது.
சீடர்கள் வியப்புத் தாளாமல்
தங்கள் குருவைப் பார்த்தார்கள்.
இன்று மனித இனத்தைப்
பீடித்திருக்கும் நோய்களில் பெரும்பான்மையானவை நம் மனங்களில் தான் இருக்கின்றன.
காதில் நுழைந்த பூச்சி
செத்துவிட்டாலும், மனதில் நுழைந்த பூச்சிதான்
நம்மைச் சாகடித்துக் கொண்டிருக்கிறது
பூச்சி காதில் இல்லை ,மனதில் இருக்கிறது
.''இது நகைச்சுவை அல்ல;
இது வாழ்வியல் கருத்தை
நச்சென்று சொல்லும் விளக்கம் .
காதில் இல்லாத
பூச்சிக்காகத் தன் உடல்நலத்தைக் கெடுத்துக் கொண்ட மன்னன் போல
இல்லாத பிரச்னையை, இருப்பதாக நினைத்துக்கொண்டு,நம்மில் பலபேர் தவித்துக் கொண்டிருக்கிறோம்!
("கொரோனா, இல்லவே யில்லை",
என்று
சொல்லவில்லை. அது கொடுக்கும் தொல்லையை விட,
"அதைப் பற்றி ஏற்படுத்தப் பட்டிருக்கிற பயமே", அதிக தொல்லை கொடுக்கிது!
அவரவர்கள் " கொரோனா
தொற்றை" - "கொரோனாவை" அல்ல! "தொற்றை"-
கட்டுப்படுத்துவதிலேயே "போட்டி போட்டுக் கொண்டு" - பந்தயத்தில் ஓடுவது
போல், ஓடிக்கொண் டிருக்கிறார்கள்!
ஆச்சர்யமாக இருக் கிறது!
இத்தனைக்கும் - இது , "கொல்லும் நோய் அல்ல"! இதனால்
பாதிக்கப் பட்டவர்களில் 80 சதவிகிதம் பேர் சாதாரண
சிகிச்சையில் குணம் அடைகிறார்கள். 15 சதவீதம் பேருக்கு ஆக்ஸிஜன்
தேவைப் படுகிறது, மற்றவர்களுக்கு தான்
பிளாஸ்மா தெரபி முதலியவை செய்யவேண்டி வரும்!", என்றெல்லாம் சொல்லப் பட்டிருக்கிறது!
"தொற்றை கண்டுபிடிப்பதில் காட்டும்
.முயற்சியை" விட
"எல்லோருக்கும்,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான முயற்சி", அதிகமாக இருக்க வேண்டியது அவசியம் இல்லையா?
Immunity to be increased - நோய் எதிர்ப்பு சக்தியை
அதிகரிக்க வேண்டும்.
ஏழு கோடி பேருக்கு, பதினாலு கோடி மாஸ்க் கொடுப்பதை விட,
ஏழு கோடி பேருக்கு நோய்
எதிர்ப்பு சக்தி மாத்திரைகளும் கப சுர சூரணமும் கொடுப்பது சிறந்தது!
மாஸ்க் கொடுப்து - நோய்க்கு
பயப்படுவது - பயந்துகொண்டே இருக்க வேண்டியது தான்!
நோய் எதிர்ப்பு மருந்தைக்
கொடுப்பது - நோயை (நம்மிடம் வருவதற்கு) - அஞ்சும்படி
செய்வது!
இதில் எது சரி? நாம் , கொரோனாவிற்கு அஞ்சிக்
கொண்டே யிருப்பதா?
அல்லது
கொரோனாவை, நம்மிடம் வருவதற்கு,
அஞ்சும்படி
செய்வதா?
----------------------------------------------------------
படித்தேன்; பகிர்ந்தேன்
அன்புடன்
courtesy; வாத்தியார் ayya tq.
==============================================================
வாழ்க வளமுடன்! வளர்க
நலமுடன்!
No comments:
Post a Comment