Followers

Sunday, April 5, 2020

சரி, போய்த் தரிசனம் செய்துவிட்டு வரலாம்ஃ என்று மேகா முடிவெடுத்தார். பின்னர் மேகா சிர்டீக்கு வந்துசேர்ந்தார். முற்றத்தினுள் சென்று மசூதியின் படிகளில் ஏற ஆரம்பித்தார். பாபா தம் லீலையை ஆரம்பித்தார்õ உக்கிரமான முகத்துடன் கையில் ஒரு கல்லை எடுத்துக்கொண்டே இரைச்சலி ­ட்டார், ''ஜாக்கிரதைõ படிமேல் கால் வைத்து ஏறினால் தெரியும் சேதிõ இது ஒரு யவனன் (முஸ்லீம்) வாழும் இடம்.-- ''ஓ, நீரோ உயர்குலத்து பிராமணன். நானோ நீசனிலும் நீசனான யவனன். உம்மேல் தீட்டு ஒட்டிக்கொண்டுவிடும். போம் வெளியே; இக்கணமே திரும்பிவிடும்õஃஃ கடுமையான இவ்வார்த்தைகள் மேகாவின்மீது தணலைப்போலக் கொட்டின. பாபா பிரளயகால ருத்திரனைப்போலக் காட்சியளித்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் வெலவெலத்தனர். மேகா பயத்தால் நடுநடுங்கிப்போனார்.
141 இந்தக் கோபமென்னவோ ஒரு நடிப்புதான்; உள்ளே இதயம் தயையால் நிரம்பி வழிந்துகொண் டிருந்தது. மேகா வியப்பால் நிறைந்து செய­ழந்துபோனார். ''என் உள்ளத்தின் ஆழத்தில் இருந்த எண்ணங்களை இவர் எப்படி அறிந்தார்?--
''எங்கோ இருக்கும் கேடா ஜில்லா எங்கே? வெகுதூரத்தில் இருக்கும் அஹமத் நகரம் எங்கே? என்னுடைய மனக்கோணலும் சந்தேகங்களுமே பாபாவின் கோபமாக உருவெடுத்தன போலும்õஃஃ
பாபா மேகாவை அடிப்பதற்கு நெருங்க, நெருங்க, மேகாவின் தைரியம் அவரைக் காலைவாரிவிட்டது. ஒவ்வொரு பாய்ச்சலுக்கும் ஓரடி பின்னுக்கு வைத்தார். கிட்ட நெருங்கத் தைரியம் இல்லாது போயிற்று. ........................
Please see below for English version. Tq
சாயியின் சரித்திரம் பாக்கியம் அளிப்பது. அவருடைய நித்திய நடவடிக்கைகள் பாக்கியம் அளிப்பவை. அவருடைய செய்கைகளோ அதியற்புதமானவை; புரிந்துகொள்ளமுடியாதவை; கிரமமாக விவரிக்க முடியாதவை. அவருடைய உண்மையான வாழ்க்கைச் சரித்திரம் ஆழங்காணமுடியாதது;...................................... ஸாயீயின் லீலைகள் எண்ணத்திற்கும் செயல்/ விளைவு சிந்தனைக்கும் அப்பாற்பட்டவை. அவரைத் தவிர வேறு யாரால் அவற்றை விவரிக்க முடியும்? நான் ஒரு கருவி மாத்திரமே அல்லேனோ? அவரே என்னைப் பேசவைப்பார். எல்லாருக்கும் எப்போதும் க்ஷேமம் உண்டாகட்டும்
''ஆத்மார்த்தமாகவும் இதயபூர்வமாகவும் என்னிடம் அன்பு கொண்டவன் என் கதைகளைக் கேட்டு இயல்பாகவே சந்தோஷமடைவான்.--Baba
Spreading the life and teachings of Shri Shirdi Saibaba.......
Sometimes Sai removes things from our lives for our own protection. Trust in Him.
Just because you can't see the air, doesn't mean you stop breathing. Just because you can't see Sai doesn't mean you stop believing.
Sai has perfect timing; never early, never late. It takes a little patience and it takes a lot of faith but it's worth the wait. .......... Think positive and positive things will happen.................
வேண்டத் தக்கது அறிவோய் நீ,
வேண்ட முழுவதும் தருவோய் நீ,
வேண்டும் அயன், மால்க்கு அரியோய் நீ
வேண்டி என்னைப் பணிகொண்டாய்!
வேண்டி நீ யாது அருள் செய்தாய்,
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில்,
அதுவும் உன் தன் விருப்பு அன்றே!.....
Who so ever puts his feet on SHIRDI soil, his sufferings would come to an end, the wretched and miserable would rise into plenty of joy and happiness, as soon as they climb the steps of DWARAKAMAYEE.
ஸாயீயை சரணடைந்து அவருடைய பாதங்களை நமஸ்கரிக்கிறேன். அவர் உறையும் எல்லா ஜீவராசிகளுக்கும் வணக்கம் செலுத்துகிறேன். கதை கேட்பவர்கள் ஸாயீக்கு நிவேதனம் செய்யப்படும் இப் பிரஸங்கத்திற்குத் தங்களுடைய மேலான கவனத்தை தானமாக அளிக்குமாறு வேண்டுகிறேன்.
எல்லாருக்கும் எப்போதும் க்ஷேமம் உண்டாகட்டும்
ஸ்ரீ ஸாயீயின் பொற்கமலப் பாதங்களில் சரணமடைகின்றேன். கதை கேட்பவர்களுக்கு நமஸ்காரம் செய்கிறேன். ஸம்ஸார ஸாகரத்தை எளிதாகக் கடக்கும் திறமையைப் பெறும் வகையாக இக் கதைகளை பயபக்தியுடன் கவனமாகச் செவிமடுக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் எப்பொழுது சொல்லப்படுகிறதோ அப்பொழுது கேளுங்கள். அது மங்களத்தை அளிக்கும். கருணாமூர்த்தியான ஸாயீயே எல்லாச் செயல்களுக்கும் காரணகர்த்தா..
Baba comforted us saying, "Alla Accha Karega (God will do good)."
ஒம் குரு வாழ்க, குரு நன்றாய் வாழ்க, குருவே துணை...
''ஜெய் ஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு
ஸாயீநாத் மஹராஜ் கீ ஜெய்"
இனிய சுபகுருதின வணக்கம் அன்புறவுகளே!!!..
ஸ்ரீ சிர்டீ சாயி ஸ்த்சரித்திரம் தொடர்கிறது……….
Please see below for English version. Tq
வாசகர்களுக்கு என் பிரார்த்தனை இதுவே, ''வாருங்கள், வந்து இந்த ஆனந்தத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள். சான்றோர்களுடன் சேர்ந்துகொண்டு சதா ஸாயீயின் புனிதமான கதைகளைக் கேட்பவர் மஹாபாக்கியசாலிகள்...சாயி ஸ்த்சரித்திரம் அத்தியாயம் 28
தமிழில் தொடர்கிறது……….
*
*
*
================================================================
இந்தச் சிட்டுக்குருவி ஓர் அன்பார்ந்த பெண்மணி. அவருடைய காதை மிக சுவாரசியமானது. பர்ஹாண்பூரில் அவருக்கு ஒரு தெய்வீகக் காட்சி கிடைத்தது; அதில் ஸாயீ மஹராஜைப் பார்த்தார்.
101 அவர் அதற்குமுன் பாபாவைப் பிரத்யட்சமாக தரிசனம் செய்ததில்லை. ஆயினும், பாபா தம் வீட்டு வாயிற்படிக்கு வந்து, கிச்சடி உணவு தருமாறு கேட்கின்ற காட்சியைக் கனவில் கண்டார்.
102 உடனே தூக்கத்தி­ருந்து எழுந்து வீட்டைச் சுற்றித் தேடிப்பார்த்தார். வெளியில் யாரும் தென்படவில்லை. எல்லாருக்கும் தம் கனவுக் காட்சியைப்பற்றி ஆவலுடன் தெரிவித்தார்.
103 அம்மையாரின் கணவர் அப்பொழுது பர்ஹாண்பூரிலேயே தபால் இலாகாவில் அதிகாரியாக வேலை பார்த்துவந்தார். பின்னர் அவருக்கு அகோலாவுக்குப் பணிமாற்றம் ஏற்பட்டது. அகோலாவுக்கு மாறியவுடன் சிர்டீ செல்வதற்கு அம்மையார் ஆயத்தம் செய்தார்.
104 கணவனும் மனைவியும் பக்தி பா(ஆஏஅ)வம் மிகுந்தவர்கள். ஸாயீயை தரிசனம் செய்யவேண்டுமென்று பேராவல் கொண்டனர். கனவில் வந்த காட்சியைப் போற்றிப் பெருமிதம் அடைந்தனர். ஸாயீயினுடைய லீலை இவ்வுலக நடப்பிற்கு அப்பாற்பட்டதன்றோõ
105 ஒரு தகுந்த நாளைத் தேர்ந்தெடுத்து இருவரும் சிர்டீக்குக் கிளம்பினர். வழியில் கோமதி தீர்த்தத்திற்கு (கோதாவரி நதிக்கு) வந்தனம் செலுத்திவிட்டு சிர்டீக்கு வந்துசேர்ந்தனர்.
106 பிரேமையுடன் பாபாவை தரிசனம் செய்து பக்தியுடன் பூஜையும் செய்தனர். பாபாவின் பாதங்களைத் தினமும் சேவித்துக்கொண்டு மகிழ்ச்சியுடனும் திருப்தியுடனும் சிர்டீயில் தங்கினர்.
107 இவ்வாறு கணவனும் மனைவியும் சிர்டீயில் ஆனந்தமாக இரண்டு மாதங்கள் தங்கினர். பாபாவும் அவர்கள் அத்தியந்த பக்தியுடன் அளித்த கிச்சடி போஜனத்தை ஏற்றுக்கொண்டதில் பரிபூரணமாகத் திருப்தியடைந்தார்.
108 கணவனும் மனைவியும் கிச்சடியை பாபாவுக்கு நைவேத்தியமாக அளிப்பதற்காகவே சிர்டீக்குப் பயணமாக வந்திருந்தனர். ஆனால், பதினான்கு நாள்கள் கடந்தும் கிச்சடியை ஸமர்ப்பணம் செய்யமுடியாத நிலைமையாக இருந்தது.
109 அப்பெண்மணிக்குத் தாம் செய்துகொண்ட சங்கற்பம் இவ்வாறு காலம் கடந்துகொண்டே போனது பொறுக்கவில்லை. ஆகவே, பதினான்காவது நாள் மதியவேளை வந்தவுடனே கிச்சடியுடன் மசூதிக்கு வந்தார்.
110 வந்துசேர்ந்தவுடன், பாபா தமது பக்தர்களுடன் உணவருந்த அமர்ந்துவிட்டதை அறிவிக்கும் வகையில் மசூதியில் படுதா போடப்பட்டிருந்ததைக் கண்டார்.
111 போஜன நேரத்தில் யாருமே படுதாவை விலக்கமாட்டார்கள். ஆயினும் கீழேயிருக்கும் சபாமண்டபத்தில் வெறுமனே உட்கார்ந்திருக்க அவ்வம்மையாருக்குப் பொறுமை இல்லை.
112 பாபாவுக்குக் கிச்சடி ஸமர்ப்பிக்கவேண்டும் என்ற ஆர்வத்தில்தான் அவர் அகோலாவிருந்து நெடுந்தூரம் பயணம் செய்து சிர்டீக்கு வந்திருந்தார். இந்த அபரிமிதமான உற்சாகம் எப்படி அவரை சபாமண்டபத்தில் சும்மா உட்கார்ந்திருக்க விட்டுவைக்கும்?
113 ஆகவே, அவர் யார் சொன்னதையும் கேட்காமல் படுதாவைத் தம்முடைய கைகளாலேயே விலக்கிவிட்டு நைவேத்தியத்துடன் உள்ளே புகுந்தார். அவருடைய ஏக்கமும் தணிந்தது.
114 பாபாவோ அங்கிருந்தோர் அனைவரையும் ஆச்சரியத்தில் முழுக்கினார். கிச்சடியின்மேல் பேரார்வம் காண்பித்து, மற்றப் பண்டங்களுக்கு முன்பாக அதை உண்ணவேண்டுமென்று விரும்பித் தம்முடைய இருகைகளையும் நீட்டித் தட்டை அவசரமாக வாங்கிக்கொண்டார்.
115 கிச்சடியைக் கண்டவுடன் மிகுந்த உற்சாகத்துடன் பிடிப்பிடியாக எடுத்து வாயில் போட்டுக்கொண்டார். அங்கிருந்த எல்லாரும் அவரை அன்புடன் பார்த்து அதிசயப்பட்டனர்.
116 பாபா காண்பித்த ஆர்வத்தைப் பார்த்து அனைவரும் வியப்படைந்தனர். ஆயினும் கிச்சடியின் கதையைக் கேட்டபின், பாபாவின் வழிமுறைகள் இவ்வுலக நடப்புக்கு அப்பாற்பட்டவை என்று அறிந்துகொண்டனர்.
117 மேற்கொண்டு சொல்லப்போகும் காதையைக் கேட்டால் உங்கள் மனம் பிரேமையால் பொங்கும். திடீரென்று கிளம்பி பாபாவுக்கு சேவை செய்யவந்த ஒரு குஜராத்தி பிராமணரின் கதை இது.
118 ஆரம்பத்தில் ராவ்பஹதூர் ஸாடேவின்1 இல்லத்தில் வேலை செய்தவர் இவர். ஸாடேவுக்கு அந்தரங்க சுத்தமாகவும் விசுவாசத்துடனும் பணி செய்த பிறகு, ஸாயீ பாதங்களில் அடைக்கலம் புகுந்தார்.
119 இதுவும் ஒரு சுவாரசியமான கதை. பக்தியும் பிரேமையும் நிரம்பிய வாழ்க்கையை நடத்துபவர்களின் ஏக்கங்களை ஸ்ரீஹரி எவ்வாறு தீர்த்துவைக்கிறார் என்பதைக் கேளுங்கள்.
120 மேகா என்பது இந்த பிராமணரின் பெயர். பூர்வஜன்ம சம்பந்தமே இவரை ஸாயீயிடம் கொண்டுவந்து சேர்த்தது. இப்பொழுது கதையை விவரமாகக் கேளுங்கள்.
121 ஸாடே, கேடா ஜில்லாவில் உதவி மாவட்டாட்சியராக உத்தியோகம் பார்த்துவந்தார். அங்கேதான் எதிர்பாராமல் மேகாவைச் சந்திக்க நேர்ந்தது. சிவாலயத்தில் நித்திய பூஜை செய்வதற்காக அவரைப் பணியில் அமர்த்தினார்.
122 பின்னர் இந்த ஸாடே சிர்டீக்கு வந்தார்; பாக்கியம் பெற்றார். ஸாயீ மஹராஜின் அன்பையும் புனிதமான சங்கத்தையும் அனுபவித்தார். அவருடைய பாதங்களில் மனத்தைப் பறிகொடுத்துவிட்டார்.
123 தரிசனம் செய்ய வரும் கூட்டத்தைக் கண்டு, தாம் அங்கு வந்தால் தங்குவதற்காகச் சொந்தமாகவே ஒரு வாடா கட்டிவிடலாம் என்று முடிவெடுத்தார்.
124 கிராமத் தலைவர்களைச் சந்தித்து பாபா முதன்முத­ல் தோன்றிய இடத்தை விலைக்கு வாங்கினார். அந்த இடத்தில் வாடா கட்டுவதென்று முடிவு செய்யப்பட்டது.
125 இந்தப் புனிதமான இடத்தின் முக்கியத்துவம் நான்காவது அத்தியாயத்தில் ஏற்கெனவே விவரிக்கப்பட்டுவிட்டது. இங்கு மறுபடியும் விவரிக்க வேண்டிய அவசியம் இல்லை. விட்ட இடத்தி­ருந்து கதையை மேலும் தொடர்வோம்.
126 ஆக, மேகா, ராவ் பஹதூர் ஸாடேவைச் சந்திக்க நேர்ந்தது அவருடைய பூர்வபுண்ணிய பலத்தாலேயே. ஏனெனில், ஸாடேதான் பெருமுயற்சி செய்து மேகாவுக்கு ஆன்மீகப் பாதையில் வழிகாட்டினார்.
127 சந்தர்ப்பச் சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்ட மேகா, பிராமணர்களுக்குரிய வழிபாடுகளையும் சடங்குகளையும் உதாசீனம் செய்துவிட்டார். ஆயினும், ஸாடே காயத்ரீ மந்திரத்தை உபதேசம் செய்து அவரை ஸன்மார்க்கத்தில் பிரவேசம் செய்யவைத்தார்.
128 மேகா ஸாடேவிடம் பணி செய்ய ஆரம்பித்தபின், பரஸ்பர மரியாதை வளர்ந்தது. இவ்விதமாக மேகா ஸாடேவைத் தம் குருவாகக் கருதி அவரிடம் பாசம் கொண்டார்.
129 ஒருநாள் சகஜமாகப் பேசிக்கொண் டிருந்தபோது, ஸாடே தம் குருவின் மஹாத்மியத்தை எடுத்துரைத்தார். சித்தத்தில் பிரேமை பொங்கிவழிய அப்பொழுது மேகாவிடம் சொன்னார்,--
130 ''பாபாவுக்கு கங்கை நீரால் அபிஷேகம் செய்யவேண்டுமென்று என் இதயத்தின் ஆழத்தில் விரும்புகிறேன். உம்மை சிர்டீக்கு அனுப்புவதன் முக்கிய காரணம் இதுவே என்றறிந்துகொள்ளும்.--
131 ''மேலும், வேறெதிலும் நாட்டமின்றி நீர் எனக்குச் செய்யும் சேவையைப் பார்க்கும்போது, நீர் ஸத்குருவிடம் போய்ச்சேரவேண்டும் என்றும் அவரிடம் பரிபூரணமான நம்பிக்கையையும் பக்தியையும் வளர்த்துக்கொள்ளவேண்டும் என்றும் நான் மனப்பூர்வமாக விரும்புகிறேன்.--
132 ''நீர் பிறவி எடுத்தது அர்த்தமுள்ளதாக ஆகும். இந்த ஜன்மத்தில் பரம மங்களங்களை அடைவீர். போங்கள், போங்கள், போய் ஸத்குருவின் பாதங்களை மனத்தாலும் வாக்காலும் காயத்தாலும் (உடலாலும்) வழிபடுங்கள்.ஃஃ
133 மேகா ஸாயீயின் ஜாதி என்னவென்று கேட்டார். உண்மையில் அது ஸாடேவுக்குத் தெரியாது. ஸாடே சொன்னார், ''அவர் மசூதியில் வசிப்பதால் அவரைச் சிலர் 'அவிந்தஃ (காது குத்தப்படாதவர் - முஸ்லீம்) என்று சொல்கிறார்கள்.
134 'அவிந்தஃ என்னும் வார்த்தை காதில் விழுந்தவுடனே மேகா மனமுடைந்துபோனார். ''ஒரு முஸ்லீமைவிட நீசமான பிராணி இவ்வுலகில் ஏதும் உண்டோ? நீசன் எப்படி ஒரு குரு ஆகமுடியும்?ஃஃ
135 ஆனால், முடியாது என்று சொன்னால் ஸாடே சினம் கொள்வார்; போகிறேன் என்று ஒத்துக்கொண்டால் நரகந்தான் கிட்டும். என்ன செய்யலாம் என்று அவரால் யோசிக்க முடியவில்லை. அவர் மனம் கவலையில் உளைந்தது.
136 பேய்க்கும் பெருங்கடலுக்கும் இடையே மாட்டிக்கொண்ட நிலைமை. அவர் மனம் அலைபாய்ந்து அமைதியிழந்தது. ஆனால், ஸாடேவோ மனப்பூர்வமாக அவரைப் போகும்படி வற்புறுத்திக்கொண் டிருந்தார். 'சரி, போய்த் தரிசனம் செய்துவிட்டு வரலாம்ஃ என்று மேகா முடிவெடுத்தார்.
137 பின்னர் மேகா சிர்டீக்கு வந்துசேர்ந்தார். முற்றத்தினுள் சென்று மசூதியின் படிகளில் ஏற ஆரம்பித்தார். பாபா தம் லீலையை ஆரம்பித்தார்õ
138 உக்கிரமான முகத்துடன் கையில் ஒரு கல்லை எடுத்துக்கொண்டே இரைச்சலி ­ட்டார், ''ஜாக்கிரதைõ படிமேல் கால் வைத்து ஏறினால் தெரியும் சேதிõ இது ஒரு யவனன் (முஸ்லீம்) வாழும் இடம்.--
139 ''ஓ, நீரோ உயர்குலத்து பிராமணன். நானோ நீசனிலும் நீசனான யவனன். உம்மேல் தீட்டு ஒட்டிக்கொண்டுவிடும். போம் வெளியே; இக்கணமே திரும்பிவிடும்õஃஃ
140 கடுமையான இவ்வார்த்தைகள் மேகாவின்மீது தணலைப்போலக் கொட்டின. பாபா பிரளயகால ருத்திரனைப்போலக் காட்சியளித்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் வெலவெலத்தனர். மேகா பயத்தால் நடுநடுங்கிப்போனார்.
141 இந்தக் கோபமென்னவோ ஒரு நடிப்புதான்; உள்ளே இதயம் தயையால் நிரம்பி வழிந்துகொண் டிருந்தது. மேகா வியப்பால் நிறைந்து செய­ழந்துபோனார். ''என் உள்ளத்தின் ஆழத்தில் இருந்த எண்ணங்களை இவர் எப்படி அறிந்தார்?--
142 ''எங்கோ இருக்கும் கேடா ஜில்லா எங்கே? வெகுதூரத்தில் இருக்கும் அஹமத் நகரம் எங்கே? என்னுடைய மனக்கோணலும் சந்தேகங்களுமே பாபாவின் கோபமாக உருவெடுத்தன போலும்õஃஃ
143 பாபா மேகாவை அடிப்பதற்கு நெருங்க, நெருங்க, மேகாவின் தைரியம் அவரைக் காலைவாரிவிட்டது. ஒவ்வொரு பாய்ச்சலுக்கும் ஓரடி பின்னுக்கு வைத்தார். கிட்ட நெருங்கத் தைரியம் இல்லாது போயிற்று.
144 இந்நிலையிலேயே, பாபாவின் மனநிலையை அறிந்துகொள்ள முயற்சி செய்துகொண்டு சிர்டீயில் சில நாள்களைத் தள்ளினார். முடிந்த அளவிற்கு ஏதோ சேவை செய்தாரே தவிர, திடமான விசுவாசம் ஏற்படவில்லை.
145 பின்னர் மேகா தம்முடைய சொந்த ஊருக்கே சென்றார். அங்கு ஜுரத்தில் படுத்து மீண்டார். இந்நிலையில் பாபாவைப்பற்றிய ஏக்கம் உள்ளிருந்து வளர்ந்தது. மறுபடியும் சிர்டீக்கே திரும்பி வந்தார்.
146 திரும்பிவந்த பிறகு மனம் சந்தோஷமடைந்தது; சிர்டீயிலேயே தங்கினார். ஸாயீ பாதங்களில் வீசுவாசம் வளர்ந்து அனன்னிய பக்தரானார். ஸாயீயைவிட்டால் வேறு தெய்வமில்லை என்னும் நிலைக்கு உயர்ந்தார்.
147 மேகா ஏற்கெனவே ஒரு சிவபக்தர். ஸாயீ பாதங்களின்மேல் ஈடுபாடு வளர, வளர ஸாயீநாதனில் சிவனைப் பார்த்தார். ஸாயீநாதனே அவருக்கு உமாநாதன் (சிவன்).
148 மேகா இரவுபகலாக ஸாயீசங்கர நாமகோஷம் செய்தார். அவருடைய புத்தி ஸாயீயில் ஒன்றிவிட்டது. கறைகளும் குறைகளும் வெளியேறி மனம் தூய்மையடைந்தது.
149 ஸாயீயைக் கண்ணுக்கெதிரே தெரியும் சங்கரராகப் பாவித்ததால், ஸாயீயின் அனன்னிய பக்தரானார். சங்கர, சங்கர, என்று எந்நேரமும் உரக்கச் சொல்­க்கொண் டிருந்தார். வேறெந்த தெய்வத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை.
150 ஸாயீயே அவர் தினமும் பூஜை செய்யும் தெய்வம். ஸாயீயே கிரிஜாரமணன் (சிவன்). இந்த மனோபாவம் வேரூன்றிய பிறகு மேகா சதாசர்வ காலமும் சந்தோஷமாக இருந்தார்.
151 சிவனுக்கு வில்வத்தின்மீது பிரியம்; ஆனால், சிர்டீயில் வில்வமரம் இல்லை. வில்வ தளங்களை சிவனுக்கு அர்ப்பணம் செய்யவேண்டுமென்ற ஆவலைப் பூர்த்தி செய்துகொள்வதற்காகத் தினமும் இரண்டு மூன்று மைல்கள் நடப்பார் மேகா.
152 இரண்டு மூன்று மைல்கள் நடப்பது என்ன பெரிய காரியம்? வில்வதளங்களைக் கொணர்ந்து சிறப்பாக சிவபூஜை செய்து திருப்தியடைய, மலையைக் கடக்கவும் அவர் தயாராக இருந்தார்.
153 வெகுதூரம் நடந்துசென்று வில்வதளங்களைக் கொணர்ந்து இதர பூஜை சாமான்களையும் சேகரித்துக்கொண்டு, கிராமத்து தேவதைகளுக்கு ஒரு குறிப்பிட்ட வரிசைக்கிரமத்தில் சாஸ்திர விதிகளின்படி பூஜை செய்வார்.
154 இது முடிந்தவுடன் மசூதிக்குச் செல்வார். பாபா அமரும் இருக்கைக்கு அன்புடன் நமஸ்காரம் செய்வார். பிறகு பாபாவின் பாதங்களைப் பிடித்துவிட்டுவிட்டு பாத தீர்த்தத்தை (பாதங்களைக் கழுவிய நீர்) முதலாக அருந்துவார்.
155 மேகாவைப்பற்றி, கேட்பவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய காதைகள் பல உண்டு. இக் காதைகள் ஸாயீயின் எங்கும் நிறைந்த சக்தியையும் ஸாயீ கிராம தேவதைகள் மீது வைத்திருந்த பக்தியையும் எடுத்துக்காட்டும்.
156 மேகா உயிர் வாழ்ந்தவரை தினமும் மதிய ஆரதியை அவரே செய்தார். கிராம தேவதைகளின் பூஜையை முத­ல் முடித்துக்கொண்டு, கடைசியாக மசூதிக்குச் செல்வார்.
157 இதுவே அவருடைய தினப்படி நடவடிக்கையாக இருந்தது. ஒருநாள் இந்தக் கிரமம் தவறிவிட்டது. எவ்வளவு முயன்றும் கண்டோபா1 பூஜையை அன்று செய்ய முடியவில்லை.
158 அன்றும் நித்திய கிரமப்படி பூஜை செய்ய விரும்பினார். ஆனால், எவ்வளவு பிரயத்தனம் செய்தபோதிலும் கோயி­ன் கதவுகளைத் திறக்க முடியவில்லை. ஆகவே, பூஜையைச் செய்ய முடியாமல் விட்டுவிட்டு மசூதிக்கு ஆரதியுடன் வந்தார்.
159 பாபா உடனே விளம்பினார், ''இன்று உம்முடைய நித்தியபூஜையில் ஒரு துண்டு விழுந்திருக்கிறது. மற்ற தெய்வங்களுக்குப் பூஜை செய்துவிட்டீர்; ஆனால், ஒரு தெய்வம் இன்னும் பூஜை செய்யப்படாமலேயே இருக்கிறது.--
160 ''போம், போய் அந்தப் பூஜையைச் செய்துவிட்டுத் திரும்பிவாரும்.ஃஃ மேகா பதிலுரைத்தார், ''பாபா, கதவு மூடியிருந்தது. நான் திறக்க முயன்றேன்; முடியவில்லை. ஆகவே நான் பூஜை செய்யாமலேயே இங்கு வரவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.ஃஃ
161 பாபா கூறினார், ''போம், மறுபடியும் சென்று பாரும். கதவை இப்பொழுது திறக்க முடியும்.ஃஃ மேகா ஒருகணமும் தாமதியாது கோயிலுக்கு ஓடினார். பாபா கூறிய வார்த்தைகள் உண்மையென்பதை அனுபவத்தில் கண்டார்.
162 மேகா கண்டோபா பூஜையை முடித்தார். தம்முடைய மனக்குறையும் தீர்ந்தது கண்டார். இதன் பின்னரே பாபா மேகாவைத் தமக்குப் பூஜை செய்ய அனுமதித்தார்.
163 மேகா பயபக்தியுடன் சந்தனம், புஷ்பம் ஆகிய பூஜை திரவியங்களால் அஷ்டோபசார பூஜை செய்தார். மாலையையும் பழங்களையும், தம் சக்திக்கேற்றவாறு தக்ஷிணையையும் ஸமர்ப்பித்தார்.
=============================================================
'ஸ்ரீஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியம் தொடர்கிறது………………………
=================================================================
எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீபக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியம் தொடர்கிறது……………………………………….
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.
பாபாவின் சங்கல்ப்ப படி தொடர்ந்து வருவார்
Please see below for English version. Tq
CHAPTER 28
*
*
*
============================================
Burhanpore Lady
Now let us turn to another sparrow (Baba's word meaning devotee). One lady in Burhanpore saw in her dream Sai Baba coming to her door and begging khichadi (rice cooked with dal and salt) for His meals. On awakening she saw no body at her door. However, she was pleased with the vision and told it to all including her husband. He was employed in the Postal Department and when he was transferred to Akola, both husband and wife, who were devout, decided to go to Shirdi. Then on a suitable day they left for Shirdi and after visiting Gomati Tirth on the way, reached Shirdi and stayed there for two months. Every day they went to the Masjid, performed Baba's worship and passed their time happily. The couple came to Shirdi to offer Khichadi as naivedya but for the first 14 days, somehow or other, it could not be offered. The lady did not like this delay.
Then on the 15th day she came at noon to the Masjid with her khichadi. There she found that Baba and others were already sitting for meals, and that the curtain was down. Nobody dared enter in when the curtain was let down, but the lady could not wait. She threw up the curtain with her hand and entered. Strange to say that Baba seemed that day, hungry for khichadi and wanted that thing first and when the lady came in with the dish, Baba was delighted, and began to eat morsel after morsel of khichadi. On seeing the earnestness of Baba in this respect, everybody was wonderstruck and those, who heard the story of khichadi, were convinced about His extraordinary love for His devotees.
Megha
Now let us go to the third and bigger 'sparrow'. Megha of Viramgaon was a simple and illiterate Brahmin cook of Rao Bahadur H. V. Sathe. He was a devotee of Shiva and always chanted the five syllabled mantra 'Namah Shivaya'. He did not know the Sandhya nor its chief mantra, the Gayatri. Rao Bahadur Sathe was interested in him, got him taught the Sandhya and the Gayatri. Sathe told him that Sai Baba of Shirdi was the embodied form of the God Shiva and made him start for Shirdi. At the Broach Railway station he learnt that Sai Baba was a Moslem and his simple and orthodox mind was much perturbed at the prospect of bowing to a Moslem, and he prayed to his master not to send him there. His master, however, insisted on his going there and gave him a letter of introduction to his (Sathe's) father-in-law, Ganesh Domodar, alias Dada Kelkar at Shirdi, to introduce him to Sai Baba. When he reached Shirdi and went to the Masjid,
Baba was very indignant and would not allow him to enter. "Kick out the rascal" roared Baba, and then said to Megha - "You are a high caste Brahmin and I am a low Moslem; you will lose your caste by coming here. So get away." Hearing these words Megha began to tremble. He was wondering as to how Baba had come to know about what was passing in his mind.
He stayed there for some days, serving Baba in his own way, but was not convinced. Then he went home. After that he went to Tryambak (Nasik District) and stayed there for a year and a half. Then again he returned to Shirdi. This time, at the intercession of Dada Kelkar, he was allowed to enter the Masjid and stay in Shirdi. Sai Baba's help to Megha was not through any oral instruction. He worked upon Megha internally (mentally) with the result that he was considerably changed and benefited. Then Megha began to look upon Sai Baba as an incarnation of Shiva. In order to worship Shiva, bela leaves are required and Megha used to go miles and miles every day to bring them and worship his Shiva (Baba).
His practice was to worship all the Gods in the village and then come to the Masjid and after saluting Baba's gadi (asan) he worshipped Baba and after doing some service (shampooing His Legs) drank the washings (Tirth) of Baba's Feet. Once it so happened that he came to the Masjid without worshipping God Khandoba, as the door of the temple was closed. Baba did not accept his worship and sent him again, saying that the door was open then. Megha went, found the door open, worshipped the Deity, and then returned to Baba as usual.
===============================================
To be continued............
==============================================================
Bow to Shri Sai -- Peace be to all
To be continued............
எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீ பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ ஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியம் தொடர்கிறது.....................................
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.
சாயி ஸ்த்சரித்திரம் தொடர்கிறது………..............................................பாபாவின் சங்கல்ப்ப படி தொடர்ந்து வருவார்
/
/
/
/
/
/
“ஓம் சாயி நமோ நமோ
ஸ்ரீ சாயி நமோ நமோ
ஜெய ஜெய சாயி நமோ நமோ
சற்குரு சாயி நமோ நமோ”.
"I say things here. There they happen."
=
=
OM SAI NAMO NAMAH
SHREE SAI NAMO NAMAH
JAI JAI SAI NAMO NAMAH
SADGURU SAI NAMO NAMAH
Sai Samarth...........Shardha Saburi
Bow to Shri Sai - Peace to be all
************************************************************
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே
=
=
=
''ஜெய் ஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு
ஸாயீநாத் மஹராஜ் கீ ஜெய்"
ஓம் நமோ பகவதே சாயிநாதாய
அமிர்த வாக்ய வர்ஷாய
சகல லோக பூஜிதாய
சர்வ தோஷ நிவாரணாய
ஷிரிடி வாசாய
சாயிநாதாயதே நமஹ
சற்குரு நாதா சரணம்! சரணம்!
சச்சிதா னந்தா சரணம்! சரணம்!
அற்புத ஒளியே சரணம்! சரணம்!
அன்பே அருளே சரணம்! சரணம்!
நித்திய சாயி சரணம்! சரணம்!
நிர்மல வடிவே சரணம்! சரணம்!
பொற்பதம் பணிந்தோம் சரணம்! சரணம்!
புண்ணிய ரூபா சரணம்! சரணம்!
Twameva mata cha pita twameva
Twameva bandhushcha sakha twameva
Twameva vidya dravinam twameva
Twameva sarvam mama deva deva
Twameva sarvam Sai deva deva....
You alone are my mother and my father,
You alone are my friend and my beloved companion,
You alone are my knowledge and my wealth,
O Supreme Lord, you alone are everything for me.
Sometimes Sai removes things from our lives for our own protection. Trust in Him.
Just because you can't see the air, doesn't mean you stop breathing. Just because you can't see Sai doesn't mean you stop believing.
Sai has perfect timing; never early, never late. It takes a little patience and it takes a lot of faith but it's worth the wait.
Think positive and positive things will happen.................
Saying sorry doesn't solve the problem. It's what you do after that truly counts.
======================================================================================================================================அன்புடன் சகோதரன் விக்னசாயி.

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...