Followers

Wednesday, April 29, 2020

"எது நடந்ததோ அது நன்றாக நடந்தது. எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது. எது நடக்க வேண்டுமோ அதுவும் நன்றாகவே நடக்கும்' என்ற பகவத் கீதையின் தத்துவப்படி மனப் பக்குவம் அடை.................
குரு தெளிவிற்கு அதிபதி. ஆக, துவர்ப்பும் இனிப்பும் உள்ள நெல்லிலிக்கனிபோல உங்களுக்கு எல்லாம் தெரியலாம். ஆனால், எதைப் பின்பற்ற வேண்டுமென்ற தெளி வில்லாத நிலையில் தவிக்கலாம். அங்கேதான் உங்களுடைய பூர்வபுண்ணியம் உங்களை இயக்கிவைக்கும்.
ஆதி என்ற பெண்ணும், பகவன் என்ற ஆணும் விரும்பித் திருமணம் செய்துகொண்டு தேசாந்திரம் போகிறார் கள். அப்போது தங்களுக்கு குழந்தை பிறந்தால் அந்த இடத்திலேயே விட்டுச்செல்ல வேண்டுமென்று ஒப்பந்தம் செய்கிறார்கள். ஏழு குழந்தைகள் பிறந்ததாக வரலாறு. அவ்வையார், வள்ளுவர், பாரி, அதியமான் என்று சொல்லப்படுவார்கள். வள்ளுவர் "ஆதிபகவன் முதற்றே உலகு' என்று பாடியதாக வும், அவ்வையாரைவிட்டுப் பிரிய மனமில்லாத ஆதிக்கு,
""இட்டமுடன் என் தலையில் எழுதிவிட்ட சிவனும் செத்துவிட்டானோ முட்டமுட்ட அவனுக்கே அன்றி உனக்கேன் பாரம் அன்னாய்!''
என்று உணர்த்திவிட்டு வாய்மூடிக்கொண்டதாம் (பிறந்த குழந்தை யாக இருந்தபோது!)
இதைத்தான் வள்ளுவர் "ஊழிற்பெருவலி யாவுள மற் றொன்று சூழினும் தான் முந்துறும்' என்று உணர்த்தினார். ஆக, எல்லாவற்றுக்கும் காரணம் ஊழ்வினை. பகவத்கீதையில் கண்ணனும் இதைத்தான் உணர்த்தினார்...............
"எது நடந்ததோ அது நன்றாக நடந்தது. எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது. எது நடக்க வேண்டுமோ அதுவும் நன்றாகவே நடக்கும்' என்ற பகவத் கீதையின் தத்துவப்படி மனப் பக்குவம் அடை.................
================================
உங்களைத் தெளிவடையச் செய்வது குரு உபதேசம். "கு"- என்றால் இருட்டு. "ரு'- என்றால் போக்குவது. ஒருவருடைய அறியாமை என்னும் இருட்டைப் போக்குவது குருதான். சனகாதி முனிவர்களின் சந்தேகங்களை சின்முத்திரைகாட்டி தெளிவுபடுத்தியவர் தட்சிணாமூர்த்தி.
அதனால்தான் அவரை குரு தட்சிணாமூர்த்தி என்று வணங்கினார்கள்.
"தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்- தெளிவு குருவின் திருநாமம் செப்பல்- தெளிவு குரு திருமேனி காணல்- தெளிவு குருவின் திருவுருவைச் சிந்தித்தல்தானே!'
என்பது திருமூலர் வாக்கு.
================================
courtesyNakkiran/balajothidam/subramaniam ayya.
"எது நடந்ததோ அது நன்றாக நடந்தது. எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது. எது நடக்க வேண்டுமோ அதுவும் நன்றாகவே நடக்கும்' என்ற பகவத் கீதையின் தத்துவப்படி மனப் பக்குவம் அடை.................
நான் சுமக்கிறேன் 🙏
துன்பம் வந்தபோதும் கூட என் மீது நம்பிக்கை குறைவுபடாமல் இருந்தால் அவர்களுக்கு என் உதவி கண்டிப்பாக கிடைக்கும்.உங்கள் கர்மத்தை உங்களுக்கு பதில் நான் சுமக்கிறேன்.
---ஷிரிடி சாய்பாபா
எல்லோரும் இன்புற்றிருக்க
நினைப்பதுவே அல்லாமல்
வேறொன்றும் நான்னறியேன் பராபரமே!
🌹ஓம் ஸ்ரீ சாயிராம்... 🌹
ஸ்ரீ சாயின் திருவடி சரணம்
அனைவருக்கும் இந்த நாள் மகிழ்ச்சியுடன் இனிதாகட்டும்!!இனிய காலை மதிய/ மாலை இரவு வாழ்த்துக்கள்...சகோ 🌹
🌹Om Sri Saranam... 🌹Om Sri Sai Baba Saranam... 🌹
🌹OM Sri Sairam... 🌹
==========================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...