Followers

Wednesday, March 4, 2020

Image may contain: 1 person, text and food



“Offerings of wealth, grain, clothes are not the only form of dakshina. To obey the Guru is also dakshina...”
பொன்,பொருளை சமர்பிப்பது மட்டுமல்ல குரு தட்சணை ; பொறுமை, பணிவு என்னும் இரண்டு பைசாக்களையும் நவவித பக்திகளில் ஒன்றையேனும் பரிசுத்த மனத்துடன் கடைப்பிடித்து ஆத்ம நிவேதனம் செய்தலே உண்மையான குரு தட்சணையாகும்.
அதிஉயர் பக்திமார்க்க…….. நவவித பக்தி
பக்தியின் வெளிபாடுகளைப்பற்றி இவ்விதம் அறிவீராக.-
முதலாவதாக, சிரவணம் (சாயியின் பெருமையை கேட்டல்),
இரண்டாவதாக, கீர்த்தனம்(சாயியின் லீலைகளைப் பாடுதல்),
மூன்றாவதாக, ஸ்மரணம்(சாயியை நினைத்தால்),
நான்காவதாக, பாதசேவனம்(பாதங்களைக் கழுவுதல்-பிடித்து விடுதல்),
ஐந்தாவதாக, அர்ச்சனம்(மலர்களால் அர்ச்சனை செய்து பூஜித்தல்),
ஆறாவதாக, வந்தனம் (பணிதல்-நமஸ்காரம் செய்தல்-வணங்குதல்),
ஏழாவதாக, தாஸ்யம் (அடிமைபோல் சாயிக்கு சேவை செய்தல்),
எட்டாவதாக, ஸக்யம் (சாயியிடம் தோழமை கொள்ளுதல்),
ஒன்பதாவதாக,ஆத்மநிவேதனம் (தன்னையே சாயிக்கு அர்ப்பணம் செய்தல்).
நவவித பக்திகளில் ஏதாவது ஒன்றையாவது பூரணமான பா(BHA)வத்துடன் கடைப்பிடித்தால்,வேறெதையும் வேண்டாத ஸ்ரீ சாயிபாபா,பக்தனுக்கு தம்மை வெளிப்படுத்துவார்.
ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
Let the mind meditate ceaselessly on His form and the tongue chant His name...
''யார் ஒருவர் தன் இருகரங்களையும் குவித்து ஸாயீ, ஸாயீ என்று எந்நேரமும் ஜபம் செய்துகொண் டிருப்பீர்களானால், நான் ஏழு கடல்களுக்கப்பாலும் வந்து உங்களைக் காப்பாற்றுவேன. எவர்கள் என்னுடைய இவ்வார்த்தைகளில் விசுவாசம் வைக்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக நல்வாழ்வு பெறுவார்கள்.

. இதன் விளைவாக, அவனுக்கு என்மேல் உண்டான பக்தி பெருகுகிறது.-- என்னுடைய புகழைப் பாடுபவனும், சரித்திரத்தைச் சுவையாக விவரித்துச் சொல்பவனும், அவர்களுக்கு ''சாமா; - நான் ஒன்று சொல்லுகின்றேன், கேள்.. யார் என்னுடைய நாமத்தை அன்புடனும் நம்பிக்கையுடனும் ஜபிக்கிறானோ, அவனுக்கு நான், விரும்பியதையெல்லாம் அளிக்கிறேன் முன்னும் பின்னும் மற்றும் அவர்களைச் சுற்றிய எல்லா இடங்களிலும் எப்பொழுதும் என்னையே காண்கின்றனர்.-- என்னைப்பற்றியே நினைத்துக்கொண்டும் சிந்தித்துக்கொண்டும் இருப்பவனை நான் கடைத்தேற்றுகிறேன் என்பது என் ஸத்தியப் பிரமாணம்.

===========================================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...