Followers

Tuesday, March 3, 2020


Image may contain: 1 person, text



Do not fear. I am Myself there and guarding you and your family.
அஞ்சாதே உன்னையும் உன் குடும்பத்தையும் காக்க நான் அங்கு இருப்பேன்....
பயம் வேண்டாம், யார் என்னுடைய நாமத்தை அன்புடனும் நம்பிக்கையுடனும் ஜபிக்கிறானோ, அவனுக்கு நான், விரும்பியதையெல்லாம் அளிக்கிறேன் முன்னும் பின்னும் மற்றும் அவர்களைச் சுற்றிய எல்லா இடங்களிலும் எப்பொழுதும் எங்கும் என்னையே காண்கின்றனர்.-- என்னைப்பற்றியே நினைத்துக்கொண்டும் சிந்தித்துக்கொண்டும் இருப்பவனை நான் காத்து கடைத்தேற்றுகிறேன் என்பது என் ஸத்தியப் பிரமாணம்.” —
உழைப்பால் உயருங்கள்!...அருள்வாக்கு..
எல்லோர்க்கும் அன்பான வணக்கம்....................
* உழைப்பால் வாழ்வில் உயருங்கள். சோம்பலுக்கு இடம் தராதீர்கள். மகிழ்வுடன் பாடிக் கொண்டு பணி செய்யுங்கள்.
* கோவில் வழிபாட்டால் ஊர் ஒற்றுமை பலம் பெறும். வீட்டு வழிபாட்டால் குடும்ப ஒற்றுமை பலமடையும்.
* தியானத்தின் சக்தியை எளிதாக எடை போடாதீர்கள்.
* நம்பிக்கை இருக்குமிடத்தில் வெற்றி உண்டாகும். விடாமுயற்சியே நம்பிக்கையின் அடிப்படை இலக்கணம்.
- பாரதியார்
பாபாவின்_அருளமுதம்..................
நூற்றுக்கணக்கான பிரார்த்தனைகளும்,லட்சக்கணக்கான கண்ணீர்த்துளிகளும் வேண்டியதில்லை...ஒரே ஓர் உண்மையான பிரார்த்தனை,சில அன்பான கண்ணீர்த்துளிகள் இருந்தாலே போதும் உன்னுடைய எல்லா கவலைகளில் இருந்தும் விடுவிப்பான் இந்த சாயி.இந்த மசூதியில் அமர்ந்து பொய் பேச மாட்டான் இந்த சாயி.நம்பு.நம்பிக்கையுடன் சரணடைந்தால் உனக்கு அனைத்திலும் ஜெயமே!
OM SAI RAM
அன்புறவுகள்... எல்லோர்க்கும்.... என்றென்றும் அன்புடன்.! இனிய காலை மதிய மாலை இரவு வணக்கம்! உரித்தாகுகஓம் நமோ சச்சிதானந்த
சாய்நாதாய நமக.

==============================================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...