எந்த எந்த மார்க்கத்தை எவரெவர் கடைப்பிடிக்க விரும்பினார்களோ, அந்த அந்த மார்க்கத்தில் அவரவரை பாபா வழி நடத்தினார். எல்லாருடைய ஆன்மீகத் தகுதிகளும் பாபாவுக்குத் தெரிந்திருந்தது. அதற்கேற்றவாறு அவரவருக்கு ஸாயீயிடமிருந்து ஆன்மீக லாபம் கிடைத்தது.
வருபவன் விசுவாசமுள்ளவனாக இருக்கலாம்; குற்றம் கண்டுபிடிப்பவனாகவும் இருக்கலாம். ஸாயீ இருவருக்கும் கிருபை செய்வதில் சமத்துவம் கண்டார். கருணை மிகுந்த ஸாயீமாதா ஒருவரை அணைத்தும் மற்றவரைப் புறக்கணித்தும் செயல்பட்டதில்லை. 'ஸாயீயின் திறமையை நான் எவ்வாறு விவரிப்பேன்? இவையனைத்திற்கும் காரணகர்த்தா அவரேயானாலும், வெளிப்பார்வைக்கு எதிலுமே சம்பந்தப்படாதவர்போல் காட்சியளிக்கிறார். இதைவிடப் பெரிய அதிசயம் என்ன இருக்கமுடியும்?--
'ஒருவர் அவருக்கு வணக்கம் செலுத்தலாம், செலுத்தாமலும் இருக்கலாம்; தக்ஷிணை கொடுக்கலாம், கொடுக்காமலும் போகலாம். ஆயினும், தயாசாகரமும் ஆனந்த ஊற்றுமாகிய ஸாயீ எவரையும் வெறுத்து ஒதுக்குவதில்லை.-- 'பூஜை செய்யப்படுவதால் அவர் ஆனந்தமடைவதில்லை, அவமதிப்பு செய்யப்படுவதால் துக்கப்படுவதுமில்லை. எங்கே ஆனந்தத்திற்கு இடமில்லையோ, அங்கே துக்கம் என்பது ஏது? மனத்தில் எந்த எண்ணத்துடன் ஒருவர் வந்தாலும், ஸாயீ அவருக்கு தரிசனம் தந்து அவருடைய பக்தியை வென்றுவிடுகிறார். இது ஸாயீயின் அற்புதமான சக்தி.
வருபவன் விசுவாசமுள்ளவனாக இருக்கலாம்; குற்றம் கண்டுபிடிப்பவனாகவும் இருக்கலாம். ஸாயீ இருவருக்கும் கிருபை செய்வதில் சமத்துவம் கண்டார். கருணை மிகுந்த ஸாயீமாதா ஒருவரை அணைத்தும் மற்றவரைப் புறக்கணித்தும் செயல்பட்டதில்லை. 'ஸாயீயின் திறமையை நான் எவ்வாறு விவரிப்பேன்? இவையனைத்திற்கும் காரணகர்த்தா அவரேயானாலும், வெளிப்பார்வைக்கு எதிலுமே சம்பந்தப்படாதவர்போல் காட்சியளிக்கிறார். இதைவிடப் பெரிய அதிசயம் என்ன இருக்கமுடியும்?--
'ஒருவர் அவருக்கு வணக்கம் செலுத்தலாம், செலுத்தாமலும் இருக்கலாம்; தக்ஷிணை கொடுக்கலாம், கொடுக்காமலும் போகலாம். ஆயினும், தயாசாகரமும் ஆனந்த ஊற்றுமாகிய ஸாயீ எவரையும் வெறுத்து ஒதுக்குவதில்லை.-- 'பூஜை செய்யப்படுவதால் அவர் ஆனந்தமடைவதில்லை, அவமதிப்பு செய்யப்படுவதால் துக்கப்படுவதுமில்லை. எங்கே ஆனந்தத்திற்கு இடமில்லையோ, அங்கே துக்கம் என்பது ஏது? மனத்தில் எந்த எண்ணத்துடன் ஒருவர் வந்தாலும், ஸாயீ அவருக்கு தரிசனம் தந்து அவருடைய பக்தியை வென்றுவிடுகிறார். இது ஸாயீயின் அற்புதமான சக்தி.
தொடர்ந்து படியுங்கள் மேலும் சாயி அற்புதம் தொடர்கிறது..............
Please see below for English version. Tq
எலோர்க்கும் அன்பு நன்றியும் வணக்கமும்....
சாயியின் சரித்திரம் பாக்கியம் அளிப்பது. அவருடைய நித்திய நடவடிக்கைகள் பாக்கியம் அளிப்பவை. அவருடைய செய்கைகளோ அதியற்புதமானவை; புரிந்துகொள்ளமுடியாதவை; கிரமமாக விவரிக்க முடியாதவை. அவருடைய உண்மையான வாழ்க்கைச் சரித்திரம் ஆழங்காணமுடியாதது;...................................... ஸாயீயின் லீலைகள் எண்ணத்திற்கும் செயல்/ விளைவு சிந்தனைக்கும் அப்பாற்பட்டவை. அவரைத் தவிர வேறு யாரால் அவற்றை விவரிக்க முடியும்? நான் ஒரு கருவி மாத்திரமே அல்லேனோ? அவரே என்னைப் பேசவைப்பார். எல்லாருக்கும் எப்போதும் க்ஷேமம் உண்டாகட்டும்
''ஆத்மார்த்தமாகவும் இதயபூர்வமாகவும் என்னிடம் அன்பு கொண்டவன் என் கதைகளைக் கேட்டு இயல்பாகவே சந்தோஷமடைவான்.--Baba.......................................................................................................
."Bend the body, mend the senses and end the mind - this is the way to Immortality." - Baba.
Spreading the life and teachings of Shri Shirdi Saibaba.......
Sometimes Sai removes things from our lives for our own protection. Trust in Him.
Just because you can't see the air, doesn't mean you stop breathing. Just because you can't see Sai doesn't mean you stop believing.
Sai has perfect timing; never early, never late. It takes a little patience and it takes a lot of faith but it's worth the wait. .......... Think positive and positive things will happen.................
வேண்டத் தக்கது அறிவோய் நீ,
வேண்ட முழுவதும் தருவோய் நீ,
வேண்டும் அயன், மால்க்கு அரியோய் நீ
வேண்டி என்னைப் பணிகொண்டாய்!
வேண்டி நீ யாது அருள் செய்தாய்,
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில்,
அதுவும் உன் தன் விருப்பு அன்றே!.....
Who so ever puts his feet on SHIRDI soil, his sufferings would come to an end, the wretched and miserable would rise into plenty of joy and happiness, as soon as they climb the steps of DWARAKAMAYEE.
ஸாயீயை சரணடைந்து அவருடைய பாதங்களை நமஸ்கரிக்கிறேன். அவர் உறையும் எல்லா ஜீவராசிகளுக்கும் வணக்கம் செலுத்துகிறேன். கதை கேட்பவர்கள் ஸாயீக்கு நிவேதனம் செய்யப்படும் இப் பிரஸங்கத்திற்குத் தங்களுடைய மேலான கவனத்தை தானமாக அளிக்குமாறு வேண்டுகிறேன்.
எல்லாருக்கும் எப்போதும் க்ஷேமம் உண்டாகட்டும்
எல்லாருக்கும் எப்போதும் க்ஷேமம் உண்டாகட்டும்
ஸ்ரீ ஸாயீயின் பொற்கமலப் பாதங்களில் சரணமடைகின்றேன். கதை கேட்பவர்களுக்கு நமஸ்காரம் செய்கிறேன். ஸம்ஸார ஸாகரத்தை எளிதாகக் கடக்கும் திறமையைப் பெறும் வகையாக இக் கதைகளை பயபக்தியுடன் கவனமாகச் செவிமடுக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் எப்பொழுது சொல்லப்படுகிறதோ அப்பொழுது கேளுங்கள். அது மங்களத்தை அளிக்கும். கருணாமூர்த்தியான ஸாயீயே எல்லாச் செயல்களுக்கும் காரணகர்த்தா..
Baba comforted us saying, "Alla Accha Karega (God will do good)."
ஒம் குரு வாழ்க, குரு நன்றாய் வாழ்க, குருவே துணை...
''ஜெய் ஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு
ஸாயீநாத் மஹராஜ் கீ ஜெய்"
ஸாயீநாத் மஹராஜ் கீ ஜெய்"
இனிய சுபகுருதின வணக்கம் அன்புறவுகளே!!!..
ஸ்ரீ சிர்டீ சாயி ஸ்த்சரித்திரம் தொடர்கிறது……….
Please see below for English version. Tq
வாசகர்களுக்கு என் பிரார்த்தனை இதுவே, ''வாருங்கள், வந்து இந்த ஆனந்தத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள். சான்றோர்களுடன் சேர்ந்துகொண்டு சதா ஸாயீயின் புனிதமான கதைகளைக் கேட்பவர் மஹாபாக்கியசாலிகள்...சாயி ஸ்த்சரித்திரம் அத்தியாயம் 35
தமிழில் தொடர்கிறது……….
*
*
*
================================================================
தமிழில் தொடர்கிறது……….
*
*
*
================================================================
மேலும், அவருடைய விருப்பத்திற்கு மாறாகவும் ஏற்கெனவே செய்திருந்த திடமான தீர்மானத்திற்கு நேரெதிராகவும் தக்ஷிணை கொடுக்கவேண்டுமென்று மோகங்கொண்டு தக்ஷிணை கொடுத்த காதையைக் கேளுங்கள்.
63 டக்கர் தரம்ஸீ ஜேடாபாயீ என்னும் பெயர்கொண்ட, பம்பாய் நகரத்தில் வாழ்ந்த, சட்ட சம்பந்தமான ஆலோசகர் (நர்ப்ண்ஸ்ரீண்ற்ர்ழ்) ஒருவருக்குப் பூர்வபுண்ணிய பலத்தால் ஸாயீதரிசனம் செய்யவேண்டுமென்ற ஆவல் ஏற்பட்டது.
64 அவர் காகா மஹாஜனியின் யஜமானர். ஒருவருக்கொருவர் நல்ல பரிச்சயம் இருந்தது. ஆகவே அவர் நேரிடையாக சிர்டீக்குச் சென்று பாபாவைப் பிரத்யக்ஷமாகப் பேட்டி காணவேண்டுமென்று நினைத்தார்.
65 காகா மஹாஜனி, டக்கர்ஜீயின் நிறுவனத்தில் நிர்வாக குமாஸ்தாவாக உத்தியோகம் செய்துவந்தார். தம்முடைய விடுப்பு அனைத்தையும் அடிக்கடி சிர்டீ சென்று வருவதற்காகவே உபயோகித்தார்.
66 சிர்டீக்குப் போனால் நேரத்தோடு திரும்பி வருவாரா என்னõ எட்டு நாள்கள் அங்கே தங்கிவிட்டு வருவார். கேட்டால், பாபா அனுமதியளிக்கவில்லை என்று காரணம் சொல்லுவார்õ ''இதுவும் ஒரு வேலை செய்யும் ரீதியா?ஃஃ என்று நினைத்து யஜமானர் எரிச்சலடைவது வழக்கம்.
67 ''இதென்ன ஞானிகளின் நடைமுறைõ இந்த அனாவசியமான தடபுடலெல்லாம் எனக்குப் பிடிக்கவில்லைõஃஃ இந்த ஸாயீ விவகாரத்தை ஒரு மாதிரியாக முடிவுகட்டவேண்டுமென்று தீர்மானித்து, ஹோப்பண்டிகை விடுமுறையின்போது சிர்டீக்குக் கிளம்பினார்.
68 'தான்ஃ என்ற அஹங்காரத்தாலும் பணத்திமிராலும் நிரம்பிய அந்த சேட், ''ஞானிகளும் நம்மைப்போன்ற மனிதர்கள்தாமே; அவர்களை நாம் எதற்காக வணங்கவேண்டும்?ஃஃ என நினைத்தார்.
69 மெத்தப்படித்த பண்டிதர்களையும் சாஸ்திர விற்பன்னர்களையும் மண்டியிடவைத்த ஸாயீயின் ஆன்மீக, தார்மீக சக்தியின் முன்பாகக் கேவலம் தரம்ஸீயின் தீர்மானம் எவ்வளவு நேரம் தாக்குப்பிடிக்கப் போகிறது?
70 ஆயினும் அவர் நினைத்தார், ''குருட்டு நம்பிக்கை நன்றன்று; ஆகவே நானே உண்மையைக் கண்டுபிடித்துக்கொள்கிறேன்.ஃஃ இவ்வாறு மனத்துள் தீர்மானம் செய்துகொண்டு அவர் சிர்டீக்குப் போக ஆயத்தங்கள் செய்தார்.
71 ஏற்கெனவே விவரிக்கப்பட்ட சிநேகிதர் செய்ததைப் போன்று இவரும் காகா மஹாஜனியுடன் சிர்டீக்குக் கிளம்பினார். அவரிடம் சொன்னார்,
72 ''நீர் சிர்டீக்குப் போனால் அங்கேயே முகாம் போட்டுவிடுகிறீர்; ஆனால், இம்முறை அது சரிப்படாது. நீர் என்னுடன் திரும்பிவிட வேண்டும். இது நிச்சயம் என்று அறிவீராக.ஃஃ
73 காகா பதில் கூறினார், ''இதோ பாரும், அது என்னுடைய கைகளில் இல்லை.ஃஃ இதைக் கேட்ட தரம்ஸீ, துணைக்கு இன்னொருவரையும் அழைத்துக்கொண்டார்.
74 ''ஒரு வேளை காகா திரும்பிவர முடியாமற்போகலாம். துணையின்றிப் பயணம் செய்யக்கூடாது.ஃஃ சேட் இவ்வாறு நினைத்து இன்னொருவரையும் அழைத்துக் கொண்டார். மூன்று பேராக சிர்டீக்குக் கிளம்பினர்.
75 இம்மாதிரியாக எத்தனையோ விதமான மனிதர்கள் உண்டு. அவர்களையெல்லாம் தம்மிடம் இழுத்துவந்து அவர்களுடைய சந்தேகங்களையும் தவறான நம்பிக்கைகளையும் பாபா நிவிர்த்தி செய்தார்.
76 அவர்கள் வீடு திரும்பித் தங்களுடைய அனுபவங்களை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வர்; அல்லது மற்றவரின் உதவி கொண்டு அதை எழுதியும் வைப்பர். இதெல்லாம் மக்களை நல்ல பாதையில் கொண்டுவருவதற்காகவே.
77 தாத்பர்யம் (ஆழ்ந்த கருத்து) என்னவென்றால், இவ்வாறு சென்றவர்கள் தரிசன சுகத்தால் திருப்தியடைவார்கள். கிளம்பும்போது மனப்போக்கு எப்படி இருந்திருந்தாலும் சரி, கடைசியில் பரமானந்தம் அடைந்தனர்.
78 'விஷய ஆர்வத்தாலும் உட்புகுந்து நேரில் பார்க்க விரும்பிய ஆவலாலும் அவர்களாகவே சிர்டீக்குச் சென்றார்கள்ஃ என்று நாம் சொல்லலாமே தவிர, உண்மை என்னவோ வேறுவிதமாக இருந்தது. அவர்கள் பாபாவின் காரியசாதனைக்காகவே சிர்டீக்குச் சென்றனர்.
79 அவர்களுக்கு அந்த உள்ளுணர்வைக் கொடுத்தவரே பாபாதான். அதன் பிறகே அவர்களால் வீட்டை விட்டுக் காலடி எடுத்துவைக்க முடிந்தது. அவர்களுடைய இயல்பான மனோபாவத்தை மேலும் கிளறிவிட்டு, அவர்களை ஆன்மீகப் பாதையில் திருப்பினார் பாபாõ
80 பாபாவின் திட்டங்களை யாரால் அறிய முடியும்? அறிய முயன்றவர்கள் அவதிக்குள்ளானார்கள்õ ஆனால், நீங்கள் அஹங்காரத்தை விடுத்து, அவருடைய காலடியில் புரண்டால், அளவுகடந்த ஆனந்தம் அனுபவிப்பீர்கள்.
81 தேவர்கள், இருபிறப்பாளர்கள் (அந்தணர்), குரு, இவர்களைக் காணச் செல்லும்போது வெறுங்கையுடன் போகக்கூடாது. ஆகவே, காகா, போகும் வழியில் இரண்டு சேர் திராட்சை (சுமார் 560 கிராம்) வாங்கிக்கொண்டார்.
82 திராட்சையில் விதையற்ற ஜாதியும் உண்டு. ஆனால், விதையுள்ள ஜாதிதான் அப்பொழுது கிடைத்தது. காகா அதையே வாங்கிக்கொண்டார்.
83 வழியெல்லாம் சந்தோஷமாகப் பேசிக்கொண்டே மூவர் கோஷ்டி சிர்டீ போய்ச் சேர்ந்தது. மூவரும் ஒன்றாக பாபா தரிசனத்திற்காக மசூதிக்குச் சென்றனர்.
84 பாபாஸாஹேப் தர்கட் என்ற பக்தரும் அங்கு உட்கார்ந்திருந்தார். விஷய ஆர்வம் கொண்ட சேட் தரம்ஸீ அவரை என்ன விசாரித்தார் என்பதைக் கேளுங்கள்.
85 ''இங்கு என்ன கண்டீர், திரும்பத் திரும்ப வருவதற்கு?ஃஃ தர்கட் பதிலுரைத்தார், ''நாங்கள் தரிசனம் செய்ய வருகிறோம்.ஃஃ சேட் குறுக்குச்சால் ஓட்டினார், ''ஆனால், இங்கு அற்புதங்கள் நிகழ்கின்றன என்று நான் கேள்விப்பட்டேனே?ஃஃ
86 ஆகவே தர்கட் சொன்னார், ''என்னுடைய பா(ஆஏஅ)வனை அதுவன்று. மனத்தில் ஆழமாக எதை விரும்பியவாறு வருகிறோமோ அந்தக் காரியம் ஸித்தியாகிறது.ஃஃ
87 காகா பாபாவின் பாதங்களில் விழுந்து திராட்சையைக் கைகளில் சமர்ப்பித்தார். மக்கள் ஏற்கெனவே கூடியிருந்தனர். பாபா திராட்சையை பக்தர்களுக்கு விநியோகம் செய்ய ஆரம்பித்தார்.
88 மற்றவர்களுக்கு அளித்ததைப் போலவே தரம்ஸீ சேட்டுக்கும் சில திராட்சைகளைக் கொடுத்தார். ஆனால், தரம்ஸீக்கு இந்த ஜாதி பிடிக்காது; விதையற்ற ஜாதியே பிடிக்கும்.
89 விதையுள்ள திராட்சையே அவருக்குப் பிடிக்காது. பிள்ளையார் சுழி போடும்போதே பிரச்சினை எழுந்துவிட்டதுõ அவற்றை எப்படித் தின்பது என்பதே அவருடைய பிரச்சினை. வேண்டா என்று ஒதுக்குவதற்கும் மனோதிடம் இல்லை.
90 திராட்சையை நன்கு கழுவாமல் தின்னக்கூடாது என்று குடும்ப டாக்டர் தடைவிதித்திருந்தார்; தாமே கழுவுவதும் முறையான செயல் அன்று. நானாவிதமான கற்பனைகள் மனத்தில் உதித்தன.
91 ஆனாலும், வந்தது வரட்டுமென்று திராட்சைகளை வாயில் போட்டுக்கொண்டார். விதைகளைப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டார்õ ஒரு சாது வாழும் இடத்தில் எச்சில் விதைகளை எறிந்து அவ்விடத்தின் புனிதத்தைக் களங்கப்படுத்த அவர் விரும்பவில்லை.
92 சேட் தமக்குள்ளேயே பேசிக்கொண்டார், ''இவர் ஒரு சாது. ஆயினும் எனக்கு விதையுள்ள திராட்சை பிடிக்காதென்பது இவருக்குத் தெரியவில்லை. ஏன் எனக்கு இவற்றை பலவந்தமாகக் கொடுக்கவேண்டும்?ஃஃ
93 இந்த எண்ணம் அவருடைய மனத்தில் ஓடிக்கொண் டிருந்தபோதே, பாபா அவருக்கு இன்னும் சில திராட்சைகளைக் கொடுத்தார். அவையும் விதையுள்ள ஜாதி என்றறிந்த சேட் அவற்றை வாயில் போட்டுக்கொள்ளாமல் கையிலேயே வைத்திருந்தார்.
94 அவருக்கு விதையுள்ள திராட்சை பிடிக்காதுதான்; ஆயினும், அவை பாபாவின் கையால் கொடுக்கப்பட்டவை. தரம்ஸீ தர்மசங்கடத்தில் மாட்டிக்கொண்டார்; என்ன செய்வதென்றே தெரியவில்லை.
95 அவருக்கு திராட்சைகளை வாயில் போட்டுக்கொள்வதற்கு விருப்பம் இல்லை. ஆகவே, அவற்றைக் கைக்குள் அடக்கிக்கொண்டார். திடீரென்று பாபா சொன்னார், ''அவற்றைத் தின்றுவிடும்.ஃஃ சேட்ஜீ இந்த ஆணையை நிறைவேற்றினார்.
96 ''அவற்றைத் தின்றுவிடும்ஃஃ என்று பாபா சொல் முடிக்குமுன்பே சேட் அவற்றைத் தம் வாயில் இட்டுக்கொண்டார். அவையனைத்தும் விதையற்றவையாக இருந்தனõ சேட் ஆச்சரியத்தில் மூழ்கினார்.
97 திராட்சைகளில் விதை இல்லாமற்போனது கண்டு, தரம்ஸீ வியப்பிலாழ்ந்து தமக்குத்தாமே சொல்க்கொண்டார்.
98 ''என்னுடைய மனத்தில் இருந்ததை அறிந்து, இந்த திராட்சைகள் விதையுள்ளனவாகவும் கழுவப்படாதனவாகவும் இருந்தபோதிலும், எனக்கு ஸாயீ கொடுத்தவை விதையற்றனவாகவும் நன்மையளிப்பனவாகவும் இருந்தன.ஃஃ
99 அவர் ஆச்சரியத்தால் செயழந்து போனார். பழைய சந்தேகங்களும் எதையும் உரித்துப் பார்க்கும் ஆர்வமும் எங்கோ ஓடி மறைந்தன. அவருடைய அகங்காரம் வீழ்ந்தது; மனத்தில் ஞானியின்மேல் பிரீதி பொங்கியது.
100 ஏற்கெனவே செய்துகொண்ட சங்கற்பங்கள் விலகின. ஸாயீபிரேமை இதயத்தில் பொங்கியது. சிர்டீ செல்லவேண்டுமென்ற ஆவலும், செய்துகொண்ட தீர்மானமும் நல்லதற்காகவே என்று நினைத்தார்.
101 பாபாஸாஹேப் தர்கடும் அப்பொழுது ஸாயீ பாபாவின் அருகில் அமர்ந்திருந்தார். அவருக்கும் சில திராட்சைகள் கிடைத்திருந்தன.
102 ஆகவே தரம்ஸீ அவரைக் கேட்டார், ''உங்களுடைய திராட்சைகள் எப்படி இருந்தன?ஃஃ தர்கட் ''விதையுள்ளவைஃஃ என்று சொன்னபோது சேட் அதிசயத்தால் வியந்துபோனார்.
103 பாபா ஒரு ஞானி என்னும் அவருடைய நம்பிக்கை உறுதியாகியது. மேலும் திடப்படுத்திக்கொள்வதற்காக ஒரு கற்பனை அவருடைய மனத்தில் உதித்தது. அவர் தமக்குள்ளேயே சொல்க்கொண்டார். ''நீர் அசல் சாதுவாக இருப்பின் அடுத்ததாக திராட்சை பெறும் முறை காகாவினுடையதாக இருக்கவேண்டும்.ஃஃ
104 பாபா பல பேர்களுக்கு திராட்சை விநியோகம் செய்துகொண் டிருந்தார். ஆனால், மேற்சொன்ன எண்ணம் சேட்டின் மனத்தில் உதித்தவுடனே, அடுத்த சுற்றைக் காகாவிடமிருந்து ஆரம்பித்தார். சேட் அற்புதம் கண்டார்õ
105 சாது என்பதற்குண்டான இந்த அறிகுறிகளும் பிறர் மனம் அறியும் சக்தியும் தரம்ஸீ சேட்டுக்கு பாபாவை சாதுவாக ஏற்றுக்கொள்ளப் போதுமான முகாந்தரங்களாக அமைந்தன.
106 மாதவராவும் அப்பொழுது அங்கு இருந்தார். விளக்கம் சொல்வது போன்று அவர் பாபாவிடம் சொன்னார், ''காகாவின் யஜமானர் ஒரு சேட் உண்டே -- அவர் இவர்தான்õஃஃ
107 ''யார்? யாரென்று சொன்னாய்? இவர் எப்படிக் காகாவின் யஜமானராக இருக்க முடியும்? காகாவின் யஜமானர் வேறு யாரோ ஆயிற்றேõஃஃ என்று பாபா உடனே பதிலளித்தார். இந்த வார்த்தைகளைக் கேட்ட காகாவின் இதயம் பூரித்தது.
108 இதில் விநோதம் என்னவென்றால், பாபா துனீயருகே நின்றுகொண்டிருந்த ஆப்பா என்று பெயர்கொண்ட ஒரு சமையற்காரரை இந்தக் கேயில் இழுத்துவிட்டதுதான்.
109 பாபா சொன்னார், ''இந்த சேட் இவ்வளவு தூரம் வந்திருப்பதென்னவோ உண்மைதான். இந்த சிரமத்தை இவர் எனக்காகப் படவில்லை. ஆப்பாவின்மேல் கொண்ட பிரேமையால்தான் இவர் சிர்டீக்கு வந்திருக்கிறார்.ஃஃ
110 பேச்சு இந்த ரீதியில் நடந்ததுõ தரம்ஸீ தாம் நிச்சயம் செய்துகொண்டுவந்ததை எல்லாம் விசிறியடித்துவிட்டு பாபாவின் பாதங்களில் தம்மிச்சையாகவே விழுந்தார். பிறகு இருவரும் வாடாவிற்குத் திரும்பினர்.
111 மதிய ஆரதி நடந்து முடிந்தது. இருவரும் வீடு திரும்பும் பயணத்திற்குத் தயார் செய்ய ஆரம்பித்தனர். பாபாவிடம் அனுமதி கேட்கும் நேரம் நெருங்கியது. இருவரும் மசூதிக்குச் சென்றனர்.
112 தரம்ஸீ அப்பொழுது காகாவிடம் சொன்னார், ''நான் வீடு திரும்ப அனுமதி வேண்டப் போவதில்லை. அனுமதி உமக்குத்தான் வேண்டும். ஆகவே நீர்தான் அனுமதி கேட்கவேண்டும்.ஃஃ இதைக் கேள்வியுற்ற மாதவராவ் சொன்னார்,--
113 ''காகா வீடு திரும்புவது என்பது நிச்சயமில்லை. ஒரு முழுவாரம் கழிந்தாலொழிய அவருக்கு அனுமதி கிடைக்காது. நீங்களே அனுமதி கேட்பதுதான் நல்லதுõஃஃ
114 ஆகவே, மூவரும் மசூதிக்குச் சென்று அமர்ந்தபோது, அவர்களின் சார்பாக மாதவராவ் அனுமதி கேட்டார். ஆனால், பாபா ஒரு கதை சொல்ல ஆரம்பித்தார். அமைதியான மனத்துடன் கவனமாகக் கேளுங்கள்.
115 ''சஞ்சல புத்தியுடைய மனிதன் ஒருவன் இருந்தான். அவனுடைய இல்லத்தில் தனமும் தானியங்களும் மற்றப் பொருள்களும் ஸம்ருத்தியாக (ஏராளமாக) நிரம்பிக் கிடந்தன. உடலும் மனத்திலும் வியாதியோ வெக்கையோ ஏதும் இல்லை. ஆயினும் அவன் உபாதிகளைத் தேடினான்.--
116 ''அவசியமில்லாமல் தலைமேல் பாரத்தை ஏற்றிக்கொண்டு இங்குமங்கும் அலைந்தான். அவன் மனத்தில் அமைதியில்லை. ஒரு நேரம் பாரத்தை இறக்கிக் கீழே வைப்பான்; உடனே அதைத் தூக்கிக்கொள்வான். அவனால் மனத்தைச் சலனமில்லாமல் செய்ய முடியவில்லை.--
117 ''அவனுடைய அவஸ்தையைப் பார்த்து என் இதயம் கனிந்தது. நான் அவனிடம் சொன்னேன், 'உன்னுடைய மனத்தை நிலைபெறச்செய்து ஏதாவதொன்றில் நிறுத்து; அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்õ--
118 '''நீ அனாவசியமாக அலைகிறாய். உன்னுடைய மனத்தை ஏதாவது ஒன்றில் நிலைபெறச்செய்.ஃஃஃ இந்த வார்த்தைகள் தரம்ஸீயைத் தேள்போல் கொட்டின. அது தமக்காகச் சொல்லப்பட்ட அறிவுரையே என்று புரிந்துகொண்டார்.
119 எத்தனை வைபவங்கள் இருந்தபோதிலும், எக் காரணமும் இன்றிக் கவலையால் பீடிக்கப்பட்டவராகத் தமக்குத் தாமே இன்னல் தேடிக்கொண்டார்.
120 செல்வமும் சமூக கௌரவமும் ஏராளமாக இருந்தும் மனத்தில் அமைதி இல்லை. துக்கங்களையும் இன்னல்களையும் கற்பனை செய்துகொண்டு கவலையில் மூழ்கிவிடுவார்.
121 இந்தக் கதை ஸாயீயின் திருவாய்மொழியாக வெளிவந்தவுடன் சேட்ஜீ மிகுந்த வியப்படைந்தார். இதுதான் என்னுடைய மனோநிலை, என்றெண்ணி மிகுந்த பயபக்தியுடன் இக் கதையைக் கேட்டார்.
122 காகாவுக்கு அவ்வளவு சீக்கிரம் அனுமதி கிடைக்குமென்பது நடக்காத கதை. அதுவும் பிரயாசை இல்லாமலேயே கிடைத்ததுபற்றி தரம்ஸீ சந்தோஷமடைந்தார்.
123 காகா தம்முடனேயே திரும்பிவிடவேண்டுமென்று அவர் விரும்பினார். பாபா இருவருக்கும் அனுமதியளித்து அவருடைய விருப்பத்தை நிறைவேற்றினார்.
124 இதுவும் சேட்ஜீயின் மனத்தில் இன்னுமொரு பணயம். ஆனால், பாபாவுக்கு இது எப்படித் தெரிந்தது? அவர் ஒரு சாதுவென்பதற்கு இது ஒரு முக்கியமான லக்ஷணம் (சிறப்பியல்பு). இதை தரம்ஸீ இப்பொழுது முழுமனத்துடன் ஒப்புக்கொண்டார்.
125 சந்தேகங்கள், அனைத்தும் நிவிர்த்தியாகிவிட்டன. ஸாயீ ஒரு சாதுவென்பது மிகத் தெளிவாகிவிட்டது. அவருடைய மனத்தின் ஓட்டம் எப்படியிருந்ததோ அதற்கேற்றவாறே பாபா அளித்த அனுபவமும் இருந்தது.
126 எந்த எந்த மார்க்கத்தை எவரெவர் கடைப்பிடிக்க விரும்பினார்களோ, அந்த அந்த மார்க்கத்தில் அவரவரை பாபா வழி நடத்தினார். எல்லாருடைய ஆன்மீகத் தகுதிகளும் பாபாவுக்குத் தெரிந்திருந்தது. அதற்கேற்றவாறு அவரவருக்கு ஸாயீயிடமிருந்து ஆன்மீக லாபம் கிடைத்தது.
127 வருபவன் விசுவாசமுள்ளவனாக இருக்கலாம்; குற்றம் கண்டுபிடிப்பவனாகவும் இருக்கலாம். ஸாயீ இருவருக்கும் கிருபை செய்வதில் சமத்துவம் கண்டார். கருணை மிகுந்த ஸாயீமாதா ஒருவரை அணைத்தும் மற்றவரைப் புறக்கணித்தும் செயல்பட்டதில்லை.
128 ஆகவே அவர்கள் இருவரும் புறப்படும் சமயத்தில் பாபா காகாவைப் பதினைந்து ரூபாய் தக்ஷிணை கேட்டார். மேலும் அவரிடம் சொன்னார்,--
129 ''எனக்கு யார் ஒரு ரூபாய் தக்ஷிணையாகக் கொடுக்கிறாரோ, அவருக்கு நான் பத்து மடங்காகத் திருப்பிக் கொடுக்கவேண்டும்.--
130 ''நான் யாரிடமாவது எப்பொழுதாவது இனாம் வாங்கிக்கொள்வேனா என்ன? நான் எல்லாரிடமும் தக்ஷிணை வாங்கிக்கொள்வதில்லை. பக்கீர் யாரைச் சுட்டிக்காட்டுகிறாரோ, அவரிடம்தான் தக்ஷிணை என்ற பேச்சே எழுகிறது.--
131 ''பக்கீரும் யாருக்குக் கடன்பட்டிருக்கிறாரோ, அவரைத்தான் கேட்பார். அதுமாதிரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தக்ஷிணை கொடுப்பவர், பின்னர் அறுவடை செய்ய இப்பொழுது விதை விதைக்கிறார்.--
132 ''அறவழியில் நடந்து தான தருமங்களைச் செய்யும் பணக்காரனுக்கே செல்வம் நலன் பயக்கிறது. ஏனெனில் இவ்விரண்டும்தான் உண்மையான ஞானத்தை அளிக்கின்றன.--
133 ''கஷ்டப்பட்டு சம்பாதித்ததை இஷ்டம்போல் போகங்களுக்காகவும் வீண் செலவுகளாகவும் நாசம் செய்து, தருமம் செய்வதில் நாட்டமில்லாது வாழ்பவர்கள் ஏராளம், ஏராளம்õ--
134 ''கஷ்டப்பட்டுப் பைசா பைசாவாக அற்புதமான செல்வம் சேர்த்து, அதைப் புலனின்ப நாட்டவழியில் செலவழிக்காத மனிதனே சந்தோஷமாக வாழ்கிறான்.ஃஃ
135 ''கொடுக்காதவன் உயர்வதில்லைஃஃ என்னும் மறைமொழியை எல்லாரும் அறிவர். முன்பு கொடுத்தது பாபாவின் எதிரில் நிற்கிறது; ஆகவே அவர் தக்ஷிணை கேட்கிறார்.
136 மஹாவிஷ்ணு ராமாவதாரத்தில் பொன்னாலான கணக்கற்ற பெண்ணுருவப் பிரதிமைகளை தானமாகக் கொடுத்தார். அதன் பலனைக் கிருஷ்ணாவதாரத்தில் பதினாறாயிரம் மடங்காக அனுபவித்தார்.
137 பக்தியும் ஞானமும் பற்றற்ற மனப்பான்மையும் இல்லாதவன் தீனன். அவனை முதல் பற்றற்ற மனப்பான்மையில் நிலைநிறுத்திய பிறகே, ஞானத்தையும் பக்தியையும் அளிக்க வேண்டும்.
138 பாபா மக்களை தக்ஷிணை கொடுக்கவைத்தது, சிறிதளவாவது பற்றற்ற மனப்பான்மையை வளர்ப்பதற்காகவே. பின்னர் அவர்களை பக்திப் பாதையில் செலுத்தி ஞானபண்டிதர்களாகவும் ஆக்குகிறார்.
139 ''நாம் ஏற்றுக்கொள்வதைப் போலப் பத்துமடங்காகத் திருப்பிக் கொடுத்துக் கொஞ்சங்கொஞ்சமாக ஞானமார்க்கத்தில் திருப்புவதைத் தவிர வேறென்ன நம்மால் செய்யமுடியும்?ஃஃ (பாபா)
140 ஏற்கெனவே செய்துகொண்ட தீர்மானத்தைத் தூக்கியெறிந்துவிட்டுத் தம்மிச்சையாகவே சேட்ஜீ பாபாவின் கையில் பதினைந்து ரூபாய் தக்ஷிணை வைத்தார். அபூர்வமான செய்கைõ
141 'நான் முன்பு பிதற்றியதெல்லாம் வியர்த்தம். நான் நேராக வந்ததே நல்ல செய்கை. என்னுடைய நேரிடையான அனுபவத்தின் மூலமாக சாதுக்கள் எவ்வகையானவர்கள் என்பதை எனக்கு நானே போதித்துக்கொண்டேன். --
142 'சரியாகவும் திடமாகவும் சிந்தனை செய்யாது, இங்கு வரத் தேவையில்லை என்றும் வணக்கம் செலுத்தவேண்டா என்றும் நினைத்தேன். கடைசியில் அதை விருப்பப்பட்டே செய்தேன்õ சாதுக்களின் செயல்கள் புரிந்துகொள்ள
முடியாதவைõ--
முடியாதவைõ--
143 'எந்நேரமும் 'அல்லா மாக்ஃ என்று உச்சாரணம் செய்துகொண் டிருப்பவரால் சாதிக்க முடியாதது என்ன? ஆயினும், சாதுக்கள் செய்யும் அற்புதங்களைக் காணவே நான் விரும்பினேன்.--
144 'ஓ, என் தீர்மானம் விருதாவாகப் போய்விட்டது. என் போன்ற ஒரு மனிதருக்கு நமஸ்காரம் செய்தேன். அவர் கேட்காமலேயே தக்ஷிணையும் கொடுத்தேன்.--
145 'என்னுடைய தற்புகழ்ச்சி அனைத்தும் வீண்õ நானாகவே ஸாயீயின் பாதங்களைப் பூஜிக்கும் பா(ஆஏஅ)வத்துடன் வணங்கினேன். இதைவிடப் பெரிய அற்புதம்
உண்டோ?--
உண்டோ?--
146 'ஸாயீயின் திறமையை நான் எவ்வாறு விவரிப்பேன்? இவையனைத்திற்கும் காரணகர்த்தா அவரேயானாலும், வெளிப்பார்வைக்கு எதிலுமே சம்பந்தப்படாதவர்போல் காட்சியளிக்கிறார். இதைவிடப் பெரிய அதிசயம் என்ன இருக்கமுடியும்?--
147 'ஒருவர் அவருக்கு வணக்கம் செலுத்தலாம், செலுத்தாமலும் இருக்கலாம்; தக்ஷிணை கொடுக்கலாம், கொடுக்காமலும் போகலாம். ஆயினும், தயாசாகரமும் ஆனந்த ஊற்றுமாகிய ஸாயீ எவரையும் வெறுத்து ஒதுக்குவதில்லை.--
148 'பூஜை செய்யப்படுவதால் அவர் ஆனந்தமடைவதில்லை, அவமதிப்பு செய்யப்படுவதால் துக்கப்படுவதுமில்லை. எங்கே ஆனந்தத்திற்கு இடமில்லையோ, அங்கே துக்கம் என்பது ஏது?
149 மனத்தில் எந்த எண்ணத்துடன் ஒருவர் வந்தாலும், ஸாயீ அவருக்கு தரிசனம் தந்து அவருடைய பக்தியை வென்றுவிடுகிறார். இது ஸாயீயின் அற்புதமான சக்தி.
150 ஆகவே, ஸாயீயின் உதீ பிரசாதத்தையும் ஆசிகளையும் பெற்றுக்கொண்டு இருவரும் பம்பாய் திரும்பினர். விவாதங்கள் அனைத்தும் ஓய்ந்தன. ஸாயீயினுடைய கியாதி எப்படியிருந்தது என்றால்,--
151 சிர்டீயிருந்து புறப்படுவதற்குமுன் அவருடைய அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். ஸாயீயின் ஆக்ஞையைத் தாண்டுவது விக்கினங்களுக்கு அழைப்பு விடுவதாகும்.
152 உம்முடைய இஷ்டம்போல் சிர்டீயிருந்து திரும்பினால், வழியில் கடக்கமுடியாத இன்னல்கள் தோன்றும்; கடைசியில் வெட்கமும் அனுதாபமுந்தான் மிஞ்சும்.
153 சிர்டீயிருந்து திரும்புவதென்பது மேற்சொன்னவாறே; எங்களுடைய கதியும் அதுவே. ''நான் அழைக்காமல் எவரும் இங்கு வருவதில்லை.ஃஃ இது பாபாவின் திருவாய்மொழி.
154 ''என்னுடைய விருப்பம் இல்லாது யார் அவருடைய வாயிற்படியைத் தாண்டமுடியும்? தம்மிச்சையாகவே யார் சிர்டீக்கு தரிசனம் செய்ய வரமுடியும்?ஃஃ
155 நம்முடைய ஓட்டங்கள் அனைத்தும் கிருபாமூர்த்தியான ஸமர்த்த ஸாயீயின் ஆதீனத்தில் இருக்கின்றன. அவருடைய சித்தத்தில் கிருபை உதித்தால்தான் எவரும் தரிசனத்திற்கு வரமுடியும்.
156 சிர்டீக்குச் செல்வதற்கும் அங்கிருந்து திரும்புவதற்கும் இதுவே விதிமுறை. ஸாயீயின் மனம் மகிழாமல், திரும்பிச் செல்வதற்கு அனுமதி கிடைக்காது; உதீயும் கிடைக்காது.
157 அவரை நமஸ்காரம் செய்து அனுமதி வேண்டும்போது அவர் உதீயுடன் ஆசியும் அளிப்பதே அனுமதி கொடுப்பதற்கு ஒப்பாகும்.
=============================================================
'ஸ்ரீஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியம் தொடர்கிறது………………………
=================================================================
'ஸ்ரீஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியம் தொடர்கிறது………………………
=================================================================
எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீபக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியம் தொடர்கிறது……………………………………….
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.
பாபாவின் சங்கல்ப்ப படி தொடர்ந்து வருவார்
பாபாவின் சங்கல்ப்ப படி தொடர்ந்து வருவார்
Please see below for English version. Tq
CHAPTER 35
*
*
*
*
*
*
============================================
Kaka Mahajani's Master
Kaka Mahajani's Master
Kaka was the Manager in the firm of Thakkar Dharmasey Jethabhai, a solicitor of Bombay. Both the Master and the Manager were on intimate terms. Mr. Thakkar knew that Kaka was often going to Shirdi, staying there for some days and returning, when Baba permitted him. Out of curiosity and just to test Baba, Mr. Thakkar decided to go to Shirdi with Kaka during Shimga holidays. As Kaka's return was uncertain, he took another man with him as an associate. The three started together and Kaka bought two seers of raisins (dried grapes with seed) on the way for presentation to Baba. They reached Shirdi in due time, and went to the Masjid for darshan. Then Babasaheb Tarkhad was there, Mr. Thakkar asked him why he came there. "For darshan", Tarkhad replied. Mr. Thakkar asked if miracles took place there. Tarkhad replied that it (to see miracles) was not his attitude, but the earnest intentions of the Bhaktas were satisfied here. Then Kaka prostrated himself before Baba and offered the raisins to Him. Baba ordered them to be distributed. Mr. Thakkar got a few of them. He did not like the raisins and he was advised by his doctor not to eat them without washing and cleaning them. So he was in a fix.
He did not like to eat them, nor could he reject them. To keep up formalities, he put them into his mouth, but did not know what to do with the seeds. He could not spit them out on the floor of the Masjid, so he pocketed them against his wish. He then said in his mind that if Baba was a Saint, how could He be ignorant of his dislike for the raisins and could He force them on him. When this thought arose in his mind Baba again gave him some more raisins. He could not eat them, but held them in his hand. Then Baba asked him to eat them up. He obeyed and found, to his surprise, that they were all seedless. He wanted to see miracles and here was one. He knew that Baba read his thought; and as per his wish converted raisins (with seeds) into seedless grapes. What a wonderful power! Again to test further he asked Tarkhad, who was sitting by and who also got some raisins, "What kind of grapes you got?"
He replied "They variety with seeds." Mr. Thakkar was still more surprised to hear this. Then to confirm his growing faith Thakkar thought in his mind that if Baba was a real Saint, the raisins should be now given to Kaka first. Reading this thought also, Baba ordered that distribution should be commenced from Kaka. These proofs were sufficient for Thakkar. Then Shama introduced Mr. Thakkar as the master of Kaka, upon which Baba said, "How could he be his master? He has got a different Master altogether". Kaka appreciated this reply. Forgetting his resolve, Thakkar saluted Baba and returned to the Wada.
After the noon-Arati was over, they all went to the Masjid for taking Baba's leave for their departure. Sharma spoke for them. Baba then spoke as follows.
"There was a fickle-minded gentleman. He had health and wealth and was free from both physical and mental afflictions, but he took on him needless anxieties and burdens and wandered hither and thither, thus losing his peace of mind. Sometimes he dropped the burdens and at other times carried them again. His mind knew no steadiness. Seeing his state, I took pity on him and said, "Now please keep your faith on any one place (point) you like, why roam like this? Stick quietly to one place.
Thakkar at once came to know that, that was an exact description of himself. He wished that Kaka should also return with him but no one expected that Kaka would be allowed to leave Shirdi so soon. Baba read also this thought to his and permitted Kaka to return with his master. Thakkar got one more proof of Baba's capacity to read another's mind. Then Baba asked Kaka for Rs. 15/- as Dakshina and received it. To Kaka He said, "If I take one rupee as Dakshina from anybody I have to return it tenfold to him. I never take anything gratis. I never ask any one indiscriminately. I only ask and take from him whom the Fakir (My Guru) points out. If any one is indebted formerly to the Fakir money is received from him. The donor gives, i.e. sows his seeds, only to reap a rich harvest in future. Wealth should be the means to work out Dharma. If it is used for personal enjoyment, it is wasted. Unless you have given it before, you do not get it now. So the best way to receive is to give. The giving of Dakshina advances Vairagya (Nonattachment) and thereby Bhakti and Jnana. Give one and receive tenfold".
On hearing these words Mr. Thakkar himself gave Rs.15/- in Baba's hand, forgetting his resolve not to do so. He thought he did well in coming to Shirdi as all his doubts were solved and he learnt so much.
Baba's skill in handling such cases was unique. Though He did all those things He was totally non-attached to them. Whether anybody saluted Him or not, or whether anybody gave Him Dakshina or not, it was the same to Him. None He disrespected. He felt no pleasure because He was worshipped and no pain because He was disregarded. He transcended the pairs of opposites, viz. pleasure and pain, etc.
===============================================
To be continued............
==============================================================
To be continued............
==============================================================
Bow to Shri Sai -- Peace be to all
To be continued............
எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீ பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ ஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியம் தொடர்கிறது.....................................
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.
சாயி ஸ்த்சரித்திரம் தொடர்கிறது………..............................................பாபாவின் சங்கல்ப்ப படி தொடர்ந்து வருவார்
/
/
/
/
/
/
/
/
/
/
/
“ஓம் சாயி நமோ நமோ
ஸ்ரீ சாயி நமோ நமோ
ஜெய ஜெய சாயி நமோ நமோ
சற்குரு சாயி நமோ நமோ”.
ஸ்ரீ சாயி நமோ நமோ
ஜெய ஜெய சாயி நமோ நமோ
சற்குரு சாயி நமோ நமோ”.
"I say things here. There they happen."
=
=
OM SAI NAMO NAMAH
SHREE SAI NAMO NAMAH
JAI JAI SAI NAMO NAMAH
SADGURU SAI NAMO NAMAH
=
OM SAI NAMO NAMAH
SHREE SAI NAMO NAMAH
JAI JAI SAI NAMO NAMAH
SADGURU SAI NAMO NAMAH
Sai Samarth...........Shardha Saburi
Bow to Shri Sai - Peace to be all
************************************************************
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே
=
=
=
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே
=
=
=
''ஜெய் ஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு
ஸாயீநாத் மஹராஜ் கீ ஜெய்"
ஸாயீநாத் மஹராஜ் கீ ஜெய்"
ஓம் நமோ பகவதே சாயிநாதாய
அமிர்த வாக்ய வர்ஷாய
சகல லோக பூஜிதாய
சர்வ தோஷ நிவாரணாய
ஷிரிடி வாசாய
சாயிநாதாயதே நமஹ
அமிர்த வாக்ய வர்ஷாய
சகல லோக பூஜிதாய
சர்வ தோஷ நிவாரணாய
ஷிரிடி வாசாய
சாயிநாதாயதே நமஹ
சற்குரு நாதா சரணம்! சரணம்!
சச்சிதா னந்தா சரணம்! சரணம்!
அற்புத ஒளியே சரணம்! சரணம்!
அன்பே அருளே சரணம்! சரணம்!
நித்திய சாயி சரணம்! சரணம்!
நிர்மல வடிவே சரணம்! சரணம்!
பொற்பதம் பணிந்தோம் சரணம்! சரணம்!
புண்ணிய ரூபா சரணம்! சரணம்!
சச்சிதா னந்தா சரணம்! சரணம்!
அற்புத ஒளியே சரணம்! சரணம்!
அன்பே அருளே சரணம்! சரணம்!
நித்திய சாயி சரணம்! சரணம்!
நிர்மல வடிவே சரணம்! சரணம்!
பொற்பதம் பணிந்தோம் சரணம்! சரணம்!
புண்ணிய ரூபா சரணம்! சரணம்!
Twameva mata cha pita twameva
Twameva bandhushcha sakha twameva
Twameva vidya dravinam twameva
Twameva sarvam mama deva deva
Twameva sarvam Sai deva deva....
Twameva bandhushcha sakha twameva
Twameva vidya dravinam twameva
Twameva sarvam mama deva deva
Twameva sarvam Sai deva deva....
You alone are my mother and my father,
You alone are my friend and my beloved companion,
You alone are my knowledge and my wealth,
O Supreme Lord, you alone are everything for me.
You alone are my friend and my beloved companion,
You alone are my knowledge and my wealth,
O Supreme Lord, you alone are everything for me.
Sometimes Sai removes things from our lives for our own protection. Trust in Him.
Just because you can't see the air, doesn't mean you stop breathing. Just because you can't see Sai doesn't mean you stop believing.
Sai has perfect timing; never early, never late. It takes a little patience and it takes a lot of faith but it's worth the wait.
Think positive and positive things will happen.................
Saying sorry doesn't solve the problem. It's what you do after that truly counts.
=============================================================
மூலப்பதிவாளர்களுக்கு / சாயி சமஸ்தானத்திற்க்கு என்றென்றும் சாயின் அருள் மழை பொழியட்டும்.
மூலப்பதிவாளர்களுக்கு / சாயி சமஸ்தானத்திற்க்கு என்றென்றும் சாயின் அருள் மழை பொழியட்டும்.
பல கோடி நன்றிகள் ஐயா / அம்மணி.
=========================================================================
மீண்டும் பிறப்பு உண்டேல்
உனை என்றும் மறவாமை வேண்டும்
மீண்டும் பிறப்பு உண்டேல்
உனை என்றும் மறவாமை வேண்டும்
என்றும் சாயியின் அடிமை.........
அன்புடன் சகோதரன் விக்னசாயி.
அன்புடன் சகோதரன் விக்னசாயி.
==================================
''ஜெய் ஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு
ஸாயீநாத் மஹராஜ் கீ ஜெய்"
''ஜெய் ஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு
ஸாயீநாத் மஹராஜ் கீ ஜெய்"
==================================
No comments:
Post a Comment