Followers

Friday, March 27, 2020


இட்லி, சாம்பார், முட்டை, பழரசம்: கொரோனா நோயாளிகளுக்கு உணவு............

latest tamil news

சென்னை: கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு என்னென்ன உணவு வழங்கப்படுகிறது என்பது குறித்து தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. மதுரையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களும், அறிகுறியுடனும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. உடலில் , நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் வகையிலான உணவை வழங்கும் வேண்டும் என்ற ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுரைப்படி உணவு தயாரித்து வழங்கப்படுகிறது.


latest tamil news


 இது தொடர்பாக ஊட்டச்சத்து நிபுணர் கூறுகையில்,காலை 7 மணி: இஞ்சி, தோலுடன் கூடிய எலுமிச்சையை வெந்நீரில் கொதிக்க வைத்து கொடுக்கப்படுகிறது

காலை 8.30 மணி: இரண்டு இட்லி, சாம்பார், வெங்காய சட்னி, சம்பா ரவை கோதுமை உப்மா, 2 வேகவைத்த முட்டை, பால், பழரசம்
காலை 11 மணி: சாத்துக்குடி ஜூஸ், இஞ்சி, தோலுடன் கூடிய எலுமிச்சை கொதிக்க வைத்த நீரில் சிறிது உப்பை சேர்த்தும் கொடுக்கப்படுகிறது.

பகல் 1 மணி: இரண்டு சப்பாத்தி, புதினா சாதம் 1 கப், வேகவைத்த காய்கறிகள், 1 கப் கீரை, பெப்பர் ரசம், உடைத்த கடலை 1 கப்
மாலை 3 மணி: மிளகுடன் மஞ்சள் கலந்து காய்ச்சிய சுடு தீண்ணீர்
மாலை 4 மணி: பருப்பு வகைகளில் மூக்கு கடடை சுண்டல் ஒரு கப்
இரவு 7 மணி: 2 சப்பாத்தி, வெங்காய சட்னி, இட்லி அல்லது சம்பா ரவை கோதுமை உப்மா ஒரு முட்டை ஆகியவை கொடுக்கப்படுகிறது.

டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் அனைவருக்கும் முட்டை, பழரசம் உள்ளிட்ட நோய் எதிர்ப்பு சக்தி மிக்க உணவு பொருட்கள் தொடர்ந்து 3 வேளையும் வழங்கப்பட்டு வருகறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

courtesy; தினமலர் செய்தி
=========================================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...