ஓம் ஸ்ரீ சாயி ப்ரபன்ன அர்தி ஹராய நமஹ |
தஞ்சமடைந்தவர்களின் துன்பங்களை மாய்ப்பவருக்கு நமஸ்காரம்.
My humble salutation to Him who destroys the pain and distress of those who surrender to Him.
Spreading the life and teachings of Shri Shirdi Saibaba.......
இக் கதாமிருதம் சிரத்தையுடனும் பொறுமையுடனும் மரியாதையுடனும் கேட்கப்பட்டால், கேட்பவர்கள் பக்திப்பிரேமையை அனுபவிப்பர்; எல்லாப் பேறுகளையும் பெறுவர். ........என்பது திண்ணம்....
Baba comforted us saying, "Alla Accha Karega (God will do good)."
ஒம் குரு வாழ்க, குரு நன்றாய் வாழ்க, குருவே துணை...
''ஜெய் ஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு ஸாயீநாத் மஹராஜ் கீ ஜெய்"
இனிய குருதின வணக்கம் அன்புறவுகளே!!!..
ஸ்ரீ சிர்டீ சாயி ஸ்த்சரித்திரம் தொடர்கிறது……….
ஸ்ரீ சிர்டீ ஸாயீ அஷ்டோத்தர நாமாவளி விரிவுரை தொடர்கிறது....................................................................
ஸ்ரீ சிர்டீ ஸாயீ அஷ்டோத்தர நாமாவளி விரிவுரை தொடர்கிறது....................................................................
Please see below for English version. Tq
ஸ்ரீ சிர்டீ ஸாயீ அஷ்டோத்தர நாமாவளி விரிவுரை தொடர்கிறது....................................................................
========================================
101. ஓம் ஸ்ரீ சாயி ப்ரபன்ன அர்தி ஹராய நமஹ |
101. ஓம் ஸ்ரீ சாயி ப்ரபன்ன அர்தி ஹராய நமஹ |
தஞ்சமடைந்தவர்களின் துன்பங்களை மாய்ப்பவருக்கு நமஸ்காரம்.
ப்ரபன்ன = Surrender அர்தி = Pain
OM PRAPANNARTI HARAAYA NAMAH
ॐ प्रपत्रार्तिहराय नमः
My humble salutation to Him who destroys the pain and distress of those who surrender to Him.
==========================================
வாசகர்களுக்கு என் பிரார்த்தனை இதுவே, ''வாருங்கள், வந்து இந்த ஆனந்தத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள். சான்றோர்களுடன் சேர்ந்துகொண்டு சதா ஸாயீயின் புனிதமான கதைகளைக் கேட்பவர் மஹாபாக்கியசாலிகள்...சாயி ஸ்த்சரித்திரம் அத்தியாயம் 17 தொடர்கிறது……….
*
*
*
================================================================
*
*
*
================================================================
அத்தியாயம் - 17
17. பிரம்ம ஞான உபதேசம் (பகுதி 2)
ஒம் ஸ்ரீ விநாயகனே போற்றிõ ஸ்ரீ ஸரஸ்வதியே போற்றிõ
ஸ்ரீ குருமஹராஜனே போற்றிõ குலதேவதைக்கும் ஸ்ரீ ஸீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீஸாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.
ஸ்ரீ குருமஹராஜனே போற்றிõ குலதேவதைக்கும் ஸ்ரீ ஸீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீஸாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.
1 இந்த அத்தியாயத்தில் சிரேயஸ் (ஆன்மீக ஈடுபாடு) மற்றும் பிரேயஸ் (உலகியல் ஈடுபாடு) இவற்றின் லக்ஷணங்கள் விவரிக்கப்படும் என்று கடந்த அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டது. இப்பொழுது அதுபற்றி கவனமாகக் கேளுங்கள்.
2 ஒளியும் அந்தகாரமும் அன்னியோன்னியமாக சம்பந்தப்பட்டிருப்பதுபோல் தோன்றினாலும் அவை ஒன்றுக்கொன்று எதிர்மறையானவை. அவ்வாறே ஆன்மீக ஈடுபாடும் உலகியல் ஈடுபாடும்.
3 எவருடைய மனம் உலகியல் ஈடுபாட்டின் பின்னால் ஓடுகிறதோ, அவர் தம்முடைய சுயநலத்தாலேயே வீழ்ந்துவிட சபிக்கப்பட்டவர். ஆன்மீக ஈடுபாடு விவேகரூபமானது; உலகியல் ஈடுபாடு விவேகரூபமற்றது.
4 ஆன்மீக ஈடுபாட்டின் இலட்சியம் சுத்த ஞானம்; உலகியல் ஈடுபாடு அளிப்பது முழுமையான அஞ்ஞானம். ஞானமுள்ளவர்கள் உலகியல் விவகாரங்களை நாடுவதில்லை; அஞ்ஞானிகள் ஆன்மீக விவகாரங்களை நாடுவதில்லை.
5 பெண்ணாசையும் பொன்னாசையும் இருக்கும்வரை, புலன்கள் இன்பநாட்டத்தில்தான் உழலும். விவேகமும் வைராக்கியமும் எய்தும்வரை, உலகியல் ஈடுபாடுகளின்மீதுதான் பிரியம் செலுத்தப்படும்.
6 ஆன்மீக ஈடுபாட்டையும் உலகியல் ஈடுபாட்டையும் கலப்பது பாலையும் தண்ணீரையும் கலப்பது போலாகும். இந்தக் கலவையிருந்து மானஸஸரோவர் ஏரியின் அன்னங்கள் பாலைப் பிரித்து அருந்துவது போலவே,--
7 தீரமும் சிறந்த அறிவும் விவேகமும் நிறைந்த பாக்கியசாகள் ஆன்மீக ஈடுபாட்டில் ஒட்டிக்கொள்வர்; உலகியல் ஈடுபாட்டிற்கு முகம் திருப்பிவிடுவர்.
8 இந்த மந்தபுத்திக்காரர்களைப் பாருங்கள்õ உலகியல் ஈடுபாட்டிலேயே மூழ்கிப்போய், புலனின்பம், புத்திரன், தனம், ஆடுமாடுகள், கௌரவம் ஆகியவற்றையே தேடுகிறார்கள்; அவற்றையே அடைகிறார்கள்.
9 சுதந்திரமான புருஷன் தனக்கு ஆன்மீகம் தேவையா, உலகியல் தேவையா என்று அவை இரண்டையும் அலசி, ஆராய்ந்து, அவ்விரண்டிருந்து தனக்கேற்றதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.
10 இரண்டையும் சீர்தூக்கிப் பார்த்து, ஒன்றைத் தேர்ந்தெடுப்பதென்பது கடினமான செயல். மந்தபுத்திரக்காரனைப் புலனின்பங்கள் வென்றுவிடுவதால், உலகியல் ஈடுபாடே அவனை ஆங்கனம் (தழுவுதல்) செய்துகொள்கிறது.
11 தண்ணீர் கலந்த பால் பாலை மட்டும் பிரித்தருந்தும் அன்னத்தைப்போல உலகியல் ஈடுபாட்டை விலக்கி, ஆன்மீக ஈடுபாட்டை வரவேற்பதிலேயே மனித வாழ்க்கையின் உயர்ந்த லட்சியம் பொதிந்திருக்கிறது.
12 ஆன்மீக ஈடுபாடு, உலகியல் ஈடுபாடு, இரண்டுமே மனிதனின் சக்திக்கு உட்பட்டவையேயாயினும், மந்தபுத்தி படைத்த விவேகமற்ற மனிதன் இரண்டிற்குமிடையே உள்ள வித்தியாசத்தைக் கண்டறியும் சக்தியை இழந்துவிடுகிறான்.
13 வாழ்க்கையின் சிறப்பு எங்கிருக்கிறது என்பதை ஒருவன் முதலாவதாக நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அந்த மார்க்கத்தில் தோன்றும் தடைகளை வென்று, வெற்றிபெற முடியும்.
14 இங்கேதான் மனிதன் சக்திமிகுந்ததும் உறுதிபடைத்ததுமான முயற்சியை எடுக்க வேண்டிய அவசியத்தை எதிர்கொள்கிறான். ஆகவே, மனத்தில் உறுதியான தீர்மானத்துடன் போராட்டத்தை நடத்தி ஆன்மீக ஈடுபாட்டை அடையவேண்டும்.
15 வாழ்க்கைச் சக்கரத்தின் சுழற்சி புரிந்துகொள்ளமுடியாததுõ அது இரவுபகலாகச் சுழன்றுகொண்டே மூவகை1 இன்னல்களையும் மனிதனுக்கு அளித்துக் கொண்டிருக்கிறது. இது தவிர்க்கமுடியாதது.
16 அபரிமிதமான இன்னல்களை அனுபவித்துத் தொல்லைப்பட்டு வருந்தி, இவ்வின்னல்களிருந்து சுலபமாகவும் சௌக்கியமாகவும் விடுபடும் வழி ஏதாவது இருக்கிறதா என்று மனிதன் சுற்றுமுற்றும் பார்க்கிறான்.
17 காலச்சக்கரத்தின் சுழற்சி பொறுக்கமுடியாத நிலையை அடையும்போது, ''இந்தச் சக்கரத்தை நிறுத்துவது எப்படி? இதற்கு ஏதாவது வழி இருக்கிறதா?ஃஃ என்னும் கேள்விகளுக்கு பதில் காண முயற்சி செய்கிறான்.
18 ஏதோ பாக்கியத்தால் இம்மாதிரி எண்ணங்கள் புத்தியில் தோன்றுவது, மனிதப் பிறவி ஏற்பட்டதன் நற்பயனை அடைய எடுக்கப்போகும் முயற்சிகளின் ஆரம்பமாக அமைகிறது. இதன் பிறகு, ஸாதகன் தன்னுடைய நன்மை கருதி லட்சியத்தை அடைவதற்கான வழிமுறைகளைக் கையாளுகிறான்.
19 அஞ்ஞானம் அல்லது மாயைக்கு ஆரம்பம் என்பதே கிடையாது. கிளிஞ்சல் வெள்ளியும் கானல் நீரில் தண்ணீரும் தெரிவதுபோல், மாயை பயனற்ற ஏமாற்றுக் காட்சிகளையே அளிக்கிறது. ஒன்றை வேறொன்றாகத் தெரிந்துகொள்ளும் இம் மாபெரும் தடங்கலைப் பெயர்த்தெறிய வேண்டும்.
20 கனவில் ஆலங்கட்டிமழை பொற்காசுகளாகப் பொழிகிறதுõ தேவைப்படும்போது உபயோகப்படும் என்று நினைத்து ஒருவர் பெருமுயற்சியெடுத்து அவற்றை நிறையச் சேகரிக்கலாம். ஆனால், விழித்தெழுந்தவுடனே எல்லாம் எங்கோ போய்விடுகிறது.
21 ஏற்கெனவே அனுபவித்த அல்லது அனுபவிக்காத புலனின்பங்களை நாடுவது, எதிர்பார்ப்பது, ஏங்குவது, வேண்டுமென்று விரும்புவது-இவையனைத்தும் தடங்கல்களே. ஆகவே அவற்றை முதல் ஒழிக்கவும்.
22 எதை மிகப் பிரகாசமான சூரிய வெளிச்சத்திலும் பார்க்க முடியாதோ, எதில் ஆராய்ந்தபின் புத்தி, உட்புகமுடியாமல் திரும்பிவிடுகிறதோ, எங்கு வேதங்களும் உபநிஷதங்களும் ஒரு காலைக்கூட வைத்து ஊன்றமுடியாமல் தடுமாறுகின்றனவோ, அதை குரு தம்முடைய கையால் சுட்டிக்காட்டுகிறார்.
23 ஞானம் பெறுவதையும் நற்கேள்வியையும் தியானத்தையும் ஸமாதி நிலையையும் அடையவிடாமல் கண நேரத்தில் கெடுத்துவிடும் காமமும் குரோதமும் மனத்தின் வியாதிகள்.
24 கற்பூரமும் தீயும் அருகே கொண்டுவரப்படும்போது ஒன்றையொன்று முட்டி அப்பால் தள்ளிவிடுமா? இரண்டும் சந்தித்த கணமே கற்பூரம் தீயுடன் ஒன்றாகிவிடுகிறது.
25 விதிக்கப்பட்ட, விதிக்கப்படாத, செயல்களிடையே உள்ள வித்தியாசம் தெரியாமல் எப்பொழுதும் பாவச்செயல்களிலேயே புரண்டு கொண்டிருப்பவன் எவ்வளவு புத்திசாயாக இருப்பினும் என்ன நன்மையை அடைந்துவிட முடியும்?
26 அதுபோலவே, அலைபாயும் புலன்களால் குழப்பப்பட்ட மனத்துடன், இதயத்தில் நிம்மதியின்றி எப்பொழுதும் சாந்தியற்ற நிலையில் இருப்பவன் ஞானத்தை எவ்விதம் அடைவான்?
27 போதுமென்ற மனத்துடன், குருபுத்திரனாக வாழ்ந்து, ஆசார அனுஷ்டானங்களைக் கடைப்பிடித்துத் தன்னையறியும் தேடல் சலனமில்லாது நிற்பவன் ஞானத்தை அடைவான்.
28 சம்சாரத்தை நோக்கி நடப்பவனோ, மோக்ஷத்தை நோக்கி நடப்பவனோ, கடைசி இலக்கைச் சென்றடைய வேண்டுமெனில் சரீரமென்னும் தேருக்கு யஜமானனாகிவிட வேண்டும். கேவலம் வாய்ப்பேச்சு ஸாமர்த்தியம் என்ன சாதித்துவிட முடியும்?
29 ஆகையால் வார்த்தை ஜாலத்திற்கு இங்கு இடமேயில்லை; ஸாரம் அப்பியாஸமே (பயிற்சியே)õ நாம் உறுதியாகவும் அமைதியாகவும் அமரும் தேராக உடல் ஆகட்டும்.
30 இந்த ரதத்திற்கு (மனித உடல்) உம்முடைய புத்தி தேரோட்டியாக ஆகட்டும். உம்மைப் பொறுத்தவரை அமைதியான மனத்துடன் யஜமானனாக இந்த ரதத்தில் உட்காரும்.
=================================================================
எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீபக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியம் தொடர்கிறது……………………………………….
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.
பாபாவின் சங்கல்ப்ப படி தொடர்ந்து வருவார்
Please see below for English version. Tq
CHAPTER 17, 18
*
*
*
பாபாவின் சங்கல்ப்ப படி தொடர்ந்து வருவார்
Please see below for English version. Tq
CHAPTER 17, 18
*
*
*
============================================
CHAPTER XVIII
CHAPTER XVIII
How Hemadpant was Accepted and Blessed
Stories of Mr. Sathe and Mrs. Deshmukh - Encouraging Good Thoughts to Fruition- Variety in Upadesh-Teachings Readings Slander, and Remuneration for Labour. In the last two Chapters, Hemadpant described, how a rich gentleman, aspiring for quick Brahma-Jnana, was treated by Baba, and now in these two Chapters, he describes how Hemadpant, himself, was accepted and blessed by Baba, how Baba encouraged good throughts and fructified them; and gives His teachings regarding Self-improvement, slander and remuneration for labour.
Preliminary
It is a well-known fact, that the Sadguru looks first to the qualifications of his disciples; and then gives them suitable instructions, without unsettling their minds in the least, and leads them on towards the goal of self-realization. In this respect, some say that what the Sadguru teaches or instructs, should not be divulged to others. They think that their instructions, become useless, if they are published. This view is not correct. The Sadguru is like a monsoon cloud. He pours down profusely, i.e., scatters widely his nectar-like teachings. These, we should enjoy and assimilate to our heart's content; and then serve others with them, without any reserve. This rule should apply, not only to what he teaches in our waking state, but to the visions he gives us in our dreams. To quote an instance: Budhakowshik Rishi composed his celebrated Ram-raksha stotra, which he had seen in his dream.
Like a loving mother forcing bitter but wholesome medicines down the throats of her children for the sake of their health, Sai Baba imparted spiritual instructions to His devotees. His method was not veiled or secret, but quite open. The devotees who followed His instructions got their object. Sad-gurus like Sai Baba open our (eyes of the) intellect and show us the divine beauties of the Self, and fulfill our tender longings of devotion.
When this is done, our desire for sense-objects vanishes, twin fruits of Viveka (discrimination) and Vairagya (dispassion or non-attachment) come to our hands; and knowledge sprouts up even in the sleep. All this we get, when we come in contact with Saints (Sad-guru), serve them and secure their love. The Lord, who fulfills the desires of His devotees, comes to our aid, removes our troubles and sufferings, and makes us happy. This progress or development is entirely due to the help of the Sadguru, who is regarded as the Lord Himself. Therefore, we should always be after the Sad-guru, hear His stories, fall at His Feet and serve Him. Now we come to our main story.
===============================================
Bow to Shri Sai -- Peace be to all
To be continued............
சாயி ஸ்த்சரித்திரம் தொடர்கிறது………..............................................பாபாவின் சங்கல்ப்ப படி தொடர்ந்து வருவார்
/
/
/
/
/
/
/
/
/
/
/
“ஓம் சாயி நமோ நமோ
ஸ்ரீ சாயி நமோ நமோ
ஜெய ஜெய சாயி நமோ நமோ
சற்குரு சாயி நமோ நமோ”.
ஸ்ரீ சாயி நமோ நமோ
ஜெய ஜெய சாயி நமோ நமோ
சற்குரு சாயி நமோ நமோ”.
"I say things here. There they happen."
=
=
OM SAI NAMO NAMAH
SHREE SAI NAMO NAMAH
JAI JAI SAI NAMO NAMAH
SADGURU SAI NAMO NAMAH
=
OM SAI NAMO NAMAH
SHREE SAI NAMO NAMAH
JAI JAI SAI NAMO NAMAH
SADGURU SAI NAMO NAMAH
Sai Samarth...........Shardha Saburi
Bow to Shri Sai - Peace to be all
************************************************************
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே
=
=
=
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே
=
=
=
''ஜெய் ஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு
ஸாயீநாத் மஹராஜ் கீ ஜெய்"
ஸாயீநாத் மஹராஜ் கீ ஜெய்"
ஓம் நமோ பகவதே சாயிநாதாய
அமிர்த வாக்ய வர்ஷாய
சகல லோக பூஜிதாய
சர்வ தோஷ நிவாரணாய
ஷிரிடி வாசாய
சாயிநாதாயதே நமஹ
அமிர்த வாக்ய வர்ஷாய
சகல லோக பூஜிதாய
சர்வ தோஷ நிவாரணாய
ஷிரிடி வாசாய
சாயிநாதாயதே நமஹ
சற்குரு நாதா சரணம்! சரணம்!
சச்சிதா னந்தா சரணம்! சரணம்!
அற்புத ஒளியே சரணம்! சரணம்!
அன்பே அருளே சரணம்! சரணம்!
நித்திய சாயி சரணம்! சரணம்!
நிர்மல வடிவே சரணம்! சரணம்!
பொற்பதம் பணிந்தோம் சரணம்! சரணம்!
புண்ணிய ரூபா சரணம்! சரணம்!
சச்சிதா னந்தா சரணம்! சரணம்!
அற்புத ஒளியே சரணம்! சரணம்!
அன்பே அருளே சரணம்! சரணம்!
நித்திய சாயி சரணம்! சரணம்!
நிர்மல வடிவே சரணம்! சரணம்!
பொற்பதம் பணிந்தோம் சரணம்! சரணம்!
புண்ணிய ரூபா சரணம்! சரணம்!
======================================================================================================================================அன்புடன் சகோதரன் விக்னசாயி.
No comments:
Post a Comment