மகள் செய்த கலாட்டா
தவறு செய்த தன் மகளை தானே சிறையில் அடைத்தார் இங்கிலாந்து நாட்டின் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில்.
ஒரு சமயம்
தவறு செய்த தன் மகளை தானே சிறையில் அடைத்தார் இங்கிலாந்து நாட்டின் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில்.
ஒரு சமயம்
அவரது மகள் குடித்துவிட்டு லண்டன் நகரின் முக்கிய வீதி ஒன்றில் கலாட்டா செய்து கொண்டிருந்தாள்.
இவளை வேடிக்கை பார்க்க ஒரு கூட்டமே கூடிவிட்டது, இதனால் போக்குவரத்தில் பெரும் இடையூறு ஏற்பட்டது.
போக்குவரத்து பொலிசார் வந்து விசாரித்த போது, அவள் பிரதமரின் மகள் என்பது தெரியவந்தது.
இதனால் நடவடிக்கை எடுப்பதற்கு பயந்து, பிரதமரிடமே விடயத்தை சொல்லிவிட வேண்டுமென முடிவு செய்தனர்.
தயங்கி தயங்கி ஒரு வழியாக பிரதமரிடம் சொல்லி விட்டனர்.
உடனே கோபம் கொண்ட வின்ஸ்டன், டியர் ஆபிசர்..பிரெஞ்சு வீதியும், பிரிட்டிஷ் நீதியும் நேரானவை என்பதை உலகமே அறியும்.
இந்த உண்மைக்கு களங்கம் ஏற்படுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.
உடனே அவளை கைது செய்து சிறையில் அடையுங்கள். அத்துடன் இந்த செய்தியை அனைத்து பத்திரிக்கைகளிலும் வெளிவரச் செய்யுங்கள் என்று தெரிவித்தாராம்.
No comments:
Post a Comment