46 சொற்களில்
ஒரு ‘சுருக்’ சிரிப்புக் கதை!
நீதிமன்றம்.
கூண்டில்
நின்றவரிடம் நீதிபதி கேட்டார்:
“நீ
ஏன் அவரைக் கொலை செய்தாய்?”
குற்றாவாளி:
“பணத்துக்காக.”
“பணத்தை
என்ன செய்தாய்?”
“குடித்தேன்; உல்லாசமாக
இருந்தேன்.”
“கொலை
செய்யப்பட்டவரிடம் வேறு என்ன இருந்தது.”
“ஒரு
பாத்திரத்தில் கொஞ்சம் ரொட்டியும் இறைச்சியும்.”
“அவற்றை
என்ன செய்தாய்?”
“ரொட்டியைத்
தின்றேன். இறைச்சியைத் தூக்கி எறிந்துவிட்டேன்.”
“ஏன்
அப்படிச் செய்தாய்?”
“அன்று
வெள்ளிக்கிழமை. வழக்கமாக
நான்
‘விரதம்’ இருக்கும்
நாள்.”
========================================================================
No comments:
Post a Comment