இனிய காலை வணக்கம் அன்புறவுகளே!!!
Please
see below for English version. Tq.......................................
சரணாகதி செய்வோர் இரண்டு வகை ஆவர்.
குரங்குக்குட்டிகளைப் போலும்; பூனைக்குட்டிகளைப் போலும். குரங்குக்குட்டி தன்
தாயைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறது; பூனைக்குட்டியோ தாயைப் பிடித்துக்கொள்ளச்
சக்தியற்றதாய், விட்ட இடத்திலேயே
கிடக்கிறது. குரங்குக்குட்டி தன் பிடிப்பை விடுமானால் கீழே விழுந்து காயமுறும்.
பூனைக்குட்டியைத் தாய்ப்பூனையே தூக்கிச் செல்வதால், அது அவ்வித
ஆபத்துக் குள்ளாவதில்லை.
பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர்.
பாபா
தாயன்பு காட்டுகிறார் என்பது பக்தர்களின் பிரத்யக்ஷ அநுபவம். "பூனைக்குட்டி
சரணாகதிதான்' சிறந்தது என்பதும்
உள்ளங்கை நெல்லிக்கனி. தம்முடைய சரணாகதி எத்தகையது என்பதை ஒவ்வொருவரும் தம்மைத்
தாமே துருவித்தான் தெளிவுபெற வேண்டும். இந்த ஜன்மத்தில் இயன்றாலும் இயலாது
போனாலும், நோக்கி
நடக்கவேண்டிய இலக்கு இதுதான்!
அரசனாயினும் சரி, ஆண்டியாயினும்
சரி, எல்லாரும் அவரால்
எல்லாவிதங்களிலும் ஒரே மாதிரியாக நடத்தப்பட்டனர். இலக்குமியின் புத்திரனாக
இருப்பினும் சரி, ஓட்டாண்டியாக
இருப்பினும் சரி, அவருடைய அளவுகோல்
ஒன்றே......பூர்வஜன்மங்களில் சம்பாதித்த பாக்கியமே அவருடைய பொன்னடிகளுக்கு நம்மை
இழுத்திருக்கிறது. இதுவே நமக்கு மனத்தில் சாந்தியையும் உலகியல் தொல்லைகளிருந்து
விடுதலையையும் அளிக்கிறது.
ஸ்ரீ சிர்டீ சாயி ஸ்த்சரித்திரம் தொடர்கிறது……….
ஸ்ரீ சிர்டீ ஸாயீ அஷ்டோத்தர நாமாவளி விரிவுரை
தொடர்கிறது....................................................................
45.
சரணாகத வத்ஸலாய நமஹ
அடைக்கலம் புகுந்தவர்களின்மீது தாயன்பு
காட்டுபவருக்கு நமஸ்காரம்.
ஒப்பு நோக்குக :-
சரணாகதி செய்வோர் இரண்டு வகை ஆவர். குரங்குக்குட்டிகளைப் போலும்; பூனைக்குட்டிகளைப்
போலும். குரங்குக்குட்டி தன் தாயைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறது; பூனைக்குட்டியோ
தாயைப் பிடித்துக்கொள்ளச் சக்தியற்றதாய், விட்ட இடத்திலேயே கிடக்கிறது. குரங்குக்குட்டி
தன் பிடிப்பை விடுமானால் கீழே விழுந்து காயமுறும். பூனைக்குட்டியைத் தாய்ப்பூனையே
தூக்கிச் செல்வதால்,
அது அவ்வித ஆபத்துக் குள்ளாவதில்லை.
பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர்.
பாபா
தாயன்பு காட்டுகிறார் என்பது பக்தர்களின் பிரத்யக்ஷ அநுபவம். "பூனைக்குட்டி
சரணாகதிதான்' சிறந்தது
என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனி. தம்முடைய சரணாகதி எத்தகையது என்பதை ஒவ்வொருவரும்
தம்மைத் தாமே துருவித்தான் தெளிவுபெற வேண்டும். இந்த ஜன்மத்தில் இயன்றாலும் இயலாது
போனாலும், நோக்கி
நடக்கவேண்டிய இலக்கு இதுதான்!
இந்த
நாமம் ஸ்ரீஸாயீ ஸஹஸ்ர நாமாவளியில் 845ஆவது நாமம்.
OM
SHARANAGATA VATSALAYA NAMAH
ॐ शराणागतवत्सलाय नमः
My
humble salutation to Him who is bound by love to those who surrender themselves
unto Him.
Please
see below for English version. Tq
வாசகர்களுக்கு என் பிரார்த்தனை இதுவே, ''வாருங்கள், வந்து இந்த
ஆனந்தத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள். சான்றோர்களுடன் சேர்ந்துகொண்டு சதா ஸாயீயின்
புனிதமான கதைகளைக் கேட்பவர் மஹாபாக்கியசாலிகள்¬.-- அத்தியாயம் ஏழு
தொடர்கிறது......................................................
ஸ்ரீ சிர்டீ ஸாயீ அஷ்டோத்தர நாமாவளி விரிவுரை
தொடர்கிறது....................................................................
வாசகர்களுக்கு என் பிரார்த்தனை இதுவே, ''வாருங்கள், வந்து இந்த
ஆனந்தத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள். சான்றோர்களுடன் சேர்ந்துகொண்டு சதா ஸாயீயின்
புனிதமான கதைகளைக் கேட்பவர் மஹாபாக்கியசாலிகள்¬.-- அத்தியாயம்
ஏழு
தொடர்கிறது....................................................... சாயி
ஸ்த்சரித்திரம் அத்தியாயம் ஏழு தொடர்கிறது……….
*
*
*
81
'யாரால், எந்த விதமாக, தீக்காயமடைந்த
கைக்கு வைத்தியம் செய்யப்படவேண்டும்?ஃ என்றெண்ணி மாதவராவ் பிரமித்துப்போனார். நானா
சாந்தோர்க்கருக்குக் கடிதம் எழுத வேண்டுமென்று தீர்மானித்தார்.
82
சாந்தோர்க்கருக்கு அவர் விவரமான கடிதம் ஒன்று எழுதினார். சாந்தோர்க்கரும் உடனே
கிளம்பி, பரமானந்த்
என்னும் பிரஸித்தபெற்ற டாக்டரை அழைத்துக்கொண்டு சிர்டீக்கு வந்தார்.
83 தீக்காயத்தின்
எரிச்சலை அடக்கக்கூடிய பலவிதமான மருந்துகளை எடுத்துக் கொண்டு, டாக்டர் பரமானந்தையும்
கூட அழைத்துக்கொண்டு, நானாஸாஹேப் சாந்தோர்கர் சிர்டீக்கு வந்து பாபாவின் எதிரில்
நின்றார்.
84 பாபாவை
வணங்கிவிட்டு, குசலம்
விசாரித்துவிட்டுத் தாம் வந்த காரியம் என்ன என்பதையும் விளக்கி, தீக்காயம்
ஏற்பட்ட கையைக் காட்டுமாறு கேட்டுக்கொண்டார்.
85 ஏற்கெனவே, தீக்காயம்பட்ட
அன்றே பாகோஜி சிந்தே பாபாவின் கைக்கு நெய் தடவி ஓர் இலையைச் சுற்றி அதன்மேல்
இறுக்கமாகக் கட்டுப்போட்டிருந்தார்.
86 கட்டுகளைப்
பிரித்துக் கையைப் பார்த்தபின், டாக்டர் பரமானந்திற்கும் காண்பிக்க வேண்டும்; முறையான
மருத்துவம் ஆரம்பிக்கப்பட வேண்டும்; பாபா சீக்கிரமாகக் குணமடைய வேண்டும்.--
87 இந்த
நல்லெண்ணத்துடன் நானா பாபாவைப் பலவிதமாகக் கெஞ்சி வேண்டிக்கொண்டார். டாக்டர்
பரமானந்தும் கையின் நிலைமையைப் பார்க்க வேண்டும் என்பதற்காகக் கட்டுகளைப்
பிரித்துவிட பாபாவைத் தூண்டும் வகையில் பலமுறைகள் முயன்றார்.
88 பாபா, ''அல்லாவே நம்
வைத்தியர்ஃஃ என்று திரும்பத் திரும்ப விளம்பிக்கொண்டு, ''நாளைக்குப்
பார்க்கலாம், நாளைக்குப்
பார்க்கலாம்ஃஃ என்று சொல் இழுத்தடித்துவிட்டார். அவருடைய கையை டாக்டரிடம் காட்டவே
இல்லை; இதுபற்றி
பாபாவுக்கு வருத்தமும் ஏதும் இல்லை.
89 டாக்டர்
பரமானந்த் கொண்டுவந்த மருந்துகள் சிர்டீயின் காற்றை சுவாசிக்கவே இல்லை. ஆனால், இந்நிகழ்ச்சியின்
மூலமாக அவர் ஸாயீதரிசனம் செய்து மகிழ்ச்சியடைய வேண்டுமென்று விதிக்கப்பட்டிருந்தது
போலும்õ
90 பாகோஜிக்கு
மட்டுமே பாபாவுக்கு தினமும் ஸேவை செய்யும் உரிமை அளிக்கப்பட்டது; ஆகவே, பாகோஜி மட்டுமே
தினமும் கையை உருவிவிடுவார். இதன் விளைவாக சில நாள்களில் கை குணமடைந்தது.
எல்லாரும் நிம்மதியடைந்து சந்தோஷப்பட்டனர்.
91 கை குணமடைந்த
பின்னரும், தினந்தோறும்
காலைவேளையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கட்டுகளைப் பிரிக்கவைத்து, உருவிவிடப்பட்டபின், மறுபடியும்
கட்டுகளைப் போட்டுக்கொள்ளவைத்த பாபாவின் தணியாத ஆவல் என்னவாக இருக்கமுடியும் என்று
யாருக்கும் தெரியாதுபோயிற்று.
92 வயோ புண்ணோ
எதுவுமே இல்லாத உறுப்பு, தினமும் மிகுந்த அக்கறையுடன் கவனிக்கப்பட்டது. தீக்காயமோ
அல்லது புண்ணோ இல்லாத இடத்தில் தினமும் நெய் தடவி உருவப்பட்டது. இந்த ஸேவை பாபா
மஹாஸமாதி அடையும்வரை தொடர்ந்ததுõ
93 சித்தராகிய
ஸாயீக்கு பாகோஜியினுடைய ஸேவை தேவையே இல்லை. இருப்பினும், பக்தர்களின்
நல்வாழ்வுபற்றிய ஆழ்ந்த அக்கறையால், பாகோஜியை இந்த ஸேவையைச் செய்ய அனுமதித்தார்.
94 பூர்வஜன்மங்களில்
செய்த மஹா பாவங்களினால் பாகோஜி குஷ்டரோகத்தினால் பீடிக்கப்பட்டிருந்தார். ஸாயீயின்
சகவாசமாகிய விசேஷமான பாக்கியம் அவருக்குக் கிடைத்தது பெரும் புண்ணியமே.
95 பாபா தினமும்
லெண்டிக்குப் போய்வந்தபோது பாகோஜி அவருக்குக் குடை பிடித்துக்கொண்டே செல்வார்.
உடலெங்கும் குஷ்டரோகத்தினால் ஏற்பட்ட புண்கள் நிறைந்திருந்தன; ஆயினும், அணுக்கத்
தொண்டர்களில் முதல்வர் அவரேõ
96 தினந்தோறும்
காலைவேளையில் பாபா துனிக்கருகில் இருந்த தூண்மீது சௌகரியமாகச் சாய்ந்துகொண்டு
உட்கார்ந்தவுடன், பாகோஜி ஸேவை
செய்ய வந்துவிடுவார்.
97 கால்களிருந்தும் கைகளிருந்தும்
கட்டுகளைப் பிரித்துவிட்டு, நெய் தடவிப் பிடித்துவிடுவார். இவ்விதமாக
பாகோஜி ஸேவை செய்தார்.
98 பூர்வஜன்மத்தில்
மஹாபாபிஷ்டரான பாகோஜி, உடல் முழுவதும் ரத்தக் குஷ்டத்தினால் பாதிக்கப்பட்ட
பெருவியாதியஸ்தரானாலும், பாபாவின் சிறந்த பக்தராகத் திகழ்ந்தார்.
99 கால்விரல்கள்
அனைத்தும் குஷ்டரோகத்தால் அழுகி விழுந்துவிட்டன. உடல் சகிக்க முடியாத துர்நாற்றம்
அடித்தது; அவ்வளவு
துர்ப்பாக்கியமானவருக்கு பாபாவுக்கு ஸேவை செய்து மகிழும் மகத்தான பாக்கியம்
கிடைத்தது.
எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும்
சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீபக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீஸமர்த்த ஸாயீ
ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியம் தொடர்கிறது……………………………………….
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
https://www.youtube.com/watch?v=ULfqRmogcqk&list=PL865F542D9D422C83
சுபம் உண்டாகட்டும்.
பாபாவின் சங்கல்ப்ப படி தொடர்ந்து வருவார்
Please
see below for English version. Tq
CHAPTER
VII
*
*
*
Leper
Devotee’s Service
On
hearing the news of Baba’s hand being burnt from (Shama) Madhavrao Deshpande,
Mr. Nanasaheb Chandorkar, accompanied by the famous Doctor Parmanand of Bombay
with his medical outfit consisting of ointments, lint and bandage etc. rushed
to Shirdi, and requested Baba to allow Dr. Parmanand to examine the arm, and
dress the wound caused by the burn. This was refused. Ever since the burn, the
arm was dressed by the leper devotee, Bhagoji Shinde. His treatment consisted
in massaging the burnt part with ghee and then placing a leaf over it and
bandaging it tightly with Pattis (bandages). Mr. Nanasaheb Chandorkar solicited
Baba many a time to unfasten the Pattis and get the wound examined and dressed
and treated by Dr. Parmanand, with the object that it may be speedily healed.
Dr.
Parmanand himself made similar requests, but Baba postponed saying that Allah
was His Doctor; and did not allow His arm to be examined. Dr. Paramanand’s
medicines were not exposed to their air of Shirdi, as they remained intact, but
he had the good fortune of getting a darshana of Baba. Bhagoji was allowed to
treat the hand daily. After some days, the arm healed and all were happy.
Still, we do not know whether any trace of pain was left or not. Every morning,
Bhagoji went throught his programme of loosening the Pattis, massaging he arm
with ghee and tightly bandaging it again. This went on till Sai Baba’s Samadhi
(death). Sai Baba, a perfect Siddha, as He was, did not really want this
treatment, but out of love to His devotee, He allowed the ‘Upasana’ - service
of Bhagoji to go on un-interrupted all along.
When Baba started for Lendi, Bhagoji held an
umbrella over Him and accompanied Him. Every morning, when Baba sat near the
post close to the Dhuni, Bhagoji was present and started his service. Bhagoji
was a sinner in his past brith. He was suffering from leprosy, his fingers had
shrunk, his body was full of pus and smelling badly. Though outwardly he seemed
so unfortunate, he was really very lucky and happy, for he was the premier
servant of Baba, and got the benefit of His company.
Bow
to Shri Sai -- Peace be to all
Bow
to Shri Sai -- Peace be to all
https://www.youtube.com/watch?v=ULfqRmogcqk&list=PL865F542D9D422C83
To
be continued............
ஷீரடி போக முடியாதவர்கள் அவசியம் பாருங்கள்.
Shirdi
Sai Baba Tamil Aarti Full Video Song -ஷிர்டி சாய் பாபா
ஆர்த்தி
https://www.youtube.com/watch?v=LGumlrX9UgY
https://www.youtube.com/watch?v=Jn1hyQARZ68#t=19
https://www.youtube.com/watch?v=EIgaKaSYrok
வாசகர்களுக்கு என் பிரார்த்தனை இதுவே, ''வாருங்கள், வந்து இந்த
ஆனந்தத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள். சான்றோர்களுடன் சேர்ந்துகொண்டு சதா ஸாயீயின்
புனிதமான கதைகளைக் கேட்பவர் மஹாபாக்கியசாலிகள்¬.-- அத்தியாயம் ஏழு
தொடர்கிறது......... சாயி ஸ்த்சரித்திரம் தொடர்கிறது………..............................................பாபாவின்
சங்கல்ப்ப படி தொடர்ந்து வருவார்
என் மகனே! மகளே! நான் சத்திய தேவன். பொய் சொல்ல
மாட்டேன். முழுமையான சரணாகதி அடைந்து நீ கரம் குவித்தால் ஓடி வரும் நாராயணன் நான்.
உன் விதியை அவ்வப்போது மாற்றிக் கொண்டிருக்கும் கலியுக பிரம்மாவும் நானே! உனது
இன்னல்களை அழிக்கும் ஈசனும் நானே! கோபத்தின் போது வெளிப்படும் அக்கினியும், துக்கத்தின் போது
வெளியாகும் கங்கையும் நானே! உன் நாசியில் வெளிவரும் வாயுவும் நானே! எங்கும்
எதிலும் உனக்காக, உன் சார்பில்
இருக்கும் அன்புத் தந்தை நான். நீ அமைதியாக இரு.. என் பெயரை சதா உச்சரித்துக் கொண்டிரு..
உனக்குத் தேவையானதை செய்வேன். கடைசி வரை உன் கூடவே இருந்து துணை செய்வேன். - ஸ்ரீ
சாயியின் குரல்.
“ஓம் சாயி நமோ நமோ
ஸ்ரீ சாயி நமோ நமோ
ஜெய ஜெய சாயி நமோ நமோ
சற்குரு சாயி நமோ நமோ”.
"I
say things here. There they happen."
OM
SAI NAMO NAMAH
SHREE
SAI NAMO NAMAH
JAI
JAI SAI NAMO NAMAH
SADGURU
SAI NAMO NAMAH
Sai
Samarth...........Shardha Saburi
Bow
to Shri Sai - Peace to be all
************************************************************
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே
============================
No comments:
Post a Comment