ரதசப்தமி சுருக்க வரலாறு......................Ratha Saptami
Ratha Saptami is
dedicated to Lord Surya, the Hindu Sun God. As per the tradition in Hinduism,
Lord Surya is believed to ride a chariot driven by seven horses – this form is
worshipped during Rathasaptami puja and festival.
ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி!
அருள் பொங்கும் முகத்தைக் காட்டி இருள் நீக்கும்
தந்தாய் போற்றி!
தாயினும் பரிந்து சாலச் சகலரை அணைப்பாய் போற்றி!
தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம் துணைக்கரம்
கொடுப்பாய் போற்றி!
தூயவர் இதயம் போலத் துலங்கிடும் ஒளியே போற்றி!
தூரத்தே நெருப்பை வைத்து சாரத்தைத் தருவாய் போற்றி!
ஞாயிறே நலமே வாழ்க நாயகன் வடிவே போற்றி!
நானிலம் உள நாள் மட்டும் போற்றுவோம் போற்றி போற்றி!
அன்புடன் எல்லோர்க்கும் இனிய சூரியபகவான் ஜெயந்தி
நல்வாழ்த்துக்கள்.......சகோ தோழமை களே.............................
உலகுக்கு ஒளி தரும் பகலவனைப் பொங்கல் வைத்து
வழிபட்டத்தைத் தொடர்ந்து மற்றுமொரு வழிபாடும் தை மாதத்தில் வருகிறது. அதுதான் ரத
சப்தமி. சூரியன் தெற்கு நோக்கிய தன் பயணத்தை முடித்துக்கொண்டு ரத சப்தமியன்று
வடக்கு நோக்கிப் பயணப்படுகிறார்.
அன்று முதல் கதிரோன் தன் ஒளிக்கற்றையின் அளவைச்
சிறுகச் சிறுக அதிகரித்து, பூமியின் வெம்மையைக் கூட்டுகிறான். அதைக் குறிக்கும்விதமாகவும் அன்று
சூரியனுக்கு வழிபாடு நடத்தப்படுகிறது. உத்திராயண தை அமாவாசைக்குப் பிறகு வரும்
ஏழாவது நாள் ரத சப்தமியாகக் கடைபிடிக்கப்படுகிறது.
ரத சப்தமியன்றுதான் சூரியன் உதித்தார், அவரது ஜெயந்திநாளே ரத சப்தமி என்றும்
சொல்லப்படுகிறது. ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சூரியன் உலா வருவதால் திதிகளில்
ஏழாவது நாள் சப்தமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.
சூரியன் உதயம்
சூரியன் அவதரித்தது குறித்து ஒரு கதை உண்டு. காஷ்யப
மகரிஷியின் மனைவி அதிதி, கர்ப்பம் தரித்திருந்த நேரம் அது. அதிதி தன் கணவனுக்கு உணவு
பரிமாறிக்கொண்டிருந்தாள். அப்போது அந்தணர் ஒருவர் யாசகம் கேட்டு வந்தார். நிறைமாத
கர்ப்பிணியான அதிதி, தன் கணவனுக்கு உணவு பரிமாறிய பிறகு, தளர் நடையுடன் வந்து அந்தணருக்கு உணவு அளித்தாள்.
அதிதியின் இந்தச் செயலால் அந்தணர் கோபம் கொண்டார்.
தர்மத்தைப் புறக்கணித்துவிட்டு கர்ப்பத்தைக் காப்பதற்காக அதிதி மெதுவாக நடந்து
வந்ததால், அந்தக் கர்ப்பம் கலைந்து போகட்டும் என்று சாபம் இட்டார். அந்தணரின் சாபம்
கேட்டு அதிர்ச்சியடைந்த அதிதி, தன் கணவரிடம் நடந்தவற்றைச் சொன்னாள். காஷ்யப முனிவர், அமிர்தம் நிறைந்த உலகில் இருந்து என்றைக்கும்
அழிவில்லாத மகன் பிறப்பான் என்று வாக்களித்தார். காஷ்யபரின் வாக்குப்படி ஒளி
பொருந்தியவனாக, உலகைக் காக்கும் சூரியன் பிறந்தான்.
விரதமிருக்கும் முறை
ரத சப்தமியன்று நீர்நிலைகளில் பக்தர்கள் புனித நீராடி
சூரிய பகவானை வழிபடுவர். அன்று சூரிய உதயத்துக்கு முன் துயிலெழ வேண்டும். ஏழு
எருக்க இலைகளை எடுத்துத் தலை மீது வைத்துக் கொண்டு, ஆண்கள் அதன் மீது சிறிது அட்சதையையும் விபூதியையும்
வைத்து கிழக்கு திசை நோக்கி நீராட வேண்டும். பெண்கள் அட்சதையும் மஞ்சளும் வைத்து
நீராட வேண்டும்.
இப்படி நீராடுவதன் மூலம் நம் பாவங்கள் அனைத்தும்
கரைந்துபோகும் என்பது நம்பிக்கை. பொதுவாகச் சூரிய உதயத்துக்கு முன் ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளில் நீராடுவது உகந்தது.
இயலாதவர்கள் வீட்டிலேயே புனித நீராடலாம். எருக்க இலைகளைத் தலை மீது வைத்து
நீராடுவதால் உடல் நலம் காக்கும் என்பது நம்பிக்கை.
நீராடிய பிறகு சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும்.
தெரிந்த சூரிய துதிகளைச் சொல்லலாம். சூரியனுக்கு அர்க்ய மந்திரம் சொல்லி, நீர்விட வேண்டும். தெரியாதவர்கள், வேதம் படித்தவர்களிடம் உபதேசம் பெற்றுச் செய்யலாம்.
சூரியனுக்கு உகந்த நிவேதனம் சர்க்கரைப் பொங்கல். வழிபாடு முடிந்த பிறகு சூரிய
பகவானுக்குப் படையலிட்ட பொங்கலை அனைவருக்கும் பிரசாதமாக வழங்கலாம்.
பெருமாளின் அம்சமே சூரியன். அதனால் ரத சப்தமியன்று
கோயில்களில் பெருமாள் சூரிய பிரபையில் எழுந்தருள்வார். ரத சப்தமியன்று
விரதமிருப்பது சிறந்தது.
அன்றைய தினம் விரதமிருந்தால் நீடித்த ஆயுளும், உடல் நலமும் பெறலாம். ரத சப்தமி நாளில் செய்யப்படும்
தர்மத்துக்குப் பல மடங்கு புண்ணியம் உண்டு. இந்த நாளில் தொழில் தொடங்கினால், விருத்தியடையும். பெண்கள் உயர்நிலையை அடைவர்.
இந்த விரதம் பெண்களின் சுமங்கலித்துவத்தை நீடிக்கச்
செய்யும் என்றும் நம்பிக்கை உண்டு.
எருக்க இலையின் மகத்துவத்தை பீஷ்ம புராணம் மூலம்
வியாசரால் மகாபாரதத்தில் விளக்கப்பட்டுள்ளது. ரத சப்தமி, தஞ்சை மாவட்டம் சூரியனார் கோயில், திருமலை ஸ்ரீ நிவாசப் பெருமாள் உள்பட பல ஆலயங்களில்
திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. திருமலையின் ஏழு மலைகளை ஏழு குதிரைகளாகப்
பாவித்து, ரத சப்தமி விழா கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயிலிலும் ரத
சப்தமி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
உலகின் இருள் நீக்கும் பகலவனை வணங்கி, வாழ்வில் ஒளி பெறுவோம்.
ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி!
அருள் பொங்கும் முகத்தைக் காட்டி இருள் நீக்கும்
தந்தாய் போற்றி!
தாயினும் பரிந்து சாலச் சகலரை அணைப்பாய் போற்றி!
தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம் துணைக்கரம்
கொடுப்பாய் போற்றி!
தூயவர் இதயம் போலத் துலங்கிடும் ஒளியே போற்றி!
தூரத்தே நெருப்பை வைத்து சாரத்தைத் தருவாய் போற்றி!
ஞாயிறே நலமே வாழ்க நாயகன் வடிவே போற்றி!
நானிலம் உள நாள் மட்டும் போற்றுவோம் போற்றி போற்றி!
காலத்தை வென்று சரித்திரங்கள் பல படைத்த
"கர்ணன்" திரைப்படத்தின் ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத இந்த பாடலை
விரும்பாதோர் தமிழரே இல்லை எனலாம்.
இயற்கையின் தாயான கதிரவனைப் பற்றிய பாடலாதலால்
அனைத்து மதத்தவராலும் ரசிக்கப்படுகிறது.
இசை வடிவம்..........
https://www.youtube.com/watch?v=HJmHP3NVYY4
====================================================================
Ratha Saptami is
dedicated to Lord Surya, the Hindu Sun God. As per the tradition in Hinduism,
Lord Surya is believed to ride a chariot driven by seven horses – this form is
worshipped during Rathasaptami puja and festival. Ratha Saptami 2016 date is
February 14. The festival is of great importance at the Tirumala Tirupati
Balaji Temple. It is said that the earth's inclination towards the sun is
steepest on the Ratha Saptami day.
Ratha Saptami is
observed on the seventh day of Shukla Paksha, or waxing phase of moon, in the
Magh Month (January – February) in a traditional Hindu lunar calendar. The day
is of great significance in Maharashtra, Andhra Pradesh, Karnataka and Tamil
Nadu. In Orissa, the day is observed as Magha Saptami. In other regions the day
is observed as Surya Jayanti.
A kolam or rangoli of
Lord Surya riding a chariot is made on the ground and worshipped in many
places. Some people boil milk in earthen vessels on the day.
Another important ritual
on the day is taking bath using Erukku leaves. This is followed mainly in Tamil
Nadu. The rituals observed on the day vary from region to region.
==========================================================
ஒம் குரு வாழ்க, குரு நன்றாய் வாழ்க, குருவே துணை...
Gurur Brahma, Gurur
Vishnu, Gurur Devoh Maheshwara
Guru Sakshat Parabrahmah
Tasmai Shree Guru Veh Namah !
I am Love, I shower
Love. I share Love. I am pleased with Love. - Baba
When your heart is
filled with good thoughts and feelings, all that comes out of the senses - your
speech, your vision, your action - will naturally be pure. - Baba
உனது ஹ்ருதயம் நல்ல சிந்தனைகளாலும் நல்ல
உணர்வுகளாலும் நிரப்பப்பட்டுள்ள போது, உனது பேச்சு, பார்வை, செயல்கள் யாவும் இயல்பாகவே சுத்தமாக இருக்கும். – பாபா
Embodiments of divine
Love!............ Have A Great And Wonderful Day Ahead.
God Bless You
All............ love-all-serve-all-help-ever-hurt-never............. Sairam
அன்புறவுகள்... எல்லோர்க்கும்... அனைவருக்கும் சகோ என்றென்றும் அன்பு நன்றியுடன்.! இனிய காலை மதிய மாலை
இரவு வணக்கம்! ..உரித்தாகுக தோழமை / சகோ(களே)................!!!
ஆன்றோர்க்கும் சான்றோர்க்கும் என்னைப்போன்றோர்க்கும்
இனிய ஆண்டாக நாளாக மலரட்டும்...சகோ தோழமை களே...............
நட்புகளுக்கும் அவர்கள் குடும்பத்தினர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள் !!!
நினைத்தவை எல்லாம் நிறைவேறி , சுபீட்சம் உண்டாகட்டும் !!!
ஓம் சாயி நமோ நம! ஸ்ரீ சாயி நமோ நம!
ஜெய ஜெய சாயி நமோ நம! சத்குரு சாயி நமோ நம!
==========================================
ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி!
அருள் பொங்கும் முகத்தைக் காட்டி இருள் நீக்கும்
தந்தாய் போற்றி!
தாயினும் பரிந்து சாலச் சகலரை அணைப்பாய் போற்றி!
தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம் துணைக்கரம்
கொடுப்பாய் போற்றி!
தூயவர் இதயம் போலத் துலங்கிடும் ஒளியே போற்றி!
தூரத்தே நெருப்பை வைத்து சாரத்தைத் தருவாய் போற்றி!
ஞாயிறே நலமே வாழ்க நாயகன் வடிவே போற்றி!
நானிலம் உள நாள் மட்டும் போற்றுவோம் போற்றி போற்றி!
காலத்தை வென்று சரித்திரங்கள் பல படைத்த
"கர்ணன்" திரைப்படத்தின் ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத இந்த பாடலை
விரும்பாதோர் தமிழரே இல்லை எனலாம்.
இயற்கையின் தாயான கதிரவனைப் பற்றிய பாடலாதலால்
அனைத்து மதத்தவராலும் ரசிக்கப்படுகிறது.
இசை வடிவம்..........
https://www.youtube.com/watch?v=HJmHP3NVYY4
====================================================
அன்புடன் எல்லோர்க்கும் இனிய சூரியபகவான் ஜெயந்தி
நல்வாழ்த்துக்கள்.......சகோ தோழமை களே.............................
அன்புடன் சகோதரன்
விக்னசாயி............
=======================================
No comments:
Post a Comment