Followers

Monday, February 24, 2020




அன்புப்பாலத்தில் பயணம் செய்.
* தன்னம்பிக்கை என்னும் ஒளியோடு இருப்பவர்கள் வாழ்க்கைப் பாதையில் வெற்றிநடை போடுவார்கள். அவர்களால் மற்றவர்களுக்கும் வழிகாட்ட முடியும்.
* நாமோ கல்நெஞ்சம் கொண்டவர்களாக இருக்கிறோம். இறைவனோ, கருணை உள்ளம் கொண்டவனாக திகழ்கிறான்.
* பெண்கள் மகிழ்ச்சியோடு இருப்பதில் தான், ஒட்டுமொத்த குடும்பத்தின் மகிழ்ச்சியே அடங்கி இருக்கிறது. வாழ்வில் இசை என்பது, பெண்களின் சிரிப்பில் தான் புதைந்து கிடக்கிறது.
* இறைவன் தனக்கான நண்பர்கள் கிடைப்பார்களா என்று தேடுகின்றான். மனித மனங்களில் அன்பு இருக்கிறதா என்று எதிர்பார்க்கிறான்.
* மனித உறவுகள் அன்பினால் பிணைக்கப்பட்டுள்ளன. அன்பு என்னும் பாலத்தின் வழியாகப் பயணம் செய்தால் தான், நம் வாழ்க்கை சுகமானதாக இருக்கும்.
* நிலத்தைப் பண்படுத்தும் உழவனிடமும், கல்லுடைக்கும் தொழிலாளியிடமும் இறைவன் இருக்கிறான்.
* உலகில் உள்ள அனைத்தும் இறைவனின் உறைவிடம் என்பதை உணருங்கள். அவன் அளிப்பதை அனுபவியுங்கள்.

கடவுளை சந்திப்பது எப்போது?
* உலகில் ஒவ்வொருவருக்கும் கடமை உண்டு. அதை மறந்து, தனித்து ஒதுங்கி, தாம் மட்டுமே இறைவனை அடைய வேண்டுமென முற்படுவோர் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கின்றனர்.
* இயற்கையை உணர்ந்தாலே போதும், இறைவனை உணரலாம்.
* காணிக்கையுடன் வரும்போது தான், நாம் உண்மையாகவே கடவுளைச் சந்திக்கின்றோம், தேவைகளுடன் வரும்போது அல்ல.
* உண்மையான மகிழ்ச்சி நாம் எவ்வளவு பொருள் ஈட்டுகிறோம் என்பதில் இல்லை. அந்தப் பொருளை கொண்டு எவ்வளவு தர்மம் செய்கிறோம் என்பதில் தான் இருக்கிறது.
* பொருள் கிடைத்தும் ஆசை அடங்காவிட்டால் ஆசையும் நிறைவேறாது, செயலும் நிறைவேறாது.
* பிறர் ஆறுதல் சொல்வதால் வருத்தம் தீர்வதில்லை. அவரவர் மனதை சீர்படுத்திக் கொள்வது தான் கவலை தீர்க்கும் மருந்தாக இருக்கும்.
* நாம் உலகத்தைத் தவறாகப் புரிந்து கொண்டு, அது நம்மை ஏமாற்றுகிறதே என்று சொல்கிறோம். சரியான முறையில் உலகத்தின் நடப்பை தெரிந்து கொண்டால் வாழ்வில் வெல்லலாம்.
- தாகூர்
My dearest friend / friends
Have a fantastic day
அன்பின்
உறவுக்கும், உறவுகளுக்கும்
என் இனிய
காலை வணக்கம்
அன்புடன் vicknasai.
=========================================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...