Followers

Saturday, January 25, 2020


நியாயத்தைக் காப்போம்..............

* வாழ்வில் உண்டாகும் நன்மைக்கும், தீமைக்கும் அவரவர் செயல்களே காரணம். துன்பத்தை ஒழிக்க விரும்பினால் மனத்தூய்மையுடன் வாழுங்கள்.

* வாழ்வில் நேரும் எந்த துன்பத்திற்கும் யார் காரணமாக இருந்தாலும் அவரைத் தவறாக எண்ணாதீர்கள். எப்போதும் நேர்வழியில் நடக்க முயலுங்கள்.

* செருக்கை விடுத்து பணிவுடன் செயல்படுங்கள். கோபத்தை விடுத்து அமைதியாக இருங்கள். கடுஞ்சொல்லை மறந்து இனிமையாகப் பேசுங்கள்.

* தீய செயல்களைச் செய்வது எளிமையானது. நற்செயல்களைச் செய்வது கடினமானது. ஆனாலும், நம்பிக்கையுடன் நல்லதை மட்டும் தேர்ந்தெடுங்கள்.

* இருதரப்பு வாதத்தையும் பொறுமையுடன் கேட்ட பின், மனதில் எடை போட்டுப் பாருங்கள். முடிவில் நியாயத்தின் பக்கம் தீர்ப்பளியுங்கள்.
- புத்தர்
அன்பின் உறவுக்கும், உறவுகளுக்கும்
என் இனிய குடியரசு தின நல்வாழ்துக்கள்!!!
அன்புடன் vicknasai.

இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க.

============================================


No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...