Followers

Tuesday, January 4, 2022

 

புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா

அஜாட்யம் வாக்படுத்வா  ஹனூமத் ஸ்மரணாத் பவேத்!

 https://www.youtube.com/watch?v=4PZzUru94JY&ab_channel=H-Spiritual


யாக நெருப்பில் தெரிந்த ஆஞ்சநேயர் உருவம்; பக்கதர்கள் பரவசம்!


தமிழகத்தின் திருப்பூரில் அனுமன் ஜெயந்தி அன்று யாகம் வளர்த்த நெருப்பில் ஆஞ்சநேயர் உருவம் தெரிவதாக கூறி பக்தர்கள் பரவசம் அடைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்ற நிலையில்  குறித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.     திருப்பூர் மாவட்டம் மூலனூர் அருகே வளையக்காரன் வலசில் வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. அங்கு அனுமன் ஜெயந்தி முன்னிட்டு இந்த கோவிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது. யாகத்தில் வாசனை திரவியங்கள் கொஞ்சம் கொஞ்சமாக போடப்பட்டபோது நெருப்பில் ஆஞ்சநேயர் திருஉருவம் தெரிந்தது.    இதைக் கண்ட பக்தர்கள் பரவசம் அடைந்து பயபக்தியுடன் ஆஞ்சநேயா, ஆஞ்சநேயா, ராம பக்தா என கரகோஷம் எழுப்பினர். அத்துடன் யாக நெருப்பில் ஆஞ்சநேயர் உருவம் தத்ரூபமாக தெரிந்தது. மேலும் அந்த பகுதியில் குரங்குகளையே காண முடியாது என கூறப்படுகின்றது.  எனினும் யாகம் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது திடீரென்று கோவிலுக்குள் 2 குரங்குகள் நுழைந்து கருவறையில் இருந்த பழங்களை எடுத்து சாப்பிட்டதை கண்ட பக்தர்கள் ஆஞ்சநேயரே வந்துவிட்டார் என பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்.

இந்த நிலையில் குறித்த தகவல் சமூகவலைத்தளங்களில் தற்பொழுது வைரலாகிவருகின்றது.

courtesy;  https://jvpnews.com/article/image-of-the-anjaneyar-known-in-the-yaga-fire-1641276061

=====================================

பாடல்களாலே கீதாஞ்சலி

பூ மலராலே புஷ்பாஞ்சலி

ஆடல்களாலே நடனாஞ்சலி

எங்கள் அய்யப்ப ஸ்வாமிக்கு சரணாஞ்சலி

 ஸ்வாமியே ஐயப்பா

ஸ்வாமியே ஐயப்பா

ஸ்வாமியே ஐயப்பா

 

அவனே பாட்டு அதனை கேட்டு

பறவைகள் எல்லாம் சிறகை விரிக்கும்

பிரபஞ்ச நாதம் அவன் சங்கீதம்

பம்பா நதி அலை மலை எதிர் ஒலிக்கும்

 

பாடல்களாலே கீதாஞ்சலி

பூ மலராலே புஷ்பாஞ்சலி

ஆடல்களாலே நடனாஞ்சலி

எங்கள் அய்யப்ப ஸ்வாமிக்கு சரணாஞ்சலி

 ஸ்வாமியே ஐயப்பா

ஸ்வாமியே ஐயப்பா

ஸ்வாமியே ஐயப்பா

 

நிலவின் ஒளியாய் ஒளிர்தும் அவனே

மலர்களின் நடுவில் மணப்பதும் அவனே

மழலை குழந்தையின் விழிகளில் அவனே

மகர ஜோதியாய் சுடர்வதும் அவனே

 

பாடல்களாலே கீதாஞ்சலி

பூ மலராலே புஷ்பாஞ்சலி

ஆடல்களாலே நடனாஞ்சலி

எங்கள் அய்யப்ப ஸ்வாமிக்கு சரணாஞ்சலி

 ஸ்வாமியே ஐயப்பா

ஸ்வாமியே ஐயப்பா

ஸ்வாமியே ஐயப்பா

 


——————————


========================================

Sunday, January 2, 2022

 

கொழுப்பை கரைத்து எடையை குறைக்க நினைப்பவர்கன் சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாப்பிடலாமா? இனி தெரிஞ்சிக்கோங்க..!..


சர்க்கரைவள்ளிக்கிழங்கில் நார்ச்சத்து நிறைந்துள்ளது.

இதனால் உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் மற்றும் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு சர்க்கரைவள்ளிக்கிழங்கினை அச்சம் இன்றி சாப்பிடலாம்.

இனி தினமும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாப்பிட்டால் என்ன நடக்கும் என்று பார்க்கலாம்.

  1. சர்க்கரைவள்ளிக் கிழங்கு எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
  2.  சர்க்கரைவள்ளிக் கிழங்கில் கொழுப்பின் அளவானது பூஜ்ஜியம் ஆகும். எடை குறைப்பவர்களுக்கு சிறந்த உணவு.
  3.  சர்க்கரை வள்ளிக்கிழங்கில் இருக்கும் நார்ச்சத்துகள், ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துக்கள் மற்றும் வைட்டமின் பி, வைட்டமின் சி ஆகியவை உடலின் உட்புறத்தில் ஏற்பட்ட காயங்கள் மற்றும் வீக்கங்களை குணப்படுத்துகின்றன.  
  4. சர்க்கரைவள்ளிக் கிழங்கில் போலேட் எனப்படும் சத்து பெண்களுக்கு கரு உருவாக உறுதியாகின்றது.
  5.  சர்க்கரைவள்ளிக் கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வரும்பொழுது வயிற்றுப்புண் விரைவில் குணமடையும்.
  6.  சக்கரவள்ளி கிழங்கு தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது. எனவே எளிதில் தொற்று நோய் ஏற்படுவதை சுலபமாக தடுக்க முடியும்.
  7.  மூலம் வராமல் பாதுகாக்கிறது. ஆகவே சர்க்கரைவள்ளிக் கிழங்கை வாரத்தில் ஒருமுறையேனும் சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.
  8. இன்றைய காலகட்டத்தில் புற்றுநோய் என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. ஏனென்றால் இன்றைய உணவு பழக்க வழக்கம் தான் காரணம் என்று சொல்லவேண்டும் தொண்டையில் புற்றுநோய் வர முக்கிய காரணிகளாக திகழ்வது புகையிலை சார்ந்த பொருட்கள்.
  9. இத்தகைய புற்றுநோய் வராமல் இருக்க சர்க்கரைவள்ளிக் கிழங்கை அதிக அளவில் சாப்பிட வேண்டும் .இதில் நிறைந்துள்ள அதிகப்படியான சத்துக்கள் புற்றுநோய் செல்கள் வளராமல் தடுக்கின்றது.  
  10. courtesy; https://manithan.com/article/sweet-potato-benefits-and-side-effects-1641053040?itm_source=parsely-external
  11. tq
  12. ================================================

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...