Followers

Sunday, November 7, 2021




 கண்க ளிரண்டும் அவன்கழல் கண்டு களிப்பன ஆகாதே

காரிகை யார்கள்தம் வாழ்வில்என் வாழ்வு கடைப்படும் ஆகாதே

மண்களில் வந்து பிறந்திடு மாறு மறந்திடும் ஆகாதே
    
மாலறி யாமலர்ப் பாதம் இரண்டும் வணங்குதும் ஆகாதே

பண்களி கூர்தரு பாடலொ டாடல் பயின்றிடு மாகாதே
    
பாண்டிநன் னாடுடை யான்படை யாட்சிகள் பாடுது மாகாதே

விண்களி கூர்வதோர் வேதகம் வந்து வெளிப்படு மாகாதே
    
மீன்வலை வீசிய கானவன் வந்து வெளிப்படு மாயிடிலே.....

=====================



================================
மீனைப் பிடிக்கும் பொருட்டு வலை வீசிய வேடனாகிய இறைவன், எழுந்தருளித் தோன்றுவனாயின், இரண்டு கண்களும், அவன் திருவடியைக் கண்டு களிப்பன ஆகாது போகுமோ? எனது வாழ்க்கை மகளிரொடு கூடிவாழ்வதில் முடிவு பெற்றுவிடுதல் ஆகாது போகுமோ? மண்ணுலகத்தில் வந்து பிறந்திடும் விதத்தை மறத்தல் ஆகாது போகுமோ? திருமால் அறியாத தாமரை மலர் போன்ற திருவடிகள் இரண்டையும் வழிபடுவதும் ஆகாது போகுமோ? இசையினால் மிக்க மகிழ்ச்சியைத் தருகின்ற பாட்டுடன், ஆட்டம் பழகுதல் ஆகாது போகுமோ? நல்ல பாண்டி நாட்டையுடைய இறைவன் தனது படையாகிய அடியார்களை ஆளும் தன்மைகளைப் பாடுதல் ஆகாது போகுமோ? விண்ணவரும் மகிழ்ச்சி மிகத் தக்க ஒரு மாற்றம் தோன்றுதல் ஆகாது போகுமோ?

=========================

=========================



====================
To secure the coveted fish,
if the Lord who As a Piscator,
cast His net,
manifests before me:
Will not my eyes twain rejoice beholding His ankleted feet?
Will not my life conjoined to women come to an end?
Will not the way of getting born on earth be forgotten?
Will my adoration of the flower-feet twain unperceived by Vishnu cease?
Will my practice of joyous melodious singing and dancing cease?
Will my singing of the suzerainty of His weapons,
the God of goodly Paandya realm cease?
Will the alchemy that gladdens the celestials cease to materialize?
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995


How could the geminii of eyes relish His kazhal-feet hence?
How could my dalliance with dark ladies log off?
How could birthing on glebe sink in letheia to oblivion?
How could bowing unto the flower-feet-pair to Maal unknown go on?
How could tunes divine of song cum dance ravish ahead?
How could holy war-arms clang to rime the sovereign Pantiyalander more?
How could an alembic result to please the celestials any far?
If He the woodlander that cast the fish-net were to manifest for sure.

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2013
==========================

ஆதியாய் நடுவு மாகி
   அளவிலா அளவும் ஆகிச்
சோதியா யுணர்வு மாகித்
   தோன்றிய பொருளு மாகிப்
பேதியா ஏக மாகிப்
   பெண்ணுமாய் ஆணு மாகிப்
போதியா நிற்குந் தில்லைப்
   பொதுநடம் போற்றி போற்றி
.

====================

பொழிப்புரை:

உயிர்கள் தத்தம் வினைப்பயனைத் துய்த்தற்கேற்ப எல்லாப் பொருள்களையும் தோற்றுவிக்கும் முதற்கடவுளாயும், அவற்றைக் காக்கும் காப்புக் கடவுளாயும், தன்னறிவாலும் (பசு ஞானம்) தன்னைச் சூழ்ந்துள்ள பொருள்களின் அறிவாலும் (பாச ஞானம்) அளந்து அறியப்படாததாயும், ஒளிப்பிழம்பாயும், உயிர்க் குயிராய் நின்று கருவி கரணங்களோடு கூட்டி அவற்றின் வழி உணரச் செய்யும் உணர்வாயும், தம்மால் தோற்றுவிக்கப்பட்ட அறிவுடைய னவும், அறிவற்றனவுமாய பொருள்களாயும், அவ்வப் பொருள்களி னின்றும் பிரித்தற்கு இயலாததாய் அவற்றுடன் கலந்து நிற்கும் பொரு ளாயும், உலகில் பிரித்துக் காண்டற்குரிய ஆண், பெண் என்னும் இரு வகை உயிரினங்களிலும் இயைந்து நிற்றல் பற்றி அவ்வாண், பெண் வடிவினதாயும் உள்ள இறை, உயிர்கட்கு எஞ்ஞான்றும் தன் குணங் களாலும் செயல்களாலும் அறிதற்குரிய அறிவினைக் கற்பித்து, தில்லை மன்றிலே நடனம் செய்கின்ற ஆடல் திறனுக்கு வணக்கம் செலுத்து கின்றேன்.

 

=====================

It is the beginning, the middle and the end; it is
Immeasurable by logic, and cognisable only by Gnosis;
It is light animating consciousness; it pervades all
In their manifestation as the One non-separate;
It is the male and the female; it is the illuminating Dance
Enacted in Tillai’s Court! Praise be!

Translation: T.N. Ramachandran

கற்பனை கடந்த சோதி
   கருணையே யுருவ மாகி
அற்புதக் கோல நீடி
   யருமறைச் சிரத்தின் மேலாஞ்
சிற்பர வியோம மாகுந் 
    திருச்சிற்றம் பலத்துள் நின்று
பொற்புடன் நடஞ்செய் கின்ற
   பூங்கழல் போற்றி போற்றி
.

=======================

பொழிப்புரை:

தன்னறிவாலும், தளையறிவாலும் கற்பிக்கப் பெறும் கற்பனைகளையெல்லாம் கடந்து நிற்கும் ஒளி வடிவாகிய இறைவன், தன் கருணையால் வடிவு கொண்டு, யாவர்க்கும் அற்புதம் விளைக்கும் திருக்கோலத்தில், சிறந்த அரிய மறைகளின் முடிவாக உள்ள உபநிடதங்கட்கும் உச்சியின் மேலாய் நிற்கும் ஞான ஒளி வடிவாய் விளங்கும் திருச்சிற்றம்பலத்துள் நிலைத்து நின்று, அழகும், மகிழ்வும், பொருந்த நடனம் செய்தருளும் பொலிவினை உடையவா கிய திருவடிகட்கு, என் வணக்கத்தைப் பன்முறையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

 

It is beyond the ken of Imagination; its from is Mercy;
It is poised in wondrous Beauty; it abides at Tiru-ch-chitrambalam
As the Ether of Gnosis -- the great peak of the Vedas rare;
This is the Grand Dance enacted by the feet,
Ankleted and flowery! Praise be!

Translation: T.N. Ramachandran

 


=====================

================================
http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?Song_idField=8149&padhi=25&thiru=8
===============================
.

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...