Followers

Tuesday, January 19, 2021

இந்த முருகன் பாடல் உங்களுக்கு அஷ்ட ஐஸ்வரியத்தை கொண்டு வரும் | Special M...


வேல் விருத்தம் பாடல் வரிகள் |
 Vel Virutham Lyrics in Tamil

திரு அருணகிரிநாதர் அருளிய வேல் விருத்தம் (Vel Virutham)

1. மகரம்அள றிடைபுரள உரககண பணமவுலி
மதியும்இர வியுமலையவே
வளரெழிலி குடருழல இமையவர்கள் துயரகல
மகிழ்வுபெறு மறுசிறையவாஞ்
சிகரவரை மனைமறுகு தொறுநுளைய மகளிர்செழு
செநெல்களொடு தரளம் இடவே
செகசிரப கிரதிமுதல் நதிகள்கதி பெற உததி
திடர்அடைய நுகரும் வடிவேல்
தகரமிரு கமதமென மணமருவு கடகலுழி
தருகவுளும் உறுவள் எயிறுந்
தழைசெவியும் நுதல்விழியும் உடையஒரு கடவுள்மகிழ்
தருதுணைவன் அமரர்குயிலுங்
குகரமலை எயினர்குல மடமயிலும் எனஇருவர்
குயமொடமர் புரியுமுருகன்
குமரன்அறு முகன்எதிரும் விருதுநிசி சரர்அணிகள்
குலையவிடு கொடியவேலே.


2. வெங்காள கண்டர்



வெங்காள கண்டர்கைச் சூலமுந் திருமாயன்
வெற்றிபெறு சுடர் ஆழியும்
விபுதர்பதி குலிசமுஞ் சூரன் குலங் கல்லி
வெல்லா எனக்கருதியே
சங்க்ராம நீசயித் தருளெனத் தேவருஞ்
சதுர்முகனும் நின்றிரப்பச்
சயிலமொடு சூரனுடல் ஒருநொடியில் உருவியே
தனிஆண்மை கொண்ட நெடுவேல்
கங்காளி சாமுண்டி வாராகி இந்த்ராணி
கெளமாரி கமலாசனக்
கன்னிநா ரணிகுமரி த்ரிபுரைபயி ரவிஅமலை
கெளரிகா மாஷிசைவ
சிங்காரி யாமளை பவாநிகார்த் திகைகொற்றி
த்ரியம்பகி அளித்த செல்வச்
சிறுவன்அறு முகன்முருகன் நிருதர்கள் குலாந்தகன்
செம்பொற் றிருக்கை வேலே.

3. வேதாள பூதமொடு


வேதாள பூதமொடு காளிகா ளாத்ரிகளும்
வெகுளுறு பசாசகணமும்
வெங்கழு குடன்கொடி பருந்துசெம் புவனத்தில்
வெம்பசி ஒழிக்கவந்தே
ஆதார கமடமுங் கணபண வியாளமும்
அடக்கிய தடக்கிரியெலாம்
அலையநட மிடுநெடுந் தானவர் நிணத்தசை
அருந்திப் புரந்தவைவேல்
தாதார் மலர்ச்சுனைப் பழநிமலை சோலைமலை
தனிப்பரங் குன்றேரகம்
தணிகைசெந் தூரிடைக் கழிஆவி னன்குடி
தடங்கடல் இலங்கைஅதனிற்
போதார் பொழிற்கதிர் காமத் தலத்தினைப்
புகழும்அவ ரவர்நாவினிற்
புந்தியில் அமர்ந்தவன் கந்தன்முரு கன்குகன்
புங்கவன் செங்கை வேலே.



4. அண்டர் உலகும் சுழல


அண்டர்உல குஞ்சுழல எண்திசைக ளுஞ்சுழல
அங்கியும் உடன்சுழலவே
அலைகடல்க ளுஞ்சுழல அவுணருயி ருஞ்சுழல
அகிலதல முஞ்சுழலவே
மண்டல நிறைந்தரவி சதகோடி மதியுதிர
மாணப் பிறங்கியணியும்
மணிஒலியி னிற்சகல தலமுமரு ளச்சிரம
வகைவகையி னிற்சுழலும் வேல்
தண்டமுட னுங்கொடிய பாசமுட னுங்கரிய
சந்தமுட னும்பிறைகள்போல்
தந்தமுட னுந்தழலும் வெங்கணுட னும்பகடு
தன்புறம் வருஞ்சமனையான்
கண்டுகுலை யும்பொழுதில் அஞ்சலென மென்சரண
கஞ்சம்உத வுங்கருணைவேள்
கந்தன்முரு கன்குமரன் வண்குறவர் தம்புதல்வி
கணவன் அடல் கொண்ட வேலே.


5. ஆலமாய் அவுணரு


ஆலமாய் அவுணருக் கமரருக் கமுதமாய்
ஆதவனின் வெம்மைஒளிமீ
தரியதவ முநிவருக் கிந்துவிற் றண்ணென்
றமைந்தன்ப ருக்கு முற்றா
மூலமாம் வினையறுத் தவர்கள்வெம் பகையினை
முடித்திந்தி ரர்க்கு மெட்டா
முடிவிலா நந்தநல் கும்பத மளித்தெந்த
மூதண்ட மும்புகழும் வேல்
ஏலமா யானையின் கோடதிற் சொரிமுத்து
மின்பணைக ளுமிழு முத்தும்
இனிவாடை மான்மதம் அகிலோடு சந்தனம்
இலவங்க நறவமாருந்
தாலமா மரமுதற் பொருள்படைத் திடும்எயினர்
தருவநிதை மகிழ்நன் ஐயன்
தனிநடம் புரிசமர முருகன்அறு முகன்குகன்
சரவணக் குமரன் வேலே.



6. பந்தாடலிற்கழ


பந்தாட லிற்கழங் காடலிற் சுடர்ஊசல்
பாடலினொ டாடலின்எலாம்
பழந்தெவ்வர் கட்கம் துணித்திந்தி ரற்கரசு
பாலித்த திறல் புகழ்ந்தே
சந்தாரு நாண்மலர்க் குழல்அரம் பையர்களும்
சசிமங்கை அனையர்தாமுந்
தன்னைஅன் பொடுபாடி ஆடும்ப்ர தாபமும்
தலைமையும் பெற்ற வைவேல்
மந்தாகிநித்தரங் கச்சடில ருக்கரிய
மந்த்ரஉப தேச நல்கும்
வரதேசி கன்கிஞ்சு கச்சிகா லங்கார
வாரணக் கொடி உயர்த்தோன்
கொந்தார் மலர்க்கடம் புஞ்செச்சை மாலையுங்
குவளையுஞ் செங்காந்தளுங்
கூதாள மலருந் தொடுத்தணியு மார்பினன்
கோலத் திருக்கைவேலே.

 
7. அண்டங்கள் ஒருகோடி



அண்டங்கள் ஒருகோடி ஆயினுங் குலகிரி
அநந்தமா யினுமேவினால்
அடையவுரு விப்புறம் போவதல் லதுதங்கல்
அறியாது சூரனுடலைக்
கண்டம் படப்பொருது காலனுங் குலைவுறுங்
கடியகொலை புரியு மதுசெங்
கநகா சலத்தைக் கடைந்துமுனை யிட்டுக்
கடுக்கின்ற துங்க நெடுவேல்
தண்டந் தநுத்திகிரி சங்குகட் கங்கொண்ட
தானவாந் தகன்மாயவன்
தழல்விழிக் கொடுவரிப் பருவுடற் பஃறலைத்
தமனியச் சுடிகையின் மேல்
வண்டொன்று கமலத்து மங்கையுங் கடல்ஆடை
மங்கையும் பதம்வருடவே
மதுமலர்க் கண்துயில் முகுந்தன்மரு கன்குகன்
வாகைத் திருக்கை வேலே.


8. மாமுதல் தடிந்து

மாமுதல் தடிந்துதண் மல்குகிரி யூடுபோய்
வலியதா னவர்மார்பிடம்
வழிகண்டு கமலபவ னத்தனைச் சிறையிட்டு
மகவான் தனைச்சி றைவிடுத்
தோமவிரு டித்தலைவர் ஆசிபெற் றுயர்வானில்
உம்பர்சொற் றுதிபெற்றுநா
உடையகீ ரன்தனது பாடல்பெற் றுலகுதனில்
ஒப்பில்புகழ் பெற்ற வைவேல்
சோமகல சப்ரபா லங்கார தரஜடா
சூடிகா லாந்தகாலர்
துங்கரக்ஷ கத்ரோண கட்ககுலி சஞ்சூல
துரககே சரமாம்பரச்
சேமவட வாம்புயப் பரணசங் காபரண
திகம்பர த்ரியம்பகமகா
தேவ நந்தனகஜா நநசகோ தரகுகன்
செம்பொற் றிருக்கை வேலே.



9. தேடுதற் கரிதான

தேடுதற் கரிதான நவமணி அழுத்தியிடு
செங்கரனை யமுதம் வாய்கொள்
செயமளித் தருளெனக் கெனஉவப் பொடுவந்து
சேவடி பிடித்ததெனவும்
நீடுமைக் கடல்சுட்ட திற்கடைந் தெழுகடலும்
நீயெமைக் காக்க எனவும்
நிபிடமுடி நெடியகிரி எந்தமைக் காவெனவும்
நிகழ்கின்ற துங்கநெடுவேல்
ஆடுமைக் கணபணக் கதிர்முடிப் புடையெயிற்
றடலெரிக் கொடிய உக்ர
அழல்விழிப் படுகொலைக் கடையகட் செவியினுக்
கரசினைத் தனியெடுத்தே
சாடுமைப் புயலெனப் பசுநிறச் சிகரியிற்
றாய்திமித் துடனடிக்குஞ்
சமரமயில் வாகனன் அமரர்தொழு நாயகன்
சண்முகன் தன்கை வேலே.


10. வலாரியல லாகுலமி

வலாரியல லாகுலமி லாதகல வேகரிய
மாலறியு நாலு மறைநூல்
வலானலை விலானசி விலான்மலை விலானிவர்
மநோலய உலாசம் உறவே
உலாவரு கலோலம கராலய சலங்களும்
உலோகநிலை நீர்நிலையிலா
வொலாவொலி நிசாசரர் உலோகம தெலாமழல்
உலாவிய நிலாவு கொலைவேல்
சிலாவட கலாவிநொ தவாசிலி முகாவிலொச
னாசின சிலாத ணிவிலா
சிலாமலர் எலாமதிய மோதமதி சேலொழிய
சேவக சராப முகிலாம்
விலாசகலி யாணகலை சேரபசு மேலைமுலை
மேவிய விலாச அகலன்
விலாழியி னிலாழியகல் வானில்அனல் ஆரவிடு
வேழம்இளை ஞன்கை வேலே.

courtesy; https://aanmeegam.co.in/blogs/lyrics/vel-virutham-lyrics/
சஸ்திர பந்தம்
வேல் மாறல் பாடல் வரிகள்

 

மனநலத்தை மேம்படுத்தும் மந்திரப் பரிகாரம்! -வி. விஜயராகவன்.........

 

 

மாறிவரும் சமூகப் பொருளாதாரச் சூழலில், மக்கள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகும் சூழல் அதிகரித்துவருகிறது. ஆண்- பெண் உறவுகள், குடும்ப உறவுகள், அலுவலகம், தொழில் என்று எத்தனையோ தளங்களில் மனிதர்கள் இயங்கவேண்டியுள்ளது. இவற்றில் ஏற்படும் பிரச்சினைகளால் மன உளைச்சல், மன அழுத்தம் போன்ற பலவகையான பாதிப்புகளுக்கு ஆளாக வேண்டியிருக்கிறது. "டிப்ரஷன்' என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் மனச்சோர்வு, இன்று ஏதுமறியா குழந்தைகள்முதல் எல்லாவற்றையும் அனுபவித்து முடித்த பெரியவர்வரை காணப்படுகிறது. ஒருவரையொருவர் சார்ந்துவாழும் இன்றைய சூழலில் இது தவிர்க்க முடியாததாகிவிட்டது. இதன் தாக்கம் அதிகரிக்கும்போது சிலர் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகின்றனர். சிலர் வன்முறை போன்ற குற்றங்களில் ஈடுபடுகின்றனர். இன்னும் சிலர் தற்கொலை போன்ற தவறான முடிவுகளுக்குச் செல்கின்றனர்.

 

இதுதவிர, தனக்குத்தானே பேசிக் கொள்வது; இருவேறு நபர்கள்போல தன்னை உணர்வது (bipolar disorder); எப்போதும் காமம் அல்லது வன்முறை பற்றியே சிந்திப்பது; இயற்கைக்கு மாறான உறவுகளில் நாட்டம்; தன்னைவிட வயதில் மூத்த அல்லது இளைய ஆண் அல்லது பெண்மீது காதல்கொண்டு, அதை நிறைவேற்றும் வழிதெரியாமல் மனதிற்குள் அழுத்திக்கொண்டு, அதனால் புறவுலகைப் பற்றிய எண்ணமே இல்லாமல் எங்கோ வெறித்தபடி இருப்பது போன்றவற்றையும் காண முடிகிறது.

காதல் சார்ந்த மன அழுத்தம் ஏற்பட்டு, அதனால் ஒரு ஆணும் பெண்ணும் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்றால், அவர்களது ஜாதகத்தில் புதனும் கேதுவும் இணைந்திருப்பார்கள். இந்த அமைப்புடைய வர்கள் காதல் வலையில் வீழ்வார்கள் என்று ஜோதிடம் கூறுகிறது. மேலும் குரு, சூரியன், சனி ஆகிய கிரகங்கள் ஆறாமிடத்து அதிபதியுடன் கூடியிருந்தாலும், மனதளவில் சில பாதிப்புகள் இருக்கும். சிலருக்கு எதிர்மறை எண்ணங்கள் அதிகமாக இருக்கும். சிலருக்கு வாழ்க்கையில் எல்லா வசதிகளும் இருந்தாலும் எதையோ இழந்தது போன்று அல்லது ஏதோவொன்று தன்னிடம் இல்லாதது போன்று தோன்றும். அதீத கோபம் அல்லது வெறுப்பும் சிலர்மீது ஏற்படும். தெளிவான சிந்தனையும் கட்டுக்கோப்பான நடைமுறைகளும் இல்லாமல், சற்று வித்தியாசமாக எதற்கெடுத்தாலும் எரிந்துவிழுவார்கள். யாருடனும் ஒட்டாமல் இருப்பார்கள். தன்னை உயர்வாகக் கருதிக்கொண்டு மற்றவர்களைக் கேவலமாக மதிப்பார்கள். இதே போல தன்னைத் தாழ்வாகக் கருதிக்கொள்ளும் தாழ்வுமனப்பான்மையும் ஆழ்மனதில் ஏற்பட்டுள்ள அழுத்தமான பிம்பங்களின் பிரதிபலிப்புகளே.

மன அழுத்தம் இரண்டு வகையாக ஏற்படுமென்று மருத்துவ அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். சிலருக்கு மூளையின் செயல்பாடுகளில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும்போது மன அழுத்தம் ஏற்படலாம். ஆண்- பெண் உறவு களில் ஏற்படும் பிரச்சினைகள், அலுவலகம் மற்றும் வெளியிடம் சார்ந்த அழுத்தங்களால் மன அழுத்தம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. மன அழுத்தமென்பது எப்போதும் காலத்தோடு தொடர்புடையது. கடந்தகால நிகழ்வுகள், நிகழ்காலத்தில் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியாத நிலை, "எதிர்காலம் என்னாகுமோ' என்ற அச்சத்தின் காரணமாக பொதுவாக மனஅழுத்தம் ஏற்படுகிறது.

மனம் எண்ணங்களால் ஆனது.

எண்ணம்போல்தான் வாழ்க்கை. தான் விரும்பியது நடக்காதபோதும், விரும்பாதது நடக்கும்போதும் மனம் குழம்பி, "இனி எதிர்காலமே இல் லையோ' என்ற குழப்பத்துக்கு ஆளாகி விடுகிறது.

 



ஜோதிட சாஸ்திரம் மனம் சார்ந்த பிரச்சினைகளுக்குக் காரணமாக பல்வேறு கிரக அமைப்புகளைக் கூறியிருக்கிறது. பொதுவாக ஒருவருக்கு மனம் நல்ல நிலையிலும், எண்ணியதை எண்ணியபடி நடத்தும் துணிவும், அதற்குண்டான ஆற்றலும் இருக்க வேண்டுமானால் லக்னம், மூன்றாமிடம், மனோகாரகன் சந்திரன், சூரியன் ஆகியவை நல்ல நிலையில் இருக்க வேண்டும். அவ்வாறு பிறந்த ஜாதகர் இயல்பிலேயே நினைத்ததை சாதிக்கும் திறமையுள்ளவராகவும், குழப்பமில் லாமல் தீர்க்கமாக முடிவெடுக்கும் மனமுள்ளவராகவும் இருப்பார். அவர் விரும்பியது கிடைக்கும்வரை ஓய மாட்டார்.

சிலர் தன்னால் முடிகிறதோ இல்லையோ- எந்த திட்டமிடலும் இல்லாமல் துணிந்து செயலில் இறங்கி வெற்றிபெறுவதும் உண்டு. இதற்கு பாவ கிரகங்களான சூரியன், செவ்வாய் மூன்றாமிடத்தில் இருப்பதும் காரணம். மாறாக மூன்றாமிடத்தில் சுப கிரகங்கள் இருக்கப் பிறந்தவர்கள், சிறிய விஷயத்தைக்கூட தேவைக்குமீறி யோசித்து, சிலசமயம் தள்ளிவைத்து, தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பிவிடுவார்கள். இன்னும் சிலர் மனக்குழப்பத்தோடும் எந்தவொரு செயலையும் செய்யமுடியாத தைரியக்குறைவோ டும் இருப்பார்கள். இதற்கு அவர்களுடைய ஜாதகத்தில் 3-க்குடையவர் நீசமடைவதோடு மறைந் தும், 5-க்குடையவரோடு சேர்ந்திருப்பதும் காரணம் என்று ஜோதிடப் பெரியோர்கள் கூறுகின்றனர்.

சிலர் எப்போதும் விரக்தியுடனும், எதிலும் ஈடுபாடில்லாமலும், வாயைத் திறந்தாலே எதிர்மறைப் பேச்சுகளோடும் இருப்பார்கள். எப்போதோ ஒருமுறை இவர்கள் விரும்பியபடி நடக்காமல் இருந்திருக்கலாம். இவர்களுக்கு ஜோதிடம் கூறுவது என்னவென்றால், இவர்களது ஜனன ஜாதகத்தில் ஆழ்மனதைக் குறிக்கும் ஆன்மகாரகன் சூரியன், கரும்பாம்பென்னும் ராகு அல்லது செம்பாம்பென்னும் கேது மற்றும் காரியாம் சனியுடன் சேர்ந்து காணப்படுவதே என்கிறது.

பொதுவாக சூரிய சந்திரர்கள் நன்கு வலிமையுடன் இருந்தாலே ஜாதகர் வாழ்க்கையில் பிரகாசிக்கமுடியும். குறிப்பாக சூரியன் கெடாமல்- அதாவது லக்னத்திற்கு பாவியாகவோ, ஆதிபத்திய ரீதியாக பாதகம் செய்பவராக இல்லாமலோ, மறைவு ஸ்தானங்களான 6, 8, 12 ஆகிய இடங் களில் மறையாமலோ இருக்கவேண்டும். துரதிர்ஷ்ட வசமாக மேற்கூறிய அமைப்புகளில் ஏதாவது ஒன்றில் சூரியன் இருந்தால் ஜாதகர் மனவிரக்தி உடையவராக இருப்பார்.

அடுத்தபடியாக சந்திரனின் நிலையும் ஆராயப் பட வேண்டும். காரணம்- சந்திரன்தான் மனதிற்கு அதிபதி. ஜாதகத்தில் சந்திரன் வலுவில்லாமல் இருப்பது- உதாரணமாக சந்திரனுடன் சனி, ராகு, கேது சேர்ந்திருப்பது அல்லது ஜென்ம லக்னத்திற்கு பாதகாதிபதியாக அமைந்த கிரகத்துடன் சேர்ந்திருப்பது, எட்டாமிடம் என்னும் துர்ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது போன்ற நிலையில் காணப்பட்டால் ஜாதகர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாவார்.

பொதுவாக கர்மகாரகன் சனியுடன் சேர்ந்திருப்பது, ஒருவருக்கொருவர் சமசப்தம நிலையில் சஞ்சரிப்பது ஆகிய நிலைகளில் சந்திரன் ஒருவரது ஜாதகத்தில் காணப்பட்டால், அந்த ஜாதகருக்கு எதிலும் பிடிப்பிருக்காது. எப்போதும் எதையாவது விபரீதமாக கற்பனை செய்துகொண்டு கடும் மனக்குழப்பத்திற்கு ஆளாவார். யாருடனும் பேசப் பழகப் பிடிக்காமல் கடுமையாகவும் நடந்து கொள்வார். இதேபோல கோட்சாரரீதியாக ராகு, கேது, சனி இருக்கும் ராசிகளில் சஞ்சரிக்கும் அந்த இரண்டரை நாட்களும் ஜாதகருக்கு டென்ஷன், மன அழுத்தம் போன்றவை ஏற்படும்.


ஒருவரது ஜாதகத்தில் அதிக கிரகங்கள் வக்ரம் பெற்றால், ஜாதகருக்கு எதிலும் எதிர்மறை சிந்தனைகள், மன அழுத்தம் போன்ற பாதிப்புகளும் இருக்கும். மேலும் நான்காமிட அதிபதி, நான்காமிடத்தில் அமர்ந்த மற்றும் பார்த்த கிரகங்களின் நிலையும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.

ஜோதிட சாஸ்திரம், "கர்மவினைகளை அடிப்படையாகக் கொண்டே ஒருவரது வாழ்க்கை அமைகிறது' என்று கூறுகிறது. முற்பிறவிகளில் செய்த வினைப்பயனையே இப்போது அனுபவிக்கிறோம். பொதுவாக ஒருவரது வாழ்க்கையில் கடுமையான மன பாதிப்புகள் ஏற்படுவதற்கு ஸ்த்ரீ சாபம், பித்ரு சாபம், பிரம்ம சாபம், மித்ர சாபம் என்று பல காரணங்கள் உண்டு. இவற்றை சரியாகக் கண்டறிந்து, உரிய நிவர்த்தி ஹோமம், பரிகாரங்களைச் செய்வது; மந்திர உபதேசம் பெற்று முறையாக ரட்சாதாரணம் ஏற்று ஜெபித்து வருவது; உரிய மந்திரத்தைப் பெற்றுப் பூஜிப்பது போன்றவற்றால் அவரவர் மன பாதிப்புகளால் ஏற்படும் பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம்.

மன பாதிப்புகள் மட்டுமல்ல; எவ்வளவு முயன்றும் திருமணம் கைகூடாமல் தள்ளிப் போவது; எல்லா தகுதிகள் இருந்தும் குழந்தை பிறக்காமல் போவது; நியாயமாகக் கிடைக்கவேண்டிய சொத்து கைக்கு வராமல்போவது; ஆண்- பெண் உறவுகளில் சிக்கல்- அதனால் நீதிமன்ற வழக்கு என்று அவமானங்களை சந்திப்பது; கணவன்- மனைவியுடன் பிரச்சினை போன்ற அன்றாட வாழ்வில் ஏற்படும் சிக்கலான பிரச்சினைகளுக்கும் மந்திர சாஸ்திரரீதியான பரிகாரங்களைச் செய்து நிம்மதியாக வாழலாம் என்பது அனுபவத்தில் கண்ட உண்மை.
courtesy; Nakkiran/balajothidam.
செல்: 95660 27065

 

Monday, January 18, 2021

 இறந்தவர்க்கும் நட்சத்திரம் பார்க்க வேண்டும் !தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்கள் 13 ஆகும்..........

இறந்தவர்களுக்கும் நட்சத்திரம் பார்க்க வேண்டியது மிக அவசியமானது என சித்தர்கள் கூறியுள்ளார்கள்.
தனிஷ்டா பஞ்சமி என்றால் என்ன? தனிஷ்டா பஞ்சமியில் என்ன செய்ய வேண்டும்?
தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்கள் 13 ஆகும்.
• அவிட்டம், சதயம்,பூரட்டாதி, உத்திரட்டாதி,ரேவதி ஆகிய 5 நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு ஆறு மாதங்கள் அடைப்பு.
• ரோஹிணியில் இறந்தவர்களுக்கு நான்கு மாதங்கள் அடைப்பு.
• கார்த்திகை, உத்திரம் ஆகிய நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு மூன்று மாதங்கள் அடைப்பு.
• மிருகசீருஷம், சித்திரை, புணர்பூசம்,விசாகம், உத்திராடம் ஆகிய ஐந்து நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு இரண்டு மாதங்கள் அடைப்பு என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.
பிறக்கும் போது நட்சத்திரத்தையும், இறப்புக்குத் திதியையும் நாம் நினைவில் கொள்வோம். ஆனால் இறக்கும் போது நட்சத்திரம் பார்க்க வேண்டியது அவசியம் என்று சித்தர்கள் சொல்லி வைத்துள்ளனர். சில நட்சத்திரங்கள் அடைப்பு என்று வழங்கப்படுகின்றன.
அது என்ன அடைப்பு? – அதாவது கர்மவினை, வினைப்பயன் காரணமாக மேலுலகம் செல்வதற்கு ஏற்படும் தடையையே அடைப்பு என்று சொல்கிறார்கள். சித்தர்கள் தனிஷ்டா பஞ்சமி என்றழைப்பதுவும் இந்த நட்சத்திரங்களில் ஏற்படும் மரணங்களைத்தான்.
தனிஷ்டா பஞ்சமி என்பது ஒரு துர்தேவதையாகச் சொல்லப்பட்டுள்ளது. தீய அல்லது அடைப்பு உள்ள நட்சத்திரங்களில் இறந்தவர்கள் வீட்டில் முறையான பரிகாரங்களைக் கைகொள்ளாவிட்டால் இந்த துர்தேவதை புகுந்து அந்த வீட்டில் உள்ளவர்களை ஆவிரூபமாகவோ, கனவு மூலமாகவோ, பிரம்ம ராக்ஸத ரூபமாகவோ தோன்றி பயமுறுத்தி, 6 மாதத்திற்குள் மரணப்படுக்கையில் தள்ளிவிடும் என்பார்கள்.
முக்தி பெற்ற உயிர்கள் கபாலம் திறந்து சூரியன் வழியாக ஒளிவடிவான இறைவனை அடைகின்றன. ஆனால் முக்திநிலையை எட்டாத உயிர்கள் மீண்டும் உடல் எடுக்க உடல்காரகனான சந்திரனையே அடைகின்றன.
கடந்த காலங்களில் இந்த அடைப்பு காலங்கள் முடியும் வரை வீட்டை பூட்டியே வைத்திருப்பார்கள். சில இடங்களில் இறந்தவருடைய சடலத்தை வாசல் வழியாக கொண்டு செல்லாமல் சுவரை இடித்து அதன்வழியாக எடுத்துக் கொண்டுபோவது, போன்ற கடுமையான விதிமுறைகளை எல்லாம் தனிஷ்டா பஞ்சமிக்காக கடைபிடித்திருக்கிறார்கள். கூரையைப் பிரித்து அதன்வழியாகக் கூட சடலத்தை அப்புறப்படுத்தி உள்ளதைக் கேள்விப் படுகிறோம்.
ஒரு மனிதனானவன் எந்த நட்சத்திரத்தில் இறக்கிறானோ அந்த நட்சத்திரத்தின் வழியாகவே எமலோகத்திற்கு செல்வதாகச் சொல்லப்படுகிறது. 27 நட்சத்திரங்களில் இந்த தனிஷ்டாபஞ்சமி நட்சத்திரங்களான 13 நட்சத்திரங்கள் போக மீதமுள்ள 14 நட்சத்திரங்களில் இறப்பவர்கள் விரைவில் தடையேதுமின்றி எமலோகம் அடைகிறார்கள். தனிஷ்டாபஞ்சமி நட்சத்திரங்களில் இறந்தவர்கள் எமலோகம் சென்றடைய அந்த அடைப்பு என்று சொல்லப்பட்டுள்ள கால அவகாசம் தேவைப்படுகிறது. இதையே கருடபுராணமும் உறுதிப் படுத்துகின்றது.
இதற்கு பரிகாரமாக வீட்டையெல்லாம் இடிக்கத் தேவையில்லை. அந்த குறிப்பிட்ட காலம்வரை இறந்த இடத்தில் ஒரு திண்ணை அமைத்து, மாலைநேரத்தில் தீபம் ஏற்றி,தண்ணீர், நைவேத்தியம் வைத்து, கற்பூர ஆரத்தி செய்து ”இறந்த இந்த உயிருக்கு உணவும், நீரும் சென்றடைய இறைவா நீ உதவவேண்டும் ” என்று வேண்டிக் கொண்டு,கற்பூர ஆராதனைக்குப் பிறகு தீபம் அனையாதவாறு ஒரு கூடையைப் போட்டு மூடி வைத்துவிட வேண்டும். அந்த குறிப்பிட்ட நட்சத்திரத்துக்கான காலம்வரை இதைச் செய்து முடிக்க வேண்டும். அதன் பிறகு அதற்கான கிரியைகளை தகுந்த வேதப் பயிற்சி பெற்ற அந்தணர்களைக் கொண்டு செய்து கொள்ளவேண்டும்.
=====================================

Friday, January 15, 2021

8ஆயிரம் தேவார பாடல்களை பாடி இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த உடுமல...

8ஆயிரம் தேவார பாடல்களை பாடி இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த உடுமலை மாணவி செல்வி உமா நந்தினி!

Wednesday, January 13, 2021

 



வீடுகளில் சமைப்பது நின்ற அமெரிக்காவில் என்ன நடந்தது ?

1980-ல் புகழ் பெற்ற அமெரிக்க பொருளாதார நிபுணர்கள்
சமையல் அறையை தனியார் கம்பெனிகளுக்கு கொடுத்தாகிவிட்டது, வயதானவர்கள் குழந்தைகள் பராமரிப்பை அரசாங்கத்துக்கு கொடுத்துவிட்டால், குடும்பப் பொறுப்பும், பாங்கும் அழிந்துவிடும்” என்று தீர்க்கதரிசனமாகக் கூறினார்கள்.

அதாவது வீட்டில் சமைப்பது நிறுத்தி விட்டு
கடைகளில் வாங்கி கொள்ளும் பழக்கம் வந்தது இதனால் அவர்கள் எச்சரித்தபடியே பொறுப்பும் பாங்கும் அற்ற அமெரிக்க குடும்பங்கள் ஏறக்குறைய அழிந்துவிட்டன.

அன்புடன் சமைப்பது என்பது பாசத்துடன் குடும்பத்தை இணைப்பது.
சமையல் கலை மட்டும் அல்ல. குடும்ப கலாச்சாரத்தின் மையப்புள்ளி.
சமையல் அறை இல்லாது, வெறும் படுக்கை அறை மட்டும் இருந்தால் அது குடும்பம் அல்ல, தங்கும் விடுதி தான்.

சமையல் அறையை மூடிவிட்டு, படுக்கை அறை மட்டும் போதும் என்று நினைத்த அமெரிக்க குடும்பங்களின் நிலை என்ன?.
1971-ல் மொத்த குடும்பங்களில் கணவனும்-மனைவியும் குழந்தைகளுடன் இருந்த அமெரிக்க குடும்பங்கள் 71 சதவிகிதம்.
2020--ல் அது 20 சதவிகிதமாக நலிந்துவிட்டது.
அன்று வாழ்ந்த குடும்பங்களாக இருந்தது இன்று தங்கும் வீடுகளாகிவிட்டது.

அமெரிக்காவில் இப்போது பெண்கள் தனித்திருக்கும் வீடுகள் 15 சதவிகிதம்;
ஆண்கள் தனித்திருக்கும் வீடுகள் 12 சதவிகிதம்;
19 சதவிகிதம் வீடுகள் அப்பாவோ, அம்மாவோ மட்டுமே இருக்கும் வீடுகள்.
6 சதவிகிதம் வீடுகள் குடும்பங்கள் ஆண்--பெண் சேர்ந்து தங்குமிடங்கள்.
இன்று பிறக்கும் மொத்த குழந்தைகளில் 41 சதவிகிதம் திருமணமாகாத பெண்களுக்கு பிறக்கின்றன.

அதில் பாதி குழந்தைகள் பள்ளிக்கூடம் போகும் சிறுமிகளுக்கு,
இந்த அலங்கோலத்தால் அமெரிக்காவில் 50 சதவிகிதம் முதல் திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன.
67 சதவிகிதம் இரண்டாவது திருமணங்களும்,

74 சதவிகிதம் மூன்றாவது திருமணங்களும் விவகாரத்தாகின்றன
வெறும் படுக்கை அறை மட்டும் குடும்பம் அல்ல.
சமையல் அறை இல்லாது, படுக்கை அறை மட்டும் இருந்தால்
திருமணம் நிலைகுலைந்துவிடும் என்பதற்கு அமெரிக்கா உதாரணம்
அங்குபோல இங்கும் குடும்பங்கள் அழிந்தால் நமது பெண்ணுரிமைவாதிகள் கடைகளில் இனிப்பு வாங்கி வழங்கி கொண்டாடுவார்கள்

குடும்பங்கள் அழிந்தால் மனநலமும் உடல் நலமும் சீரழியும்.
வெளியில் சாப்பிடுவதால் உடல் ஊதிப்போகிறது
ஏராள தொற்று வியாதிகள் வருகின்றன
சேமிப்பும் குறைகிறது.
எனவே சமையல், சமையல் அறை என்பது குடும்ப நலனுக்கு மட்டும் ஆதாரம் அல்ல
உடல் நலம் மன நலம் பொருளாதாரத்துக்கு கூட அவசியம்.


இதிலிருந்து அனைத்து நன்மைக்கும் பெண்கள் இன்றி அமையாத கடவுள் படைப்பு என்பதை ஆண்கள் உணரலாம்.
மேலும் ஆன்மிக ரீதியாக சமைப்பவரின் குணநலன்கள், பழக்கவழக்கங்கள்
அவர் சமைக்கின்ற உணவிலும் வரும் என்பதும் உண்மை.., என்பது நம்பிக்கையும் கூட


ஆதலால்தான் நம் வீட்டில் பெரியவர்கள் ஹோட்டல்களில்
(கிளப்புகடைகளில்) சாப்பிடுவதை தவிர்த்தும், கண்டித்தும் வந்தனர்
ஆனால் இன்று நம்மிடையே குடும்பத்துடன் கடைகளில் சாப்பிடுவதும்...
Swiggy, Zomato, uber eats போன்ற ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடுவதும்
மெத்தப் படித்த, நடுத்தர மக்களிடமும் நாகரீகமாகிக்கொண்டிருக்கிறது.,
இது ஒரு பேராபத்து...

நாம் என்ன சாப்பிட வேண்டும் என்பதை அந்த ஆன் லைன் நிறுவனங்களே உளவியல் ரீதியாக தீர்மானிக்கிறார்கள்... இந்த நிறுவனங்களுக்கு தற்போது சீன நாட்டு முதலீடுகளும் வந்துள்ளன
முன்பெல்லாம் நம்முன்னோர்கள்
யாத்திரை மற்றும் சுற்றுலா செல்லும் போதுகூட புளியோதரை மற்றும் தயிர் சாதங்களை கட்டிக் கொண்டு செல்வார்கள்
நம் தர்மத்தில் வாழ்க்கை முறையில்
பெண்களை, குறிப்பாக மனைவியை,
போஜ்யேஷு மாதா”, அதாவது உணவூட்டுவதில் தாய், என்கிறது சம்ஸ்க்ருத சுபாஷிதம்.

ஆகையால் வீட்டிலேயே சமையல் செய்யுங்கள்.
அனைவரும் சேர்ந்து உணவருந்துங்கள்
காலையில் எறும்புக்கும்
பகலில் காக்கைக்கும்
இரவில் நாய்க்கும் உணவிடுங்கள்
குடும்பமாய் இருங்கள்
ஒற்றுமையாய் வாழுங்கள்...

P-P
==================

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...