Followers

Sunday, November 29, 2020

 

மண் குதிரை -மங்கு திரை -மண் குதிர்....

மண் குதிரை -மங்கு திரை -மண் குதிர்....

" மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே!!!".....இப்படி ஓர் பழ மொழியோ!!!,சொல் வழக்கோ!!
நீங்கள் கேட்காமல் இருந்திருக்க முடியாது.

அதாவது...இதைச் சொல்பவர்கள் எல்லோருமே!!!! ஆற்றைக் கடக்க ஒருவன் மண்ணில் குதிரையைச் செய்து முயலக் கூடாது; எனும் கருத்திலேயே!!!! உபயோகிக்கிறார்கள்.
அவன் ஆறு கடக்க ; மண்மாடோ!
மண் கழுதையோ; மண் கப்பலோ
 நம்பக்கக் கூடாதெனச் சொல்லவில்லை.
மண் குதிரையெனவே! சொல்லப்பட்டுள்ளது.

இதைப் பற்றிச் சிந்தித்தால் ; ஆறைக் கடக்க குதிரை தேவை எனும் சிந்தனையுள்ள ஒருவன்; அதை மண்ணிலா???செய்வான்....

எனவே!!!!!இந்தக் "குதிரை" சிந்தனைக்குரியது.
ஏன்??? இந்த சொல்வழக்கம் வந்தது.சிலர் கூறுகிறார்கள் ....இது மண்குதிரை அல்ல "மங்கு திரை" அதாவது அடங்கி; தேய்ந்து போகின்ற அலை;.;;;;;(திரை=அலை- திரை கடலோடியும் திரவியம் தேடு); அதை நம்பி ஆற்றில் இறங்கக் கூடாது.காரணம் அது மீண்டு வரும்.
ஆனாலும் ஆற்றில் அலைகள் ; கடலைப்போல வந்து போகும் தன்மையற்றது; பதிவை நோக்கி வெறியுடன் வழிந்தோடுவது....அதனால் மங்கும் திரை ;மங்கும் அலை சாத்தியமல்ல!!!ஆற்றலை பொங்கும் அலை!

அப்படியானால் ....;என்ன தான் சொல்லியுள்ளார்கள்.
அவர்கள் சரியாகத் தான் சொல்லியுள்ளார்கள்!!!

அவர்கள் சொன்னது...;மண் குதிர் ; அதாவது மண்பிட்டிகள்;மண் திட்டுக்கள்! ஆற்றின் ஓட்டதால் வரும் மண் அங்காங்கே!! குவியலாகச் சேரும் அது "நெற்குதிர் போல் கூம்பாக இருக்கும் ;அதை நம்பி ஆற்றில் இறங்கினால். அதில் காலை வைத்தால்( அது உயரமாக உள்ளதைப் பிட்டி என நம்பி)
சொரிந்து போகும் தன்மையுடைய "மண் குதிர்" கலைந்து; நீருனுள் அமிழும் ஆபத்துள்ளது.
இதைத் தான் நம் முன்னோர் !!!!சரியாகத் தான் சொல்லியுள்ளார்கள்.
நாமோ;;நம்முரையாசிரியர்களோ!!!!தவறாகப் புரிந்து விட்டோமென!!!
நான் இலங்கையில் மலையகத்தில் கடமைபுரியும் போது; ஆற்றில் குளிக்கையில் ஓர் முதியவர் விளக்கினார்;
அவர் விளக்கம் பொருத்தமாகத் தானே உள்ளது.

நீங்கள் என்ன ?? சொல்கிறீர்கள்!
இப்போ பார்ப்போமா,,,???"யை" ஐ விட்டு!

மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே!!!

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...