Followers

Sunday, November 29, 2020

Nadaswaram Vidvan, Sri Pillappan, Performing Nadaswaram Music Beautifull...


Nadaswaram Vidvan, Sri Pillappan, Performing Nadaswaram Music Beautifully Inside a Temple

இவர் சாதாரண மனிதர் இல்லை , அந்த நாத பிரம்மமே இவர் மூலமாக இசையாக , வெளிப்படுகிறது............DIVINE DIVINE DIVINE..............OM NAMASIVAYA OM.

=================================

வானைக்காவில் வெண்மதி மல்குபுல்கு வார்சடைத்

தேனைக்காவி லின்மொழித் தேவிபாக மாயினான்

ஆனைக்காவில் அண்ணலை அபயமாக வாழ்பவர்

ஏனைக்காவல் வேண்டுவார்க் கேதுமேத மில்லையே.

 

ஊழியூழி வையகத் துயிர்கள்தோற்று வானொடும்

ஆழியானுங் காண்கிலா னைக்காவி லண்ணலைக்

காழிஞான சம்பந்தன் கருதிச்சொன்ன பத்திவை

வாழியாகக் கற்பவர் வல்வினைகள் மாயுமே.

https://www.youtube.com/watch?v=1pt7YwzOBLk&ab_channel=BalasundharamSubramaniam

==================================


http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=3&Song_idField=30530&padhi=053&startLimit=1&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC
=============================================

 

மண் குதிரை -மங்கு திரை -மண் குதிர்....

மண் குதிரை -மங்கு திரை -மண் குதிர்....

" மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே!!!".....இப்படி ஓர் பழ மொழியோ!!!,சொல் வழக்கோ!!
நீங்கள் கேட்காமல் இருந்திருக்க முடியாது.

அதாவது...இதைச் சொல்பவர்கள் எல்லோருமே!!!! ஆற்றைக் கடக்க ஒருவன் மண்ணில் குதிரையைச் செய்து முயலக் கூடாது; எனும் கருத்திலேயே!!!! உபயோகிக்கிறார்கள்.
அவன் ஆறு கடக்க ; மண்மாடோ!
மண் கழுதையோ; மண் கப்பலோ
 நம்பக்கக் கூடாதெனச் சொல்லவில்லை.
மண் குதிரையெனவே! சொல்லப்பட்டுள்ளது.

இதைப் பற்றிச் சிந்தித்தால் ; ஆறைக் கடக்க குதிரை தேவை எனும் சிந்தனையுள்ள ஒருவன்; அதை மண்ணிலா???செய்வான்....

எனவே!!!!!இந்தக் "குதிரை" சிந்தனைக்குரியது.
ஏன்??? இந்த சொல்வழக்கம் வந்தது.சிலர் கூறுகிறார்கள் ....இது மண்குதிரை அல்ல "மங்கு திரை" அதாவது அடங்கி; தேய்ந்து போகின்ற அலை;.;;;;;(திரை=அலை- திரை கடலோடியும் திரவியம் தேடு); அதை நம்பி ஆற்றில் இறங்கக் கூடாது.காரணம் அது மீண்டு வரும்.
ஆனாலும் ஆற்றில் அலைகள் ; கடலைப்போல வந்து போகும் தன்மையற்றது; பதிவை நோக்கி வெறியுடன் வழிந்தோடுவது....அதனால் மங்கும் திரை ;மங்கும் அலை சாத்தியமல்ல!!!ஆற்றலை பொங்கும் அலை!

அப்படியானால் ....;என்ன தான் சொல்லியுள்ளார்கள்.
அவர்கள் சரியாகத் தான் சொல்லியுள்ளார்கள்!!!

அவர்கள் சொன்னது...;மண் குதிர் ; அதாவது மண்பிட்டிகள்;மண் திட்டுக்கள்! ஆற்றின் ஓட்டதால் வரும் மண் அங்காங்கே!! குவியலாகச் சேரும் அது "நெற்குதிர் போல் கூம்பாக இருக்கும் ;அதை நம்பி ஆற்றில் இறங்கினால். அதில் காலை வைத்தால்( அது உயரமாக உள்ளதைப் பிட்டி என நம்பி)
சொரிந்து போகும் தன்மையுடைய "மண் குதிர்" கலைந்து; நீருனுள் அமிழும் ஆபத்துள்ளது.
இதைத் தான் நம் முன்னோர் !!!!சரியாகத் தான் சொல்லியுள்ளார்கள்.
நாமோ;;நம்முரையாசிரியர்களோ!!!!தவறாகப் புரிந்து விட்டோமென!!!
நான் இலங்கையில் மலையகத்தில் கடமைபுரியும் போது; ஆற்றில் குளிக்கையில் ஓர் முதியவர் விளக்கினார்;
அவர் விளக்கம் பொருத்தமாகத் தானே உள்ளது.

நீங்கள் என்ன ?? சொல்கிறீர்கள்!
இப்போ பார்ப்போமா,,,???"யை" ஐ விட்டு!

மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே!!!

 

நிச்சயம் நீங்க தமிழர் தான்!.....இப்படி இருந்தால்.....


இன்று காலை மின்னஞ்சல் ,திறந்ததும் என் நண்பர் சென்னையில் இருந்து அனுப்பிய இந்த விபரத்தைப் பார்த்ததும்; உங்களுடன் பகிரவேண்டும் போல் இருந்தது.அதுவும் 20ம் குறிப்பை நிரூபித்து தானும் தமிழனே என்று !உறுதிப்படுத்த வேண்டாமா???நண்பர் வட்டத்துள் சொல்லி விட்டேன்.நீங்களும் சுயசோதனை செய்யவும்.


1. எந்தப் பொருள் வாங்கினாலும், ரொம்ப நாளைக்கு அதைச் சுத்தி இருக்கற ஜவ்வு பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க..!

2. உங்க சமையலில் உப்பு, புளி, மிளகாய் சேராமல் எந்த உணவும் இருக்காது..!
3. உங்களுக்கு வந்த அன்பளிப்புப் பொருட்களில், பால் குக்கரும், அஜந்தா சுவர்க் கடிகாரமும் நிச்சயம் இடம் பிடிச்சிருக்கும்..! ரொம்பப் பேரு தங்களுக்கு வந்ததை அடுத்தவங்க தலையில் [அன்பளிப்பாதான்] கட்டிவிட திட்டம் போட்டுகிட்டு இருப்பாங்க..!

4. வெளிநாட்டுக்குப் போயிட்டு வந்தீங்கன்னா, ஒரு மெகா சைஸ் சூட்கேஸோடதான் ஊருக்குத் திரும்புவீங்க..!

5. எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும் 1 மணி நேரம் தாமதமாப் போவீங்க. அதுதான் சரியா இருக்கும்ன்னு மனசார நம்புவீங்க..!

6. மளிகைப் பொருட்களின் பாலிதீன் உறைகளை பத்திரமா எடுத்து வைப்பீங்க. பின்னாடி உதவும்ங்கற தொலைநோக்குப் பார்வையோடு..!

7. உங்களுக்கு வரும் கடிதங்களில் எல்லா ஸ்டாம்பிலும் சீல் விழுந்திருக்கான்னு பார்ப்பீங்க. தப்பித்தவறி சீல் விழாம இருந்தா, அந்த ஸ்டாம்பை கவனமா பிரிச்சு எடுத்து எங்கேயாவது வச்சுட்டு, அப்புறம் சுத்தமா மறந்துடுவீங்க.

8. சினிமா தியேட்டரோ, விரைவுப் பேருந்தோ.. இருக்கையின் இருபக்க கை வைக்கும் இடத்துக்கும் சொந்தம் கொண்டாடுவீங்க..!

9. ரெட்டைப் பிள்ளைகள் இருந்தா, ஒரே மாதிரி ட்ரெஸ் தச்சுக் கொடுப்பீங்க. ரைமிங்கா பேர் வைப்பீங்க.. [ரமேஷ், மகேஷ். அமிர்தா,சுகிர்தா°..

10. ஏ.சி. திரையரங்குன்னா முட்டை போண்டா எடுத்துட்டுப் போய் நாறடிப்பீங்க.. ஏ.சி. கோச்சுன்னா, கருவாட்டுக் குழம்பை கீழே ஊற்றி கப்படிக்க வைப்பீங்க.!

11. விமானமோ, ரயிலோ, பஸ்ஸோ... ஒரு கும்பல் வந்து ஏத்திவிடணும்ன்னு எதிர்பார்ப்பீங்க..!

12. புதுசா கார் வாங்கினா, அதுக்கு மணப்பெண் அலங்காரம் பண்ணிதான் எடுத்துட்டு வருவீங்க..! கொஞ்ச நாளைக்கு சீட் பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க.. நம்பர் எழுதறீங்களோ இல்லையோ.. கொலைகார முனி துணைன்னு ஸ்டிக்கர் ஒட்ட மறக்கவே மாட்டீங்க..!

13. செல் போனோ, டி.வி.ரிமோட்டோ.. லாமினேஷன் செஞ்சாதான் உங்களுக்கு நிம்மதி..!

14. அடுத்த பிள்ளைகளைப் பாரு.. எவ்வளவு சாமர்த்தியமா இருக்காங்கன்னு.. என்று உங்க பெற்றோர் சொல்லாம இருக்கவே மாட்டாங்க.. அடுத்த பெற்றோரைப் பாருங்க.. எவ்வளவு ஜாலியா செலவழிக்கறாங்கன்னு நீங்க நெனைப்பீங்க.. ஆனா சொல்ல மாட்டீங்க..!

15. உங்க வீட்டு ஃபிரிட்ஜ்ல, சின்னச் சின்னக் கிண்ணங்களில், 3 மாசமா தயாரிச்ச குழம்பு, கறி வகையறா இருக்கும்..!

16. உங்க சமையலறை அலமாரியில் காப்பித்தூளுக்கு இலவசமா வந்த பெட் ஜாடி குறைஞ்சது ரெண்டு மூணு இருக்கும்..!

17. அதிகமா உபயோகிக்கப்படாத பொருள் உங்ககிட்ட அவசியம் நாலைஞ்சு இருக்கும். [உ-ம். பிரஷர் குக்கர், காப்பி மேக்கர், வாக்குவம் கிளீனர், பிரெட் டோஸ்ட்டர், மைக்ரோ வேவ் அவன், கேஸ் அடுப்புல க்ரில் இப்படி..]

18. பொங்கல், தீபாவளின்னா வீட்டுல சந்தோஷமா விழுந்து கெடக்க மாட்டீங்க.. தண்ணியைப் போட்டுட்டு, தகராறுபண்ணி, போலீஸ்-ஸ்டேஷன்ல குத்தவச்சுருப்பீங்க..!

19. கல்யாணத்துக்கு ஊர் பூரா பத்திரிகை வச்சு கலெக்ஷன் பார்ப்பீங்க..

20. இந்த விவரம் உங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கும்.. உடனே உங்க நண்பர்களுக்கு அனுப்பணும்ன்னு கை பரபரக்கும்..

 

திருகோணமலையும்....கோணேஸ்வரரும் ....கம்பரும்

அன்பே சிவம்
நிரைகழ லரவஞ் சிலம்பொலி யலம்பு நிமலர்நீ றணிதிரு மேனிவரைகெழு மகளோர் பாகமாப் புணர்ந்த வடிவினர் கொடியணி விடையர்கரைகெழு சந்துங் காரகிற் பிளவு மளப்பருங் கனமணி வரன்றிக்குரைகட லோத நித்திலங் கொழிக்குங் கோணமா மலையமர்ந் தாரே. -திருஞானசம்பந்தர்.

சிவபெருமானின் வலத் திருவடியில் வீரக்கழலும், இடத் திருவடியில் சிலம்பும் ஒலிக்கின்றன. அவர் பாம்பணிந்தவர். இயல்பாகவே பாசங்களின் நீங்கியவர். திருநீறு அணிந்த திரு மேனியர். மலைமகளை ஒரு பாகமாகக் கொண்டவர். இடபக்கொடி உடையவர். சந்தனக் கட்டைகளும், கரிய அகில் கட்டைகளும், மாணிக்கக் கற்களும் அளவின்றிக் கரையில் சேர, ஒலிக்கின்ற கடலின் அலைகள் முத்துக்களைக் கொழிக்கும் திருக்கோண மாமலையில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார்.


இராவணன் பற்றிய கதையில்; திருகோணமலையில் உள்ள கோணேசர் ஆலயத்தைப் புரட்டி எடுக்க முற்பட்டதாக ஒரு கிளைக்கதையுண்டு.
சிறந்த சிவபக்தையான இராவணனின் தாயார் வயது முதிர்ந்த நிலையிலும் மலையேறும் சிரமத்தைச் சகிக்காத இராவணேசன் ;கோணமாமலையைப் புரட்டி ;அரண்மனைக்கருகே வைத்து தாயாரின் சிரமம் போக்க முற்பட்டு, வெட்டித் தோளைக் கொடுத்து அசைக்க முற்பட்ட போது; மலை ஆடியதால் உமையவளின் வேண்டுகோளுக்கு இணங்கி சிவனார்; பெருவிரலால் அழுத்தியபோது;அதனுள் சிக்குண்ட இராவணேசன்; இசையிலும் வல்லோன் ஆகையால் சாம கானம் பாடி மகிழ்வித்ததால் விடுபட்டான்.
இதனால் திருக்கோணேஸ்வரத்துக்கு 'தெட்சண கைலாயம்' எனும் சிறப்புப் பெயரும் உண்டு.

அந்த வெட்டப்பட்ட பகுதியென பிரதான மலையில் இருந்து பிரியும் பகுதியை; "இராவணன் வெட்டு "என அழைத்து பல்லாயிரக் கணக்கானோரால் விருப்பிப் பார்க்கச் செல்லும் இடமாகத் திகழ்கிறது।

பின்வரும் கம்பராமாயணம்பாடல், மண்டோதரி புலம்பலாக கம்பரால் எழுதப்பட்டது।


"வெள்ளெருக்கம் சடைமுடியான் வேற்பெடுத்த திருமேனி மேலும் கீழும்
எள்ளிருக்கும் இடமின்றி உயிர் இருக்கும் இடம் நாடி - இழைத்தவாறே

கள்ளிருக்கும் மலர்க் கூந்தல் சானகியைக் மனச்சிறையில் கரந்த காதல்
உள்ளிருக்குதோ என உடல் புகுந்து தடவியதே ஒருவன் வாளி!!!"

வெள்ளெருக்கம் பூவை விரும்பி அணிகின்ற சிவனார் உறையும் திருக்கோணேசர் மலையை ,புரட்ட முற்பட்ட தெய்வீகத் தன்மை திகழும் பராக்கிரமமான இராவணனின் உடலில், எள் இருக்கக் கூட இடமில்லா வண்ணம் அம்புகள் இழைத்தது போல் துளைத்துச் சல்லடையாக்கியுள்ளனவே!!!ஏன்??? மண்டோதரியின் சிந்தனையாக கம்பர் கூறுகிறார்; தேன் ஒழுகும் மலர்களை அணியும் சீதாப்பிராட்டி மேல் கொண்ட காதல் இவன் உடலில்;இங்கிருக்கோ?எங்கிருக்கோ? என உச்சி முதல் உள்ளங்கால் வரை இராமபாணம் துளைத்துத் துளைத்து தேடியுள்ளது.அதனாலன்றோ!!

அழகான கற்பனை..."நான் ரசித்த வர்ணனைகள்" எனும் புத்தகத்தில் கவிஞர் கண்ணதாசனும்; இப்பாடலை வெகுவாக சிலாகித்து எழுதியுள்ளார்.மிக அழகாக

இந்தக் காட்சியை ,நாலு வரியில் கம்பர் அடக்கியுள்ளார்.முதல் படித்த போதே மனதில் ஆழமாகப் பதிந்த பாடல்.

******இன்று சிவராத்திரி தினம்; ஈழத்தில் புகழ் பெற்ற திருக்கேதீஸ்வரம்; திருக்கோணெஸ்வரம்; நகுலேஸ்வரம்; முனீஸ்வரம்,காரைநகர் ஈழத்துச் சிதம்பரம் போன்ற சிவன் கோவில்களுடன் ஏனைய சிவன் கோவில்களிலும் போர்ச்சூழலிலும் ; மிகச் சிறப்பாக வழிபாடு நடைபெறும்.எம்பெருமான் இன்னருள் பரவட்டும்.

குறிப்பு: கோணேசர் கோவில், இராவணன் வெட்டுப்படம் இணையத்திலும்; வெள்ளெருக்கம் பூப் படம் குமரனில் "கூடல்" தளத்தில் இருந்தும் எடுக்கப்பட்டன.நன்றி

Saturday, November 28, 2020

 

கல்லடி வேலரின் வாழ்வில்…!

காரைதீவிற் சோறும் கடுகடுத்த பச்சடியும்

 

ஊராருக் கன்றி மற்றையோர்க் குவப்பில்லை-

 

பார்மீதிர்  தங்கோடைச்சைவன் சமைத்த கறிசாதம்

 

எங்கே போய்க்காண்பேன் இனி..........

 

புலவர் கல்லடி வேலர்

வசாவிளான்

==========================================

பதினெட்டாம் நூற்றாண்டில் ஈழத்திருநாட்டில் வசாவிளான் என்ற ஊரிற் பிறந்த மகா புலவர் கல்லடி வேலுப்பிள்ளை (1860 – 1944) அவர்கள்.
இவர் கந்தப்பிள்ளை – வள்ளிப்பிள்ளை தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். மிகச் சிறுவயதிலேயே அஞ்ச நெஞ்சத்துடன் நகைச்சுவையாகவும் சிலேடையாகவும் பேசுவதில் வல்லவராகத் திகழ்ந்தார். இவற்றைக் கண்ணுற்ற அவரின் ஆசிரியர்கள் ” வரும் காலத்தில் இவன் பெரும் புலவனாக வருவான்” என்றனர். அவர்கள் வாக்கும் பலித்தது.

ஆசுகவி என்னும் பட்டத்திற்கு உரியவரான இவர் கவிஞர் மட்டுமல்ல; சிறந்த உரை நடை வசனகர்த்தா.அஞ்சாமை மிக்க பத்திரிகையாளர். சிறந்த சரித்திர ஆய்வாளர். உயர்ந்த சைவத்தொண்டர். ஈழத்தில் மட்டுமல்ல இந்தியா, மலேயா போன்ற தேசத்துப் பெரியார்களாலும் ” வித்தகர்” எனப் பாராட்டப்பட்டவர்.

“சுதேச நாட்டியம்” என்னும் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்து தன் சொந்த அச்சகத்திலேயே நடாத்தி வந்த இவர் எழுதிய ” யாழ்ப்பாண வைபவ கெளமுதி” என்ற நூல் மிக அரிதாகவே கிடைக்கின்றது. கதிரமலை பேரின்பக் காதல், மேலைத் தேய மதுபான வேடிக்கைக் கும்மி, உரும்பிராய் கருணாகர விநாயகர் தோத்திரப் பாமாலை ஆகியன அவர் எழுதிய நூல்களாகும்.

திரு வேலுப்பிள்ளை எழுதிய நூல்கள் கொழும்பு, யாழ்ப்பாணப் பல்கலைக் கழக நூல்நிலையங்களில் மட்டுமல்ல சென்னைப் பல்கலைக்கழக நூல் நிலையத்திலும் மக்கள் பாவனைக்காக இன்றும் பேணிக் காக்கப்படுகின்றன. எழுதுவதில் மட்டுமன்றி தமிழில் எங்கு பிழையிருப்பினும் அதைத் திருத்தம் செய்யவும் தயங்கமாட்டார். இதனால் “கண்டனத்தில் வல்லோன்” கல்லடியான் எனக்கூறி அவரின் நண்பர்கள் மகிழ்வார்களாம். கல்லடி வேலரின் வாழ்வில் இடம்பெற்ற அச்சுவையான சம்பவங்கள் இங்கே தொகுப்பாகப் பதியப்படுகின்றன.

பூங்காக்குளத்தில் மீன் பிடித்த கதை

யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குள் ஓர் குளம். அதில் அழகிய மீன்கள் துள்ளி விளையாடும். இம்மீன்கள் அழிந்து போகாவண்ணம் பாதுகாக்கும் பொறுப்பு மாநகரசபைப் பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
இக்குளத்தில் உள்ள மீன்களை ஒருவராலும் பிடிக்க முடியாது” என்று பெரிய அட்டை ஒன்றில் எழுதி குளத்தருகே நின்ற மரம் ஒன்றில் அதை மாட்டியதுடன், தம் பொறுப்பைச் செவ்வனே செய்தோம் என்ற மனநிறைவில் காவலர்கள் இறுமாந்திருந்தனர்.

ஒருநாள் அவ்வழியே போய்க்கொண்டிருந்த கல்லடி வேலர் மரத்தில் என்ன அறிவித்தல் போடப்பட்டிருக்கின்றதென்பதை அறியும் ஆவலுடன் அருகில் சென்று வாசித்தார். வேதனையுடன் “நம் தமிழை நம்மவரே கொலை செய்கிறார்களே” இவர்களுக்கு நல்ல புத்தி புகட்டவேண்டும் என யோசித்தவர் வந்த தன் காரியத்தையும் மறந்தார்.

கடைக்குச் சென்று மீன் பிடிக்கும் தூண்டில் ஒன்றை வாங்கி வந்து குளத்திலுள்ள மீன்கள் சிலவற்றைப் பிடிக்கத் தொடங்கினார். விஷயம் அறிந்த காவலர்கள் ஓடோடி அவ்விடம் வந்தனர். ” ஏய்!, ஏய் ! நீ யார் படிக்காத முட்டாளா? மரத்தில் உள்ள அறிவித்தலைப் பார்க்கவில்லையா? மடத்தனமான வேலை செய்கிறாயே” என அதட்டினர்.
“அவ்வறிவித்தலைப் பார்த்தபடியால் தானே மீன்களைப் பிடிக்கின்றேன்; என்னால் முடியும்” எனச் சொல்லிவிட்டுக்கருமமே கண்ணாயினார்.

காவலர்களுக்கோ சினம் தலைக்கேறியது. தொடர்ந்து ஏசியதுடன் அவரைக் கைது செய்யவும் முயன்றனர். தான் கூறியதன் அர்த்தம் அவர்களின் மரமண்டைகளுக்குப் புரியவில்லை என்பதைப் புரிந்து கொண்டவர், அவர்கள் “மீன் பிடிக்க முடியாது என எழுதிப் போடப்பட்டிருப்பது தவறெனவும் “மீன் பிடிக்கக் கூடாது” என எழுதிப் போடும்படியும் விளக்கமாக எடுத்துக் கூறினார். காவலர்கள் தம் பிழையை உணர்ந்து அவரிடம் மன்னிப்புக் கேட்டதுடன் அவர் முன்னிலையிலேயே திருத்தமும் செய்தனர். தம் தொண்டைச் செவ்வனே செய்த திருப்தியுடன் கல்லடி வேலர் வீடு போய்ச் சேர்ந்தார்.

தட்டியுண்ணும் செட்டி

ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை கண்டனத்திற்கு வல்லோன் என்பதோடு சிலேடையாகப் பேசுவதிலும் திறமை கொண்டவர். இதற்கு உதாரணமாக அவர் வாழ்வில் நடந்த கதை ஒன்று.

செல்வம் கொழிக்கும் சிங்கப்பூரில் தர்மலிங்கம் என்று ஒரு செட்டியார் இருந்தார். இவர் ஒரு தவில் வித்துவானும் கூட. கலைவாணி தன் கருணைக் கடாட்சத்தை இவர்பால் தாராளமாக வீசியதால் இந்நிலையில் இவர் திறமையாக விளங்கினார். பல கச்சேரிகள் ஓய்வின்றிச் செய்தார். இதனால் கலைச்செல்வத்துடன் பொருட் செல்வத்தையும் சேர்த்துக்கொண்டார் செட்டியார். ஆனால தான தருமம் செய்வது செட்டியரைப் பொறுத்தவரைக் கசப்பான காரியமாக இருந்தது.ஏழை எளியவர்களுக்கு உதவுவது வெறுப்பை ஊட்டியது. இதனால் “கலைவாணன், “தவில் மேதை” என்று புகழ்ந்த மக்கள் “கர்மி”, “உலோபி” என இகழவும் தவறவில்லை.

“தண்ட வருவோரைக் கண்டிக்க தளரா மனம் அருள்வாய் பராபரமே” என ஓர் அட்டையை எழுதி தன்னிடம் தர்மமோ நன்கொடையோ உதவி கேட்டு வருபவர்களிடம் காட்டி அவர்களை அனுப்பிவிடுமாறு செட்டியார் தன் பணியாளரிடம் பணித்திருந்தார்.

சிறப்பு மிக்க சிங்கப்பூரின் அழகைக் கண்டு ரசிக்கவும் தன் உற்றார், உறவினரைப் பார்த்து வரும் ஆவலிலும் வேலுப்பிள்ளை சிங்கப்பூர் போயிருந்தார். அவர் நடாத்திய சுதேச நாட்டியம் என்ற பத்திரிகையை சிங்கப்பூரிலுள்ள அனேக தமிழர்கள் மாதச் சந்தா, வருடச் சந்தா எனப் பணங் கட்டி வரவழைத்துப் படித்தார்கள். இவர்களில் தர்மலிங்கம் செட்டியாரும் ஒருவர். செட்டியார் ஒருவருச காலமாகச் சந்தாவை அனுப்பவில்லை. வந்த இடத்தில் அவரிடம் பேசலாம், பணத்தையும் பெற்றுக் கொள்ளலாம் என யோசித்த பிள்ளை செட்டியார் வீட்டுக்குப் போனார்.

அழைப்பு மணியை அழுத்தினார். பணியாள் என்ன வேண்டுமென வினவினான். ” உன் எசமானரைக் காண வந்தேன்” என்றார். “அவர் இப்போ இங்கு இல்லை, உமக்கு என்ன வேண்டும்” எனக் கேட்டான். ” என் பத்திரிகைக்குப் பணம் வாங்க வந்தேன்” எனப் பதில் கூறினார். பணம் வாங்க வந்தேன் என்ற சொல் கேட்டதும் பணியாள் மிகவும் சுறுசுறுப்புற்றான். விரைந்து சென்றவன் வேகமாக அறிவித்தல் பலகையைக் கொண்டு வந்தான். அதைப் பிள்ளையிடம் கொடுத்து வாசித்துவிட்டு உடனே போய்வரும்படி பணித்தான். வாசித்தவர் மிகவும் வெட்கமும் வேதனையும் அடைந்தார். செட்டியாரின் கர்வத்தை அவர் பாணியிலேயே அடக்க எண்ணினார்.

“தட்டியுண்ணும் செட்டியிடம்
தண்டுபவர் இங்கிருந்தால்
மட்டி அவர் என்றல்லோ
மதிப்பேன் பராபரமே”

என அவர் அறிவித்தலின் அடியிலே எழுதி , ” உன் துரை வந்ததும் மறவாமல் கொடுத்துவிடு” எனக்கூறிவிட்டுப் போய்விட்டார். செட்டியார் வீடு திரும்பியதும் ” இலங்கையில் இருந்து வேலுப்பிள்ளை என்பவர் பணம் வாங்க வந்தார், அறிவித்தலைக் காண்பித்தேன்,எதோ எழுதித் தந்துவிட்டுப் போய்விட்டார்” எனக்கூறிய பணியாள் பணிவுடன் கொடுத்தான்.

வாசித்தவரின் உள்ளம் கொதித்தது. வழக்கறிஞரை வரவழைத்துக் கல்லடி வேலர் மீது மான நஷ்ட வழக்குப் போடுமாறு பணித்தார்.கல்லடி வேலர் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்டார். வந்த இடத்தில் இவருக்கு இப்படியான நிலை ஏற்பட்டுவிட்டதே என்று இவரின்
உற்றார் உறவினர் கலங்க, எதிரி மிக்க புத்தி சாதுர்யம் மிக்கவராமே என்ற ஆவலில் மக்கள் கூட்டம் நீதிமன்றதில் வழிந்தது. செட்டியாரின் சட்டத்தரணி, தன் கட்சிக்காரரைப் பிள்ளையவர்கள் அவர் வீட்டிலேயே தட்டித் தின்னி என்று இகழ்வாக எழுதி வைத்துவிட்டதாவும், இதற்கு மானநஷ்டமாக 2000 வெள்ளிகளை செட்டியாருக்குக் கொடுப்பதுடன் மன்னிப்பும் கேட்கவேண்டும் என்று வேண்டினார்.

கல்லடி வேலரிடம் கேட்டபோது தான் வந்த இடத்தில் இப்படியான ஓர் நிலைமை ஏற்பட்டு விட்டது, சட்டத்தரணி ஒருவரை வைத்து வழக்காடத் தன்னிடம் போதிய பணமில்லாததால் தானே தம் வழக்கில் வாதம் செய்ய அனுமதி கேட்டுப் பெற்றுக் கொண்டார்.
எல்லோரையும் சுற்றிப் பார்த்துச் சிறு புன்னகையுடம் ” நீதிபதி அவர்களே ! நான் திரு. தர்மலிங்கத்தை இகழ்ந்தோ, கேலியாகவோ எதையும் எழுதவில்லை. ” தட்டி உண்ணும் செட்டி” எனக் குறிப்பிட்டது தவிலைத் தட்டி அதனால் வரும் வருமானத்தில் உண்பது. செட்டியார் தவில் தட்டித்தானே உழைக்கிறார். அத்துடன் “தண்ட வருவோரைத் தண்டிப்பேன்” எனவும் அறிவித்தலில் எழுதியிருந்தார். என் பத்திரிகையின் ஒரு வருஷப் பணம் என்னும் செட்டியாரிடம் பாக்கியுள்ளது. இவரிடம் யாரும் தண்டப்போவார்களா? அப்படிப் போவோரை மட்டிகள் என்றே மதிப்பிட்டேன், இதில் என்ன தவறு? ஏதோ நான் தகாததை எழுதிவிட்டேன் என்று என் மேல் கோபிக்கவோ, நீதிமன்றம் வரை என்னை இழுத்தடித்து தேவையற்ற சிரமம் தரவோ எக்காரணமும் இல்லையே ” என்று மிகவும் வினயமாகக் கூறினார்.

கூடியிருந்த மக்களின் ஆரவாரமும் சிரிப்பொலியும் அடங்கியபின் திரு. வேலுப்பிள்ளையின் விளக்கத்தைப் பரிசீலனை செய்தபின் அவர் வாதம் சரியெனவும் , அவரின் பத்திரிகைப் பணத்தையும் திரு.தர்மலிங்கம் கொடுக்கவேண்டும் என்றும் தீர்ப்பளித்தார். தர்மலிங்கம் வெட்கித் தலை குனிந்தார்.

கதிரைக்குக் காசு

கல்லடி வேலர் ஒருமுறை கூத்துப் பார்க்க கொட்டகை ஒன்றுக்குச் சென்றார். அங்கே வாசலில்
கதிரைக்கு ஒரு குறிப்பிட்ட அணா என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மீண்டும் திரும்பிப் போய் பத்துப் பேருடன் வந்தார். பத்துப் பேருக்கான கட்டணத்தைக் கட்டி உள்ளே நுழைந்து கூத்துப் பார்த்தனர். கூத்து முடிந்ததும் புலவரும் கூட வந்த 10 பேரும் தம் கதிரைகளையும் எடுத்துக் கொண்டு வெளியேற ஆரம்பித்தனர். அப்போது ஓடி வந்த கொட்டகை உரிமையாளர்,
“ஐயா! ஏன் கதிரைகளை எடுத்துச் செல்கின்றீர்கள் எனக் கேட்கவும்;
கல்லடி வேலரும் “நீங்கள் தானே கதிரைக்கு விலை குறித்திருக்கின்றீர்கள் ” என்று வேடிக்கையாகக் கேட்டாராம்.கொட்டகை உரிமையாளரும் தன் தமிழ் குழப்பத்துக்கு வருந்தி
“நுழைவுச் சீட்டு விபரம், கதிரைக்கு இத்தனை அணா” என்று
மாற்றி விட்டாராம்.

தலைக்குச் சட்டி

கல்லடி வேலர் வாழ்ந்த ஊரில் சிறு சிறு குற்றங்கள் அவருடைய தலைமையில் பஞ்சாயத்து செய்யப்பட்டுத் தீர்க்கப்பட்டனவாம்.(பின்னர் அந்தப் பொறுப்பு அவரின் மூத்த மகன் சுப்பிரமணியத்திற்குப் போனது) பெரிய வழக்குகள் மட்டும் நகரத்தின் நீதிமன்றுக்குச்
செல்லும் போது கல்லடி வேலர் தன் புத்திசாதுர்யத்தால் சிலரை வழக்கிலிருந்து தப்ப வைத்துவிடுவாராம். ஏனெனில், அடிக்கடி பல வழக்குகளுக்கும் இவரே வந்து புத்தி சதுர்யமாக வழக்காடியும் வென்று வந்த கல்லடி வேலரைக் கண்டால் அந்த நீதிமன்றின் நீதிபதிக்குச் சிம்ம சொப்பனம் தான். ஒருநாள் நீதிபதி கல்லடி வேலரைப் பார்த்து ” இனிமேல் நீதிமன்றில் உம்முடைய தலைக்கறுப்புத் தெரியக் கூடாது என்று சொன்னாராம். அடுத்த நாள் கல்லடி வேலர் அதே நீதிமன்றுக்கு வழக்காட வந்தார். கல்லடி வேலரின் தலையை பார்த்து ஆச்சரியம் பொங்க எல்லோரும் சிரித்தார்கள். காரணம் அவரின் தலையில் சட்டி ஒன்றைக் கவிழ்த்தவாறே நீதிமன்றுக்குள் நுளைந்தார்.
காரணம் கேட்ட நீதிபதிக்கு கல்லடி வேலன் சொன்ன பதில் “நீங்கள் தானே சொன்னீர்கள், இனிமேல் நீதிமன்றில் உம்முடைய தலைக்கறுப்புத் தெரியக்கூடாது ” என்றாராம்.


கொண்டாடினான் ஒடியற் கூழ்

கல்லடி வேலுப்பிள்ளையின் வீட்டுக்குப் பக்கத்தில் பெரிய கல் ஒன்று இருந்தது அதனால் எல்லோரும் அவரைக் கல்லடி வேலன் என்று செல்லமாக அழைத்தனர்.

சுப்பையா என்பவர் புலவரின் அருமை நண்பர். அவர் நிவிற்றிக்கொல்லை என்னும் ஊரிலுள்ள மருத்துவசாலையில் வைத்தியராகப் பணிபுரிந்தார். நிவிற்றிக்கொல்லை இரத்தினபுரிக்கு அண்மையில் உள்ளது. ஒரு நாள் புலவர் தம் நண்பரைப் பார்க்கப்
புறப்பட்டார்; பல அல்லைதொல்லைப்பட்டு இரத்தினபுரியை அடைந்தார். அப்பால், நிவிற்றிக்கொல்லைக்குக் கால் நடையாகவே போனார். நேரமோ பட்டப்பகல். வெயில் நெருப்பாக எறித்தது. புலவர் மிழவும் களைத்துவிட்டார். பசி வயிற்றைக் கிள்ளியது. அவர் இடைவழியிலே தங்காது நடந்தார்; அவ்வாறு நடந்து நண்பரின் வீட்டை அடைந்தார்.

புலவரை எதிர்பாராது கண்ட நண்பரையும் மனவியாரும் அவரை வரவேற்று உபசரித்தனர்.; புலவரின் சுகநலங்களை விசாரித்தனர். வைத்தியரின் மனைவியார் புலவர் களைப்பாக இருந்ததை உணர்ந்தார். எனவே, அவர் புலவருடைய களைப்பைப் போக்க எண்ணினார். உடம்பு அலுப்புக்கு உவப்பான உணவு ஒடியற் கூழ் என்பது அவருக்குத் தெரியும். மேலும் புலவருக்கு ஒடியற் கூழில் மிக்க பிரியம் உண்டு என்பதும் அவருக்குத் தெரியும்.

வைத்தியரின் மனைவியார் கூழ் காய்ச்சத் தொடங்கினார். அவர் பானையில் நீரைக்கொதிக்க வைத்தார்; அதனுள் ஒரு சிறங்கை அளவு அரிசியைப் போட்டு வேக வைத்தார். பின்பு மரவள்ளிக்கிழங்கு, பயற்றங்காய் பயறு, பலாச்சுளை, பலாக்கொட்டை, முதலியவற்றையும் போட்டார்.; உப்பையும், புளியையும், அரைத்த மிளகாய்க்கூட்டையும், அளவாய்ப் போட்டார்; ஒடியல் மாவைக் கரைத்து அதனுள் சேர்த்தார்.; இவ்வாறாகக் கூழ் காய்ச்சினார்; பதமாய் இறக்கிய கூழுக்குள் வாழைக்காய்ப் பொரியலையும் இட்டுக் கலக்கினார்.

புலவரும் நண்பரும் கூழ் குடிக்க அமர்ந்தனர்; பலா இலையை மடித்துக் கோலினர்; கூழை அள்ளி ஊதி ஊதிக்குடித்தனர். அந்தக்கூழ் மிகவும் சுவையாக இருந்தது. ” என்ன அருமையான் கூழ்” என்று வியந்தார் புலவர். புலவரின் பசியும் பறந்தது; களைப்பும் நீங்கியது. அப்போது புலவரால் பாடாமல் இருக்க முடியவில்லை. ஆசுகவி பாடினார் இப்படி,

“அல்லையுற்று இரத்தினபுரி அண்டி
அப்பாலே நிவிற்றிக்கொல்லை
அடைந்த அலுப்புக் கொண்டதற்கு
கல்லடியான், வண்டாரும் மாலை அணி
மற்புயற் சுப்பையனுடன்
கொண்டாடினான் ஒடியற் கூழ்”

ஆசுகவி கல்லடி வேலனின் மேற்குறித்த “கொண்டாடினான் ஒடியற்கூழ்” கதைப் பகுதி இலஙகைப் பாட நூலாக்கத்தில் ஆண்டு 4 வகுப்பு பாடமாக இருக்கின்றது. ஆனால் இறுதியில் புலவர் பாடும் பாடல் மட்டும் அப்புத்தகத்தில் இல்லை. எனவே ஆசுகவியின் பேத்தியார் திருமதி ராணி தங்கராஜாவிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு இப்பாடலைப் பெற்றேன். மேலும், திருமதி ராணி தங்கராஜா அவர்கள் கடந்த 2004, மெல்பர்ன் எழுத்தாளர் விழாவில் ஒரு அமர்வாக இடம்பெற்ற ஒடியற் கூழ்விருந்தில் கூழின் சிறப்பையும் ஆசுகவியின் கூழ் குறித்த போற்றுதலையும் நினைவு கூர்ந்து தான் வடித்த கவிதையையும் குறிப்பிட்டார். அதை ஒலிவடிவில் அப்படியே ஒலிப்பதிவு செய்து இங்கே தருகின்றேன். திருமதி ராணி தங்கராஜாவும் தன் பாட்டனார் வழியில் கவிபடைத்தும் இலக்கியப் பணியும் ஆற்றி வருகின்றார். இதோ அவர் எழுதிய கூழ்க்கவி எழுத்திலும், ஒலியிலும்;

PRABU.mp3

ஒன்று கூடி ஒடியற்கூழ் சுவைப்போம்
வளம் நிறைந்து வாழ்ந்திருந்த
மண்விட்டுப் புலம்பெயர்ந்தோம்.
முன்னதை இழந்தோம்.

எங்கு தான் சென்றாலும் எதைத்தான் இழந்தாலும்
தங்கத் தமிழ் மறவா தனிக்குணத்தை இழந்தோமா?
சென்ற இடமெல்லாம் செந்தமிழை மேம்படுத்தும்
சிந்தை உடையோராய் சீவித்துப் பண் பாடும்
என்றும் அழியாத இன் தமிழும் கலைகளும்
இன்னும் மேலோங்க உழைக்கின்றார் நம் தமிழர்.

ஈழத்தில் தமிழ் வளர்த்தோர், இனிய தமிழ்க் கவி புனைந்தோர்
ஞாலத்தில் உயர்ந்து நின்றார் நமக்கெல்லாம் பெருமை தந்தார்.
கூழுக்குக் கவி பாடும் புலவோர்கள் களை திருந்த
கூழுக்கு நன்றி சொன்ன புலவர் நீரும் பிள்ளை அன்றோ

ஆசுகவி கல்லடியார் வாய்திறந்தால்
நூறு கவி வீசி வரும் தென்றலாய் அவர் ஒருவரே அன்றோ
வாசமிகு ஒடியற்கூழ் வாழ்கவென்று நன்றி சொல்லி
பேசு தமிழில் கவிதை பிறப்பித்தார், பெருமை சேர்த்தார்.
கடல் கடந்து வாழ்ந்தாலும் தாயகத்தை மறவாமல்
நெடிததுயர்ந்த பனை மரத்தின் நினைவழிந்து போகாமல்
ஒடியற்கூழ் காய்ச்சுதற்கும் ஒன்று கூடிச் சுவைப்பதற்கும்
முடிவு செய்தோர் வாழ்கவென்று முக்காலும் நன்றி சொல்வேன்.
மெல்பேர்னில் தமிழ் வளர்க்கும் எழுத்தாளர் மாநாட்டில்
கல்லடியார் புகைப்படத்தைக் காட்சி வைத்துப் பெருமை சேர்த்த
நல்லவர்கள் எல்லோர்க்கும் நன்றியுடன் வாழ்த்துரைத்து
கல்லடியார் பேர்த்தி நான் கை கூப்பி அமைகின்றேன்.

பாரிஸ் யோகன் பதிவில்: கோச்சி வரும் கவனம்….கொப்பரும் வருவார் கவனம்…!

கனக சிறீதரன் பதிவில்: ஆசுகவியின் இலக்கியப் பணி

பிற்குறிப்பு:

இந்தக் கட்டுரையை எழுத உசாவிய பாரிஸ் யோகன் அண்ணாவிற்கும்,
அவரின் பதிவில் கூழ் குறித்த கதையைக் கோடு காட்டிய சயந்தனுக்கும் நன்றிகள்.

மேலே இடம் பெற்ற ஆசுகவி குறித்த அறிமுகம் போன்ற கட்டுரைப் பகுதிகள் பிரான்சில் வாழும் ஒலிபரப்பாளர், எழுத்தாளர்,வண்ணை தெய்வம் அவர்கள் எழுதியும் தொகுத்தும் 2003 ஆம் ஆண்டு வெளியிட்ட “யாழ்ப்பாணத்து மண் வாசனை” என்ற நூலில் இடம் பெற்றிருந்தன. கடந்த ஆண்டு நான் தாயகம் சென்ற போது அதை வாங்கியிருந்தேன். இக்கட்டுரையில் இடம்பெற்ற பெரும்பாலான பகுதிகளை மீளப் பிரசுரம் செய்யும் உரிமையைப் பெற நண்பர் மூலம் வண்ணை தெய்வம் அவர்களின் தொலைபேசி இலக்கம் பெற்றுத் தயங்கியவாறே இதைக் கேட்டேன்.
” எங்கட ஆட்களின்ர வரலாறு எல்லாருக்கும் போய்ச் சேரவேணும், நீங்கள் தாராளமாகப் பயன்படுத்துங்கள் என்று தன் தமிழ் குறித்த தாராள சிந்தையை வெளிப்படுத்திய வண்ணை தெய்வம் அவர்களுக்கும் என் நன்றிகள்.

இலங்கைப் பாடவிதானத்தின் ஆண்டு 4 பாடப்புத்தகத்தைத் தேடிப் பெற உதவிய சிட்னி தமிழ் அறிவகம் என்ற நூலகத்துக்கும் நன்றிகள்.

இறுதியாக ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளையின் பேர்த்தி, திருமதி ராணி தங்கராஜா அவர்கள் நான் ஆசுகவியின் கூழ்ப் பாடலைக் கேட்டு எழுத உதவினார். கூடவே கதிரைக் கதை, நீதிமன்றத்தில் நடந்த வேடிக்கை, மற்றும் தான் இயற்றிய கூழ்ப்பாடலையும் தந்ததோடு,
“தம்பி! ஒலிப்பதிவு சரியாக வந்ததே ? ” என்று கரிசனையோடு கேட்டு, இரண்டாவது முறையும் பொறுமையோடு கவி தந்தார்.
அவருக்கும் என் மேலான நன்றிகள்.


நன்றி;--http://www.vaasal.kanapraba.com/?p=4760

================================


பிரபா!
சொல்லிய வண்ணம் “வேலனார்” சரித்திரம் தந்ததற்கு ;அனைவர் சார்பாகவும் நன்றி!!
சீமான் அவர் காலத்தில் ஒரு கலக்குக் கலக்கி உள்ளார். இந்தக் “கதிரைக்கு” விடயம் கேள்விப்பட்டேன்;
ஆனால் இது இவர் நக்கல் எனத் தெரியாது. தலைக் கறுப்பு விடயம் “தென்னாலி ராமன் ” கதையிலும்
படித்ததுபோல் உள்ளது. இப்படி நகைச்சுவை உணர்வு இப்போ இல்லாமல் போனது வருத்தமே!!அந்த நாளில் இவரைச் சுற்றி ஒரு கூட்டமே நின்றிருக்கும் போல் உள்ளது.
அடுத்து எப்படியும் அவர் பேத்தியிடம்; இருந்தால் அவர் எழுதிய நூல் ஒன்றைப் பதிவிடவும்.
இதில் ஒரு படத்தை என் “கோச்சியிலும்” போட அனுமதி தருவீர்கள் என நம்புகிறேன்.
புகை வண்டியுடன் ;அவர் படமொன்றும் தேடியும் கிடைக்கவில்லை.
மீண்டும் சிறப்பாக எழுதியதற்கு ; தகவல் படம் எனத் தேடித் தந்ததற்கு மிக்க நன்றி!!
தொடர்ந்து தேடிப் போடவும்.

================================

Friday, November 20, 2020

 


தங்க மகளுக்குத் தங்கமான பரிகாரம்!

 

 

குடும்பத்தில் ஆதிக்கம் செலுத்துவது கணவனா, மனைவியா- சமூகத்தில் ஆதிக்கம் செலுத்துவது ஆணா, பெண்ணா என்கிற போட்டியை எல்லாம் பட்டிமன்றத்தோடு நிறுத்திக் கொள்ளவேண்டும். குடும்பத்திற்குள் கொண்டு வரக்கூடாது. இன்று பல இல்லங்கள் மகிழ்ச்சியாய் இருப்பதற்குக் காரணம், விவாதமின்றி இருப்பதே. குடும்ப முன்னேற்றம், குழந்தைகள் வளர்ச்சிமீதான அன்பு, பாசத்தால் போட்டி ஏற்படாமல் விட்டுக்கொடுத்தல், சகிப்புத் தன்மை போன்றவற்றால் நிம்மதியாக வாழ்கிறார்கள். விவரமற்றவர்கள்தான் பெண் குழந்தைகளுக்கு சரியான ஆலோசனை வழங்கத் தவறி நிம்மதியைத் தொலைக்கிறார்கள். தன் வீட்டில் தங்க மகளாக வளரும் குழந்தைகளுக்கு ஜாதக மறிந்து, தக்க பரிகாரம் செய்து மணம்செய்து கொடுத்தால் தான் சந்தோஷமாக வாழ்வார்கள்.

 



குணம்

பணம் இருந்தால் போதும்; குணம் தேவையில்லை என்கிற மனநிலை அபாயகரமானது. குணம் என்பதில் முதன்மை வகிப்பது ஒழுக்கம். இன்று திருமணத்திற்கு முன்பு எப்படி இருந்தாலும் பரவாயில்லை; திருமணத்திற் குப்பின்பு இருப்பதைதான் பார்க்கவேண்டுமென ஆகிவிட்டது. தவறு செய்யும் ஓரிருவரின் குரல் அதிக சத்தத்துடன் வெளியே கேட்பதால், தவறுகளை நியாயப்படுத்திப் பேசுவது சகஜமாகிவிட்டது. முன்பு நல்ல செய்திகளைப் பெரிதுபடுத்திய ஊடகங்கள் இன்று கெட்ட விஷயங்களைச் சொல்லிக்கொண்டே இருப்பதன் மாயத்தோற்றம்தான் இந்த பிம்பத்திற்கான காரணம். லக்னமும், ராசியும்தான் குணத்தைத் தீர்மானிக்கும். கேந்திர, திரிகோண ஸ்தானத்தில் குரு நல்ல நிலையில் இருந்தால் சமூகத்திற்கு, சட்டத் திற்கு, குடும்பத்திற்கு எதிரான எந்தச் செயலிலும் ஈடுபட மாட்டார்கள். லக்னாதிபதி அல்லது ராசியாதிபதி குருவுடன் இணைந்திருந்தாலும் பார்த்தா லும், உடலையும் மனதையும் நல்வழியில் செயல்படுத்துவர். சனி சம்பந்தமற்ற சுக்கிரன், புதன், வளர்பிறைச் சந்திரன், சுப கிரகப் பார்வைகள் தவறுகள் நேராமல் பார்த்துக்கொள்ளும். சுப கிரகங்கள் லக்னம், ராசிக்கு 6, 8, 12 ஆகிய மறைவிடங்களில் இருப்பதும், பார்ப்பதும்; செவ்வாய், சனி, சூரியன் சம்பந்தமும் இருந்தால் குணக்கேட்டைத் தரும். நல்ல தசாபுக்திக் காலங்களில் இப்படிப் பட்ட குணங்களால் அவமானம், தண்டனை கிடைக்காது. நெருக்கமானவர்களின் மனஸ்தாபத்தையும் பிரிவுகளையும்தான் தரும். ஏழரைச்சனி, கெட்ட தசாபுக்திக் காலங்களில், தன்நிலை மறந்து தவறான காரியங்களில் துணிந்து ஈடுபட்டு அவமானம், தண்டனை பெறுவர். ஆலயப் பரிகாரங்களைவிட அவசியமான பரிகாரம் சுய ஒழுக்கக் கட்டுப்பாடு. அதனைத் தரும் தெய்வம் தட்சிணாமூர்த்தி என்கிற குரு. வாழ்நாளில் முடிந்தவரை வியாழக் கிழமைதோறும் விரதமிருந்து, சுண்டல் மாலையிட்டு தட்சிணாமூர்த்தியை வழிபடுதல் நல்ல எண்ணங்களைத் தரும். ஒழுக்கத் தால் நிறைய பயனுண்டு என்பது பலருக்கும் தெரிவதில்லை. ஒழுக்கமென்பது அடுத்தவரிடம் காண்பிக்க, நிரூபிக்கவேண்டிய பொருளல்ல. ஒருவர் ஒழுக்கமாக இருந்தால் முதலில் கிடைப்பது நிம்மதியான மனநிலை.

எந்தத் தவறு செய்தாலும் முதலில் யாருக்கும் தெரியாமல் இருக்கவேண்டும் என்கிற அச்ச உணர்வு ஏற்படும். ஆசை கொண்ட மனம் அலைபாய்ந்து, தன் காரியத்தை சாதிக்க குடும்ப உறவுகளைப் பகைத்து, ஒரு பொய்யை மறைக்க பல பொய் சொல்லி, யோசித்து யோசித்து மனரீதியாக பாதித்து, அதனால் தூக்கமின்றி உடலைக் கெடுத்து, வாழ்க்கையையும் இழக்க நேரும்.

ஆதலால் ஒழுக்கமென்பது தனக் காக- தன் மனநிலை, உடல் நிலையைப் பாதுகாப்பதற்காக இருத்தல் வேண்டும். இதைத் தங்கள் குழந்தைகளுக்கு பெற்றோர் கள் சொல்லிப் புரியவைக்கவேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளின் ஜாதகத்தைப் பார்த்துத் தெரிந்துகொண்டு பிள்ளைகளுக்கு எடுத்துச்சொல்லி வளர்க்கவேண்டும்.

அன்பு வேறு, அக்கறை வேறு. அன்போ கண்டிப்போ- எதைக் கொடுத்தால் திருந்துவார்களோ அதைத் தரவேண்டும். கொஞ்சி, கெஞ்சிக்கொண்டிருந்தால் அதுவே நாம் பிள்ளைகளுக்குச் செய்யும் துரோகம். அது புரியாமல் சில பெற்றோர்கள், "என் மேலுள்ள கோபத்தை ஏன் பிள்ளைகள்மீது காட்டுகிறீர்கள். என் பிள்ளைமேல் கை வைக்கிற வேலை வைத்தால்...' என ஒருவருக் கொருவர் எச்சரிக்கை விடுகிறார்கள். பெற் றோர்களின் சண்டை பிள்ளைகளுக்கு சாதகமாகி, தவறைத் திருத்திக் கொள்ளாமல் தைரியமாக தவறு செய்கிறார்கள்.

காதல்

தன் பெண்பிள்ளைகளைப் பார்த்து, "காதல் என்பது பருவ வயதில் வரும் இயற்கையான உணர்வு. காதலை அனுபவித்து கடந்துதான் வரவேண்டும். களவும் கற்று மற என்பதுபோல் காதலும் கற்று மற' என சொல்லமுடியுமா? காதலால் பல குடும்பங்கள் பல பாதிப்புகளை சந்தித்திருக்கிறது என்பதை யாராலும் மறுக்கமுடியாது. இளம் வயதில் பெண்பிள்ளைகளுக்குக் காதல் வருவதற்குக் காரணம் ஜாதகத்தில் குரு பார்வையற்ற செவ்வாய், சுக்கிரன் இணைவு, பார்வைகள், சனி பார்வை கொண்ட செவ்வாய், சுக்கிரன் சம்பந்தம், பெண்ணின் களத்திரகாரகனான செவ்வாய் கெட்டுப்போதல், சுக்கிரன், சனியின் வலிமையைப் பொருத்து வேற்று இன, மத ஆண்கள்மீது ஈர்ப்பை உண்டாக்குகிறது. ஐந்தாமிடம் வலுத்தவர்களுக்கு காதல் உண்டாகும். ஒன்பதாமிட வலுவால் சமூக, குடும்பக் கட்டுபாடுகளைக் கடந்து விருப்பப்படி திருணம் செய்து நஷ்டமடைகிறார்கள். கிரகங்கள் கெட்டுப்போனவர்கள்தான் காதல் வந்து கஷ்டப்படுவார்கள். ஏதாவது சிலரே கெட்டவன் கெடுவதால் கிட்டும்‌ விபரீத ராஜயோகத்தால் காதல் வாழ்க்கை சிறப்புற்று வாழ்வார்கள். புலியைப் பார்த்து பூனை சூடுபோட்ட கதையாக, சினிமா காதலைப் பார்த்து காதல் வந்து திருமணம் செய்பவர்கள் வாழ்க்கை திண்டாட்டம்தான். காதல் உருவாவது ஏழரைச் சனிக் காலத்தில்தான். ஆரம்பக் கல்வியில் காதல் இரண்டாமிடம் கெட்ட வர்களுக்கும், உயர் கல்வியில் காதல் நான்கா மிடம் கெட்டவர்களுக்கும் ஏற்பட்டு குடும்பம், உறவினர்களைப் பகைத்து சுகத்தை இழந்துவிடுகிறார்கள். "பெரியப்பன் பாத்தா அடி பிச்சுறுவான். சித்தப்பன் பாத்தா கதற விடுவான். மாமா பார்த்தால் பார்த்த இடத்துல மாத்து விழு'மென்று பயந்திருந்தால்தான் இன்றைக் குப் பிள்ளைகளைக் காப்பாற்றமுடியும். தன் பிள்ளைகளையே கண்டித்து வளர்க்க முடியாமல் இருக்கும்போது, அடுத்தவன் பிள்ளையை எப்படி கண்டிப்பதென உறவினர் கள் நொந்து விலகிக்கொள்கிறார்கள். சொந்தங்கள் விலகி நிற்பதற்குக் காரணம், தங்களை சுயம்புபோல் எண்ணிக்கொள்ளும் பெற்றோர்கள்தான். "சொந்தங்கள் எவ்வளவோ இருந்தும் எனக்கு யாரும் உதவல' என உறவுகளை, சொந்தங்களை குறைசொல்லிக் கெடுப்பதே பிள்ளைகளின் மனமாற்றத்திற்குக் காரணம். "நீங்கள் எத்தனைப் பேருக்கு உதவினீர்கள்? பணம் கொடுத்தீர்கள்' என கேட்டால் பதில் சொல்பவர்கள் குறைவு.

புகுந்த வீடு

பிறந்த வீட்டில் பெண் பிள்ளைகளை செல்லமாக வளர்ப்பவர்கள், அதற்குச் சொல்லும் முதல் காரணம், "எப்படியும் புகுந்த வீட்டிற்குச் சென்று காலம் முழுவதும் கஷ்டப்படப் போகிறாள். ஆதலால் நம் வீட்டில் இருக்கும் வரை சந்தோஷமாக இருக்கட்டும்' என்பதே. ஆதலால் எந்த வேலையும் கொடுக்காமலும், கேட்டதை வாங்கித் தருவதுமாகவும் சிலர் இருக்கிறார் கள். "இப்படி செல்லம் கொடுத்தால் திருமணத்திற்குப்பிறகு கஷ்டப்படுவார்கள்' என பெரியவர்கள் சொன்னால், "என் பிள்ளைக்கு சாபம் தருகிறாயா' என்கிறார்கள். புகுந்த வீட்டிற்கு வரும் பெண்ணின் ஜாதகத்தில் குணம், வாரிசு தரும் புத்திர பலம், களத்திர தோஷமற்ற மாங்கல்ய பலம், குடும்பம் முன்னேற்றம் பெறுமா என பார்ப்பார்கள். பெண் வந்த நேரம், குணத்தைப் பொருத்து, அவள் வாழப்போகும் குடும்பத்தின் தலையெழுத்தே மாறிவிடும். பெண்ணின் ஜாதகத்தில் இரண்டாமிடத்தில் பாவகிரகங்களான சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது நின்றால் வாய்ப்பேச்சால் வம்பு வளர்க்கும் பெண்ணாக இருப்பாள். தனம், குடும்ப ஸ்தானமான இரண்டாமிடம் கெடாமல் இருப்பது வாழும் குடும்பத்திற்கு யோகம் தரும். நான்காமிடம் சுபகிரகப் பார்வை, சுபத் தன்மை பெற்றால், உறவினர் களை அனுசரித்துப்போகும் பக்குவத்தால் சுகம் கொடுக்கும். சனியால் நான்காமிடம் கெடாமல் இருந்தால்தான் பத்தாமிடமான மாமியாருடன் ஒத்துப்போவார்கள். ஏழாமிடம் நன்றாக இருந்தாதால்தான் கணவருடனான இல்வாழ்க்கை சிறக்கும். புத்திர தோஷமற்ற ஐந்தாமிட பலத்தால் வாரிசைத் தருவர். அதைவிட முக்கியம், எட்டாமிடம் கணவரின் ஆயுளை நிர்ணயிப்பது. ரஜ்ஜுப் பொருத்தம் இல்லாவிட்டாலும், எட்டாமிடம் பாதித்தாலும் இழப்பு ஏற்பட்டுவிடும். நல்ல தசாபுக்தி இருந்தால்தான் இல்லற வாழ்க்கை சிறக்கும். பெண் பிள்ளைகளைப் பெற்றவர்கள், பெண்ணுக்கு நல்ல கல்வி கொடுத்து, வேலை வாங்கிக் கொடுத்துவிட்டால் கடமை முடிந்துவிட்டது என எண்ணுகிறார் கள். அடுத்தவர் வீட்டில் வாழத் தயார்படுத்துவதில்லை. சம்பாதிக்க வைத்துவிட்டால் பெண்ணுடன் மருமகனைத் தனிக் குடித்தனம் வைத்துவிடலாம் என்கிற போக்குதான் பரவலாக நிலவுகிறது. கணவன் வீட்டில் வாழப்போகும் பெண்ணிற்கு வரதட்சணைக் கொடுப்பதை நினைக்குமளவு, வாழ்க்கையை வாழக் கற்றுக்கொடுப்பதில்லை. காலத்தின் நடைமுறைக்கேற்ப வாழ்வதாய் எண்ணி, வாழும் கலையைப் பெண்பிள்ளைகளுக்குக் கற்றுத் தராததால், பல பெண்கள் திருமணத்திற்குப்பின் வாழ்க்கை நடத்தத் தெரியாமல் பல கஷ்டங்களை அனுபவிக்கின்றனர். திருமணம் செய்தபின்புதான் வாழ்க்கையே தொடங்குகிறது என்பதைப் பல பெற்றோர் கள் நினைக்கத் தவறுகின்றனர்.

குடும்ப வாழ்க்கை

திருமணம் நடந்தபின் அடுத்தநாளே அவர்கள் வீட்டுப் பிள்ளையாக மாறி மாமனார், மாமியார், நாத்தனார், கொழுந்தனார்மீது பாசம்கொண்டு, பிறந்த குடும்பத்தை மறந்து வாழவேண்டுமென புகுந்த வீட்டினர் நினைத்தால் நடந்து விடாது. கணவனைப் பிடித்து, அவன் குணமறிந்து, பின் அவன் குடும்பத்தின் ஒவ்வொரு நபரின் குணமறிந்து செயல்பட வேண்டுமானால் ஒரே நாளில் அல்ல; ஒரு வருடத்தில்கூட முடியாது. அதனை இரு வீட்டாரும் புரிந்துகொள்ள வேண்டும். பிறந்த வீட்டில் நல்ல அறிவுரைகளைச் சொல்லவேண்டும். புகுந்த வீட்டில் வந்த பெண்ணை வரவேற்று சந்தோஷப்படுத்தி, நம் வீடு, நம் குடும்பம் என்னும் எண்ணம் உருவாக சூழலைத் தரவேண்டும். "நாங்க எல்லாம் இப்படியா இருந்தோம்' என்கிற இழுவையிலேயே மாமியார் பிடிக்காதவராகி விடுவார். நம்முடைய பெண்ணைத் திருமணம் செய்துகொடுக்கும்போது என்னவெல்லாம் எதிர்பார்க்கிறோமோ, அதை நம் வீட்டுக்கு வரும் பெண்ணுக்கும் செய்தால் தான் குடும்பம் நடத்தமுடியும். அதேபோல் சமாதானம், விட்டுக் கொடுத்தல், சகிப்புத் தன்மை, கணவருடன் எதிர்வாதம் செய்யாமல் அனுசரித்து வாழும் கலையைப் பெற்றோர்கள் கற்றுத்தர வேண்டும். அப்போதுதான் தாய்க்கும் தாரத்திற்கும் பதில் சொல்லமுடியாமல் தவிக்கும் ஆண்களால் நிம்மதியாக வாழ முடியும். அதனைக் கையாளும் பெண்ணால் தான் வாழ்க்கை அழகாகும். பெண்ணிற்கு செவ்வாய் தோஷம், புத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், பிதுர் தோஷம் இருந்தால் திருமணத்தை தாமதமாக- அதாவது குறைந்தது இருபத்துமூன்று வயதிற்குமேல் செய்துவைக்கவேண்டும். ஏனென்றால் தோஷமுள்ளவர்களுக்கு சிறு வயதில் திருமணம் செய்தால் சரியான மனப் பக்குவமில்லாமல் குடும்ப வாழ்க்கையைக் கெடுக்கும். நடக்கும் தசை அறிந்து, ஏழரைச்சனிக் காலத்தில் நிதானத்துடன் முடிவுகள் எடுத்தால்தான் பிரச்சினையின்றி வாழமுடியும். தாமதத் திருமணம் செய்வதன் நோக்கம்- சரியான நேரத்தில் சரியான முடிவெடுக்கும் ஆற்றல் வந்துவிடும். உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் முடிவுகள் எப்போதும் வெற்றி தராது. பொதுவாக பெண்கள் கோவில்களுக்கு அதிகம் செல்வது நல்லது. ஏனென்றால் கோவிலுக்கு வரும் பெண்களிடம் கலந்துரையாடுவது நல்ல முடிவுகள் எடுக்க பல நேரங்களில் உதவும்.

பரிகாரம்

இன்றைய தலைமுறையினர் வெட்ட வெளியைக்கூட சென்று பார்க்காமல், அலை பேசியில் பார்த்து ரசிக்கிறார்கள். ஆன்லைன் வகுப்புகள் வந்தபிறகு அலைபேசிகள் தரக்கூடாது என இனி விவாதிக்க முடியாது. எத்தனையோ மாற்றங்கள் வந்தாலும் அதில் நல்லதைப் பயன்படுத்தவும், கெட்டதை விலக்கி வைக்கவும் சொல்லி வழிகாட்டவேண்டியது பெற்றோர் கடமை. சமூகத்தைக் குறைசொல்வதால் பாதிக்கப் பட்ட நம் குழந்தைகளின் வாழ்க்கையை யாராலும் மாற்றமுடியாது. பரந்த உலகையும், பலதரப்பட்ட மனிதர்களின் வகைகளையும் எடுத்துக் கூறி, எப்படி நடக்கவேண்டும் என்பதையும் கற்றுத்தர வேண்டியது பெற்றோர்களின் கடமை. இதுதான் சிறந்த பரிகாரம்.

 

-க. காந்தி முருகேஷ்வரர்

செல்: 96003 53748

courtesy;Balajothidam/Nakkiran.

==============================================

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...