Followers

Thursday, June 4, 2020

குருநாதர் அலட்சியமாக "என்னைவிட உனக்கு எல்லாம் தெரியுமா. இன்னும் தொடர்ந்து கிண்டு' என்றார். சீடன் ஒரு பகுதியை தனியே எடுத்து வைத்துக்கொண்டு மேலும் கிண்டினான்.
எல்லோர்க்கும் என்றும் அன்பு வணக்கம் சகோ தோழமை களே......................
சிலசமயம் சில பிரச்சினைகளில் பழம் கனிந்து வருவதுபோல் தெரிந்தாலும்- அது ஏமாற்றமாகிவிடும். அதாவது காய் காயாகவே கனியாமல் இருக்கலாம் அல்லது முற்றிலும் கனிந்து கொழகொழவென்று சாப்பிட முடியாமல் போகலாம். அதனால்தான் எதற்கும் பக்குவம் வேண்டும் என்பது! ஒரு சித்த வைத்திய குருநாதர் ஒரு லேகியம் தயாரித்தார். அது முதுமையை மாற்றி இளமையாக்கும் லேகியம்.
அதில் சேர்க்கவேண்டிய மூலிகைப் பொருட்களை எல்லாம் சேர்த்து அடுப்பில் வைத்து கிண்டும்படி சீடரிடம் கூறிவிட்டு குருநாதர் வேறு வேலை பார்த்தார். சீடன் ஒருமரத்தடியில் அமர்ந்து அடுப்பில் கிண்டியபோது, அதன் ஆவி பட்டு மரத்தில் பட்டுப் போன இலைகள் பசுமைத் தோற்றம் அடைந்தன. உடனே சீடன் குருநாதரிடம் "லேகியம் பக்குவம் வந்துவிட்டது' என்றான்.
குருநாதர் அலட்சியமாக "என்னைவிட உனக்கு எல்லாம் தெரியுமா. இன்னும் தொடர்ந்து கிண்டு' என்றார். சீடன் ஒரு பகுதியை தனியே எடுத்து வைத்துக்கொண்டு மேலும் கிண்டினான்.
அது முறுகிவிட்டது. குருநாதர் மெதுவாக வந்து எடுத்துப் பார்த்தார். டெஸ்ட் செய்தபோது சரியாக வரவில்லை.
"அதிகமாக கிண்டிவிட்டாய்' என்று திட்டினார். தான் தனியே எடுத்துவைத்து மருந்தை எடுத்துக்கொடுக்க,
அது சரியான பக்குவம் என்று பாராட்டினார். அந்த குருநாதர்தான் அகத்தியர். சீடர்தான் போகர். இப்படி சில விஷயம் நமக்குத் தெரியாதது மற்றவர்களுக்குத் தெரியும்.
ப -பி
============================================
ஒம் குரு வாழ்க, குரு நன்றாய் வாழ்க, குருவே துணை...
Gurur Brahma, Gurur Vishnu, Gurur Devoh Maheshwara
Guru Sakshat Parabrahmah Tasmai Shree Guru Veh Namah !
I am Love, I shower Love. I share Love. I am pleased with Love. - Baba
When your heart is filled with good thoughts and feelings, all that comes out of the senses - your speech, your vision, your action - will naturally be pure. - Baba
உனது ஹ்ருதயம் நல்ல சிந்தனைகளாலும் நல்ல உணர்வுகளாலும் நிரப்பப்பட்டுள்ள போது, உனது பேச்சு, பார்வை, செயல்கள் யாவும் இயல்பாகவே சுத்தமாக இருக்கும். – பாபா
Embodiments of divine Love!............ Have A Great And Wonderful Day Ahead.
God Bless You All............ love-all-serve-all-help-ever-hurt-never............. Sairam
அன்புறவுகள்... எல்லோர்க்கும்... அனைவருக்கும் சகோ என்றென்றும் அன்பு நன்றியுடன்.! இனிய காலை மதிய மாலை இரவு வணக்கம்! ..உரித்தாகுக தோழமை / சகோ(களே)................!!!
"ஒன்று நினைக் கில் அது ஒழிந்து மற்றொன்றாகும்; அன்றில் அது வரினும் வந்தெய்தும்; ஒன்று நினையாமல் முன்வந்து நிற்கும்; எனையாளும் ஈசன் செயல்'
ஆன்றோர்க்கும், சான்றோர்க்கும், என்னைப்போன்றோர்க்கும் இறையருளோடு கூடிய இனிய நற்காலை வணக்கம் அன்பு சகோ, இனிய நாளாக மலரட்டும்...சகோ தோழமை களே............... "
விடியும் என்று விண்ணை நம்பும் நீ ....! முடியும் என்று உன்னை நம்பு...!!"
ஓம் சாயி நமோ நம! ஸ்ரீ சாயி நமோ நம!
ஜெய ஜெய சாயி நமோ நம! சத்குரு சாயி நமோ நம!
அன்புடன் சகோதரன்
விக்னசாயி............
=========================================================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...