Followers

Tuesday, April 7, 2020


Image may contain: 1 person, text



If anyone does any evil unto you, do not retaliate.


''மற்றவர்கள் உன்னை எத்தனை வழிகளில் வசைபாடினாலும் கண்டனம் செய்தாலும் நீ எதிர்த்துக் கசப்பாகவோ மனம் புண்படும்படியாகவோ பேசாதே. அதைப் பொறுமையுடன் ஸஹித்துக்கொள்வாயாக; அதனால் உனக்கு அபாரமான சுகம் கிடைக்கும்.-- ''இந்த உலகமே தலைகீழாக மாறலாம். ஆயினும், நாம் வழிதவறிவிடக் கூடாது. நம்முடைய நிலையிலேயே உறுதியாக நின்றுகொண்டு அமைதியாக இவ்வுலகை வேடிக்கை பார்க்கவேண்டும்.-- ''உனக்கும் எனக்கும் நடுவேயுள்ள மதிற்சுவரை உடைத்து, முழுக்க நாசம் செய்வாயாக. அப்பொழுது நமக்குப் போகவும் வரவும் பயமில்லாத ஒரு பிரசஸ்தமான (மங்களமான) பாதை கிடைத்துவிடும்.


He who attains the Supreme Goal of life becomes immortal and happy; all others merely exist.


''யார் இங்கு சாகாவரம் பெற்றவர்? ஆன்மீக முன்னேற்றம் எய்தியவன் கிருதார்த்தனாகிறான் (பேறு பெற்றவன்). மற்ற ஜீவன்கள், மூச்சு விட்டுக்கொண் டிருக்கும்வரை, உயிருள்ளனவாய் இருக்கின்றன.ஃஃ (திருவாய்மொழி இங்கு முடிகிறது) அருள்மொழியான இவ்வார்த்தைகள் என் செவிகளில் விழுந்தபோது, என்னுடைய நோய்கண்ட இதயம் ஸுகமடைந்தது; என் ஜீவனுடைய தாகம் அடங்கியது. நான் ஆனந்தம் நிரம்பியவனானேன்.


140 இப்பொழுது, பாபா அவ்வப்பொழுது திருவாய்மொழிந்ததைக் கேளுங்கள். ஸர்வ ஸாதாரணமாகத் தோன்றினும் அவை விலைமதிப்பற்றவை. இவ்விஷயங்களை மனத்தில் எப்பொழுதும் வைத்திருந்தால், உங்களுக்கு நன்மையையும் நற்பலன்களையும் அளிக்கும்.


141 ''முன்ஜன்ம சம்பந்தமில்லாமல் எவரும் எங்கும் போவதில்லை. ஆகவே மனிதனாயினும், மிருகமாயினும், பறவையாயினும், அவமதிப்பு செய்து விரட்டி விடாதே.--


142 ''யார் உன்னிடம் வந்தாலும் தகுந்த மரியாதை கொடு. தாகத்தால் தவிப்பவர்களுக்கு நீரும், பசியால் வாடியவர்களுக்கு உணவும், ஆடையில்லாதவர்களுக்குத் துணியும், திக்கற்றவர்களுக்கு இருப்பிடமும் அளிப்பாயாக. இவ்வாறு செய்தால் ஸ்ரீஹரி ஸந்தோஷமடைவார்.--


143 ''யாராவது உன்னிடம் பைஸா கேட்டால், உனக்குக் கொடுப்பதற்கு இஷ்டமில்லை என்றால் கொடுக்க வேண்டா. ஆனால், பைஸா கேட்ட நபர் மீது நாயைப்போலக் குரைக்கவும் வேண்டா.--


144 ''மற்றவர்கள் உன்னை எத்தனை வழிகளில் வசைபாடினாலும் கண்டனம் செய்தாலும் நீ எதிர்த்துக் கசப்பாகவோ மனம் புண்படும்படியாகவோ பேசாதே. அதைப் பொறுமையுடன் ஸஹித்துக்கொள்வாயாக; அதனால் உனக்கு அபாரமான சுகம் கிடைக்கும்.--


145 ''இந்த உலகமே தலைகீழாக மாறலாம். ஆயினும், நாம் வழிதவறிவிடக் கூடாது. நம்முடைய நிலையிலேயே உறுதியாக நின்றுகொண்டு அமைதியாக இவ்வுலகை வேடிக்கை பார்க்கவேண்டும்.--


146 ''உனக்கும் எனக்கும் நடுவேயுள்ள மதிற்சுவரை உடைத்து, முழுக்க நாசம் செய்வாயாக. அப்பொழுது நமக்குப் போகவும் வரவும் பயமில்லாத ஒரு பிரசஸ்தமான (மங்களமான) பாதை கிடைத்துவிடும்.


147 ''குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே உள்ள தடுப்புச்சுவர், 'நீங்கள், நான்ஃ என்னும் மனோபா(ஆஏஅ)வமே. அதை உடைத்தெறியாவிட்டால் இருவரும் ஒன்றே என்னும் நிலையை அடைய முடியாது.--


148 ''அல்லாவே யஜமானர்; அல்லாவே யஜமானர்õ அவரைத் தவிர ரட்சகர் வேறு எவரும் இல்லை. அவருடைய செய்கைகள் உலகியலுக்கப்பாற்பட்டவை; விலைமதிப்பற்றவை; கற்பனைசெய்து பார்க்கமுடியாதவைõ--


149 ''அவர் நினைப்பதே நடக்கும்; அவரே வழியைக் காட்டுவார். நம்முடைய மனத்தின் இனிய விருப்பங்கள் ஒரு கணமும் தாமதமின்றி நிறைவேறும் நேரம் வரும்.--


150 ''பூர்வஜன்மங்களின் சம்பந்தத்தினால் நாம் ஒருவரையொருவர் சந்திக்கும் பாக்கியம் பெற்றோம். இதயத்தின் அடித்தளத்தி¬ருந்து பொங்கும் அன்புடன் நாம் ஒருவரையொருவர் தழுவுவோம். ஸுகத்தையும் ஸந்துஷ்டியையும் (பூரணமான திருப்தியையும்) அனுபவிப்போம்.--


''யார் இங்கு சாகாவரம் பெற்றவர்? ஆன்மீக முன்னேற்றம் எய்தியவன் கிருதார்த்தனாகிறான் (பேறு பெற்றவன்). மற்ற ஜீவன்கள், மூச்சு விட்டுக்கொண் டிருக்கும்வரை, உயிருள்ளனவாய் இருக்கின்றன.ஃஃ (திருவாய்மொழி இங்கு முடிகிறது) அருள்மொழியான இவ்வார்த்தைகள் என் செவிகளில் விழுந்தபோது, என்னுடைய நோய்கண்ட இதயம் ஸுகமடைந்தது; என் ஜீவனுடைய தாகம் அடங்கியது. நான் ஆனந்தம் நிரம்பியவனானேன்.


Baba's Advice Regarding our Behaviour


The following words of Baba are general and invaluable. If they are kept in mind and acted upon, they will always do you good. "Unless there is some relationship or connection, nobody goes anywhere. If any men or creatures come to you, do not discourteously drive them away, but receive them well and treat them, with due respect. Shri Hari (God) will be certainly pleased, if you give water to the thirsty, bread to the hungry, clothes to the naked, and your verandah to strangers for sitting and resting. If anybody wants any money from you, and you are not inclined to give, do not give, but do not bark at him, like a dog.


Let anybody speak hundreds of things against you, do not resent by giving any bitter reply. If you always tolerate such things, you will certainly be happy. Let the world go topsy-turvy, you remain where you are. Standing or staying in your own place, look on calmly at the show of all things passing before you.


Demolish the wall of difference that separates you from Me; and then the road for our meeting will be clear and open. The sense of differentiation, as I and thou, is the barrier that keeps away the disciple from his Master, and unless that is destroyed the state of union or atonement is not possible, "Allah Malik" i.e. God is the sole Proprietor, nobody else is our Protector. His method of work is extra-ordinary, invaluable, and inscrutable. His will will be done and He will show us the way, and satisfy our heart's desires. It is on account of Rinaubandh (former relationship) that we have come together,
let us love and serve each other and be happy. He, who attain the supreme goal of life, is immortal and happy; all others merely exist, i.e., live so long as they breathe". —


No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...