Followers

Thursday, April 9, 2020

நாமெல்லாம் தாய் ஆமையின் அன்பார்ந்த பார்வையொன்றாலேயே போஷாக்கு பெறும் ஆமைக்குட்டிகள். நமக்கு எப்போதும் பசியில்லை; தாகமுமில்லை; களைப்புமில்லை. எந்நேரமும் திருப்தியுள்ளவர்களாகவே இருக்கிறோம். சாயியின் கடைக்கண் பார்வையொன்றே போதும்; நமக்குச் சோறும் வேண்டா, நீரும் வேண்டா. அன்பான பார்வையே நம் பசியையும் தாகத்தையும் தணித்துவிடுகிறது. அதை எப்படித் தகுந்த அளவிற்குப் புகழமுடியும்? கிருபாசமுத்திரமான ஸாயீராயரே நம்முடைய காட்சி அனைத்தும். இந்நிலையில், காட்சிப்பொருள், காண்பவன், காட்சி -- இந்த முக்கோண பேதம் மறைந்து, மூன்றும் ஒன்றாகிவிடுகின்றன.
அதுபோலவே நாம் சருமத்திலும் தொடுவுணர்ச்சியிலும் ஸாயீயின் பிரகாசத்தைக் காண்கிறோம். மூக்கிலும் வாசனையிலும் அவ்வாறே ஸாயீ உறைகிறார். காதில் ஓர் ஒ­ விழும்போது ஸாயியின் உருவம் உடனே வெளிப்படுகிறது. கேள்வி, கேட்பவர், கேட்கும் செயல் -- இம்மூன்றும் ஒன்றாகிவிடுகின்றன. நாக்கு ஒரு சுவையை அனுபவிக்கும்போது ஸாயீ சுவையுடன் கலந்துவிடுகிறார். இதன் பிறகு, சுவையும், நாக்கும், சுவைக்கும் செயலும் ஒன்றாகிவிடுவதில் அதிசயம் என்ன இருக்கிறது? கர்மேந்திரியங்கள் அனைத்தின் கதியும் இதுவே. அவையெல்லாம் ஸாயீயை சேவித்தால், கர்மவினைகள் அனைத்தும் அழியும். செயல்களின் விளைவுகளி­ருந்து விடுதலையும் கிடைக்கும்.
தொடர்ந்து படியுங்கள் மேலும் சாயி அற்புதம் தொடர்கிறது..............
Please see below for English version. Tq
எலோர்க்கும் அன்பு நன்றியும் வணக்கமும்....
சாயியின் சரித்திரம் பாக்கியம் அளிப்பது. அவருடைய நித்திய நடவடிக்கைகள் பாக்கியம் அளிப்பவை. அவருடைய செய்கைகளோ அதியற்புதமானவை; புரிந்துகொள்ளமுடியாதவை; கிரமமாக விவரிக்க முடியாதவை. அவருடைய உண்மையான வாழ்க்கைச் சரித்திரம் ஆழங்காணமுடியாதது;...................................... ஸாயீயின் லீலைகள் எண்ணத்திற்கும் செயல்/ விளைவு சிந்தனைக்கும் அப்பாற்பட்டவை. அவரைத் தவிர வேறு யாரால் அவற்றை விவரிக்க முடியும்? நான் ஒரு கருவி மாத்திரமே அல்லேனோ? அவரே என்னைப் பேசவைப்பார். எல்லாருக்கும் எப்போதும் க்ஷேமம் உண்டாகட்டும்
''ஆத்மார்த்தமாகவும் இதயபூர்வமாகவும் என்னிடம் அன்பு கொண்டவன் என் கதைகளைக் கேட்டு இயல்பாகவே சந்தோஷமடைவான்.--Baba.......................................................................................................
."Bend the body, mend the senses and end the mind - this is the way to Immortality." - Baba.
Spreading the life and teachings of Shri Shirdi Saibaba.......
Sometimes Sai removes things from our lives for our own protection. Trust in Him.
Just because you can't see the air, doesn't mean you stop breathing. Just because you can't see Sai doesn't mean you stop believing.
Sai has perfect timing; never early, never late. It takes a little patience and it takes a lot of faith but it's worth the wait. .......... Think positive and positive things will happen.................
வேண்டத் தக்கது அறிவோய் நீ,
வேண்ட முழுவதும் தருவோய் நீ,
வேண்டும் அயன், மால்க்கு அரியோய் நீ
வேண்டி என்னைப் பணிகொண்டாய்!
வேண்டி நீ யாது அருள் செய்தாய்,
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில்,
அதுவும் உன் தன் விருப்பு அன்றே!.....
Who so ever puts his feet on SHIRDI soil, his sufferings would come to an end, the wretched and miserable would rise into plenty of joy and happiness, as soon as they climb the steps of DWARAKAMAYEE.
ஸாயீயை சரணடைந்து அவருடைய பாதங்களை நமஸ்கரிக்கிறேன். அவர் உறையும் எல்லா ஜீவராசிகளுக்கும் வணக்கம் செலுத்துகிறேன். கதை கேட்பவர்கள் ஸாயீக்கு நிவேதனம் செய்யப்படும் இப் பிரஸங்கத்திற்குத் தங்களுடைய மேலான கவனத்தை தானமாக அளிக்குமாறு வேண்டுகிறேன்.
எல்லாருக்கும் எப்போதும் க்ஷேமம் உண்டாகட்டும்
ஸ்ரீ ஸாயீயின் பொற்கமலப் பாதங்களில் சரணமடைகின்றேன். கதை கேட்பவர்களுக்கு நமஸ்காரம் செய்கிறேன். ஸம்ஸார ஸாகரத்தை எளிதாகக் கடக்கும் திறமையைப் பெறும் வகையாக இக் கதைகளை பயபக்தியுடன் கவனமாகச் செவிமடுக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் எப்பொழுது சொல்லப்படுகிறதோ அப்பொழுது கேளுங்கள். அது மங்களத்தை அளிக்கும். கருணாமூர்த்தியான ஸாயீயே எல்லாச் செயல்களுக்கும் காரணகர்த்தா..
Baba comforted us saying, "Alla Accha Karega (God will do good)."
ஒம் குரு வாழ்க, குரு நன்றாய் வாழ்க, குருவே துணை...
''ஜெய் ஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு
ஸாயீநாத் மஹராஜ் கீ ஜெய்"
இனிய சுபகுருதின வணக்கம் அன்புறவுகளே!!!..
ஸ்ரீ சிர்டீ சாயி ஸ்த்சரித்திரம் தொடர்கிறது……….
Please see below for English version. Tq
வாசகர்களுக்கு என் பிரார்த்தனை இதுவே, ''வாருங்கள், வந்து இந்த ஆனந்தத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள். சான்றோர்களுடன் சேர்ந்துகொண்டு சதா ஸாயீயின் புனிதமான கதைகளைக் கேட்பவர் மஹாபாக்கியசாலிகள்...சாயி ஸ்த்சரித்திரம் அத்தியாயம் 35
தமிழில் தொடர்கிறது……….
*
*
*
================================================================
அத்தியாயம் - 35
35. சோதிக்க வந்தவர்களைக் கையாண்ட விநோதமும் உதீயின் அற்புத சக்தியும்
ஒம் ஸ்ரீ விநாயகனே போற்றிõ ஸ்ரீ ஸரஸ்வதியே போற்றிõ
ஸ்ரீ குருமஹராஜனே போற்றிõ குலதேவதைக்கும் ஸ்ரீ ஸீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீஸாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.
1 கடந்த அத்தியாயத்தின் முடிவில் கோடிகாட்டிய கதைகளை இந்த அத்தியாயத்தில் தொடர்கிறேன். அமைதியான மனத்துடன் கேளுங்கள்.
2 தன்னுடைய பாதையே உயர்ந்தது என்று நினைத்துத் தன்னுடைய மதத்தின் உட்பிரிவின்மேல் வைக்கும் அளவுக்குமீறிய அபிமானத்தைவிட பயங்கரமானதும் தாண்டமுடியாததுமான விக்கினம், ஆன்மீக முன்னேற்றத்திற்கு வேறெதுவுமே இல்லை.
3 ''நாங்கள் உருவமற்ற கடவுளைத் தொழுபவர்கள். உருவமுள்ள கடவுளே
அனைத்து பிரமைகளுக்கும் மூலகாரணம். ஞானிகளும் சாதுக்களுங்கூட மனிதர்கள்தாமே? இவ்வாறிருக்க, அவர்களைப் பார்த்தால் நாம் ஏன் வணக்கம் செலுத்த வேண்டும்?--
4 ''அவர்களுக்கு நமஸ்காரம் செய்யக்கூடாது; தக்ஷிணையும் கொடுக்கக்கூடாது. அவர்களுக்கு மரியாதை ஏதும் செய்யக்கூடாது. ஏனெனில் அது பக்தியைக் கே­ செய்வதாகும்.ஃஃ
5 சிர்டீயைப்பற்றிச் சிலர் சிலவிதமாகவும், வேறு சிலர் வேறுவிதமாகவும், பலர் பலவிதமாகப் பேசினார்கள். ஆனால், அவை எல்லாவற்றையுமே நாம் விழுங்கிவிட முடியாது.
6 சிலர் சொன்னார்கள், ''தரிசனத்திற்குப் போனால் ஸாயீபாபா தக்ஷிணை கேட்கிறார். சாதுக்கள் திரவியத்தை சம்பாதிக்க முயலும்போது அவர்களுடைய சாதுத்துவம் அடிபட்டுவிடுகிறதன்றோõ --
7 ''குருட்டு நம்பிக்கை நல்லதன்று. பிரத்யக்ஷமாக அனுபவம் கிடைத்த பிறகே நான் என்னுடைய மனத்தில் எவ்வழி செல்வதென்று முடிவுசெய்வேன்.--
8 ''பணத்தின் மீது நாட்டம் கொண்டவரின் ஞானித்துவத்தை என்னால் மெச்ச முடியவில்லை. நான் தக்ஷிணை கொடுக்கமாட்டேன். நம்முடைய வணக்கத்திற்கு அவர் தகுதியுள்ள பாத்திரமல்லர்.--
9 ''எது எப்படியிருப்பினும், நான் சிர்டீக்குச் சென்று அவரைப் பேட்டி காண்பேன். ஆனால், பாதங்களுக்கு வந்தனம் செய்யமாட்டேன்; தக்ஷிணை கொடுக்கவும் மாட்டேன்.ஃஃ
10 எவரெவரெல்லாம் மனத்தில் இந்தக் குதர்க்க வாதத்தை திடப்படுத்திக்கொண்டு கிளம்பினரோ, அவரவரெல்லாம் தரிசனயோகம் கிடைத்தபின் ஸாயீயை சரணடைந்தார்கள்.
11 எவரெவரெல்லாம் ஸாயீயைக் கண்ணால் கண்டார்களோ, அவரவரெல்லாம் தங்களுடைய நிலையில் உறுதியாக நின்றனர். மறுபடியும் சந்தேகங்கொண்டு திரும்பிப் பார்க்கவே யில்லை. ஸாயீபாதங்களில் மூழ்கிவிட்டனர்õ
12 அவர்கள் தீர்மானம் செய்துகொண்டு வந்ததை அறவே மறந்து குற்றவுணர்ச்சியால் பாதிக்கப்பட்டு ஸாயீபாதங்களை வணங்கினர்.
13 'தன்னுடைய மார்க்கமே சிறந்ததுஃ என்னும் அளவுக்குமீறிய மதாபிமானம் நல்லடக்கம் செய்யப்பட்ட கதை இந்த அத்தியாயத்தில் சொல்லப்படுகிறது. பயபக்தியுடன் கேளுங்கள்; ஜீவனுக்கு அத்தியந்த சுகம் கிடைக்கும்.
14 அதுபோலவே, பாலா நெவாஸ்கர் எவ்வாறு ஒரு நல்லபாம்பை பாபாவாகவே கருதிப் பிரீதியுடன் நடந்துகொண்டார் என்பதுபற்றியும் கேளுங்கள். மேலும், இந்த அத்தியாயம் உதீயின் சூக்குமமான சக்தியைப்பற்றியும் பேசுகிறது.
15 கதை கேட்பவர்களேõ எனக்குக் கிருபை செய்யுங்கள். நான் கேவலம் ஸாயீயின் ஆக்ஞைக்குக் கட்டுப்பட்ட ஓர் அடிமை. அவருடைய ஆணையை பயபக்தியுடன் நிறைவேற்றத்தான் எனக்குத் தெரியும். அதி­ருந்து எழுந்ததே இச் சரித்திரத்தின் ஒவ்வொரு எழுத்தும்.
16 அவருடைய பாதங்களைப் பார்த்துக்கொண்டே அவற்றி­ருந்து அலையலையாக எழும்பும் கவிதைகளை அவருடைய பவித்திரமான சரித்திரம் என்னும் குடத்தில் மேலும் மேலும் நிரப்பும் செய­ல் ஈடுபட்டிருக்கிறேன்.
17 நாமெல்லாம் தாய் ஆமையின் அன்பார்ந்த பார்வையொன்றாலேயே போஷாக்கு பெறும் ஆமைக்குட்டிகள். நமக்கு எப்போதும் பசியில்லை; தாகமுமில்லை; களைப்புமில்லை. எந்நேரமும் திருப்தியுள்ளவர்களாகவே இருக்கிறோம்.
18 கடைக்கண் பார்வையொன்றே போதும்; நமக்குச் சோறும் வேண்டா, நீரும் வேண்டா. அன்பான பார்வையே நம் பசியையும் தாகத்தையும் தணித்துவிடுகிறது. அதை எப்படித் தகுந்த அளவிற்குப் புகழமுடியும்?
19 கிருபாசமுத்திரமான ஸாயீராயரே நம்முடைய காட்சி அனைத்தும். இந்நிலையில், காட்சிப்பொருள், காண்பவன், காட்சி -- இந்த முக்கோண பேதம் மறைந்து, மூன்றும் ஒன்றாகிவிடுகின்றன.
20 அதுபோலவே நாம் சருமத்திலும் தொடுவுணர்ச்சியிலும் ஸாயீயின் பிரகாசத்தைக் காண்கிறோம். மூக்கிலும் வாசனையிலும் அவ்வாறே ஸாயீ உறைகிறார்.
21 காதில் ஓர் ஒ­ விழும்போது ஸாயியின் உருவம் உடனே வெளிப்படுகிறது. கேள்வி, கேட்பவர், கேட்கும் செயல் -- இம்மூன்றும் ஒன்றாகிவிடுகின்றன.
22 நாக்கு ஒரு சுவையை அனுபவிக்கும்போது ஸாயீ சுவையுடன் கலந்துவிடுகிறார். இதன் பிறகு, சுவையும், நாக்கும், சுவைக்கும் செயலும் ஒன்றாகிவிடுவதில் அதிசயம் என்ன இருக்கிறது?
23 கர்மேந்திரியங்கள் அனைத்தின் கதியும் இதுவே. அவையெல்லாம் ஸாயீயை சேவித்தால், கர்மவினைகள் அனைத்தும் அழியும். செயல்களின் விளைவுகளி­ருந்து விடுதலையும் கிடைக்கும்.
24 காவியம் நீண்டுகொண்டே போகிறது; இது ஸாயீயின் பிரேமையால் விளைந்ததே. நாம் இப்பொழுது ஏற்கெனவே கோடிகாட்டப்பட்ட விஷயங்களுக்குத் திரும்பிச்சென்று, விட்ட இடத்தி­ருந்து தொடர்வோமாக.
25 அருவ வழிபாட்டில் தீவிர நம்பிக்கை வைத்து உருவ வழிபாட்டிற்கு முதுகைக் காட்டுபவராக இருந்த நபர் ஒருவர், என்ன இருக்கிறதென்று தெரிந்துகொள்ளும் ஆர்வப்பசியால் மட்டுமே உந்தப்பட்டு சிர்டீக்குச் செல்ல உற்சாகம் கொண்டார்.
26 ஆகவே அவர் சொன்னார், ''சாது தரிசனம் செய்வதற்கு மட்டுமே நாம் சிர்டீக்கு வருவோம். அவருக்கு வணக்கம் செலுத்தமாட்டோம்; தக்ஷிணையும் கொடுக்க மாட்டோம்.--
27 ''இந்த இரண்டு நிபந்தனைகளுக்கும் ஒத்துக்கொண்டால்தான் நாம் சிர்டீக்கு வருவோம்.ஃஃ நண்பர் இதற்கு ஒத்துக்கொண்டவுடன் அந்த நபர் சிர்டீக்குத் தெம்புடன் கிளம்பினார்.
28 நண்பரின் பெயர் காகா மஹாஜனி; பாபாவின் மீது பவித்திரமான பக்தியும் பிரேமையும் வைத்திருந்தவர். அந்த ஆசாமியோ சந்தேகங்களும் தவறான நம்பிக்கைகளும் நிரம்பிய பாத்திரம்.
29 இருவரும் ஒரு சனிக்கிழமை இரவு பம்பாயி­ருந்து கிளம்பி ஞாயிற்றுக்கிழமை காலையில் சிர்டீ வந்துசேர்ந்தனர்.
30 ஸாயீதரிசனம் செய்வதற்கு இருவரும் உடனே மசூதிக்குச் சென்றனர். அப்பொழுது என்ன நடந்ததென்பதை கவனமாகக் கேளுங்கள்.
31 காகா மஹாஜனி மசூதியின் முதற்படியில் கால் வைத்தவுடனே நண்பரைத் தூரத்தி­ருந்தே பார்த்துவிட்ட பாபா, மதுரமான குர­ல் கேட்டார், ''நீர் ஏன் வந்தீர் ஐயா?ஃஃ
32 அன்பு ததும்பிய இவ்வார்த்தைகளைக் கேட்ட காகா மஹாஜனியின் நண்பர் சூக்குமமான குறிப்பை உடனே அடையாளம் கண்டுகொண்டார். வாக்கியத்தின் அமைப்பும் வார்த்தைகள் உச்சரிக்கப்பட்ட பாணியும் அவருக்குத் தம் தந்தையை நினைவூட்டின.
33 ''நீர் ஏன் வந்தீர் ஐயா?ஃஃ என்ற வார்த்தைகள் வெளிவந்த ஸ்வரம் (நாதம்) காகா மஹாஜனியின் நண்பரை வியப்பில் ஆழ்த்தியது.
34 இனிமையான அந்தக் குரல் அவருக்குத் தம் (காலமான) தந்தையை ஞாபகப்படுத்தியது. குரலும் வார்த்தைகள் வெளிவந்த பாணியும் அவருக்குத் தந்தையினுடையதைப் போலவே இருந்தன. பா(ஆஏஅ)வனைச் செயல், பூரணமாக யதார்த்தமாகவும் துல்­யமாகவும் இருந்தது.
35 ஓ, அச்சொற்களின் மோகனசத்திதான் என்னேõ காகாவின் நண்பர் வியப்படைந்த மனத்தினராய், ''இவை என் தந்தையின் சொற்களேõ குரலும் எனக்கு நன்கு பழக்கப்பட்டதுõஃஃ என்று சொன்னார்.
36 காலஞ்சென்ற தந்தையின் பேச்சைப் போன்றே வெளிவந்த வார்த்தைகள் நண்பரின் இதயத்தைத் தொட்டுவிட்டன. ஏற்கெனவே செய்துவைத்திருந்த தீர்மானங்களை விசிறியடித்துவிட்டு பாபாவின் பாதங்களில் தலைசாய்த்தார்.
37 பின்னர், பாபா காகாவிடம்மட்டும் தக்ஷிணை கேட்டார்; காகா மகிழ்ச்சியுடன் தக்ஷிணை கொடுத்தார். இருவரும் திரும்பினர். மறுபடியும் பிற்பகல் வேளையில் மசூதிக்குச் சென்றனர்.
38 இருவரும் சேர்ந்தே சென்றனர்; இருவருமே பம்பாய்க்குத் திரும்ப வேண்டும். காகா வீடு திரும்புவதற்கு அனுமதி கேட்டார். பாபா மறுபடியும் தக்ஷிணை கேட்டார்.
39 இம்முறையும் பாபா, ''எனக்குப் பதினேழு ரூபாய் கொடுஃஃ என்று காகாவைமட்டுமே கேட்டார். நண்பரை ஏதும் கேட்கவில்லை. நண்பரின் மனம் உறுத்தியது.
40 காகாவிடம் நண்பர் கிசுகிசுத்தார், ''பாபா ஏன் உங்களைமட்டும் தக்ஷிணை கேட்கிறார்? காலையிலும் உங்களைத்தான் கேட்டார்; இப்பொழுதும் உங்களை மட்டுமே கேட்கிறார்.--
41 ''நான் உங்களுடன் சேர்ந்து இருக்கும்போது தக்ஷிணைக்கு என்னை ஏன் விலக்கிவிடுகிறார்?ஃஃ காகா மெல்­ய குர­ல் பதிலுரைத்தார், ''பாபாவிடமே இந்தக் கேள்வியைக் கேளுங்கள்.ஃஃ
42 திடீரென்று பாபா காகாவைக் கேட்டார், ''என்ன? நண்பர் உம்மிடம் என்ன சொல்கிறார்?ஃஃ நண்பர் இப்பொழுது நேரிடையாகவே பாபாவைக் கேட்டார், ''நான் உங்களுக்கு தக்ஷிணை கொடுக்கலாமா?ஃஃ
43 பாபா பதில் சொன்னார், ''உம்முடைய மனத்தில் கொடுக்கவேண்டுமென்ற விருப்பம் இல்லை; ஆகவே நான் கேட்கவில்லை. இப்பொழுது உமக்குக் கொடுக்க விருப்பமிருந்தால் கொடுக்கலாம்.ஃஃ
44 பாபா கேட்டபோதெல்லாம் காகா தக்ஷிணை கொடுத்ததுபற்றி நண்பர் அவரைக் குற்றம் சாட்டுவது வழக்கம். இப்பொழுதோ, பாபா கேட்காமலேயே தக்ஷிணை கொடுக்கட்டுமா என்று அதே மனிதர் கேட்கிறார்õ காகா ஆச்சரியமடைந்தார்.
45 பாபா ''விருப்பமிருந்தால் கொடுக்கலாம்ஃஃ என்று சொன்னவுடனே நண்பரால் தாமதிக்க முடியவில்லை. உடனே பதினேழு ரூபாயை பாபாவின் பாதங்களில் (பாபா கேட்காமலேயே) வைத்தார்.
46 பாபா அப்பொழுது அவரிடம் சொன்னார், ''போவதற்கு என்ன அவசரம்? ஒரு கணம் உட்காரும்.ஃஃ பிறகு பாபா அவருடைய பேதபுத்தியைச் சீர்படுத்துவதற்காக இனிமையான வார்த்தைகளால் உபதேசம் செய்தார்.
47 ''உமக்கும் எனக்கும் நடுவே பேதம் கற்பிக்கும் தே­1யின் சுவரை இடித்து நிரவிவிடுங்கள். ஒருவரையொருவர் சந்திக்க உதவும் வழி அகலமாகத் திறந்து கொள்ளும்.ஃஃ
48 பிறகு, அவர்கள் வீடு திரும்புவதற்கு பாபா அனுமதியளித்தார். ஆனால், இருண்ட வானத்தைப் பார்த்த மாதவராவ், ''போகும் வழியில் இவர்கள் மழையில் மாட்டிக்கொள்வார்கள் போ­ருக்கிறதேஃஃ என்று பாபாவிடம் சொன்னார்.
49 பாபா பதில் கூறினார், ''இவர்கள் தைரியமாகக் கிளம்பட்டும். மழையைப் பார்த்து வழியில் பயப்படுவதற்கு ஏதும் இல்லை.ஃஃ
50 ஆகவே, இருவரும் பாபாவின் பாதங்களுக்கு வந்தனம் செய்துவிட்டுப் போய்க் குதிரைவண்டியில் உட்கார்ந்தனர். காற்றில் நீர்மூட்டம் அதிகரித்தது; வானத்தில் மின்னலடித்தது; கோதாவரி நதியின் பெருக்கம் அதிகமாகியது.
51 வானம் கடகடவென்று கர்ஜித்தது. நதியைப் படகினால் கடக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஆனாலும் காகாவுக்கு பாபா அளித்த உறுதிமொழியின்மீது முழுநம்பிக்கை இருந்தது.
52 நண்பருக்கோ, எப்படி சௌகரியமாகவும் பத்திரமாகவும் வீடு போய்ச் சேர்வது என்பதே பெருங்கவலை. வழியில் நேரக்கூடிய சங்கடங்களைக் கற்பனை செய்து, 'ஏன் இங்கு வந்தோம்ஃ என்றெண்ணி வருத்தப்பட்டார்.
53 எப்படியோ அவர்கள் பத்திரமாகவும் சுகமாகவும் நதியைக் கடந்தபின் பம்பாய்க்கு ரயில் ஏறினர். அதன் பிறகே மேகங்கள் மழையைக் கொட்ட ஆரம்பித்தன. இருவரும் பயமேதுமின்றி பம்பாய் சென்றடைந்தனர்.
54 காகாவின் நண்பர் வீட்டிற்குத் திரும்பிக் கதவுகளையும் ஜன்னல்களையும் திறந்துவிட்டார். உள்ளே மாட்டிக்கொண்டிருந்த சிட்டுக்குருவி ஒன்று வேகமாகப் பறந்து வெளியே சென்றது. வீட்டினுள் இரண்டு சிட்டுக்குருவிகள் இறந்து கிடந்தன.
55 அன்னமும் பானமும் இல்லாததால் இறந்துபோன சிட்டுக்குருவிகளைப் பார்த்த அவர் மனமுடைந்து சோகமானார்.
56 ''சிர்டீக்குப் போவதற்குமுன் ஜன்னலைத் திறந்துவைத்துவிட்டுப் போயிருந்தால், அவை காலனின் பிடியில் சிக்கியிருக்கமாட்டா. பாவம்õ அதிருஷ்டக்கட்டைகளான இவ்விரண்டு சிட்டுக்குருவிகள் என் கைகளில் இறக்கும்படி ஆயிற்று.--
57 ''பறந்துபோன சிட்டுக்குருவியைக் காலனிடமிருந்து காப்பாற்றுவதற்காகவே பாபா எங்களுக்கு இன்றே வீடு திரும்புவதற்கு அனுமதி அளித்தார் போலும்ஃஃ என்று நினைத்தார்.
58 ''இல்லையெனில் எப்படி உயிரோடிருக்கும்? ஆயுள் முடியும்போது இதுதானே கதி. ஒரு சிட்டுக்குருவியாவது பிழைத்ததேõஃஃ
59 அவருக்கு இன்னொரு சுவாரசியமான அனுபவமும் உண்டு; கேட்பதற்குகந்தது. பல மாதங்களாக அவருக்கு ஒரு குதிகா­ல் வ­லி இருந்தது.
60 சிர்டீ செல்வதற்குமுன் பல மாதங்களாக இந்த வியாதியை அனுபவித்துவந்தார். சிர்டீ சென்றுவந்த பிறகு இந்தப் பாதிப்பு குறைந்தது; சில நாள்களில் அடியோடு மறைந்தது.
61 இதேமாதிரியான நிகழ்ச்சியொன்றில், ஞானியின் சக்தியைச் சோதிக்க முயன்ற ஒருவர் தம்முடைய விருப்பத்திற்கு மாறாக, ஞானியின் பாதங்களில் பணியவேண்டி நேர்ந்தது. அந்தக் காதையை இப்பொழுது கேளுங்கள்.
=============================================================
'ஸ்ரீஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியம் தொடர்கிறது………………………
=================================================================
எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீபக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியம் தொடர்கிறது……………………………………….
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.
பாபாவின் சங்கல்ப்ப படி தொடர்ந்து வருவார்
Please see below for English version. Tq
CHAPTER 35
*
*
*
============================================
CHAPTER XXXV
Tested And Never Found Wanting
Kaka Mahajani's Friend and Master - Bandra Insomnia Case - Bala Patil Newaskar. This Chapter also continues the subject of the importance of the Udi; it also gives two cases in which Baba was tested and not found wanting. These cases will be taken up first.
Preliminary
In spiritual matters or endeavours, sectarianism is the greatest bar to our progress. Those, who believe the God is without form, are heard saying that to believe the God is with the form is an illusion and that the Saints are only human beings. Then why should they bend their heads before them and offer Dakshina? Persons belonging to other sects will also raise objections and say, "Why should they bow and offer allegiance to other Saints, leaving their Sadgurus?" Similar objections regarding Sai Baba were heard before and are heard even now. Some said that when they went to Shirdi, Baba asked for Dakshina from them. Is it good that Saints should collect money in this fashion? If they do so, where is their Sainthood? But there are many instances where men went to Shirdi to scoff; but remained there to pray. Two such instances are given below.
Kaka Mahajani's Friend
A friend of Kaka Mahajani was a worshipper of God without form and was averse to idolatry. Out of curiosity he agreed to go to Shirdi with Kaka Mahajani on two conditions, viz., (1) that he would neither bow to Baba, (2) nor pay Him any Dakshina. Kaka agreed to these conditions and they both left Bombay on a Saturday night and reached Shirdi the next morning. As soon as they put their feet on the steps of the Masjid, Baba, looking at the friend from a little distance, addressed him in sweet words as follows, "Oh, welcome sir". The tone that uttered these words was a very peculiar one. It exactly resembled the tone of the friend's father. It reminded him of his departed father and sent a thrill of joy through his body. What an enchanting power the tone had! Being surprised the friend said, "This is no doubt the voice of my father". Then he at once up and, forgetting his resolution, placed his head upon Baba's Feet. Then Baba asked for Dakshina twice, once in the morning and again at noon at the time of their taking leave; but He asked it from Kaka only and not from the friend. The latter whispered to Kaka, "Baba asked for Dakshina from you twice. I am with you, why does He omit me?" You ask Baba Himself" was Kaka's reply. Baba asked Kaka what his friend was whispering, then the friend asked Baba himself whether he should pay any Dakshina.
Baba replied, "You had no mind to pay, so you were not asked; but if you want to pay now you may." Then the friend paid Rs.17 as Dakshina, the same amount that Kaka paid. Baba then addressed him a few words of advice, "You do away, destroy the Teli's wall (sense of difference) between us, so that we can see and meet each other face to face". Then Baba allowed them to depart. Thought the weather was cloudy and threatening, Baba assured them of their safe journey and both of them reached Bombay safely. When he reached home and opened the door and windows of his house, he found two sparrows fallen dead on the ground and one just flying out through a window. He thought that if he had left the windows open, two sparrows would have been saved, but thought again, that they had met their lot and that Baba had sent him back soon just to save the third sparrow.
===============================================
To be continued............
==============================================================
Bow to Shri Sai -- Peace be to all
To be continued............
எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீ பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ ஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியம் தொடர்கிறது.....................................
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.
சாயி ஸ்த்சரித்திரம் தொடர்கிறது………..............................................பாபாவின் சங்கல்ப்ப படி தொடர்ந்து வருவார்
/
/
/
/
/
/
“ஓம் சாயி நமோ நமோ
ஸ்ரீ சாயி நமோ நமோ
ஜெய ஜெய சாயி நமோ நமோ
சற்குரு சாயி நமோ நமோ”.
"I say things here. There they happen."
=
=
OM SAI NAMO NAMAH
SHREE SAI NAMO NAMAH
JAI JAI SAI NAMO NAMAH
SADGURU SAI NAMO NAMAH
Sai Samarth...........Shardha Saburi
Bow to Shri Sai - Peace to be all
************************************************************
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே
=
=
=
''ஜெய் ஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு
ஸாயீநாத் மஹராஜ் கீ ஜெய்"
ஓம் நமோ பகவதே சாயிநாதாய
அமிர்த வாக்ய வர்ஷாய
சகல லோக பூஜிதாய
சர்வ தோஷ நிவாரணாய
ஷிரிடி வாசாய
சாயிநாதாயதே நமஹ
சற்குரு நாதா சரணம்! சரணம்!
சச்சிதா னந்தா சரணம்! சரணம்!
அற்புத ஒளியே சரணம்! சரணம்!
அன்பே அருளே சரணம்! சரணம்!
நித்திய சாயி சரணம்! சரணம்!
நிர்மல வடிவே சரணம்! சரணம்!
பொற்பதம் பணிந்தோம் சரணம்! சரணம்!
புண்ணிய ரூபா சரணம்! சரணம்!
Twameva mata cha pita twameva
Twameva bandhushcha sakha twameva
Twameva vidya dravinam twameva
Twameva sarvam mama deva deva
Twameva sarvam Sai deva deva....
You alone are my mother and my father,
You alone are my friend and my beloved companion,
You alone are my knowledge and my wealth,
O Supreme Lord, you alone are everything for me.
Sometimes Sai removes things from our lives for our own protection. Trust in Him.
Just because you can't see the air, doesn't mean you stop breathing. Just because you can't see Sai doesn't mean you stop believing.
Sai has perfect timing; never early, never late. It takes a little patience and it takes a lot of faith but it's worth the wait.
Think positive and positive things will happen.................
Saying sorry doesn't solve the problem. It's what you do after that truly counts.
=============================================================
மூலப்பதிவாளர்களுக்கு / சாயி சமஸ்தானத்திற்க்கு என்றென்றும் சாயின் அருள் மழை பொழியட்டும்.
பல கோடி நன்றிகள் ஐயா / அம்மணி.
=========================================================================
மீண்டும் பிறப்பு உண்டேல்
உனை என்றும் மறவாமை வேண்டும்
என்றும் சாயியின் அடிமை.........
அன்புடன் சகோதரன் விக்னசாயி.
==================================
''ஜெய் ஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு
ஸாயீநாத் மஹராஜ் கீ ஜெய்"
==================================
==========================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...