ஸாயீயின்
அற்புதமான சரித்திரம் பக்தியுடன் கேட்கப்பட்டால், எடுத்துச்
சொல்பவர், கேட்பவர்கள், இவர்களுடைய
இன்னல்களும் துயரங்களும் ஒழிந்துபோகும்; இவர்களுடைய
கெட்டகாலம் ஒரு முடிவுக்கு வந்துவிடும்.
Spreading the life and teachings of Shri Shirdi
Saibaba.......
இக் கதாமிருதம்
சிரத்தையுடனும் பொறுமையுடனும் மரியாதையுடனும் கேட்கப்பட்டால், கேட்பவர்கள்
பக்திப்பிரேமையை அனுபவிப்பர்; எல்லாப்
பேறுகளையும் பெறுவர். ........என்பது திண்ணம்....
Baba comforted us saying, "Alla Accha Karega
(God will do good)."
ஒம் குரு வாழ்க, குரு நன்றாய்
வாழ்க, குருவே துணை...
''ஜெய் ஸ்ரீ
ஸச்சிதானந்த ஸத்குரு ஸாயீநாத் மஹராஜ் கீ ஜெய்"
இனிய காலை
வணக்கம் அன்புறவுகளே!!!..
ஸ்ரீ சிர்டீ சாயி
ஸ்த்சரித்திரம் தொடர்கிறது……….
ஸ்ரீ சிர்டீ ஸாயீ
அஷ்டோத்தர நாமாவளி விரிவுரை
தொடர்கிறது....................................................................
Please see below for English version. Tq
ஸ்ரீ சிர்டீ ஸாயீ
அஷ்டோத்தர நாமாவளி விரிவுரை தொடர்கிறது....................................................................
104.ஓம் ஸ்ரீ சாயி ஸர்வ அந்தர்
பஹிஹி ஸ்திதாய நமஹ |
எவ்வுயிரிலும்
எப்பொருளிலும், உள்ளும் புறமும் நிலைபெற்றவருக்கு நமஸ்காரம்.
OM SARVANTAR - BAHIH - STHITHAYA NAMAH
ॐ
सर्वान्तब॔हिःस्थिताय नमः
My humble salutation to Him who is existent
everywhere, all prevading and all knowing.
வாசகர்களுக்கு
என் பிரார்த்தனை இதுவே, ''வாருங்கள், வந்து இந்த
ஆனந்தத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள். சான்றோர்களுடன் சேர்ந்துகொண்டு சதா ஸாயீயின்
புனிதமான கதைகளைக் கேட்பவர் மஹாபாக்கியசாலிகள்...சாயி ஸ்த்சரித்திரம் அத்தியாயம் 17 தொடர்கிறது……….
*
*
*
================================================================
=================================================================
எல்லாருக்கும்
க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீபக்தன்
ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீஸமர்த்த ஸாயீ
ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியம் தொடர்கிறது……………………………………….
ஸ்ரீஸத்குரு
ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.
ஸ்ரீஸத்குரு
ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம்
உண்டாகட்டும்.
பாபாவின்
சங்கல்ப்ப படி தொடர்ந்து வருவார்
Please see below for English version. Tq
CHAPTER 17
*
*
*
============================================
சாணக்குவியல்
கிடந்த ஒரு விலைமதிப்பற்ற மாணிக்கத்தைச் சிறுவர்கள் எடுத்து, ஒரு சாதாரணக்
கல்லைப்போல் எறிந்து உதைத்து ஏறிநின்று விளையாடுவதைப் போன்று, சிர்டீ மக்கள்
இம்மாணிக்கத்தின் அருமை தெரியாதிருந்துவிட்டனர்.
91 இவ்விதமாகவே, 'பிரம்மத்தைக்காட்டுஃ
என்று கேட்டுக்கொண்டு வந்தவர் பாபாவினுடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுத் திருப்தி
அடைந்துவிட்டார். நீங்களும் நானும் நாமெல்லாருமே, ஒரேவிதமாகத்தான்
செயல்படுகிறோம்; பாதை கடினமாகும்போது பயணத்தையே கைவிட்டுவிடுகிறோம்õ
92 ஒயின்
இனிமையையும் தொடும் உணர்வின் சுகத்தையும் நறுமணத்தை மோத்தலையும் (மூக்கால் நுகர்தலையும்)
வெளிக்காட்சிகளைக் காணும் மகிழ்ச்சியையும் நாம் நாடிச்சென்று இன்பம் தேடும்வரை
புலன்களை அடக்கமுடியாது.
93 புலன்களை
ஒடுக்காமல் புலனின்பங்களிருந்து விடுபடமுடியாது, ஆத்மாவினுடைய
குணாதிசயங்களைத் தெரிந்துகொள்ளமுடியாது; ஆத்ம ஞானம்
பெறமுடியாது.
94 முதலாவதாக, ஒருவர் எல்லா
ஆசைகளிருந்தும் விடுபடவேண்டும்; பிறகு வேறெதிலும்
நாட்டமின்றி குருவை சரணடைய வேண்டும். திடமான சிரத்தையுள்ளவரே ஆத்ம விஞ்ஞானம்
பெறுவதற்குத் தகுதியான பாத்திரமாவார்.
95 ஐந்து
ஞானேந்திரியங்களும் தங்களுடைய புலன்களின்மேல் உண்டான நாட்டங்களை
விட்டுவிடும்போதும், தீர்மானங்கள் செய்வது, தேவையில்லாத
கற்பனைகள் செய்வது போன்ற நடப்புகளை மனம் தானாகவே நிறுத்திவிடும்போதும்; --
96 இவ்வாறு மனம்
அடங்கிவிட்ட நிலையில், புத்தியும் தன்னுடைய நடவடிக்கைகளை நிறுத்திவிடும்போது, அதுவே மிக
உன்னதமான நிலை அல்லது மோக்ஷம்; அதுவே
நிர்விகாரமான பிரம்மத்தை அடைதல்.
97 தீர்மானங்கள்
செய்யும் விஷயத்தில் எவருடைய புத்தி சூனியமாகிவிட்டதோ, எவர் 'நான் யார்ஃ என்று
உணர்ந்துகொண்டவரோ, அவரே புண்ணியசா; அவரே ஆத்ம ஞானம்
பெறுவார்; மற்றவர்கள் பெறமாட்டார்கள்.
98 உலக
சுகங்களுக்குப் பராமுகம் காட்டுபவருடைய புலன்கள் ஆத்மாவையே நாடும்; பேரின்பம்
விளையும். இதன் பிறகு வேறெதுவுமே மகிழ்ச்சியைத் தராது.
99 ஆத்மா
சூக்குமமானது; உணர்ந்துகொள்வதற்கு மிகக்கடினமானது. உலக விவகாரங்களாலும்
புலன்களின் ஆசைகளாலும் மறைக்கப்பட்டு, அறிந்துகொள்ள
முடியாததாக ஆகிவிடுகிறது. ஆத்ம ஞானத்தைப் பெறுதலே பரமானந்தத்தை அடையும் வழியாகும்.
100 எவர்
இவ்வுலகத்திலும் மேலுலகத்திலுமிருக்கும் எப்பொருளின் மீதும் ஆசை வைக்காதவரோ, நான்முகனாகப்
(படைக்கும் கடவுளாகப்) பதவி பெறுவதற்கும் ஆசை இல்லாதவரோ, அவரே
பிரம்மபதத்தை அடைகிறார். அவரையே முக்தியடைந்தவராகக் கருதவேண்டும்.
101 மெதுவாகவும்
படிப்படியாகவும் மனத்தைப் புலனின்பங்களிருந்து விடுபடச்செய்து, ஆத்ம ஞானம்
பெறுவதற்காக 'நான் யார்ஃ என்ற சிந்தனையில் செலுத்தவேண்டும்.
102
புத்திமான்களால்தான் இவ்வுலக வாழ்விலும் மேலுலக வாழ்விலும் செயல்களின் பலன்களிருந்து
விடுபட முடியும்; சுகம் / துக்கம் போன்ற இரட்டைச் சுழல்களிருந்தும்
விடுபடமுடியும். அத்யாத்ம யோகத்தின் உண்மையான வழி இதுவே.
103 ஆதிதைவிகம்1, ஆத்யாமிகம்1, ஆதிபௌதிகம்1, ஆகிய மூவகைத்
துன்பம் என்னும் ஊழித்தீயின் ஜுவாலைகளால் கொதித்துக்கொண் டிருக்கும் ஸம்ஸாரக் கடல்
யாரால் சந்தோஷமாக வாழமுடியும்?
104 இத்துன்பங்களிருந்து
விடுபட, ஸாயீயினுடைய அருளை நாடுங்கள். அவருடைய சுந்தரமான
சரித்திரத்தை பயபக்தியுடன் கேளுங்கள்; பாராயணம்
செய்யுங்கள்; மனத்திரையில் ஓடவிடுங்கள்.
105 மனைவி, மக்கள், உற்றார், உறவினர், நண்பர்களுடன்
சேர்ந்துகொண்டு இந்த 'ஸ்ரீ ஸாயீநாத சரித்திரம்ஃ செவிமடுக்கப்பட்டால், அவர்களுக்கு
இவ்வுலகிலும் மேலுலகிலும் விரும்பினவெல்லாம் கிடைக்கும். பாபாவின் லீலைகள்
விசித்திரமானவைõ
106 பாக்கியம்
செய்தவர்களே இக்காவியத்தை சிரத்தையுடன் கேட்பார்கள். பக்தியுடன் கேட்பவர்கள்
சாந்தமயமாகிவிடுவார்கள்.
107 இக்காதையின்
அருவி ஓட்டத்தில் கர்மமென்னும் உப்பு (நற்செயலோ, தீச்செயலோ)
கரைந்துவிடும். கேட்கக் கேட்க, ஸாயீயின்
சுந்தரமான உருவம் கண்முன்னே தோன்றும்.
108 ஸாயீயின்
காதைகளைக் கேட்டால் பாவங்கள் அழியும். இக்காதைகளைக் கேட்பவர்கள் போராடி
மரணத்தையும் வெல்லும் சக்தி பெறுகிறார்கள்; ஆயாஸம்
ஏதுமில்லாமல் பரம உல்லாஸத்தை அடைகிறார்கள்.
109 ஸாயீ
சரித்திரத்தைக் கேட்பது மனத்தைத் தூய்மையடையச் செய்கிறது. ஜனன மரணச் சுழருந்து
விடுபடச் செய்கிறது; செயல்களின் பலனை பிரம்மத்திற்கு அர்ப்பணம் செய்யும்படி
செய்து, உயர்ந்த பதவியான பிரம்மபதத்தை அடைய வழிகோலுகிறது.
110 இவ்வாறாக, ஸாயீநாதருக்கு
ஸேவை செய்யவேண்டுமென்கிற ஆசை, ஸேவகர்களை
நிரந்தரமாக மற்ற ஆசைகள் அற்றவர்களாக ஆக்கிவிடுகிறது. ஸ்ரீஸாயீராமன் அவர்களுக்கு
ஸதாஸர்வகாலமும் (எந்நேரமும்) அடைக்கலம் அளிக்கிறார்.
111 செவிமடுப்பவர்களேõ இக்காவியத்தின்
ஒரு பகுதியையாவது தினந்தோறும் பாராயணம் செய்யுங்கள்; அல்லது காதால்
கேளுங்கள். படித்தபின் பரிசீலனை செய்யுங்கள்; படித்ததைச்
சிந்தனை செய்யுங்கள்; மறுபடியும் மறுபடியும் படித்த விஷயத்தை தியானம்
செய்யுங்கள்.
112 தைத்திரீய
உபநிஷதத்தின் சித்தாந்தமான, ''ஆனந்தமே பிரம்மம்; இதை நான்
உறுதியுடன் அறிகிறேன்ஃஃ என்பதை பக்தர்களுக்கு பாபா திரும்பத் திரும்ப உபதேசம்
செய்ததுபோல் தோன்றியது.
113 ''சிறிதளவும்
கவலைக்கு இடங்கொடாதீர்கள்; எப்பொழுதும் ஆனந்தம் நிரம்பியவர்களாக இருங்கள்; மரண பரியந்தம்
கவலை வேண்டா; கவலையே வேண்டா.ஃஃ இதைத்தான் பாபா எப்பொழுதும் உபதேசம்
செய்தார்.
114 இந்த அத்தியாயத்தின்
லட்சியம் பிரம்மதத்துவத்தை நிர்த்தாரணம் செய்வதே. ஸாயீயிடம் சரணமடைபவர்களுக்கு
அதுவே ஸம்ஸாரக் கடலைக் கடக்கும் நாவாயாக அமையும்.
115 சாஸ்திரங்கள்
திரும்பத் திரும்ப, ''இதமான வார்த்தைகளைப் பேசுங்கள்; பரோபகாரம்
செய்யுங்கள்ஃஃ என்று உபதேசம் செய்கின்றன. பாபாவும் சாஸ்திர விதிகளின்படியே
நடந்தார்.
116 'இது பொருத்தமா, பொருத்தமில்லாததா?ஃ என்பதெல்லாம்
ஒருவருக்கொருவர் வேறுபடும் அபிப்பிராயங்கள். இக் காவியமோ சாமானிய மக்களுக்குப்
பிரீதியையும் நன்மையையுமே குறிக்கோளாக ஏற்றுக்கொண் டிருக்கிறது.
117 அதுதான் இங்கே பிரயோஜனம்.
பாபாவுக்குக் காரண காரிய சம்பந்தம் நன்கு தெரியும். பாபாவின் மனத்தில் என்ன
தோன்றுகிறதோ, அது நடந்துவிடும் என்பதை உறுதியாக அறியவும்.
118 குருவினுடைய
திருவாய்மொழியாக வெளிவரும் கதைகளைக் கேட்கவேண்டும். ஆராய்ச்சிக்கப்பாற்பட்ட
அவருடைய லீலைகளை அனுபவிக்கவேண்டும். எத்தனை லீலைகளைச் சேகரிக்க முடியுமோ
அத்தனையையும் சேகரித்து மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும்.
119 ஸாயீயின்
அற்புதமான சரித்திரம் பக்தியுடன் கேட்கப்பட்டால், எடுத்துச்
சொல்பவர், கேட்பவர்கள், இவர்களுடைய
இன்னல்களும் துயரங்களும் ஒழிந்துபோகும்; இவர்களுடைய
கெட்டகாலம் ஒரு முடிவுக்கு வந்துவிடும்.
120 பாபாவினுடைய
அற்புதமான லீலைகளைக் கேட்டு ஆச்சரியப்படாதவரோ, அவருடைய
தரிசனத்தினால் மன அமைதி பெற்று, அவருடைய
பாதகமலங்களில் பணிவுடன் சரணமடையாத அபாக்கியசாயோ எவரும் உண்டோ?
121 புனிதமானதும்
தூய்மையானதுமான ஸாயீயின் சரித்திரம் திறந்த மனத்துடன் கேட்கப்படவேண்டும். அவ்வகை
சந்தோஷமான நல்வாய்ப்புக் கிடைக்கும்போது யார் அதை நழுவவிடுவார்?
ஸாயீயின்
அற்புதமான சரித்திரம் பக்தியுடன் கேட்கப்பட்டால், எடுத்துச்
சொல்பவர், கேட்பவர்கள், இவர்களுடைய
இன்னல்களும் துயரங்களும் ஒழிந்துபோகும்; இவர்களுடைய
கெட்டகாலம் ஒரு முடிவுக்கு வந்துவிடும்.
============================================
CHAPTER XVIII
How Hemadpant was Accepted and Blessed
Stories of Mr. Sathe and Mrs. Deshmukh -
Encouraging Good Thoughts to Fruition- Variety in Upadesh-Teachings Readings
Slander, and Remuneration for Labour. In the last two Chapters, Hemadpant
described, how a rich gentleman, aspiring for quick Brahma-Jnana, was treated
by Baba, and now in these two Chapters, he describes how Hemadpant, himself,
was accepted and blessed by Baba, how Baba encouraged good throughts and
fructified them; and gives His teachings regarding Self-improvement, slander
and remuneration for labour.
Preliminary
It is a well-known fact, that the Sadguru looks
first to the qualifications of his disciples; and then gives them suitable
instructions, without unsettling their minds in the least, and leads them on
towards the goal of self-realization. In this respect, some say that what the
Sadguru teaches or instructs, should not be divulged to others. They think that
their instructions, become useless, if they are published. This view is not
correct. The Sadguru is like a monsoon cloud. He pours down profusely, i.e.,
scatters widely his nectar-like teachings. These, we should enjoy and
assimilate to our heart's content; and then serve others with them, without any
reserve. This rule should apply, not only to what he teaches in our waking state,
but to the visions he gives us in our dreams. To quote an instance:
Budhakowshik Rishi composed his celebrated Ram-raksha stotra, which he had seen
in his dream.
Like a loving mother forcing bitter but wholesome
medicines down the throats of her children for the sake of their health, Sai
Baba imparted spiritual instructions to His devotees. His method was not veiled
or secret, but quite open. The devotees who followed His instructions got their
object. Sad-gurus like Sai Baba open our (eyes of the) intellect and show us
the divine beauties of the Self, and fulfill our tender longings of devotion.
When this is done, our desire for sense-objects
vanishes, twin fruits of Viveka (discrimination) and Vairagya (dispassion or
non-attachment) come to our hands; and knowledge sprouts up even in the sleep.
All this we get, when we come in contact with Saints (Sad-guru), serve them and
secure their love. The Lord, who fulfills the desires of His devotees, comes to
our aid, removes our troubles and sufferings, and makes us happy. This progress
or development is entirely due to the help of the Sadguru, who is regarded as
the Lord Himself. Therefore, we should always be after the Sad-guru, hear His
stories, fall at His Feet and serve Him. Now we come to our main story.
===============================================
===============================================
Bow to Shri Sai -- Peace be to all
To be continued............
சாயி
ஸ்த்சரித்திரம் தொடர்கிறது………..............................................பாபாவின் சங்கல்ப்ப படி தொடர்ந்து வருவார்
/
/
/
/
/
/
“ஓம் சாயி நமோ நமோ
ஸ்ரீ சாயி நமோ
நமோ
ஜெய ஜெய சாயி நமோ
நமோ
சற்குரு சாயி நமோ
நமோ”.
"I say things here. There they happen."
=
=
OM SAI NAMO NAMAH
SHREE SAI NAMO NAMAH
JAI JAI SAI NAMO NAMAH
SADGURU SAI NAMO NAMAH
Sai Samarth...........Shardha Saburi
Bow to Shri Sai - Peace to be all
************************************************************
ஸ்ரீஸத்குரு
ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம்
உண்டாகட்டும்
தெளிவு குருவின்
திருமேனி காண்டல்
தெளிவு குருவின்
திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின்
திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு
சிந்தித்தல் தானே
=
=
=
''ஜெய் ஸ்ரீ
ஸச்சிதானந்த ஸத்குரு
ஸாயீநாத் மஹராஜ்
கீ ஜெய்"
ஓம் நமோ பகவதே
சாயிநாதாய
அமிர்த வாக்ய
வர்ஷாய
சகல லோக பூஜிதாய
சர்வ தோஷ
நிவாரணாய
ஷிரிடி வாசாய
சாயிநாதாயதே நமஹ
சற்குரு நாதா
சரணம்! சரணம்!
சச்சிதா னந்தா
சரணம்! சரணம்!
அற்புத ஒளியே
சரணம்! சரணம்!
அன்பே அருளே
சரணம்! சரணம்!
நித்திய சாயி
சரணம்! சரணம்!
நிர்மல வடிவே
சரணம்! சரணம்!
பொற்பதம்
பணிந்தோம் சரணம்! சரணம்!
புண்ணிய ரூபா
சரணம்! சரணம்!
======================================================================================================================================அன்புடன் சகோதரன் விக்னசாயி.
No comments:
Post a Comment