Followers

Wednesday, April 22, 2020

பூனைகளையும் நாய்களையுங்கூடக் கனவிலும் விரட்டாத மனிதர், எப்படி ஏழை எளியவர்களை விரட்டுவார்? அவருடைய வாழ்க்கை புனிதமானது. .................சகோஸ்ஸ்ஸ்...........
ஒம் குரு வாழ்க, குரு நன்றாய் வாழ்க, குருவே துணை...
நான் எங்கிருந்து வந்தேன்? நான் யார்? நான் ஏன் மனித ஜன்மா எடுத்திருக்கிறேன்? இதன் சூக்குமத்தை அறிந்தவன் வித்துவானாவான்; இந்த ஞானம் இல்லையெனில் சகலமும் வீண். .உடலும் வீடும் மனைவியும் மக்களும் உற்றாரும் உறவினரும் நசித்துப்போகக் கூடியவர்கள் என்பதை நன்கு அறிந்தும், தாய்தந்தையரின் பாடைகளைத் தோள்மேல் சுமந்துசென்ற அனுபவம் இருந்தும், மனிதன் தன்னுடைய நிலைபற்றிய உண்மையை உணர்வதில்லை.
இனிய காலை வணக்கம் அன்புறவுகளே!!!..பாபாவின்....
தெய்வீகமான செயலைப் பார்த்து மக்கள் வியந்துபோயினர். ஓ, இந்த ஞானிகள்தாம் எவ்வாறு மற்றவர்களின் அநேக உபாதைகளைத் தங்கள்மீது ஏற்றுக்கொள்கிறார்கள்... ....ஞானிகளுடைய மனம் மெழுகைவிட இளக்கமானது; வெண்ணெயைப்போல் உருகக்கூடியது... பக்தர்களின்மீது அவர்கள் வைக்கும் அன்பு உண்மையாகவே தன்னலமற்றது. பக்தர்கள்தாம் ஞானிகளுக்கு உற்றாரும் உறவினரும்......அவர் தம் புண்ணியக் கதைகளை கேட்போம் நாமும் புண்ணியம் சேர்ப்போம்....அன்புறவுகளே................
ஸ்ரீ சிர்டீ சாயி ஸ்த்சரித்திரம் தொடர்கிறது……….
ஸ்ரீ சிர்டீ ஸாயீ அஷ்டோத்தர நாமாவளி விரிவுரை தொடர்கிறது....................................................................
Please see below for English version. Tq
ஸ்ரீ சிர்டீ ஸாயீ அஷ்டோத்தர நாமாவளி விரிவுரை தொடர்கிறது....................................................................
53. குணாதீத குணாத்மனே நமஹ
முக்குணங்களுக்கு அப்பாற்பட்ட, குணங்களின் மூலப் பொருளானவருக்கு நமஸ்காரம்.

இந்த நாமம் ஸ்ரீஸாயீ ஸஹஸ்ர நாமாவளியில் இரண்டு நாமங்களாகப் (301 & 302) பிரிந்து அமைந்திருக்கிறது. அவற்றின் விரிவுரையில், முக்குணங்களைப் பற்றிய ரஹஸியங்களை பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஸ்ரீமத் பகவத்கீதையில் அருளியவாறும் பூஜ்யஸ்ரீ ஸ்வாமி சித்பவானந்தர் அளித்திருக்கும் சிறப்பு மிக்க வியாக்கியானத்தையும் படித்துத் தத்துவ விளக்கம் பெறுக! ஆன்மீக நாட்டம் உள்ளவர்களுக்கு இது இன்றியமையாத உள்ளீடு.
OM GUNATEETA GUNAATMANE NAMAH
ॐ गुणातीतगुणात्मने नमः
My humble salutation to the one who is the epitome of all virtues and attributeless.
வாசகர்களுக்கு என் பிரார்த்தனை இதுவே, ''வாருங்கள், வந்து இந்த ஆனந்தத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள். சான்றோர்களுடன் சேர்ந்துகொண்டு சதா ஸாயீயின் புனிதமான கதைகளைக் கேட்பவர் மஹாபாக்கியசாலிகள்...சாயி ஸ்த்சரித்திரம் அத்தியாயம் 8 தொடர்கிறது……….
*
*
*
91 புருவத்தை உயர்த்துவதால் மட்டுமே ஓட்டாண்டியையும் பெரும் செல்வராக்கக்கூடிய சக்தி பெற்றவராக இருந்தும், ஒரு ஜோ­யைத்1 தோளில் மாட்டிக்கொண்டு வீடுவீடாகச் சென்றார்.
92 யாருடைய வீட்டு வாச­ல் பாபா பிச்சைக்காக நின்று, ''ஓ மகளேõ எனக்கு உன் சோளரொட்டியி­ருந்து கால்ரொட்டி கொண்டு வாஃஃ என்று கரமேந்திப் பிச்சை எடுத்தாரோ, அவர் மஹா புண்ணியசா­.
93 ஒரு கரத்தில் ஜோ­யை ஏந்தி, மற்றொரு கரத்தில் ஒரு தகர டப்பாவை வைத்துக்கொண்டு சில குறிப்பிட்ட இல்லங்களுக்கு வாயில்வாயிலாகச் சென்றார்.
94 பாஜி, சாம்பார், பால், மோர் போன்ற பதார்த்தங்கள் அனைத்தும் இந்தத் தகர டப்பாவில் பிச்சையிடுபவர்களால் கொட்டப்பட்டன. ஓ, என்ன விநோதமான உணவு சேர்க்கும் முறைõ
95 சாதத்தையோ, சோளரொட்டியையோ வாங்கிக்கொள்வதற்கு அவர் தமது ஜோ­யை விரிப்பார். ஆனால், திரவ ரூபமான பதார்த்தம் எதுவாக இருந்தாலும், அது அவர் வைத்திருந்த தகர டப்பாவில் கொட்டப்பட்டது.
96 விதவிதமான பதார்த்தங்களைத் தனித்தனியாக ருசித்துச் சாப்பிடவேண்டும் என்கிற ஆவல் எங்கிருந்து எழும்? ருசிகளையும் வாசனைகளையும் நாக்கு அறியாதபோது, மனத்தி­ருந்து இவ்வாசை எவ்வாறு எழும்?
97 ஜோ­யில் யதேச்சையாக எது வந்து விழுந்ததோ, அதை அவர் திருப்தியுடன் உண்டார். சுவையுள்ளதாயினும் சரி, சுவையற்றதாயினும் சரி, அதைப்பற்றிக் கவலைப்படவேயில்லை. நாக்கு சுவையுணர்வையே இழந்துவிட்டது போலும்õ
98 ஒவ்வொரு நாளும் காலைநேரத்தில் அவர் பிச்சை எடுப்பார்; கிடைத்ததைக்கொண்டு வயிற்றை நிரப்புவார்; திருப்தியும் அடைவார்.
99 பிச்சையையாவது ஒரு நியமனத்துடன் எடுத்தாரா? அதுவும் இல்லை; விருப்பப்பட்டபோதுதான் பிச்சை எடுக்கக் கிளம்புவார்õ சில நாள்களில் பிச்சை எடுக்கக் கிராமத்தினுள் பன்னிரண்டு சுற்றுகள் சென்றாலும் செல்வார்õ
100 இம்மாதிரியாகப் பிச்சை எடுத்துச் சேர்க்கப்பட்ட உணவு, மசூதியில் இருந்த ஒரு வாயகன்ற மண்பாத்திரத்தில் கொட்டப்படும். இதி­ருந்து காகங்களும் நாய்களும் சுதந்திரமாக உணவுண்டன.
101 மசூதியையும் வெளிமுற்றத்தையும் தினமும் பெருக்கும் பெண்மணி, பத்து-பன்னிரெண்டு சோளரொட்டிகளை எடுத்துக்கொண்டு போவார். அவர் அவ்வாறு எடுத்துக்கொண்டு போனதை ஒருவரும் தடைசெய்யவில்லை.
102 பூனைகளையும் நாய்களையுங்கூடக் கனவிலும் விரட்டாத மனிதர், எப்படி ஏழை எளியவர்களை விரட்டுவார்? அவருடைய வாழ்க்கை புனிதமானது.
103 ஆரம்ப காலத்தில் அவர் 'பைத்தியக்காரப் பக்கீர்ஃ என்றே மக்களால் அழைக்கப்பட்டார். பிச்சை எடுத்து வயிறு வளர்ப்பவரைப் பெரிய மனிதராக எப்படிக் கருத முடியும்õ
104 ஆனால், இந்தப் பக்கீர் தாராளமான மனமுள்ளவராக இருந்தார்; எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி சிநேகமாக இருந்தார். வெளிப்பார்வைக்குச் சஞ்சலமுடையவராகத் தெரிந்தாலும், அகத்தில் சஞ்சலமில்லாது அமைதியாக இருந்தார். அவருடைய நடத்தையைப் புரிந்துகொள்ளவேமுடியவில்லைõ
105 அந்தக் குக்கிராமத்திலும் சிலர் இயற்கையாகவே தயையுள்ளவர்களாகவும் பாக்கியவான்களாகவும் இருந்தனர். அவர்கள் இவரை ஒரு ஸாதுவாகவே ஏற்றுக்கொண்டனர்.
எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீபக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியம் தொடர்கிறது……………………………………….
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
https://www.youtube.com/watch…
சுபம் உண்டாகட்டும்.
பாபாவின் சங்கல்ப்ப படி தொடர்ந்து வருவார்
Please see below for English version. Tq
CHAPTER VII
*
*
*
Baba Begging Food
Blessed are the people of Shirdi, in front of whose houses, Baba stood as a beggar and called out, "Oh Lassie, give Me a piece of bread" and spread out His hand to receive the same. In one hand He carried a Tumrel (tinpot) and in the other a zoli or choupadari, i.e., a rectangular piece of cloth. He daily visited certain houses and went from door to door. Liquid or semi-liquid things such as soup, vegetables, milk or butter-milk were received in the tinpot, while cooked rice, bread, and such solid things were taken in the zoli. Baba's tongue knew no taste, as He had acquired control over it. So how could He care for the taste of the different things collected together? whatever things He got in His zole and in the tinpot were mixed together and partaken by Baba to His heart's content.
Whether particular things were tasty or otherwise was never noticed by Baba as if His tongue was devoid of the sense of taste altogether. Baba begged till noon, but His begging was very irregular. Some days He went a few rounds, on other days up to twelve noon. The food thus collected was thrown in a kundi, i.e. earthen pot. Dog, cats and crows freely ate from it and Baba never drove them away. The woman who swept the floor of the Masjid took some 10 or 12 pieces of bread to her house, and nobody prevented her from doing so. How could, He, who even in dreams never warded off cats and dogs by harsh words and signs, refuse food to poor helpless people? Blessed indeed is the life of such a noble person! People in Shirdi took Him in the beginning for a mad Fakir. He was known in the village by this name. How could one, who lived on alms by begging a few crumbs of bread, be revered and respected? But this Fakir was very liberal of heart and hand, disinterested and charitable. Tough He looked fickle and restless from outside. He was firm and steady inside. His way was inscrutable. Still even in that small village, there were a few kind and blessed people who recognized and regarded Him as a Great Soul. One such instance is given below.
Bow to Shri Sai -- Peace be to all
Bow to Shri Sai -- Peace be to all
https://www.youtube.com/watch…
To be continued............
ஷீரடி போக முடியாதவர்கள் அவசியம் பாருங்கள்.
Shirdi Sai Baba Tamil Aarti Full Video Song -ஷிர்டி சாய் பாபா ஆர்த்தி
https://www.youtube.com/watch?v=LGumlrX9UgY
https://www.youtube.com/watch?v=Jn1hyQARZ68#t=19
https://www.youtube.com/watch?v=EIgaKaSYrok
https://www.facebook.com/photo.php?fbid=1604796853091654&l=d04b2e7370
வாசகர்களுக்கு என் பிரார்த்தனை இதுவே, ''வாருங்கள், வந்து இந்த ஆனந்தத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள். சான்றோர்களுடன் சேர்ந்துகொண்டு சதா ஸாயீயின் புனிதமான கதைகளைக் கேட்பவர் மஹாபாக்கியசாலிகள்¬.-- அத்தியாயம் 8 தொடர்கிறது......... சாயி ஸ்த்சரித்திரம் தொடர்கிறது………..............................................பாபாவின் சங்கல்ப்ப படி தொடர்ந்து வருவார்
/
/
/
என் மகனே! மகளே! நான் சத்திய தேவன். பொய் சொல்ல மாட்டேன். முழுமையான சரணாகதி அடைந்து நீ கரம் குவித்தால் ஓடி வரும் நாராயணன் நான். உன் விதியை அவ்வப்போது மாற்றிக் கொண்டிருக்கும் கலியுக பிரம்மாவும் நானே! உனது இன்னல்களை அழிக்கும் ஈசனும் நானே! கோபத்தின் போது வெளிப்படும் அக்கினியும், துக்கத்தின் போது வெளியாகும் கங்கையும் நானே! உன் நாசியில் வெளிவரும் வாயுவும் நானே! எங்கும் எதிலும் உனக்காக, உன் சார்பில் இருக்கும் அன்புத் தந்தை நான். நீ அமைதியாக இரு.. என் பெயரை சதா உச்சரித்துக் கொண்டிரு.. உனக்குத் தேவையானதை செய்வேன். கடைசி வரை உன் கூடவே இருந்து துணை செய்வேன். - ஸ்ரீ சாயியின் குரல்.
/
/
/
“ஓம் சாயி நமோ நமோ
ஸ்ரீ சாயி நமோ நமோ
ஜெய ஜெய சாயி நமோ நமோ
சற்குரு சாயி நமோ நமோ”.
"I say things here. There they happen."
OM SAI NAMO NAMAH
SHREE SAI NAMO NAMAH
JAI JAI SAI NAMO NAMAH
SADGURU SAI NAMO NAMAH
Sai Samarth...........Shardha Saburi
Bow to Shri Sai - Peace to be all
************************************************************
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே
=
=

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...