Followers

Saturday, April 25, 2020

சாலை ஓரம் புல்லட்டில் நிற்கும், 'சார்ஜெண்டு'களை கண்டால், 'டேய், வசூல்படை, வேட்டையில் இறங்கி விட்டது...' என, பொது மக்கள் சாதாரணமாக பேசும் நிலையை இன்று காண முடிகிறது.
'கவுரவமான உத்தியோகம், கைநிறைய சம்பளம், குடியிருக்க வீடு, குறைந்த விலையில் அத்தியாவசிய உணவுப் பண்டங்களை அரசு வழங்கும் போது, இவர்கள் ஏன் இப்படி நடந்துகிறாங்க...' என, நான் எண்ணுவது உண்டு.....................
என்றும் அன்பு வணக்கங்கள் சகோ தோழமை களே.............நாட்டு நடப்பு, பலதும் பத்தும் உங்களுடன்...
போலீசார் என்றாலே, லஞ்ச - லாவண்யத்தில் உழல்பவர்கள் என்ற, 'நல்ல' பெயரை மக்கள் மத்தியில் பெற்று விட்டனர்.
போலீஸ்காரர்கள், 'மாமூல்' வாங்குவது பற்றி, பத்திரிகைகளில் ஏராளமாக, 'ஜோக்'குகள் வெளியாகின்றன.
சாலை ஓரம் புல்லட்டில் நிற்கும், 'சார்ஜெண்டு'களை கண்டால், 'டேய், வசூல்படை, வேட்டையில் இறங்கி விட்டது...' என, பொது மக்கள் சாதாரணமாக பேசும் நிலையை இன்று காண முடிகிறது.
'கவுரவமான உத்தியோகம், கைநிறைய சம்பளம், குடியிருக்க வீடு, குறைந்த விலையில் அத்தியாவசிய உணவுப் பண்டங்களை அரசு வழங்கும் போது, இவர்கள் ஏன் இப்படி நடந்துகிறாங்க...' என, நான் எண்ணுவது உண்டு.
என்னுடைய இந்த குழப்பத்திற்கு விடை அளிப்பது போல, சில விஷயங்களை சமீபத்தில் கேட்க முடிந்தது.
நண்பர் ஒருவருக்கு சில மாதங்களுக்கு முன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு வேலை முடித்தாக வேண்டும். என்னையும், லென்ஸ் மாமாவையும் உடன் அழைத்துச் சென்றார்.
நண்பரும், லென்ஸ் மாமாவும் குறிப்பிட்ட செக் ஷன் கிளார்க்கிடம் பேசிக் கொண்டிருந்தனர். வெளியே, இரு போலீசார் பேசியபடி இருக்க, அவர்கள் அருகே சென்ற நான், காதை மட்டும் அவர்கள் திசையில் திருப்பி, அப்பாவி போல நின்று கொண்டேன்.
'மச்சான்... அந்தா வர்றான் பாரு திருட்டு கம்மனாட்டி... மூணு வருஷம் ஆச்சு... அந்தமானுக்கு ஒரு கேஸ் என்குயரிக்கு எங்கள கூட்டிட்டுப் போனான். போகும்போது தலைக்கு, 500 ரூபா கொடுத்தாங்க. போய் வந்து, பயணப்படி எழுதிக் குடுத்தோம். அவன் மட்டும், தன் பயணப்படியை வாங்கிக்கிட்டான்; இன்னும் எங்களுக்கு வந்து சேரல...' என்றார், ஒரு போலீஸ்காரர்.
அவர், தன் சகாவிடம், 'அந்தா வர்றான் பாரு...' என்றதுமே, அடிக்கண்ணால் நானும் பார்த்தேன். ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் வருவது தெரிந்தது. அவர், எங்களை நெருங்கும்போது, இரு போலீசாரும் தம் பேச்சை, 'டக்'கென நிறுத்தி, 'அட்டென்ஷன்'ல் நின்று, 'குட்மார்னிங் சார்!' என்றனர்.
அதைப் பார்த்ததும் எனக்கு சிரிப்பு வந்தது. அப்படியே நகர்ந்து, வேறு இரண்டு போலீஸ்காரர்கள் பேசுவதை கேட்டேன்...
'நாசமாப் போக... லீவு, 'சாங்ஷன்' பண்ண, 500 ரூபா கேக்குறான்; அழுது தொலைச்சேன். என்ன செய்யுறது... அவசரமா ஊருக்குப் போகணும். அம்மாவுக்கு ரொம்ப முடியலயாம்... போன் வந்தது...' என்றார், ஒரு போலீஸ்காரர்.
உடன் வந்த போலீசாருக்கு பயணப்படி வாங்கிக் கொடுக்காத உயர் அதிகாரிகளும், லீவு, 'சாங்ஷன்' செய்ய லஞ்சம் வாங்கும் போலீஸ் அலுவலர்களும் இருக்கும்போது, அவர்களுக்கு கீழ் உள்ளவர்களின் செய்கையை, ஓரளவு புரிந்து கொள்ள முடிந்தது.
இன்னும் இரு போலீசார் ஏதோ காரசாரமாக பேசுவதை அவர்கள் முகக் குறிப்பிலிருந்து அறிந்து, அருகே சென்று, காதைக் கொடுத்தேன்...
'அந்த ஏரியாவுல, கள்ளச் சாராயம், பிக்பாக்கெட், பிராத்தல் எல்லாத்திலேயும் கில்லாடிப்பா அவன்... அவனுக்கு பாராட்டு விழாவாம்... அவன் ஏதோ நன்கொடை கொடுக்கிறானாம்... அதுக்கு நம்ம அமைச்சர் (அமைச்சரின் பெயர்) தலைமை தாங்கி, 'கொடை வள்ளல்'ன்னு அவனைப் பாராட்டி பேசுறார். என்ன சொல்றது... நம்மை எப்படி மதிப்பான் அந்த கேடி...' என்றார்.
'எங்க ஏரியாவுலே, ரவுடிகளோட அட்டகாசத்தை அடியோட நிறுத்திட்டார் புதுசா வந்த இன்ஸ்பெக்டர்... (இன்ஸ்பெக்டரின் பெயர்) பதவி ஏத்து ஒரு வாரத்தில, எல்லா ரவுடிகளையும் வரவழைச்சு, 'நான் இந்த ஸ்டேஷன்ல இருக்கிற வரை, வாலச் சுருட்டிட்டு இருக்கணும்...' என, மிரட்டியிருக்கார். அதுல ஒரு ரவுடி, கட்சிக்காரன்; திமிரா பேசினான்... 'நல்லவிதமா சொல்றேன்... கேக்காம வேலையக் காட்டுனே, அடிச்சு ரயில்வே தண்டவாளத்துல தூக்கி வீசிருவேன்; ஜாக்கிரதை! மேக்சிமம் உங்க கட்சிக்காரங்க என்ன செஞ்சிரப் போறாங்க, எனக்கு, 'டிரான்ஸ்பர்' போடுவாங்க... ஆனா, உனக்கு உயிர் இருக்காது...' என மிரட்டிய பின், இப்ப ரவுடிகளின் அட்டகாசம் சுத்தமா இல்ல...' என்றார்.
போலீஸ் துறையின், வெவ்வேறு முகங்களை அன்று காண முடிந்தது.
=============================================
உண்மைதான் ஆனால் பல இடங்களில் அவர்களின் அட்டகாசம் அளவுக்கு அதிகம் ஏன் உயிர் போகும் அளவிற்கு காட்டுமிராண்டித் தனமாக நடந்து கொள்கிறார்கள்.. எல்லாத் துறைகளிலும் ...லஞ்சக் கொடுமையில் இருந்து முளு நாடும் முற்றாக விடுபட்டால் தான் விடிவு இல்லையேல்......................
==============================================
=============================................
தென் அமெரிக்க நாடான பிரேசிலில், சவாபோ நகரில் வசிக்கும் அன்பர் ஒருவரை, அறிமுகம் செய்தார் நண்பர் ஒருவர். அவர் தமிழர் தான், இருந்தாலும், தமிழில் சரளமாகப் பேசத் தெரியவில்லை. அவரது மூதாதையர் டிரினிடாட் டுபாக்கோ என்ற நாட்டுக்கு, கரும்பு வெட்டும் தொழிலாளியாக தமிழகத்தில் இருந்து வெள்ளையர்களால் அழைத்துச் செல்லப்பட்டவர்களாம்.
தென் அமெரிக்க நாடுகள் பற்றிய சுவையான பல விஷயங்களைக் கூறினார். ஓட்டல்களில் பண்டங்கள், எடைக்கு ஏற்ப தான் விலையாம்! அதாவது, பொங்கல், வடை, நாலு இட்லி, ஒரு மசால் தோசை சாப்பிடுகிறோம் என்றால், அவற்றை ஒரு தட்டில் வைத்து எடை போட வேண்டும். 500 கிராம் இருந்தால் ஒரு விலை, 650 கிராம் இருந்தால் ஒரு விலையாம்... ஆச்சரியமாக இருந்தது.
'தென் அமெரிக்க நாடுகள் சர்வாதிகார ஆட்சிக்குப் பெயர் பெற்றவை. 10 ஆண்டுகள் சர்வாதிகார ஆட்சி நடத்தி, கோடி கோடியாய் கொள்ளையடிப்பர்; நாட்டில் எதிர்ப்பு கிளம்பும். உடனே, சேர்த்த பணத்துடன், ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்து விடுவர். இதுதான், காலம் காலமாக இந்த நாடுகளில் நடந்து வருகிறது...' எனக் கூறியவர், சற்று இடைவெளி விட்டு மீண்டும் தொடர்ந்தார்...
'அப்படிப்பட்ட ஒரு சர்வாதிகாரி தான் மார்கோஸ் பெரஸ்; இவர், தென் அமெரிக்காவில் உள்ள வெனிசுலா நாட்டை, 10 ஆண்டுகள் சுரண்டி, ஸ்பெயின் நாட்டுக்கு ஓடிப் போனவர்.
'மற்றொரு தென் அமெரிக்க நாடு பெரு; அதன் ஜனாதிபதி புஜிமோரி. இவரது பெற்றோர் ஜப்பானியர்; பெருவில் குடியேறியவர்கள். புஜிமோரி, பெருவிலேயே பிறந்து, வளர்ந்து ஆட்சியை பிடித்த பின், பெருந்தொகையை சுருட்டி, ஜப்பானுக்கே ஓடிப் போனார். இருவரும் சுருட்டியது, 1,000 கோடி ரூபாய்...' என்றார்.
'ப்பூ... இதென்ன பிரமாதம்... இங்க, ஆயிரம் கோடியெல்லாம் ஸ்டேட் லெவல்லயே முடிச்சிருவோம். ஆல் இண்டியா லெவல்ன்னா ஆயிரம் கோடிங்கறது ஆறுமாச வசூல்...' என்றேன் அவரிடம்!
============================
அன்பு நன்றி சகோ அந்துமணி.
=============================
=====================================
பெண்களை உற்சாகப்படுத்தலாமே!
என் தோழியை சந்திக்க, அவளது வீட்டிற்கு சென்றிருந்தேன். வீட்டில் அவள் இல்லை; நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றிருப்பதாக தோழியின் அம்மா கூறவே, என்ன நிகழ்ச்சி, எங்கே நடக்கிறது என்று விசாரித்து, அந்த இடத்திற்கு சென்றேன்.
அங்கே மேடையின்றி, பேனரின்றி இருபதுக்கும் மேற்பட்ட பெண்கள் கூடியிருந்தனர். என்னை பார்த்ததும் கை குலுக்கி, மகளிர் தின வாழ்த்துகளை பகிர்ந்த தோழி, மற்றவர்களுக்கும் என்னை அறிமுகம் செய்து வைத்தாள்.
நிகழ்ச்சி மிக எளிமையாக இருந்தாலும், வலிமையான கருத்துகளை விவாதித்தனர். அப்பகுதியை சேர்ந்த பெண் டாக்டர், பெண் தாசில்தார் மற்றும் ஆசிரியைகள் சிறந்த ஆலோசனைகளை வழங்கினர்.
இறுதியில், இட்லிக்கடை நடத்தி, தன் பிள்ளைகளை படிக்க வைத்து வரும் விதவைத் தாய் ஒருவர் பேசியது, அனைவரையும் நெகிழச் செய்தது. சிறிது நேரமே நடைபெற்ற அந்நிகழ்ச்சியில், பெண்களின் எழுச்சி, வளர்ச்சி பற்றிப் பேசியது, மிகுந்த மனநிறைவையும், தன்னம்பிக்கையையும் தந்தது. புத்தாண்டு மற்றும் காதலர் தினம் என்ற நமக்கு ஒத்துவராத கலாசாரங்களை ஊக்குவிப்பதற்கு பதிலாக, பெண்களை ஊக்கப்படுத்தும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தினால், சமுதாயத்தில் பெண்களின் நிலை நிச்சயம் மாறும்!
— ஆர்.சுகன்யா, அரசரடி.
=====================================
மனை வாங்குவோர் கவனத்திற்கு!
சில ஆண்டுகளுக்கு முன், புறநகரில் வீட்டு மனை ஒன்றை வாங்கிப் போட்டிருந்தார் நண்பர். அதை பார்த்து வருவதற்காக, சமீபத்தில், என்னையும் அழைத்துச் சென்றார். பக்கத்து மனைக்காரர், நண்பரின் மனையில், இரண்டு அடி அகலத்துக்கு, ஆக்கிரமிப்பு செய்து, கட்டடம் எழுப்பியிருந்தது தெரிய வந்தது.
'என்ன இப்படி செய்துட்டீங்க...' என்று நண்பர் கேட்டதற்கு, 'நாங்கள் சரியாத்தான் கட்டியிருக்கோம்; மத்தவங்க இடத்தை ஆக்கிரமிக்க வேண்டிய அவசியம் இல்ல...' என்று கறாராக பேசினார்.
உடனே, சர்வேயரை வரவழைத்து, இரண்டு பேரின் மனைகளை அளந்ததில், பக்கத்து மனைக்காரரின் அத்துமீறல் தெரிந்தது.
'வீடு கட்டிக் கொடுத்த பில்டர் தப்பு செய்துட்டான்...' என்று பழியை திசை திருப்பிய பக்கத்து வீட்டுக்காரர், 'இரண்டு அடிக்கான பணத்தை கொடுக்கட்டுமா அல்லது அந்த இடம் வரைக்கும் இடிச்சுடட்டுமா...' என்று கேட்க, நண்பர் கூலாக, 'வேணாம்... எங்க இடத்துல கட்டியிருக்கீங்கன்னு நீங்க தெரிஞ்சுக்கணும்ன்னு தான் அளந்து காட்டினேன்...' என்றார் பெருந்தன்மையுடன்!
'பணம் வாங்கியிருக்கலாமே...' என்றேன்.
'தவறு என் மேலயும் இருக்கு; மனையை வாங்கிப் போட்டு, வருஷக் கணக்கா திரும்பிப் பாக்காமல் இருந்துட்டேன். அவ்வப்போது போய் பார்த்திருந்தால், பக்கத்து மனைக்காரர் வீடு கட்டும் போது, ஆரம்பத்திலேயே இதை தடுத்திருக்கலாம். குறைந்தபட்சம், என் இடத்தின் எல்லைகளில் அடையாளக் கல் நட்டு வைத்திருக்கலாம்; அதையும் செய்யல. நஷ்ட ஈடாக பணத்தை வாங்கலாம் தான்; ஆனா, எதிர்காலத்தில், அங்கே வீடு கட்டி குடியேறும் போது, அவரிடம் சுமூகமாக உறவாட முடியாது. அக்கம் பக்கத்தினரிடையே, நல்ல நட்புடன் இருப்பது அவசியம். அதற்காக, கொஞ்சம் விட்டுக் கொடுத்து தான் போகணும்...' என்றார்.
அவர் கூறியதை ஏற்றுக் கொண்டேன்.
— சின்ன சம்பத், சென்னை.
==========================================
விளையாட்டும் முக்கியமே!
தனியார் பள்ளி உடற்பயிற்சி ஆசிரியையான என் தோழியை சமீபத்தில் சந்தித்த போது, மாணவியர் விளையாட்டில் ஆர்வம் காட்டாதது குறித்து ஆதங்கப்பட்டவள், 'பெரும்பாலான உயர் வகுப்பு மாணவியர் விளையாட்டு வகுப்பையே வெறுக்கிறாங்க. வெயிலில் நின்று, உடற்பயிற்சி செய்வதும், விளையாடுவதும், அவங்களுக்கு வேப்பங்காயாய் கசக்குது. ஏதாவது, நொண்டிச் சாக்கு சொல்லி, விளையாட்டு வகுப்பில் இருந்து 'எஸ்கேப்' ஆகின்றனர். இதற்கு, பெற்றோரும் உடந்தை. 'என் பொண்ணுக்கு, 'ஸ்கின்' அலர்ஜி, வெயில் ஒத்துக்காது, மயக்கம் வரும்...' என்று டாக்டர் சர்டிபிகேட் வாங்கி கொடுக்கிறாங்க.
'டீன் - ஏஜ் மாணவியர், வீட்டிலும் விளையாடுறதில்ல; பள்ளியில் விளையாடினாலாவது உடற்பயிற்சி கிடைக்கும் என்று எடுத்துச் சொன்னாலும், செவிடன் காதில் ஊதிய சங்காகத் தான் இருக்கிறது...' என்று அலுத்துக் கொண்டாள்.
முன்பெல்லாம் பெண் குழந்தைகள், வீட்டு வேலை செய்தனர். அதுவே, அவர்களுக்கு உடற்பயிற்சியாகவும் அமைந்தது. ஆனால், இன்றோ உடல் உழைப்பும் இல்ல; விளையாட்டும் கிடையாது. இதனால், வளர்ந்த பின், கர்ப்பப்பை தொந்தரவுகளும், குழந்தை பேறின்மையும், அதிகரிக்கிறது. பெற்றோரே... இனியாவது உங்கள் பெண் குழந்தைகளை, ஆரோக்கியமாக வளருங்கள்!
— எச்.தஸ்மிலா, கீழக்கரை.
================================================
ஒம் குரு வாழ்க, குரு நன்றாய் வாழ்க, குருவே துணை...
Gurur Brahma, Gurur Vishnu, Gurur Devoh Maheshwara
Guru Sakshat Parabrahmah Tasmai Shree Guru Veh Namah !
I am Love, I shower Love. I share Love. I am pleased with Love. - Baba
When your heart is filled with good thoughts and feelings, all that comes out of the senses - your speech, your vision, your action - will naturally be pure. - Baba
உனது ஹ்ருதயம் நல்ல சிந்தனைகளாலும் நல்ல உணர்வுகளாலும் நிரப்பப்பட்டுள்ள போது, உனது பேச்சு, பார்வை, செயல்கள் யாவும் இயல்பாகவே சுத்தமாக இருக்கும். – பாபா
Embodiments of divine Love!............ Have A Great And Wonderful Day Ahead.
God Bless You All............ love-all-serve-all-help-ever-hurt-never............. Sairam
அன்புறவுகள்... எல்லோர்க்கும்... அனைவருக்கும் சகோ என்றென்றும் அன்பு நன்றியுடன்.! இனிய காலை மதிய மாலை இரவு வணக்கம்! ..உரித்தாகுக தோழமை / சகோ(களே)................!!!
ஆன்றோர்க்கும், சான்றோர்க்கும், என்னைப்போன்றோர்க்கும் இறையருளோடு கூடிய இனிய நற்காலை வணக்கம் அன்பு சகோ, இனிய நாளாக மலரட்டும்...சகோ தோழமை களே............... " விடியும் என்று விண்ணை நம்பும் நீ ....! முடியும் என்று உன்னை நம்பு...!!"
ஓம் சாயி நமோ நம! ஸ்ரீ சாயி நமோ நம!
ஜெய ஜெய சாயி நமோ நம! சத்குரு சாயி நமோ நம!
அன்புடன் சகோதரன்
விக்னசாயி............
=====================================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...