'நான் பிடித்த
முயலுக்கு மூன்று கால் தான்...' என்ற பிடிவாதம்
இல்லாமல், காரியத்தை அலசிப் பார்க்கும் மனமாவது உங்களிடம்
இருக்கிறதே... பாராட்டத்தான் வேண்டும். மன்னிப்பு கேட்க தயக்கம் இருந்தால், உங்களது
செயல்களின் மூலம் மன்னிப்பு கேளுங்கள். அதை உணர்ந்து கொள்ளும் திறன் உங்களது
மனைவியிடம் இல்லை என்றால், எவ்வளவோ, 'பிக்ச்சர்
கார்டுகள்' விற்பனை ஆகின்றன. அவற்றில் ஒன்றை வாங்கி அளியுங்கள்.
அதுவும் கிடைக்கவில்லை என்றால், துண்டு
காகிதத்தில் எழுதிக் கொடுங்கள். அதைக் கண்ட பின் கிடைக்கும், 'ரெஸ்பான்சை' பாருங்கள்...
ஆச்சரியப்படத் தக்க விதத்தில் இருக்கும். இதை அனுபவப் பூர்வமாக நண்பர்களிடம்
சோதித்து வெற்றி கண்டவன் நான்!
எல்லோர்க்கும் என்றும் இனிய அன்பு வணக்கங்கள் சகோ தோழமை
களே.................
உற்சாகமா பேசுங்க!
என் அலுவலக உயர் அதிகாரி ஒருவர், எப்போதும்
சிரித்த முகத்துடன் இருப்பார். நேரிலோ, போனிலோ யாராவது
அவரிடம், 'எப்படி இருக்கிறீங்க...' என்று கேட்டால், 'ரொம்ப நன்றாக, 'ஜம்'ன்னு இருக்கேன்; நீங்களும்
அப்படித்தானே...' என்று உற்சாகமாக பதிலளிப்பார்.
மற்றவர்களை பற்றி விசாரித்தால் கூட, 'அவருக்கென்ன
சார்... 'ஜம்'ன்னு
இருக்கார்...' என்று, அதே
உற்சாகத்துடன் கூறுவார்.
நம்மில் பலர், 'எப்படி
இருக்கிறீங்க...' என்று யாராவது கேட்டு விட்டால் போதும்... உடனே, முகத்தை சவம்
மாதிரி வைத்து, 'ஏதோ இருக்கேன்; பிழைப்பு ஓடிட்டு
இருக்கு...' என்று துவங்கி, பிரச்னைகளை
அடுக்கி விடுவர். அதை விடுத்து, இவரைப் போல், தன்னம்பிக்கையுடன்
பதிலளிக்கப் பழகிக் கொண்டால், உற்சாகம் நம்முள்
கொப்பளிப்பதோடு, மறுமுனையில் இருப்போருக்கும் அது தொற்றிக் கொள்ளும்.
முயற்சி செய்து தான் பார்ப்போமே!
— சி.ஜெகன், மதுரை.
கணவரிடம் மறைக்காதீங்க!
நான், மத்திய அரசு
அலுவலக ஊழியை; அலுவலகத்தில், வேலை காரணமாக, சோர்வு ஏற்படாமல்
இருப்பதற்காக, அவ்வப்போது, டீ குடிப்பது
உண்டு. என் பக்கத்து செக் ஷனில் இருக்கும் நண்பர் ஒருவரும் டீ குடிப்பார். இதனால், எங்களுக்குள் ஒரு
ஆரோக்கியமான ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி, இருவருக்கும்
சேர்த்து, ஒரே ஒரு டீயை வரவழைத்து, அதை பாதியாய்
பகிர்ந்து கொண்டோம்.
இதனால், செலவு
குறைவானதோடு, அதிகமாய் டீயை உள்ளே இறக்கி, உடம்பைக்
கெடுத்து கொள்வதிலிருந்து பாதுகாத்து கொள்ளவும் முடிந்தது. இவ்விஷயத்தை, எங்கள் அலுவலக
ஊழியர் ஒருவர், என் கணவரிடம் கூறி விட்டார்.
விளைவு, வீட்டுக்கு
வந்ததும், குதி குதியென்று குதித்தார் என் கணவர். ஆவேசமாய் என்னிடம்
கோபப்பட்டாலும், கடைசியில், அவர் கூறியதில்
நியாயம் இருந்தது. 'இதை என்னிடம் முதலிலேயே கூறியிருந்தால், என்னிடம் வத்தி
வைத்த நபரிடம், 'ஏற்கனவே என் மனைவி இதை கூறி விட்டாள்...' என்று முகத்தில்
அறைந்த மாதிரி பேசியிருப்பேனே...' என்றார்; நியாயம் தானே!
வேலைக்குச் செல்லும் சகோதரிகளே... அலுவலகத்தில் ஆண்களோடு
பணிபுரியும் போது, இம்மாதிரியான விஷயங்கள் இருந்தால், கணவரிடம்
மறைக்காமல் கூறினால், தேவையில்லாத பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம்!
— ராதா மனோகர், சென்னை.
உணவை வீணடிக்க வேண்டாம்!
சமீபத்தில், என் நண்பரின்
திருமணத்திற்கு சென்றிருந்தேன். மணமக்களை வாழ்த்தியபின், உணவருந்த
சென்றபோது, அங்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. உணவருந்த வருவோரை
வரவேற்க, இருவர் அமர்த்தப்பட்டு இருந்தனர். அவ்விருவரும், விருந்தினரை
வணங்கி வரவேற்று, 'உணவை வீணடிக்க வேண்டாம்!' என்ற நான்கு பக்க
சிறிய புத்தகத்தை வழங்கினர்.
அப்புத்தகத்தினுள், வாசகங்களை விட, உணவை வீணடிக்கக்
கூடாது என்பதை எடுத்துரைக்கும் படங்களே அதிகம் இருந்தன. அப்படங்கள், குழந்தைளுக்கும்
புரிவது போல், அழகாக அச்சடிக்கப்பட்டு இருந்தது. அத்துடன், உணவு அருந்தும்
இடத்தில், ஆங்காங்கே பெரிய தொலைக்காட்சி திரைகளை அமைத்திருந்தனர்.
வழக்கம்போல் திருமண நிகழ்ச்சிகளை தான் ஒளிபரப்பப் போகின்றனர் என எண்ணிக்
கொண்டிருந்தேன். ஆனால், உணவை வீணடிக்கக் கூடாது என்பதை எடுத்துரைக்கும் வகையில், குறும்படங்கள்
ஒளிபரப்பப்பட்டன. இவ்வுலகில், உணவின்றி
அவதிப்படுவோரை படம் பிடித்துக் காட்டி, உணவை வீணடிப்பது
மகா பாவம் என எடுத்துக் காட்டப்பட்டது.
இந்த நல்ல விஷயத்தை பார்த்த சந்தோஷத்தில், வயிறு நிரம்பியது
போல் இருந்தது. சாப்பிட்டு முடித்த பின், பந்தியில்
வழக்கமாக வீணடிக்கப் படுவதை விட, மிகக் குறைவாகவே
உணவு வீணடிக்கப்பட்டிருந்ததைக் கண்டு பூரிப்படைந்தேன். சாப்பிட்ட கையோடு பெண்
வீட்டாரிடம் சென்று, என் வாழ்த்துகளை தெரிவித்தேன். நாமும் நம் திருமண
விழாக்களில் இதை முயன்று பார்க்கலாமே!
— பரத்வாஜ், சென்னை.
===============================================================
எம்.கண்ணபெருமாள், கடலூர்: போலி
அரசியல்வாதிகளுக்கு புத்தி புகட்ட தேர்தலை தவிர, பொது மக்களுக்கு
வேறு ஏதும் வழி உண்டா?
உண்மையான ஜனநாயக நாட்டில் இது தான் வழி! ஆனால், நம் ஜனங்கள் இந்த
சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள தவறி விடுகின்றனர்!
க.கோவிந்தன், வேலூர்:
மற்றவர்களிடமிருந்து கற்றுக் கொள்வது, தானே அனுபவித்து
உணர்வது... எது படிப்பினையூட்டும்?
'தம்பி... அது
நெருப்பு; தொட்டால் சுடும்; கை பொத்து
விடும்...' என்கிறார் விவரமறிந்த ஒருவர். 'இல்ல... சூடு
எப்படி இருக்குன்னு எனக்கு தெரிஞ்சாகணும். அதன் மூலம் எனக்கு படிப்பினை வரும்...' என்றால், அது, 'காஸ்ட்லி' படிப்பினை; எது தேவலாம்...
நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்!
ம.கிருஷ்ணமூர்த்தி, பெருமாள்பட்டு:
காரியம் முடிந்ததும் கண்டு கொள்ளாமல் ஒதுங்கி விடும் நண்பர்கள் உங்களுக்கு உண்டா, அவர்களை எப்படி
பழி தீர்த்துக் கொள்வீர்கள்?
இந்த அடிப்படை மனித இயக்கங்களை புரிந்து கொண்ட காரணத்தால், காரியம் செய்து
கொடுக்க ஆரம்பிக்கும் போதே, 'கண்டுகொள்ள
மாட்டார்...' என்ற மனப் பக்குவத்தை ஏற்படுத்திக் கொள்வேன். இதனால், டென்ஷன்
அடைவதில்லை!
என்.குமணன், நாகர்கோவில்: என்
மனைவி, எதற்காகவாவது என்னிடம் வாதாடும்போது, கோபமடைந்து
கன்னாபின்னா வென்று திட்டி விடுகிறேன். பின், தனிமையில் சிந்தித்து
பார்க்கும் போது, அவளது வாதம் நியாயமாகப்படும். உடனே, அவளிடம்
மன்னிப்பு கேட்கும் எண்ணம் கூட வரும். ஆனால், மனைவியிடம்
மன்னிப்பு கேட்பதா என்ற எண்ணம் எழுந்து தடுத்து விடுகிறது. என்ன செய்யலாம்?
'நான் பிடித்த
முயலுக்கு மூன்று கால் தான்...' என்ற பிடிவாதம் இல்லாமல், காரியத்தை அலசிப்
பார்க்கும் மனமாவது உங்களிடம் இருக்கிறதே... பாராட்டத்தான் வேண்டும். மன்னிப்பு
கேட்க தயக்கம் இருந்தால், உங்களது செயல்களின் மூலம் மன்னிப்பு கேளுங்கள். அதை
உணர்ந்து கொள்ளும் திறன் உங்களது மனைவியிடம் இல்லை என்றால், எவ்வளவோ, 'பிக்ச்சர் கார்டுகள்' விற்பனை ஆகின்றன.
அவற்றில் ஒன்றை வாங்கி அளியுங்கள். அதுவும் கிடைக்கவில்லை என்றால், துண்டு
காகிதத்தில் எழுதிக் கொடுங்கள். அதைக் கண்ட பின் கிடைக்கும், 'ரெஸ்பான்சை' பாருங்கள்...
ஆச்சரியப்படத் தக்க விதத்தில் இருக்கும். இதை அனுபவப் பூர்வமாக நண்பர்களிடம்
சோதித்து வெற்றி கண்டவன் நான்!
வி.ரங்கராஜன், எண்ணூர்:
பத்திரிகை, 'டிவி' வானொலி
ஆகியவற்றில், வாஷிங்டன் டி.சி., என அமெரிக்க
தலைநகரை குறிப் பிடுகின்றனரே... 'டி.சி.,' என்பது என்ன?
'டிஸ்டிரிக்ட் ஆப்
கொலம்பியா' என்பதன் சுருக்கம் டி.சி., அதாவது, கொலம்பியா மாநிலத்தில்
உள்ள வாஷிங்டன் என்று பொருள். இன்னொரு வாஷிங்டன் அமெரிக்காவில் இருப்பதால், பிரித்து
வித்தியாசம் காட்ட, தலைநகரை வாஷிங்டன் டி.சி., எனக்
குறிப்பிடுகின்றனர்!
கே.என்.ராகவன், நெய்வேலி:
உங்களுக்கு அடையாளம் தெரியாத, ஆனால், அறிமுகமானவர்கள், 'என்னைத் தெரிகிறதா?' எனக் கேட்டு, யாரென்று
தெரியாமலேயே பேசி சமாளித்த அனுபவம், உங்களுக்கு
ஏற்பட்டுள்ளதா?
நிறைய! ஆனால், பல
சந்தர்ப்பங்களில் குட்டு வெளிப்பட்டு, வெட்கப்படும்
நிலைகூட ஏற் பட்டுள்ளது. இப்போதெல்லாம், 'பொலைட்'டாக, 'தவறாக நினைக்க
வேணாம்... தங்களை நினைவு கொள்ளாதது எனக்கே சங்கடமாக இருக்கிறது...' என முதலிலேயே
சொல்லி விடுகிறேன். இதற்கு, 90 சதவீதம்
வரவேற்பும் உள்ளது!
அன்பு நன்றி சகோ அந்துமணி,
========================================================
ஒம் குரு வாழ்க, குரு நன்றாய்
வாழ்க, குருவே துணை...
Gurur Brahma, Gurur Vishnu, Gurur Devoh Maheshwara
Guru Sakshat Parabrahmah Tasmai Shree Guru Veh
Namah !
I am Love, I shower Love. I share Love. I am
pleased with Love. - Baba
When your heart is filled with good thoughts and
feelings, all that comes out of the senses - your speech, your vision, your
action - will naturally be pure. - Baba
உனது ஹ்ருதயம் நல்ல சிந்தனைகளாலும் நல்ல உணர்வுகளாலும்
நிரப்பப்பட்டுள்ள போது, உனது பேச்சு, பார்வை, செயல்கள் யாவும்
இயல்பாகவே சுத்தமாக இருக்கும். – பாபா
Embodiments of divine Love!............ Have A
Great And Wonderful Day Ahead.
God Bless You All............
love-all-serve-all-help-ever-hurt-never............. Sairam
அன்புறவுகள்... எல்லோர்க்கும்... அனைவருக்கும் சகோ என்றென்றும்
அன்பு நன்றியுடன்.! இனிய காலை மதிய மாலை இரவு வணக்கம்! ..உரித்தாகுக தோழமை /
சகோ(களே)................!!!
ஆன்றோர்க்கும், சான்றோர்க்கும், என்னைப்போன்றோர்க்கும்
இறையருளோடு கூடிய இனிய நற்காலை வணக்கம் அன்பு சகோ, இனிய நாளாக
மலரட்டும்...சகோ தோழமை களே...............
" விடியும் என்று விண்ணை நம்பும் நீ ....!
முடியும் என்று உன்னை நம்பு...!!"
ஓம் சாயி நமோ நம! ஸ்ரீ சாயி நமோ நம!
ஜெய ஜெய சாயி நமோ நம! சத்குரு சாயி நமோ நம!
அன்புடன் சகோதரன்
விக்னசாயி............
===========================================
No comments:
Post a Comment