Followers

Thursday, February 27, 2020



தமிழகத்தின் முதலமைச்சர் காமராஜரும்..
இந்தியாவின் பிரதமர்
நேருவும்..
கூட்டமொன்றில் பங்கேற்க..
மதுரை அருகே காரில் பேசிக்கொண்டே சென்று கொண்டிருந்தார்கள்.
அப்போது, நேரு காமராஜரைப் பார்த்து, மிஸ்டர் காமராஜ் உங்கள் சொந்த ஊர்
இந்த பக்கம் தானே? என்று கேட்டார்.
ஆமாங்க.. இன்னும் கொஞ்சம் தூரத்தில்தான் இருக்கிறது என்றார் காமராஜர்.
அப்படியானால், உங்கள் தாயாரை பார்த்து நலம் விசாரித்துவிட்டு செல்லவேண்டும் அல்லவா? என்று நேரு அவர்கள் கேட்க..
இப்பவே, கூட்டத்திற்கு நேரம் ஆகிவிட்டதே? என்று காமராஜர் மறுத்தார்.
அதற்கு நேரு அவர்கள்,
இவ்வளவு தூரம் வந்து விட்டு உங்கள்
தாயாரை பார்க்காமல் சென்றால் நன்றாக இருக்காது.
நான் பார்த்தே ஆக வேண்டும். என்னை அவர்களிடம் கூட்டிச் செல்லுங்கள் என்று அன்பு கட்டளையிடுகிறார்.
பிறகு, அதனை ஆமோதித்த காமராஜர்..
வண்டி சற்று தூரம் சென்றதும் ஓட்டுனரிடம்..
"
தம்பி வண்டியை இப்படி ஓரங்கட்டு" என்று வண்டியை நிறுத்த சொல்கிறார்.
அது, வீடுகளே இல்லாத பகுதி. சாலையின் இரு புறங்களிலும் விவசாய நிலங்கள்தான் இருந்தன.
அந்த, நிலங்களில் பெண்கள் களை பறித்து கொண்டிருந்தனர்.
நேருவுக்கு ஒன்றுமே புரியவில்லை. தாயாரை பார்க்க வீட்டுக்கு அழைத்து செல்ல சொன்னால் இந்த காமராஜர் இப்படி உச்சி வெயிலில் வண்டியை நிறுத்தியிருக்கிறாரே என்ற வினாவுடன் வண்டியை விட்டு கீழே இறங்கினார் நேரு.
காமராஜர் களை பறித்து கொண்டிருக்கும் பெண்கள் கூட்டத்திலிருந்து வயதான பெண்மணி ஒருவரை பார்த்து,
"
ஆத்தா நான் காமராசு வந்திருக்கிறேன்" என்று கூப்பிடுகிறார்.
வயலில் உழைத்துக்கொண்டிருந்த அந்த பெண்மணி வியர்வை வழிந்த முகத்துடன் காமராஜரின் அருகில் வந்து, "காமராசு வந்திட்டியாப்பா நல்லாயிருக்கியா?" என்று தன் மகனை
கண்ட மகிழ்ச்சியில் உள்ளம் நெகிழ்கிறார் காமராஜரின் தாயார்.
தாயும் மகனும் அளவளாவிக்
கொள்கிறார்கள்.
பிறகு, நேரு அவர்களை காட்டி இவர்தான் பாரத பிரதமர் நேரு. தங்களை பார்க்கவேண்டும் என்றார். அதனால்தான், இங்கு அழைத்துவந்தேன் என்று அறிமுகப்படுத்துகிறார் காமராஜர்.
நேருவால் தன் கண் முன்னே நடப்பதைப் பார்த்து நம்ப முடியாமல் சிலையாக நிற்கிறார்.
இப்படிப்பட்ட தலைவர்களால் ஆளப்பட்ட நாடுதான் நமது தமிழ்நாடு.
உலகில் பல தலைவர்கள் தோன்றலாம், மறையலாம். ஆனால், காமராஜரைப் போன்ற ஒரு தலைவரை உலகம் முழுவதும் எங்கு சென்று தேடினாலும் கிடைக்க மாட்டார்கள்.
அதுதான் நம் காமராஜர்.
courtesy;priya durai.
==================================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...