Be a seeker for the truth and cultivate "loving
devotion". You will attain stability and peace of mind.
''பக்தியில்லாத
ஜபமும் தவமும் விரதங்களும் யோகஸாதனைகளும் வேதங்களையும், உபநிஷதங்களையும்
பரிசீலனை செய்வதும் பலமாக ஆத்ம ஞானப் பிரவசனம் செய்வதும் (இவையனைத்துமே) வீண். வேத
சாஸ்திரங்களில் ஆழ்ந்த ஞானமோ ஞானி என்கிற உலகளாவிய கீர்த்தியோ வறண்ட, அன்பில்லாத
பக்தியோ உபயோகமில்லை. அன்பு நிறைந்த பக்தியே தேவை.-- அதுவே உம்முடைய மனத்தை
உறுதிப்படுத்தி கம்பீரமாக்கும்; எல்லா
உயிர்களிடத்தும் நல்லுணர்வை ஊட்டும். அது இல்லை எனில், மனம்
சஞ்சலப்பட்டுக்கொண்டு அலைபாயும். இவ்வாறு குருவரர் பிரேமையுடன் கூறுகிறார்…..
புண்ணியப்பட்டணத்தில் (புணே) வசித்து வந்த அனந்தராவ்
பாடண்கர் என்ற பெயர் கொண்ட பக்தரொருவர் ஸாயீதரிசனம் செய்ய ஆவல் கொண்டு சிர்டீக்கு
வந்தார்.
76 அவர் வேதாந்தம்
பயின்றவர்; உபநிஷதங்களையும் பாஷ்யங்களையும் (விரிவுரை) மூல மொழியான
ஸமஸ்கிருதத்திலேயே படித்தவர். அவ்வளவு படிப்பும் அவருக்கு மனவமைதியை அளிக்கவில்லை; மனம்
அலைபாய்ந்துகொண்டே இருந்தது.
77 ஸமர்த்த ஸாயீயை
தரிசனம் செய்தவுடனே அவர் சாந்தியடைந்தார். பாதங்களுக்கு நமஸ்காரம் செய்துவிட்டுச்
சடங்குகளுடன் கூடிய பூசையும் செய்தார்.
78 கைகளைக் கூப்பி
அஞ்ச செய்துகொண்டு பாபாவின் எதிரில் உட்கார்ந்தார். பிரேமையுடன் கருணை வேண்டும்
குரல் கேட்டார்.
79 ''பலவிதமான
நூல்களைப் படித்துவிட்டேன்; வேதங்களின்
சிகரமான உபநிஷதங்களையும் அத்யயனம் (மனப்பாடமாக ஓதுதல்) செய்துவிட்டேன். ஸத்தான
சாஸ்திரங்களையும் புராணங்களையும் பிறர் சொல்லக் கேட்டுவிட்டேன். ஆயினும் ஏன் என்
மனம் ஏக்கம் பிடித்தும் சோர்வடைந்தும் இருக்கிறது?--
80 ''நான் வாசித்தெல்லாம்
வீண் என்று நினைக்கத் தோன்றுகிறது. ஓரெழுத்தும் பயிலாத பா(ஆஏஅ)வபக்தி உள்ளவர்
என்னைவிடச் சிறந்தவர் என்றே நினைக்கிறேன்.--
81 ''நான் பல
நூல்களைக் கற்றதும் சாஸ்திரங்களைப் பரிசீலனை செய்ததும் வீண். மனத்திற்கு
சாந்தியளிக்காத அனைத்துப் புத்தக ஞானமும் வீணே--
82 ''ஓ, சாஸ்திரங்களைக்
குடைந்து ஆராய்வது எவ்வளவு ஸாரமில்லாத விஷயம் மஹாவாக்கியங்களை1 ஜபம் செய்தும்
மனவமைதி பிறக்கவில்லையெனில் ஜபம் செய்வதால் என்ன பிரயோஜனம்? ஓ, மனவமைதியே
கிடைக்கவில்லையெனில் பிரம்ம ஞானம் எங்கிருந்து கிடைக்கும்?--
83 ''ஸாயீ தரிசனம் மனக்கவலைகளை
அகற்றிவிடுகிறதென்றும், சாந்தியை அளிக்கிறதென்றும், ஈதனைத்தும்
உல்லாசமான தமாஷ் பேச்சிலேயே நடந்துவிடுகிறதென்றும், ஸாயீ மிக சுலபமாக
பக்தருக்கு நல்வழி காட்டுகிறாரென்றும் செவிவழிச் செய்தியாக அறிந்தேன்.--
84 ''ஆகவே, தவக்கடலான
மஹராஜரே உம்முடைய பாதங்களை நாடிப் பணிவுடன் வந்திருக்கிறேன். என்னுடைய மனம்
சஞ்சலமடையாது நிலையான சாந்தியைப் பெற ஆசீர்வாதம் செய்யுங்கள்.ஃஃ
85 மஹராஜ் இதன்
பிறகு ஓர் உருவகக் கதை சொன்னார். அதைக்கேட்ட அனந்தராவ் தாம் கற்ற கல்வி
பலனளித்துவிட்டது என்று ஸமாதானமடைந்தார்.
86 பரம ஸாரமுள்ளதும்
சுருக்கமானதுமான அக் கதையை இப்பொழுது சொல்கிறேன்; கவனமாகக்
கேளுங்கள். நகைச்சுவை மிகுந்ததாயினும் போதனை நிறைந்த இக் கதையை யார் அனாதரவு
செய்யமுடியும்?
87 பாபா
கேள்விக்குப் பதில் கூறினார், ''ஒருசமயம்
வியாபாரி ஒருவன் இங்கு வந்தான். அவனெதிரில் இருந்த குதிரை ஒன்பது (சாணி)
லத்திகளைப் போட்டது.--
88 ''வியாபாரி செயல்
முனைப்பு உடையவனானதால் சட்டென்று தன்னுடைய அங்கவஸ்திரத்தை விரித்தான். ஒன்பது
லத்திகளையும் ஜாக்கிரதையாகச் சேகரித்துக் கட்டிக்கொண்டான். ஒருமுனைப்பட்ட மனம்
உடையவன் ஆனான்.ஃஃ
89 ஸமர்த்த ஸாயீ
தெரிவிக்க விரும்பியது என்ன? அதனுடைய
உட்பொருள் என்ன? வியாபாரி (சாணி) லத்திகளை எதற்காகச் சேகரித்தான்? விஷயமென்னவென்றே
புரியவில்லையே
90 அனந்தராவ்
இதைப்பற்றிச் சிந்தித்துச் சிந்தித்து, மசூதியிருந்து
திரும்பிவந்து, நடந்த ஸம்பாஷணை முழுவதையும் தாதா கேள்கரிடம்1 விவரித்தார்.
91 ''யார் இந்த
வியாபாரி? குதிரைச் சாணியால் யாருக்கு என்ன பிரயோஜனம்? ஏன் குறிப்பாக
ஒன்பது லத்திகள்? இவையெல்லாம்பற்றி எனக்கு விளக்குங்கள்.--
92 ''தாதா, இதென்ன புதிர்? என்னுடைய
சிறுமதிக்கு எதுவும் விளங்கவில்லை. எனக்கு எளிமையாகவும் தெளிவாகவும் எடுத்துச்
சொல்லுங்கள். பாபாவின் இதயத்தில் என்ன நினைத்தார் என்பது எனக்கு விளங்கவேண்டும்.ஃஃ
93 தாதா கூறினார், ''பாபாவின்
திருவாய்மொழியை முழுக்க என்னாலும் புரிந்துகொள்ள முடிவதில்லை. ஆயினும், அவர் தரும்
உள்ளுணர்வால் நான் என்ன புரிந்துகொள்கிறேன் என்பதைச் சொல்கிறேன்.--
94 ''குதிரை இறைவனின்
அருள்; ஒன்பது (சாணி) லத்திகள் ஒன்பது விதமான பக்தியின்
வெளிப்பாடுகள். பக்தியின்றிப் பரமேச்வரனை அடைய முடியாது. ஞானத்தால் மட்டும் அவனை
அடையமுடியாது.--
95 ''பக்தியின்
வெளிப்பாடுகளைப்பற்றி இவ்விதம் அறிவீராக.
முதலாவதாக, சிரவணம்
(இறைவனின் பெருமையைக் கேட்டல்),
இரண்டாவதாக, கீர்த்தனம்
(இறைவனின் லீலைகளைப் பாடுதல்),
மூன்றாவதாக, ஸ்மரணம் (இறைவனை
நினைத்தல்),
நான்காவதாக, பாதஸேவனம்
(பாதங்களைக் கழுவுதல் - பிடித்து விடுதல்),
ஐந்தாவதாக, அர்ச்சனம்
(மலர்களால் அர்ச்சனை செய்து பூஜித்தல்),
ஆறாவதாக, வந்தனம் (பணிதல்
- நமஸ்காரம் செய்தல் - வணங்குதல்),
ஏழாவதாக, தாஸ்யம்
(அடிமைபோல் ஸேவை செய்தல்),
எட்டாவதாக, ஸக்யம் (தோழமை
கொள்ளுதல்),
ஒன்பதாவதாக, ஆத்மநிவேதனம்
(தன்னையே இறைவனுக்கு அர்ப்பணம் செய்தல்).--
96 ''நவவித பக்திகளில்
ஏதாவது ஒன்றையாவது பூரணமான பா(ஆஏஅ)வத்துடன் கடைப்பிடித்தால், வேறெதையும்
வேண்டாத ஸ்ரீஹரி, பக்தனுக்குத் தம்மை வெளிப்படுத்துவார்.--
97 ''பக்தியில்லாத
ஜபமும் தவமும் விரதங்களும் யோகஸாதனைகளும் வேதங்களையும், உபநிஷதங்களையும்
பரிசீலனை செய்வதும் பலமாக ஆத்ம ஞானப் பிரவசனம் செய்வதும் (இவையனைத்துமே) வீண்.--
98 ''வேத
சாஸ்திரங்களில் ஆழ்ந்த ஞானமோ ஞானி என்கிற உலகளாவிய கீர்த்தியோ வறண்ட, அன்பில்லாத
பக்தியோ உபயோகமில்லை. அன்பு நிறைந்த பக்தியே
தேவை.--
99 ''உம்மை அந்த
வியாபாரியாக அறிந்துகொள்வீராக அந்த நிகழ்ச்சியின் உட்பொருளைப் புரிந்துகொள்வீராக
ஒன்பது விதமான பக்தி என்னும் கொடி ஏற்றப்படும்போது இறைவன் உல்லாசமடைகிறான்.--
100 ''குதிரை ஒன்பது
லத்திகள் சாணமிட்டது. வியாபாரி அதை ஆவலுடன் ஓடிப் பிடித்தான். அம்மாதிரியாகவே நீர்
நவவித பக்தியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டால், உமது மனம்
சாந்தியில் திளைக்கும்.--
101 ''அதுவே உம்முடைய
மனத்தை உறுதிப்படுத்தி கம்பீரமாக்கும்; எல்லா
உயிர்களிடத்தும் நல்லுணர்வை ஊட்டும். அது இல்லை எனில், மனம்
சஞ்சலப்பட்டுக்கொண்டு அலைபாயும். இவ்வாறு குருவரர் பிரேமையுடன் கூறுகிறார்.ஃஃ
102 அடுத்தநாள் ஸாயீ
பாதங்களுக்கு வந்தனம் செய்யச் சென்றபோது, ''என்ன, குதிரைச் சாணி
லத்திகளை உம்முடைய அங்கவஸ்திரத்தில் (மேல்துண்டில்) கட்டிவிட்டீரா?ஃஃ என்று
பாபாகேட்டார்.
103 அனந்தராவ்
பிரார்த்தனை செய்தார், ''இந்த தீனனின்மேல் உங்களுக்கு தயவிருந்தால் அவற்றை சுலபமாகச்
சேர்த்துக் கட்டிவிட முடியும். அப்படியென்ன முடியாத விஷயமா அது?ஃஃ
104 பாபா அவரை
ஆசீர்வதித்து, 'மங்களமுண்டாகும்ஃ என்று உறுதியளித்தார். அவ்வார்த்தைகளைக்
கேட்ட அனந்தராவ் மகிழ்ச்சிக்கடல் மூழ்கினார்; சுகத்தை
அனுபவித்தார்.
Anantrao Patankar
One gentleman from Poona, by name Anantrao Patankar
wished to see Baba. He came to Shirdi, and took Baba's darshan. His eyes were
appeased, he was much pleased. He fell at Baba's Feet; and after performing
proper worship said to Baba - "I have read a lot, studied Vedas, Vedants
and Upanishads and heard all the Purnas, but still I have not got any peace of
mind; so I think that all my reading was useless. Simple ignorant devout
persons are better than myself. Unless the mind becomes calm, all book-learning
is of no avail. I have heard, from many people, that you easily give peace of
mind to so many people by your mere glance, and playful word; so I have come
here; please take pity on me and bless me". Then Baba told him a parable,
which was as follows:-
Parable of Nine Balls of Stool (Nava-vidha Bhakti)
"Once a Soudagar (merchant) came here. Before
him a mare passed her stool (nine balls of stool). The merchant, intent on his
quest, spread the end of his dhotar and gathered all the nine balls in it, and
thus he got concentration (peace) of mind".
Mr. Patankar could not make out the meaning of this
story; so he asked Ganesh Damodar, alias Dada Kelkar, "What does Baba mean
by this?" He replied - "I too do not know all that Baba says and
means, but at His inspiration I say, what I come to know. The mare is God's
grace and the nine balls excreted are the nine forms or types of Bhakti, viz.,
(1) Shravana (Hearing); (2) Kirtana (Praying); (3) Smarana (Remembering); (4)
Padasevana (resorting to the feet); (5) Archana (Worship); (6) Namaskara
(Bowing); (7) Dasya (Service); (8) Sakhyatva (Friendship); (9) Atmanivedana
(surrender of the self). These are the nine types of Bhakti. If any of these is
faithfully followed, Lord Hari will be pleased, and manifest Himself in the
home of the devotee. All the sadhanas, viz. Japa (vocal worship), Tapa
(penance), Yoga practice and studying the scriptures and expounding them are
quite useless unless they are accompanied by Bhakti, i.e., devotion. Knowledge
of the Vedas, or fame as a great Jnani, and mere formal Bhajan (worship) are of
no avail. What is wanted is Loving Devotion. Consider yourself as the merchant
or seeker after the truth and be anxious and eager like him to collect or
cultivate the nine types of devotion. Then you will attain stability and peace
of mind".
Next day, when Patankar went to Baba for saluation,
he was asked whether he collected the 'nine balls of stool'. Then he said that
he, being a poor fellow, should first be graced by Baba, and then they will be
easily collected. Then Baba blessed and comforted him, saying that he would
attain peace and welfare. After hearing this, Patankar became overjoyed and
happy.
No comments:
Post a Comment