Followers

Saturday, February 8, 2020




 

பஞ்சபுராணம் (Pancha Puranam)

சமய நிகழ்வுகளில் விநாயகர் துதியுடன் ஆரம்பிப்பது வழக்கம். இது பஞ்சபுராணம் பாடும் நிகழ்ச்சியிலும் கடைபிடிக்கப்படுகிறது. பாடத் துவங்கும் போதும் முடிக்கும் போதும் “திருச்சிற்றம்பலம்” என்று சொல்ல வேண்டும். பஞ்சபுராணம் ஓதியபின் அருணகிரிநாத சுவாமிகள் அருளிய திருப்புகழ் பாடல் ஒன்று ஓதி, “வான்முகில் வழாது பெய்க” என்ற கந்த புராண வாழ்த்தைப் பாடி நிறைவு செய்வார்கள்.

==========================

விநாயகர் வணக்கம்
“ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.”

திருஞானசம்பந்த அருளிய தேவாரம்
“தோடுடைய செவியன் விடையேறி ஓர் தூவெண்
மதி சூடிக்
காடுடைய சுடலைப் பொடிபூசி என் உள்ளம்
கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனைநாள் பணிந்தேத்த
அருள்செய்த
பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன்
அன்றே.”

மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
“பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து நீ பாவியேனுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி  உலப்பிலா ஆனந்தமாய
தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த  செல்வமே சிவபெருமானே யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே.”

சேந்தனார் அருளிய திருவிசைப்பா
“கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக்
கரையிலாக் கருணைமா கடலை
மற்றவர் அறியா மாணிக்க மலையை
மதிப்பவர் மனமணி விளக்கைச்
செற்றவர் புரங்கள் செற்றஎம் சிவனைத்
திருவீழிமிழலை வீற்றிருந்த
கொற்றவன் தன்னைக் கண்டு கண்டுள்ளம்
குளிரஎன் கண் குளிர்ந்தனவே.”

சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு
“பாலுக்கு பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடல்
ஈந்தபிரான்
மாலுக்குச் சக்கர அன்றருள் செய்தவன் மன்னிய
தில்லை தன்னுள்
ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்பலமே
இடமாகப்
பாலித்து நட்டம் பயில வல்லானுக்கே பல்லாண்டு
கூறுதுமே.”

சேக்கிழார் அருளிய பெரிய புராணம்
“உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்பு அடி வாழ்த்தி வணங்குவாம்.”
 
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
“ஏறு மயிலேறி விளையாடு முகம் ஒன்றே
ஈசனுடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே
குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே
மாறுபடு சூரனை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே
ஆறுமுகமான பொருள் நீ அருளல் வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமானே.”                                                

கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்தபுராணம்
“வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன்கோன்முறை அரசு செய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க நான்மறை அறங்கள் ஓங்க நற்தவம் வேள்வி மல்க மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்.”
 
திருஞானசம்பந்தர்அருளியது
“வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயது எல்லாம் அரன் நாமமே
சூழ்க வையகமும் துயர் தீர்கவே.”
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி, போற்றி…


=========================

தேவாரம் (திருநாவுக்கரசர்) — 4ஆம் திருமுறை:-


அரியானை அந்தணர்தம் சிந்தையானை

அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும்

தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்

திகழொளியைத் தேவர்கள்தம் கோனை மற்றைக்

கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்

கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற

பெரியானைப் பெரும்பற்றப் புலியூரானைப்

பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!!!


திருவாசகம் (மாணிக்கவாசகர்): 8ஆம் திருமுறை:


கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை

வல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றிக்

கல்லைப் பிசைந்து கனியாக்கித் தன்கருணை

வெள்ளத்து அழுத்தி வினைகடிந்த வேதியனைத்

தில்லை நகர்புக்குச் சிற்றம்பலம் என்னும்

ஒல்லை விடையானைப் பாடுதுங்காண் அம்மானாய்!!!


திருவிசைப்பா (திருமாளிகைத்தேவர்) — 9ஆம் திருமுறை:


ஒளிவளர் விளக்கே உவப்பிலா ஒன்றே!

உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே!

தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே!

சித்தத்துள் தித்திக்கும் தேனே!

அளிவளர் உள்ளத்(து) ஆனந்தக் கனியே!

அம்பலம் ஆடரங்காக

வெளிவளர் தெய்வக் கூத்துகந்தாயைத்

தொண்டனேன் விளம்புமா விளம்பே!!!


திருப்பல்லாண்டு (சேந்தனார்) — 9ஆம் திருமுறை:


மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள் வஞ்சகர் -போயகல

பொன்னின்செய் மண்டபத்துள்ளே புகுந்து -புவனியெல்லாம் விளங்க

அன்னநடை மடவாள் உமைகோன் அடியோமுக்கு -அருள் புரிந்து

பின்னைப் பிறவி அறுக்க நெறிதந்த பித்தற்குப் -பல்லாண்டு கூறுதுமே!!!


பெரிய புராணம் (சேக்கிழார்) — 12ஆம் திருமுறை:


உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்

நிலவு உலாவிய நீர்மலி வேணியன்

அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்

மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்!!!


திருச்சிற்றம்பலம்

More from அன்பே சிவம்

==========================

பஞ்சபுராணம் (Pancha Puranam)

திருச்சிதம்பலம்

விநாயகர் துதி
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம் பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்று கின்றேனே!
 
தேவாரம் 
பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.

திருவாசகம்
பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம்
பேசுவதும் திருவாயால் மறைபோலுங் காணேடீ
பூசுவதும் பேசுவதும் பூண்பதுவுங் கொண்டென்னை
ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ.
 
திருவிசைப்பா
ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே !
  உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே !
தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே !
  சித்தத்துள் தித்திக்கும் தேனே !
அளிவளர் உள்ளத்(து) ஆனந்தக் கனியே !
  அம்பலம் ஆடரங் காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
  தொண்டனேன் விளம்புமா விளம்பே.  

திருப்பல்லாண்டு
பாலுக்குப் பாலகன் வேண்டி
  அழுதிடப் பாற்கடல் ஈந்தபிரான்
மாலுக்குச் சக்கரம் அன்றருள்
  செய்தவன் மன்னிய தில்லைதன்னுள்
ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற
  சிற்றம் பலமே இடமாகப்
பாலித்து நட்டம் பயிலவல்
  லானுக்கே பல்லாண்டு கூறுதுமே! 

பெரிய புராணம்
 உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்
   
திருப்புகழ்
ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே
ஈசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றே
கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே
மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே
வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே
ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்
ஆதியரு ணாசல மமர்ந்த பெருமாளே. 
 
அபிராமி அந்தாதி 
பூத்தவளே புவனம் பதினான்கையும்; பூத்தவண்ணம்
காத்தவளே பின்கரந்தவளே! கறைக் கண்டனுக்கு
மூத்தவளே! என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே!
மாத்தவளே உன்னை அன்றிமற்றோர் தெய்வம் வந்திப்பதே! 
 
கந்த புராணம் 
வான் முகில் வழாது பெய்க மலி வளம் சுரக்க மன்னன்
கோன் முறை அரசு செய்க குறைவு இலாது உயிர்கள் வாழ்க
நான் மறை அறங்கள் ஓங்க நல் தவம் வேள்வி மல்க
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்.

 
திருச்சிதம்பலம்

==========================

- ராணி கிருஷ்ணமூர்த்தி



திருமுறை 1

திருப்பிரமபுரம்
பாடல் எண் : 1
தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
பொழிப்புரை :
தோடணிந்த திருச்செவியை உடைய உமையம்மையை இடப்பாகத்தே உடையவனாய், விடை மீது ஏறி, ஒப்பற்ற தூய வெண்மையான பிறையை முடிமிசைச்சூடி, சுடுகாட்டில் விளைந்த சாம்பற் பொடியை உடல் முழுதும் பூசி வந்து என் உள்ளத்தைக் கவர்ந்தகள்வன், இதழ்களை உடைய தாமரை மலரில் விளங்கும் நான்முகன், படைத்தல் தொழில் வேண்டி முன்னை நாளில் வழிபட அவனுக்கு அருள்புரிந்த பெருமை மிக்க பிரமபுரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானாகிய இவன் அல்லனோ!



ஓம் சாயி நமோ நம! ஸ்ரீ சாயி நமோ நம!
ஜெய ஜெய சாயி நமோ நம! சத்குரு சாயி நமோ நம!

"பயப்படாதே. நான் உன்னோடு இருக்கிறேன். எப்போது எங்கே என்னை நீ நினைத்தாலும் நான் உன்னோடு இருப்பேன்.

பயப்படாதே, இதை நன்றாக மனப்பாடம் செய்துகொள்".
நீ நடக்கும் பாதையில் முட்கள் இருந்தால் நானே முன்பாகவே களைந்து விடுகிறேன்.நான் உன்னுடனையே வந்துக்கொண்டிருப்பதை நீ மறந்தால் நான் என்ன செய்ய முடியும்?

பாபா என்னுடையவர் என்று நீ நினை, நீ என்னுடையவன் என்று நான் கருதுவேன் –

ஓம் சாய்ராம்.


 Happy  Day my Dear GOD,brothers,sisters and Friends!!
 Have a great and wonderful day ahead!!! God Bless!!

அழகிய இனிய காலை வணக்கம்அன்பு நெஞ்சங்களே
இறைவன் நினைவே இனிய நாள்!
வாழ்க வளமுடன் !! நலமுடன்!! நன்றி!!
என்றும் அன்புடன் சகோதரன்,
Vickna sai

====================================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...