Followers

Friday, January 31, 2020



காலத்தால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது..... 


நன்றி மறப்பது நன்றன்று.............................................!

வீடு வீடாகப் பொருட்களை வினியோகிக்கும் அந்தச் சிறுவனுக்கு ரொம்பப் பசித்தது. எதையாவது வாங்கி சாப்பிடலாம் என்றால் அவனிடம் பணமே இல்லை. அருகில் இருந்த வீட்டில் ஏதாவது சாப்பிடக் கேட்கலாம் என நினைத்தான். கதவைத் தட்டினான். ஒரு பெண் கதவைத் திறந்தாள். அவனுக்கோ சாப்பாடு கேட்க ரொம்பக் கூச்சம்.

 'கொ... கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா?' தயக்கத்துடன் கேட்டான்.

அவள் சிறுவனின் கண்களில் இருந்த பசியைக் கவனித்தாள்.

உள்ளே போய் ஒரு கப் பால் கொண்டு வந்து கொடுத்தாள்.

பாலைக் குடித்துப் பசியாற்றிய சிறுவன் கேட்டான், `நான் எவ்வளவு கடன்பட்டிருக்கேன்?'

 `கடனா? அப்படியொன்றுமில்லை. அன்பான செயலுக்கு விலை இல்லை என அம்மா சொல்லியிருக்கிறார்...', அவள் சிரித்துக் கொண்டே சொன்னாள்.

 'ரொம்ப ரொம்ப நன்றி...' சிறுவன் புன்னகையுடன் கடந்து சென்றான்.

ஆண்டுகள் கழிந்தன. அந்த சிறுவன் நகரிலேயே பெரிய டாக்டர் ஆனான். அந்த பெண்ணுக்கோ ஒரு கொடிய நோய் வந்தது. அவர் பணியாற்றிய மருத்துவமனையிலேயே அவளும் அனுமதிக்கப்பட்டிருந்தாள். அந்த டாக்டரிடமே அவளுடைய பரிசோதனை வந்தது. மெடிக்கல் ரிப்போர்ட்டில் அந்தப் பெண்ணின் ஊரைப் படித்ததும் அவருக்குள் சின்ன மின்னல். விரைவாக அறைக்குப் போய் அந்தப் பெண்ணைப் பார்த்தார். அவளேதான். தனது பசியாற்றிய நல்ல உள்ளம் படைத்தவள்.

அன்று முதல் தனது அத்தனை உழைப்பையும் செலுத்தி அவளுக்கு சிறப்பான சிகிச்சை அளித்தார். நீண்ட சிகிச்சைக்குப் பின் அவள் குணமானாள். பல லட்சங்கள் செலவானது. மருத்துவமனை அந்தப் பெண்ணுக்கு ஒரு நீண்ட பில்லை அனுப்பியது. இதை எப்படிக் கட்டப் போகிறேனோ எனும் பதற்றத்துடன் அதைப் பிரித்த அவள் திகைத்துப் போனாள்.

அந்த பில்லின் கடைசியில் எழுதப்பட்டிருந்தது, `ஒரு கப் பாலில் உங்கள் கடன் எல்லாம் தீர்க்கப்பட்டுவிட்டது. இது நன்றி சொல்லும் நேரம்.' அவளுடைய கண்கள் கசிந்தன.

மனிதனுக்கு இருக்க வேண்டிய மகத்தான குணாதிசயங்களில் ஒன்று நன்றி சொல்லுதல்.

அமெரிக்காவில் நீங்கள் காரில் போகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். ஒருவர் உங்களை முந்திச் செல்ல நீங்கள் அவருக்கு வழிவிட்டால் அவர் உங்களுக்கு 'நன்றி' சொல்லி விட்டுத்தான் போவார். சாலையில் ஒருவர் கடக்க நீங்கள் வண்டியை நிறுத்தினால் அவர் 'நன்றி' சொல்வார். கடையில் ஒரு பொருள் வாங்கும் போது கூட கடைக்காரருக்கு `நன்றி' சொல்வார்கள்.

நன்றி சொல்லும் வழக்கம் அவர்களிடம் ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது. நல்லவற்றை எங்கிருந்து வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம், தப்பில்லை.

நன்றி என்பது ஒரு சின்ன வார்த்தைதான். ஆனால் அது மனதளவில் தரும் உற்சாகமும், மகிழ்ச்சியும் அளவிட முடியாதது. அது ஒரு வார்த்தையாய் நின்று விடாமல் உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஊற்றெடுக்க வேண்டும் என்பது மட்டுமே கவனிக்க வேண்டிய விஷயம்.

சின்னச் சின்ன விஷயங்களில் நன்றி சொல்லத் தெரியாதவர்களால் பெரிய விஷயங்களிலும் நன்றி சொல்ல முடியாது என்கிறது எஸ்தோனிய பழமொழி ஒன்று.

நன்றியைச் சொல்ல இந்த நவீன யுகத்தில் ஏகப்பட்ட வழிகள் உண்டு. ஓர் எஸ்.எம்.எஸ், ஒரு சின்ன மின்னஞ்சல் வரி கூட உங்கள் நன்றியை எடுத்துச் செல்லலாம்.

எதிர்பாராத நேரத்தில் ஒருவரை ஒரு `நன்றி' மூலம் மகிழச் செய்வது அற்புதமான விஷயம். அந்த நபர் செய்த நல்ல பத்து விஷயங்களைப் பட்டியலிட்டு, அதற்காக உங்களுடைய மனமார்ந்த நன்றியையோ, பரிசையோ அளித்துப் பாருங்கள். அது அந்த நபருடைய வாழ்க்கையில் ஒரு முக்கியமான தருணமாக அமையும் என்பதில் ஐயமில்லை.

நாம் செய்யும் மிகப்பெரிய தப்பு என்ன தெரியுமா? கூட இருப்பவர்களுக்கு நன்றி சொல்லாமல் விடுவதுதான். கூடவே இருப்பதால் அவர்களுக்கெல்லாம் நன்றி சொல்லக் கூடாது என நினைத்து விடுகிறோம். நன்றி என்பது அலுவல் சமாச்சாரங்களுக்கு மட்டுமானது என தப்புக் கணக்கு போட்டு விடுகிறோம். கணவன், மனைவி, அப்பா, அம்மா, அக்கா, தங்கச்சி, தம்பி என எல்லோருக்கும் நன்றி சொல்வதே நல்ல பழக்கம்.

 'தினமும் எனக்கு நீங்க தானே காபி போட்டு தர்றீங்க, இன்னிக்கு அதுக்கு ஒரு சின்ன நன்றியா, நானே காபி போட்டு உங்களை எழுப்பறேம்மா' என அம்மாவை ஒரு நாள் நெகிழச் செய்யுங்கள்.

அப்பாவுடைய ஆடைகளை எல்லாம் இஸ்திரி போட்டு வைத்து அப்பாவுக்கு ஒரு நாள் நன்றி சொல்லுங்கள். அதிகாலையில் எழுந்து வீட்டைப் பெருக்கி மனைவிக்கு ஒரு நாள் நன்றி சொல்லுங்கள். இப்படி சின்னச் சின்ன அன்பின் செயல்களால் நன்றி சொல்வது வார்த்தைகளால் நன்றி சொல்வதை விட ரொம்ப வலிமையானது.

இன்னும் ஒரு படி மேலே போய் சிந்தியுங்கள். உங்கள் வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரப் பெண்ணுக்கோ, தோட்டக்காரருக்கோ, காவல்காரருக்கோ என்றைக்காவது மனசார நன்றி சொல்லியிருக்கிறீர்களா?

ஒரு பாராட்டு, ஒரு பரிசு, ஒரு மனமார்ந்த நன்றி என அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு மகிழ்ச்சிப் பக்கத்தை எழுதியிருக்கிறீர்களா? எல்லா மனிதரும் கடவுளின் பிம்பங்கள் என்கிறோம், அதில் பலவீனர்களை எப்போதுமே ஒதுக் கியே வைக்கிறோமே, தப்பில்லையா ?

சொல்லப்படாத நன்றி எப்படிப்பட்டது தெரியுமா?

 'ஒருவருக்கு அழகான ஒரு பரிசுப் பொருளை வாங்கி, அதை அருமையாக கிப்ட் கவரில் போட்டு அப்படியே வீட்டில் வைத்திருப்பது போன்றது' என்கிறார் வில்லியம் ஆர்தர் வேர்ட்.

யாராவது நமக்கு ஒரு கெடுதல் செய்தால் நாள் கிழமை குறித்து மனசுக்குள் கல்வெட்டாய் வைப்பதும், அவர் நமக்குச் செய்த நன்மைகளை காற்றில் எழுதி காணாமல் செய்வதும் நமது பழக்கம். அதை அப்படியே உல்டாவாகப் பண்ணிப் பழக வேண்டும். தீயது செய்தால் காற்றில் எழுது, நல்லதெனில் மனதில் எழுது.

வீட்டிலிருக்கும் குழந்தைகளுக்கும் 'நன்றி' சொல்லும் பழக்கத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும். குழந்தைகள் நமது செயல்களைப் பார்த்து வளரும். எனவே நாம் நன்றியுடையவர்களாய் இருக்க வேண்டியது அடிப்படைத் தேவையாகி விடுகிறது.

நன்றி சொல்ல வேண்டும் எனும் மனம் இருந்தால் உங்களுக்கு அதற்கான வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கும். நல்லவற்றுக்கு மட்டுமல்லாமல் சோதனைகள், பலவீனங்கள், தோல்விகள் இவற்றுக்குக் கூட நீங்கள் நன்றி செலுத்தலாம்.

ஓர் அழகான ஆங்கிலப் பாடல் உண்டு. அந்தப் பாடலின் சில வரிகளை இப்படித் தமிழில் மொழிபெயர்க்கலாம்.

என்னிடம் இல்லாதவற்றுக்காய் நன்றி, அவைதான் அவற்றை நோக்கி என்னை பயணிக்க ஊக்குவிக்கின்றன.

என்னிடம் இருக்கும் குறைவான அறிவுக்காய் நன்றி, அதுதான் என்னை கற்றுக்கொள்ள வைக்கிறது.

எனது கடினமான நேரங்களுக்காய் நன்றி, அவைதான் என்னை வலிமையானவனாய் மாற்றுகின்றன.

எனது குறைகளுக்காய் நன்றி, அவைதான் எனக்கு நிறைவைத் தேடும் தாகத்தைத் தருகின்றன.

எனது பிழைகளுக்காய் நன்றி, அவைதான் எனக்கு அனுபவப் பாடத்தை அள்ளித் தருகின்றன.

எனது சோர்வுக்காய் நன்றி, அதுதான் எனது உழைப்பின் மேன்மையை எனக்கு உணர்த்துகிறது.

எனது சோதனைகளுக்காய் நன்றி, அவைதான் சோதனைகளைச் சாதனையாய் மாற்றும் மனநிலையைத் தருகின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஒரு ஹம்பேக் திமிங்கலம் வலையில் சிக்கிக் கொண்டது. உடல் முழுதும் கயிறுகள் சிக்கிக் கொள்ள திமிங்கலத்தால் நீந்த முடியவில்லை. அந்த 50 அடி நீள திமிங்கலத்தின் கட்டுகளை அறுக்க பாதுகாப்பாளர்கள் திட்டமிட்டார் கள்.

திமிங்கலம் மெல்ல வாலை அசைத்தாலே ஆள் காலியாகிவிடலாம். கட்டறுத்தபின் கோபத்தில் அது குதித்தாலும் காலி எனும் திகில் நிமிடங்களுடன் ஆட்கள் போராடினார்கள். கயிறுகளை அறுத்தார்கள். திமிங்கலம் கண்களை உருட்டி எல்லோரையும் உற்று உற்றுப் பார்த்தது. கட்டுகள் அவிழ்த்து முடித்ததும் ஆனந்தத்தில் கடலுக்குள் நீச்சலடித்தது.

பின் எல்லோரும் ஆச்சரியப்படும் ஒரு விஷயம் நடந்தது. அந்த பிரம்மண்டமான திமிங்கலம் திரும்ப வந்தது. வந்து, கட்டுகளை அவிழ்த்த ஒவ்வொரு நபர் முன்னாலும் சென்று தன் முகத்தினால் அவர்களை மெல்ல முட்டித் தள்ளி தன் நன்றியைச் சொன்னது. எல்லோரும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.

காலத்தால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது எனும் வள்ளுவர் வரிகள் திமிங்கலத்தின் செயலில் வெளிப்பட்டன. நன்றி அறிவித்தல் திமிங்கலத்திடம் கூட இருக்கிறது என்பதை அமெரிக்கப் பத்திரிகைகள் அப்போது வியப்புடன் வெளியிட்டன.

பிடிவாதப் பார்ட்டிகளுக்காக, நன்றி சொல்வதில் உள்ள மருத்துவத் தகவல்களையும் கையோடு சொல்லி விடுகிறேன்.

2007-ல் நடத்தப்பட்ட டாக்டர் எம்மோஸ் ஆய்வு ஒன்று, 'நன்றியுடையவர்களாய் இருப்பவர்கள் மன அழுத்தமற்றவர்களாகவும், நிம்மதியான தூக்கம் உடையவர்களாகவும் இருப்பார்கள்' என்றது. இதனால் அவர்களுடைய உடலும் உள்ளமும் புத்துணர்ச்சியடைகிறது.

 'நன்றி தெரிவிக்கும் தம்பதியரின் குடும்ப வாழ்க்கை நிலையாகவும், வலிமையாகவும் இருக்கும்' என 2010-ல் நடத்தப்பட்ட இன்னொரு ஆய்வு தெரிவித்தது.

அமெரிக்காவிலுள்ள மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று, 'நன்றி தெரிவித்து வாழ்பவர்கள் ரொம்பவே ஆனந்தமாய் இருப்பார்கள்' என தனது கண்டுபிடிப்பை வெளியிட்டது.

வாழ்க்கை ரொம்பவே அழகானது. நமது ஐம்புலன்களும் நம்மை வினாடி தோறும் வியக்க வைத்துக் கொண்டே இருக்கின்றன. எவ்வளவோ அழகான விஷயங்களை, மனிதர்களைக் காண்கிறோம். பேச்சுகளை, இசையைக் கேட்கிறோம். பலவற்றை உணர்கிறோம். சுவைகளை ரசிக்கிறோம். நமது புலன்களின் பரிசளிப்புக்கு நன்றி சொன்னதுண்டா? இல்லாத விஷயம் கிடைக்கும்போதுதான் நன்றி சொல்ல வேண்டுமென்பதில்லை. இருக்கின்ற விஷயத்துக்காகவே நன்றி சொல்லலாம்.

[p-p படித்த்தில் பிடித்த்து. மூலப்பதிவாளாருக்கு என்றும் நன்றி ஐயா.]

நன்றி சொன்னால் பேரழகு!
நன்றி செய்தால் பாரழகு !

My dearest friend, friends
Have a wonderful day!!!

அன்பின் உறவுக்கும், உறவுகளுக்கும்
என் இனிய  வணக்கம்.!!!
அன்புடன் vicknasai.

=====================================



அன்புறவுகள்... எல்லோர்க்கும்.... என்றென்றும் அன்புடன்.! இனிய வணக்கம்! ..உரித்தாகுக...
Awaken the Divine within you... Love All, Serve All 
உன் உள்ளிருக்கும் இறைவனை உணர்தல்.

A God that is visible,
In you and in all.

A God that speaks,
In you and in all.
A God that guides,
In you and in all.
A God that teaches,
In you and in all.
A God that loves,
In you and in all.
ஒரு இறைவனே எமக்கும் மற்றும் எல்லோர்க்கும், எல்லா உயிருக்கும் தோற்றமளிப்பவன்,திருவாய் மலர்ந்து அருளுபவன் (பேசுபவன்) வழிகாட்டுபவன்,உபதேசிப்பவன்,அன்புகாட்டி அன்பினால் ஆட்கொள்பவன்,………

God arises and emerges,
Shines forth and reveals itself,
Only when all within is clean,
Only when all within is calm.
And only when all becomes love.

அந்த இறைவனே தோன்றி பரிணமிப்பவன், தன்னை வெளிக்காட்டி எம்மை உணர வைப்பவன் இவை எப்போது சாத்தியமாகும் என்றால் எம் உள்ளம் பரிசுத்தமாக இருக்கும் பட்சத்திலேயே சாத்தியம்.

It is time for you to shake off your laziness,
Rise above all your inhibitions,
Ignore all your likes and dislikes,
And wake up your God within.
It is time for you to rise,
And shine in the light of your true divinity.
God is not born and God does not die,
God has only one form, one language
And one vision,
Love ! Love ! Love !

ஆகவே மாயத்தூக்கத்தினின்றும் விழித்தெழுங்கள் சோம்போறித்தனத்தை, வெக்கத்தை தகர்த்தெறிந்து விருப்புவெறுப்புகளைத் துறந்து எம்முள் உறையும் ஆதியும் அந்தமுமில்லா இறையை தேடி உணர்ந்து அந்த ஒரே ஒரு மொழி அதாவது அன்புமொழி,ஒரே ஒரு உருவம் அது அன்புமயமான ஆண்டவன் அவனை எல்லோரிடமும் அன்பு செலுத்துவதன் மூலம் ஆராதித்து பேரானந்த பெருவாழ்வு வாழுங்கள்.

From : 'Sai Darshan' - Part III
(Divine Messages received and recorded by Mrs Seema M Dewan)
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே!
திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
Awaken the Divine within you...
Love All, Serve All
Aum Sri Sai Ram
Vickna Sai

=========================================







'பாட்டியிடம் பழைய விஷயங்களைப் பற்றி பேச்சு கொடுப்பதுடன், தினமும் பத்து நிமிடமாவது சிரிக்க வச்சுடுவேன். இதனால், அவங்களுக்கு நினைவுத் திறன் நன்றாக இருப்பதுடன், ரொம்ப சந்தோஷமாகவும் இருப்பாங்க. அதோட, தினமும் அவரது காலில் விழுந்து வணங்கி, என் நெற்றியில் திருநீறு பூசப் சொல்வேன். அவரும் மனம் நிறைந்த ஆசி வழங்கி, திருநீறு பூசி விடுவார்...'


எல்லோர்க்கும் இனிய நாளாகட்டும் சகோ தோழமை களே................பலதும் பத்தும் படித்ததில் பிடித்தது உங்களுடன்.........................


மூத்தவர்களை கவனித்துக் கொள்ளும் விதம்!
சமீபத்தில், மும்பையிலுள்ள எங்கள் குடும்ப டாக்டரின் வீட்டிற்கு சென்றிருந்தேன். வீட்டில், 90 வயதான அவரது பாட்டியும் இருந்தார். எங்களைப் பார்த்ததும் அப்பாட்டிக்கு ரொம்ப சந்தோஷம். அவருக்கு, எங்களை அறிமுகப்படுத்திய டாக்டர், பின், தன் பாட்டியை கலாய்க்க ஆரம்பித்தார்...

'பாட்டி... இவங்க சொல்றாங்க... நீ ஐஸ்வர்யா ராய் மாதிரி இருக்கியாம்... உன் திருமணத்தில் நடந்ததை இவங்களுக்கு சொல்லு...' என்றும், 'நான் சின்னக்குழந்தையா இருந்தப்போ ஒரு பாட்டு பாடுவியே... அதை இவங்களுக்கு பாடிக் காட்டு...' என்றும் கூறி, அவரது பழைய நினைவுகளை நினைவுபடுத்தினார்.

சிறிது நேரத்திற்கு பின், 'பாட்டி... நீ ஒரு கோலம் போடு; இவங்களையும் ஒரு கோலம் போடச் சொல்லலாம். யாரோடது அழகா இருக்குன்னு நீயே பார்த்து சொல்லு...' என்று கோலப்பொடி டப்பாவை பாட்டியிடம் நீட்ட, பாட்டியும் சரியாக புள்ளி வைத்து, அதைக் கணக்கிட்டு அழகாக கோலம் போட்டார்.

பின், அங்கிருந்த தொப்பியை எடுத்து, பாட்டி தலையில் மாட்டி, அவரை சிரிக்க வைத்தும், பொம்மைகளைக் கொடுத்து, 'இதை நீ கையில் வச்சுக்கோ, போட்டோ எடுக்கலாம்...' என்று பேச்சுக் கொடுத்தபடியே இருந்தார். அவரது கலாட்டா சற்று அதிகமோ என்று நினைத்து, மெதுவாக அதுபற்றி கேட்டேன்.

'பாட்டியிடம் பழைய விஷயங்களைப் பற்றி பேச்சு கொடுப்பதுடன், தினமும் பத்து நிமிடமாவது சிரிக்க வச்சுடுவேன். இதனால், அவங்களுக்கு நினைவுத் திறன் நன்றாக இருப்பதுடன், ரொம்ப சந்தோஷமாகவும் இருப்பாங்க. அதோட, தினமும் அவரது காலில் விழுந்து வணங்கி, என் நெற்றியில் திருநீறு பூசப் சொல்வேன். அவரும் மனம் நிறைந்த ஆசி வழங்கி, திருநீறு பூசி விடுவார்...' என்றார்.
வயதானலே தொல்லையென சலித்துக்கொள்வோருக்கு மத்தியில், இவரைப் போன்றோரும் இருக்கின்றனரே... என எண்ணி, அவரை பாராட்டி விடைபெற்றேன்.

நாமும், நம் வீட்டில் உள்ள பெரியவர்களுடன் அமர்ந்து, தினமும் சிறிது நேரமாவது அவர்களது பழைய நினைவுகளை கிளறி, சிரித்து பேசுவதன் மூலம், அவர்கள் உற்சாகமாக இருப்பதோடு, நமக்கு அவர்களது நல்லாசியும் கிட்டும் என்பதை கூறவும் வேண்டுமோ!

எஸ்.சீதாலட்சுமி, முகலிவாக்கம்.


=====================================


நல்லதை எடுத்துக் கொள்வதே...

புது வீட்டில் குடியேறிய என் தோழியைக் காண, குடும்பத்தோடு சென்றிருந்தோம். வீட்டைச் சுற்றிப் பார்த்த போது, ஹால் மட்டுமே நவநாகரிக முறையில் இருந்தது. மற்றபடி, சமையலறையில், அழகிய கயிற்றில், உறி ஒன்று தொங்கியது. மற்றொரு புறம், தண்ணீர் ஊற்றப்பட்ட தாம்பாளத்தின் மீது, ஒரு பாத்திரம் இருந்தது. மேலும், அவர்கள் வீட்டில் மிக்சி, கிரைண்டர் மற்றும் வாஷிங் மிஷின் போன்ற உபகரணங்கள் இருந்த போதிலும், அம்மி, உரல் மற்றும் துணி துவைக்கும் கல்லும் இருந்தன.

இதனால், ஆச்சரியமடைந்த நான், 'என்னடி... உன் வீடு பொருட்காட்சி மாதிரி இருக்கு...' என்றேன். அதற்கு தோழி, 'இந்த வீட்டை வடிவமைக்கும் போது, என் மாமனாரும் சில யோசனைகள் கூறினார். பால், தயிர், நெய் வைக்க உறி; எறும்பு ஏறாமல் இருக்க தண்ணீர் தாம்பாளம்; மின்சாரம் இல்லாத போது அரைக்க, அம்மி, உரல் என்று அவர் கூறியதில், நல்ல விஷயங்கள் இருக்கவே, அதற்கும் முக்கியத்துவம் அளித்துள்ளோம்...' என்றாள்.

வீட்டின் பின்புறம் செடி, கொடிகளுக்கு நடுவில் கூண்டில், வான்கோழி ஒன்றும் இருந்தது. அதற்கு தோழி, 'தோட்டத்தில், புழு, பூச்சிகள், பூரான், பாம்பு போன்ற விஷ ஜந்துகள் வந்தால், வான்கோழி ஒரு கை பார்த்துவிடும் என்பதால் இதுவும் என் மாமனார் சாய்ஸ் தான்...' என்றவள், 'விவசாயியான என் மாமனார், கடுமையாக உழைத்து, என் கணவரை படிக்க வைத்தார். இன்று நாங்கள் நல்ல நிலையில் இருந்தாலும், எந்த ஒரு விஷயத்திற்கும், அவரை கலந்து கொள்ளாமல், நாங்களாகவே முடிவெடுப்பதில்லை. வீட்டுப் பெரியோர் சொல்லும் நல்ல விஷயங்களை நாம் ஏற்றுக்கொண்டால், அது, நம் குழந்தைகளுக்கும் பயன்படும்...' என்றாள்; பிரமித்துப்போனேன்.
என்ன தான் நாகரிகத்தின் பாதையில் சென்றாலும், பழமையான பாரம்பரியத்தில் உள்ள அருமையான விஷயங்கள் அழிந்து விடாமல் பின்பற்றுவது சிறப்பு தானே!

எஸ்.கார்த்திகா, மதுரை.


========================================


மனதை படித்த மருத்துவர்!


சமீபத்தில், எலும்பு முறிவு மருத்துவரை பார்க்க அவருடைய கிளினிக்கிற்கு சென்றிருந்தேன். நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது, நடுத்தர வயதுக்காரர் ஒருவரை தூக்கி வந்தனர். முழங்காலுக்கு கீழ், எலும்பு உடைந்திருந்ததால், வலியில் துடித்தார். அவரை பரிசோதித்த டாக்டர், 'கவலைப்படாதீங்க... சிறிய எலும்பு முறிவு தான்; ஒரு வாரத்தில குணமாகிடும்...' என்று கூறி, சிகிச்சை அளித்தார். பின், அறைக்கு வந்தவரிடம், 'என்ன டாக்டர்... எலும்பு முறிஞ்சு தொங்குது; எழுந்து நிக்கவே ஆறு மாசம் ஆகும் போல இருக்கே... நீங்க என்னடான்னா, நோயாளியிடம் சின்ன பிரச்னை தான்னு சொல்றீங்க...' என்றேன்.

அதற்கு அவர், 'நீங்க சொல்ற மாதிரி அது, பலமான எலும்பு முறிவு தான்; ஆனா, நான் சொன்ன அந்த வார்த்தைகள், அவருக்கு நம்பிக்கைய ஏற்படுத்தும். மருத்துவர்கள், நோயாளிகளுக்கு தரும் முதல் மருந்தே, நம்பிக்கையான வார்த்தைகள் தான். அதிலேயே அவங்களுக்கு பாதி நோய் குணமாகிடும்...' என்றார்.

அவர் கூறியதைப் போலவே, கால் முறிந்த அந்த நபர், அழுவதை நிறுத்தி, சகஜமாக மற்றவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.
நோயாளிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தி, பணம் பிடுங்கும் டாக்டர்களுக்கு மத்தியில், இவர் எனக்கு வித்தியாசமாக தெரிந்தார்.
இதை மற்ற மருத்துவர்களும் செய்யலாமே!

வே.செந்தில்குமார்,கொங்கணாபுரம்.


=======================================


மும்பையை சேர்ந்த ஓட்டல் அதிபர் ஒருவர், அசிஸ்டென்ட் கமிஷனர் ஒருவர், சாலை கான்ட்ராக்டர் ஒருவர், நான் மற்றும் லென்ஸ் மாமா என, அந்த ஓட்டலில் குழுமி இருந்தோம்.

'பன்னாட்டு நிறுவனங்கள், ஓட்டல் இண்டஸ்ட்ரியில் இறங்கியபின், உங்கள் தொழில் எப்படி இருக்கு?' எனக் கேட்டேன், மும்பையிலிருந்து வந்திருந்த ஓட்டல் அதிபரிடம்!

'அதை ஏம்ப்பா கேட்கறே... ரொம்ப, 'டல்' அடிக்குது. இதுல, அரசு அதிகாரிகள் தொல்ல வேறு...' என்று அவர் கூறும் போதே, 'கர்நாடகாவை சேர்ந்தவங்க நீங்க; உங்க முந்தைய தலைமுறையினர் எப்போ, எப்படி மும்பை சென்றனர்... ஓட்டல்கள் ஆரம்பிக்க எது தூண்டுதலாக இருந்தது?' எனக் கேட்டேன்.

'தென் கனரா மாவட்டத்திலிருந்து, (கர்நாடக மாநிலம்) 1940களில் கோபால ராவ் என்ற பிராமணக் குடும்பத்தினர், மும்பை சென்று, 'வெல்கம் ஓட்டல்ஸ்' என்ற பெயரில், ஓட்டல்கள் ஆரம்பித்தனர். அவர்கள் தான், 'தாலி மீல்ஸ்' என சொல்லப்படும் எட்டு விதமான பதார்த்தங்களை அறிமுகப்படுத்தினர். 1958களில், அதன் விலை, 50 காசு. இப்போது, இதுவே, 200 ரூபாய்!

'உடுப்பியைச் சேர்ந்த காமத் இனத்தவர் தான், 60 ஆண்டுகளுக்கு முன், மும்பையில், 'உடுப்பி' ஓட்டல்களை ஆரம்பித்தனர். 1970வது வரை பாப்புலராக இருந்த, 'ஈரானிய ரெஸ்டரன்டுகள்' மறைய ஆரம்பித்திருந்ததால், உடுப்பி ஓட்டல்கள் வேகமாக, 'பிக் -அப்' ஆக ஆரம்பித்தன.

'இப்போது, வெளிநாட்டு ரெஸ்டரன்டுகளின் வரவு, கையேந்தி பவன்கள் அதிகரிப்பு, உடுப்பி பகுதியில், கல்வி அறிவு அதிகமாகி விட்டதால், வேலைக்கு ஆள் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள சிரமம், ஓட்டல் அதிபர்களின் வாரிசுகள் மெத்தப் படித்து விட்டதால், குடும்பத் தொழிலான ஓட்டல் தொழிலுக்கு வர தயக்கம், அரசு தரும் தொல்லைகள் என, ஓட்டல் தொழில் நசிந்து வருகிறது.
'இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் உடுப்பி ஓட்டல்கள், மும்பையில் இருந்து மறைந்து விடும் அபாயம் உள்ளது...' என முடித்தார்.

அடுத்து, சாலை கான்ட்ராக்டரிடம் பேச்சு கொடுத்தேன். அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும், 'கவனித்த' பின், டெண்டர் தொகையில், 85 சதவீதம் தான், சாலை போடுவதில் செலவு செய்ய முடிகிறது என்றும், இந்த, 85 சதவீதத்தில், தம் லாபத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளது என்றும் கூறினார்.


========================================


அடுத்து, ஏ.சி., ஒருவர், 'இப்போ புதுசா வரும் போலீஸ்காரங்க, சினிமா படத்தைப் பார்த்துட்டு, அதிலே வர்ற போலீஸ்காரன் மாதிரி நடந்துக்கிடணும்ன்னு நெனைக்கிறாங்க...' என்று சொல்லி, அது தொடர்பாக ஒரு சம்பவத்தையும் சொன்னார்...

'இந்த நகரத்துல செல்வாக்கான ஒரு பேமிலி... அரசியல் குடும்பம் இல்லே... பெரிய பிசினஸ் செய்றவங்க. அந்த குடும்பத்த சேர்ந்தவங்களோட, 'கெஸ்ட்' சிலர், வெளியூரில் இருந்து வந்து இருக்காங்க... அவர்களை, டின்னருக்கு அழைத்துச் சென்று இருக்கின்றனர்.

'நகரில் மிகவும் பேமசான ரோட் சைட் ரெஸ்டாரன்ட் ஒன்றில், டின்னர் அளித்து இருக்கின்றனர். அசைவ உணவுகள், எண்ணெய் தோசை, பரோட்டா, சுக்கா போன்றவை அங்கே ரொம்ப ஸ்பெஷல்!

'இரவு, 11:00 மணிக்கு, டின்னர் முடித்து கிளம்பும் நேரம், போலீஸ் ரோந்து ஜீப் ஒன்று வந்திருக்கிறது... கைகழுவி கிளம்பிக் கொண்டிருந்தவரிடம், போலீஸ் தோரணையைக் காட்டி, தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார் பயிற்சி சப்- இன்ஸ்பெக்டர் ஒருவர்.

'இவர்கள் மிக கண்ணியமாக, 'கிளம்பி விட்டோம் சார்... பில் செட்டில் செய்துட்டு இருக்காங்க...' எனக் கூறியதையும் கேளாமல், வானத்திற்கும், பூமிக்குமாகக் குதித்திருக்கிறார்.

'விருந்தளித்தவர் தம் மொபைல் போனை எடுத்து, எவருக்கோ பேசவும், 'என்ன... கமிஷனர் கிட்டே பேசுறியா... டி.ஜி.பி.,கிட்ட வேணும்ன்னாலும் பேசு... என்னை ஒண்ணும் செய்ய முடியாது. பெரிய காரில் வந்தால் பயந்துடுவோமா?' என்று கத்தி, பணக்காரர்கள் என்றால் தனக்கு அலர்ஜி என்று தன்னிடமும், தன் குடும்பத்தாரிடமும் வசதி இல்லையே என்ற தன், 'காம்ப்ளக்சை' யும் வெளிக்காட்டி உள்ளார்.

'இவ்வளவுக்கும் அந்தப் பகுதியின் ஏ.சி., அன்று மாலையில் தான், 'பயிற்சி எஸ்.ஐ.,களை இரவு நேர ரோந்துக்கு அனுப்பாதீர்கள். இன்னும் அவர்கள் பக்குவப்பட வில்லை...' என்று கூறிச் சென்றுள்ளார்; அதையும் மீறி, இவர் ரோந்து வந்துள்ளார்.

'பயிற்சி எஸ்.ஐ.,யுடன் வந்த பக்குவப்பட்ட போலீசார், எஸ்.ஐ.,யின் வேகத்தை தணிக்க முயன்றுள்ளனர். ஆனால், உ.பா., சாப்பிட்டிருந்த எஸ்.ஐ., கேட்கவில்லையாம்!

'விருந்தினர் முன் அவமானப்பட்ட தொழில் அதிபர், பேச வேண்டியவர்களிடம் இரவோடு இரவாகப் பேசி இருக்கிறார். அடுத்த நாள் காலை, இரண்டு, மூன்று திருமணங்களில் கலந்து கொள்ள வேண்டி இருந்ததால், புறப்பட்டு சென்று விட்டார் தொழில் அதிபர்.
'காலையில் ஸ்டேஷன் சென்றுள்ளார் பயிற்சி எஸ்.ஐ., வாசலில் நின்றிருந்த, 'பாரா' 'ஐயா உங்களை ஸ்டேஷனுக்குள் விட வேண்டாம்ன்னு உத்தரவு போட்டு இருக்காங்க... (ஒரு உயர் அதிகாரியின் பெயரைச் சொல்லி) அவரைப் போய் பார்க்கச் சொன்னாரு...' எனக் கூறி இருக்கிறார்.

'இதனிடையே போலீஸ் உயர் அதிகாரிகள் சிலர், தொழிலதிபரை சந்திக்க அவரது அலுவலகத்துக்கு சென்றுள்ளனர். அவர் தான் திருமணங்களில் கலந்து கொள்ள சென்று விட்டாரே... மூன்று மணி நேரம் காத்து இருந்திருக்கின்றனர்.

'இதனிடையே விஷயம் அறிந்த பயிற்சி எஸ்.ஐ., தாம் திருமணம் செய்ய உள்ள பெண் வீட்டார், உள்ளூரில் செல்வாக்கான பத்திரிகை தலைமை நிருபருக்கு தூரத்து சொந்தம் என்பதை அறிந்து, அவரிடம், 'இப்போது நடவடிக்கை ஏதும் எடுத்து விட்டால், என் கேரியர் பாதிக்கப்படும். மீண்டும், ஒரு வருடம், பயிற்சியிலேயே போட்டு விடுவர். ஏதோ தப்பு நடந்து போச்சு... தொழிலதிபரிடம் பேசுங்கள்...' என, தன், 'உட் - பீ' மூலம், 'பிரஷர்' கொடுத்துள்ளார்.

'ஒரு வழியாக போலீஸ் உயர் அதிகாரிகளும், பயிற்சி எஸ்.ஐ.,யும், தொழிலதிபரை சந்தித்தனர். பயிற்சி எஸ்.ஐ., 'சாரி...' கேட்க, 'தம்பி... கிரிமினலுக்கும், மற்றவர்களுக்கும் வித்தியாசம் தெரிந்து கொள். உங்க உயர் அதிகாரி, சற்றுமுன் என்னிடம் கூறியது போல, சினிமா போலீஸ், சினிமாவுல தான் இருக்க முடியும்...' என்று கூறி, மன்னித்து அனுப்பியுள்ளார்...' எனக் கூறி முடித்தார் ஏ.சி.,

'சரி தான் போ... இனி, அந்த எஸ்.ஐ., 'நமக்கேன் வம்பு'ன்னு ஒருத்தரையும் பிடிக்கப் போறதில்லே...' எனக் கூறி, கோப்பையில் இருந்த, 'அங்கிள் ஜானி' பிளாக் லேபிளை இன்னொரு மடக்கு ஊற்றி, 'டேய் தம்பி... அந்த ரஷ்யன் சேலடை கொண்டா...' என்றார் லென்ஸ் மாமா; என் அறையை நோக்கி நடந்தேன் நான்!


அன்பு நன்றி சகோ அந்துமணி..


====================================


ஒம் குரு வாழ்க, குரு நன்றாய் வாழ்க, குருவே துணை...
Gurur Brahma, Gurur Vishnu, Gurur Devoh Maheshwara
Guru Sakshat Parabrahmah Tasmai Shree Guru Veh Namah !


I am Love, I shower Love. I share Love. I am pleased with Love. - Baba


When your heart is filled with good thoughts and feelings, all that comes out of the senses - your speech, your vision, your action - will naturally be pure. - Baba


உனது ஹ்ருதயம் நல்ல சிந்தனைகளாலும் நல்ல உணர்வுகளாலும் நிரப்பப்பட்டுள்ள போது, உனது பேச்சு, பார்வை, செயல்கள் யாவும் இயல்பாகவே சுத்தமாக இருக்கும். பாபா


Embodiments of divine Love!............ Have A Great And Wonderful Day Ahead.


God Bless You All............ love-all-serve-all-help-ever-hurt-never............. Sairam


அன்புறவுகள்... எல்லோர்க்கும்... அனைவருக்கும் சகோ என்றென்றும் அன்பு நன்றியுடன்.! இனிய காலை மதிய மாலை இரவு வணக்கம்! ..உரித்தாகுக தோழமை / சகோ(களே)................!!!


ஆன்றோர்க்கும் சான்றோர்க்கும் என்னைப்போன்றோர்க்கும் இனிய ஆண்டாக நாளாக மலரட்டும்...சகோ தோழமை களே...............


நட்புகளுக்கும் அவர்கள் குடும்பத்தினர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள் !!!
நினைத்தவை எல்லாம் நிறைவேறி , சுபீட்சம் உண்டாகட்டும் !!!


ஓம் சாயி நமோ நம! ஸ்ரீ சாயி நமோ நம!
ஜெய ஜெய சாயி நமோ நம! சத்குரு சாயி நமோ நம!


அன்புடன் சகோதரன்
விக்னசாயி...............


=============================================================


  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...